AANMEEGA thagavul..

saravanan
597 views
15 days ago
#aanmeega thagavul. நட்சத்திரத்தில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை ?* *இன்று மே மாதம் 4 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை அக்னி நட்சத்திர காலமாகும்.* *ஜோதிட ரீதியாக சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இடத்தில் தங்கி பயணிப்பார். அந்த வகையில், பரணி மூன்றாம் பாதத்தில் ஆரம்பித்து கிருத்திகை நட்சத்திரத்தில் முழுவதுமாக சூரியன் சஞ்சரிக்கும் காலமே அக்னி நட்சத்திர காலம் ஆகும்.* *கிருத்திகை நட்சத்திரம் என்பது அக்னி பிழம்பான நட்சத்திரமாகும். முருகன் கிருத்திகை நட்சத்திரத்தில் தான் அவதரித்தார்.* *கிருத்திகை என்பதே அக்னி நட்சத்திரம். அந்த நட்சத்திரத்திற்குள் சூரியன் பிரவேசிப்பது தான் அக்னி நட்சத்திர காலம் என்று கூறப்படுகிறது.* *அறிவியல் ரீதியாக சூரியன் பூமிக்கு மிக அருகில் வரும் காலமே இந்த அக்னி நட்சத்திர காலமாகும்.* *இந்த காலகட்டத்தில் சூரியனின் கதிர்கள் மிக பக்கமாக இருப்பதால் அதீத தாக்குதலை ஏற்படுத்துகிறது.* *சூரியன் மிகவும் தீவிரமாக கதிர்வீச்சு தரும். வெப்பநிலை அதிகபட்சமாக உயரும். நிலம், காற்று, நீர் அனைத்தும் சூடாக இருக்கும்.* *இந்த காலகட்டத்தில் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். மதிய வெயிலில் வெளியே போகாமல் இருப்பது நல்லது.* *இலகுவான, குளிர்ச்சியான உணவுகள் சாப்பிடுவது நன்மை பயக்கும். நீர் காய்கறிகள், இளநீர், கம்பங்கூழ், பழைய சாதம் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.* *அக்னி நட்சத்திரம் என்பது ஜோதிட ரீதியிலும், இயற்கை ரீதியிலும் வெயில் உச்சத்தை அடையும் காலம். இந்த காலத்தில் உடல்நலத்தை கவனமாக பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.* *அக்னி நட்சத்திரத்தில் சுப காரியங்கள் செய்யலாமா ?* *அக்னி நட்சத்திர காலத்தில் வாடகை வீட்டுக்கு குடி போகலாம். திருமணத்திற்கான வேலைகளை எல்லாமே செய்யலாம்.* *திருமணத்திற்கு பூ வைப்பது, உறுதி செய்வது, நிச்சயதார்த்தம் செய்வது போன்றவர்றை செய்யலாம்.* *வளைகாப்பு இந்த காலத்தில செய்யலாம். 5,7,9 மாதத்தில் இருப்பவர்கள் கண்டிப்பாக வளைகாப்பு செய்து கொள்ளலாம்.* *மஞ்சள் நீராட்டு விழா செய்யலாம்.* *கடை கட்டுவது, மண்டபம் கட்டுவது போன்றவற்றை செய்யலாம்.* *குலதெய்வ வழிபாடுகளைச் செய்யலாம்.* *அக்னி நட்சத்திர காலத்தில் செய்யக் கூடாதவை என்ன ?* *அக்னி நட்சத்திர காலத்தில் புதிதாக கட்டிய சொந்த வீடுகளுக்கு குடி போவதை தவிர்ப்பது நல்லது.* *மொட்டை அடிப்பது, காது குத்துவதைத் தவிர்ப்பது நல்லது.* *மரங்களை வெட்டக் கூடாது. கூரை வேய்வது, ஓடு மாற்றும் வேலைகளை தவிர்ப்பது நல்லது.* *விதை விதைப்பதை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.* *வழிபாடு முறைகள் :* *அக்னி நட்சத்திர காலத்தில் ஏதேனும் சுப விஷயங்களை கட்டாயமாக செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தால் கண்டிப்பாக செய்யலாம்.* *அதற்கு முன்பாக குலதெய்வத்துக்கு அல்லது இஷ்ட தெய்வத்துக்கு குளிரான அபிஷேகம் செய்வது நல்லது.* *குறிப்பாக, சிவன் கோயில்களுக்கு அபிஷேக பொருள்களை வாங்கித் தருவது நன்மை பயக்கும்.* *சிவலிங்கத்திற்கு மேல் இருக்கும் தாரா பாத்திரத்திற்கு பன்னீர், இளநீர் வாங்கி கொடுக்கலாம்.* *தயிர், பால் போன்றவற்றை அபிஷேகத்திற்கு வாங்கி கொடுப்பது நன்மை பயக்கும்.* *விலங்குகள், பறவைக்கு தண்ணீர் வைப்பது நல்லது.*
saravanan
626 views
18 days ago
#AANMEEGA thagavul.. வாஸ்து சக்திகள் மற்றும் குசா சக்திகள் பெருக.* *நம்முடைய இல்லத்தில் வாஸ்து சக்திகள் பெருகவும், தீய சக்திகள் அண்டாது விலகவும், குசா சக்திகள் இல்லத்தில் குடி கொள்ளவும் சித்த பிரான்கள் எண்ணற்ற நடைமுறைப் பழக்க வழக்கங்களை அளித்துள்ளனர்.* *எந்த அளவிற்கு அந்த நற்பழக்கங்களை நமது வாழ்க்கையில் மேற்கொள்கிறோமோ அந்த அளவிற்கு நற்சக்திகள் நமது இல்லத்தில் குடியேறி அமைதியான ஆனந்தமயமான வாழ்க்கையை வாழலாம் என்பது உறுதி.* *அவை* 1. மாலையில் விளக்கு வைத்த பின் தலை வாரக் கூடாது. 2. தலை வாரிய முடியை குப்பையில் சேர்க்கக் கூடாது, முடியைச் சுற்றி வீட்டு மூலை முடுக்குகளில் எறியக் கூடாது. வெளியே எறிதலும் தவறு. உதிரும் முடிகளை தனியே எடுத்து வைத்து அவ்வப்போது ஓடும் நதிகள், கடல்களில் சேர்த்தலே முறை. இதுவே இலட்சுமி கடாட்சம் பெறும் அடிப்படை பூஜையாகும். 3. மாலையில் விளக்கு ஏற்றும்போது கொல்லைக் கதவை சார்த்தி விட்டு விளக்கு ஏற்றுதலே உத்தமம்.ப்ளாட்டுகளில் குடி இருப்போர் கொல்லைப் பக்கம் இருக்கும் ஜன்னல், கதவுகளை சார்த்தி விட்டு விளக்கு ஏற்றுதல் நலம். 4. வீட்டில் அழுக்குத் துணிகள், தேவையில்லாத குப்பைகளை சேர விடக் கூடாது. வீட்டில் எந்தத் திசையில் அழுக்குத் துணிகள், குப்பைகள் சேருகின்றனவோ அந்தத் திசையில் தோஷங்கள் பெருகும்.அதனால் அந்தத் திசையிலிருந்து நமக்கு வர வேண்டிய நற்பலன்கள் வராது என்பதை நினைவில் கொள்ளவும். 5. கீழ்க்கண்ட வாஸ்து துதிகள் சிறப்பான எண் கணித சூத்திரத்தின் அடிப்படையில் சித்தர்களால் அருளப்பட்டவை.தரிசன சகாய க்ஷேம க்ருபா மூர்த்தி      ஸ்ரீவாஸ்து தேவாய நமஹ நீள்நெடுங்கால் கொண்டு புவியோடு வானமும்      தலையோடு அளந்த பெருமாள் அவதார வாஸ்து தேவா நமஹ முதல் துதி 26 அட்சரங்களைக் கொண்டு (2+6) எட்டு திக்குகளையும், இரண்டாம் துதி 42 அட்சரங்களைக் கொண்டு (4+2) சுக்கிர சக்திகளையும் குறிக்கும். 6. திருக்கோயில்களில் செவ்வாய்க் கிழமைகளில் நான்கு தீபங்களையும், வெள்ளிக் கிழமைகளில் ஆறு தீபங்களையும் ஏற்றி வந்தால் திக்கு தோஷங்கள் நீங்கும். 7. தலை முடி மட்டும் அல்லாது உடலில் உள்ள சிறு முடிகள், நகத் துண்டுகள் போன்றவை தரையில் விழுந்தாலும், குப்பையில் சேர்ந்தாலும் வாஸ்து தோஷங்கள் ஏற்படும். 8. தினமும் சுவாமி படங்களைத் துடைத்து சுத்தம் செய்தலால் இத்தகைய தோஷங்கள் நம்மைத் தாக்காதவாறு காத்துக் கொள்ளலாம். 9. பட்டை லிங்கம் எழுந்தருளிய கோயில்களில் அந்தக் குறிப்பிட்ட லிங்கத்தில் அமைந்துள்ள பட்டைகளின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு தீபங்கள் ஏற்றி வழிபடுதலால் திக்கு தோஷங்கள் தீர வழி பிறக்கும். *பொதுவாக, எட்டு அல்லது 16 தீபங்களை, எட்டு, பதினாறு திசைகளில் பட்டை லிங்கக் கோயில்களில் ஏற்றி வழிபடுதல் நலம். சிறப்பாக* *சமயபுரத்தில் உள்ள ஸ்ரீபோஜேஸ்வரர் ஆலயம், ஐயர்மலை திருத்தலம், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி திருக்கோயில் (திருவானைக் கோவில், திருச்சி) போன்ற திருத்தலங்கள் திக்கு வழிபாடுகளுக்கு உகந்தவை.* *நன்றி : அகஸ்திய விஜயம் இதழ்.*
saravanan.
887 views
2 months ago
#AANMEEGA thagavul.. புடவை சாத்தி வழிபடும் அதிசயம் சிவன் கோவில் எங்குள்ளது தெரியுமா?_* * 🛕🛕🛕வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நீரில் இருந்து வெளிப்படும் சிவலிங்கம், வருடத்திற்கு ஒரு முறை மட்டும் திறக்கப்படும் சிவன் கோவில், கிரகண நேரத்திலும் திறக்கப்படும் சிவன் கோவில், இரவு நேரத்தில் திறந்திருக்கும் சிவன் கோவில் என எத்தனையோ வித்தியாசமான விசித்திரமான சிவன் கோவில்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அது போல் சிவலிங்கத்திற்கு புடவை சாத்தி வழிபாடு நடத்தப்படும் ஒரு அதிசய சிவன் கோவில் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். > பல ஆச்சரியப்பட வைக்கும், விநோத வழிபாடுகள், மர்மங்கள் கொண்ட பல கோவில்கள் இந்தியாவில் பல உள்ளன. அதிலும் வட இந்தியாவில் இது போன்ற கோவில்கள் பல உள்ளது. பிருந்தாவனத்தின் புனித மண்ணில் ஒவ்வொரு மண்துகளிலும் பகவான் கிருஷ்ணரின் லீலைகள் இன்னும் உயிருடன் ஒலிக்கின்றன என்று பக்தர்கள் நம்புகின்றனர். அந்த மண்ணில் உள்ள புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்குவது வம்சிவட் பகுதியில் அமைந்துள்ள கோபேஷ்வர் மகாதேவ் மந்திர். இங்கு உள்ள சிவலிங்கத்திற்கு ஆடையாக புடவை சாத்தி வழிபடும் விநோத நடைமுறை உள்ளது. இதற்கு பின்னால் ஒரு ஆழ்ந்த தெய்வீக நிகழ்வு உள்ளது என புராண கதைகளில் சொல்லப்படுகிறது. > சிவனுக்கு ஏற்பட்ட ஆசை : ஒரு பெளர்ணமி இரவில், யமுனை நதிக்கரையில் பகவான் கிருஷ்ணர், கோபியர்களுடன் ராஸ லீலா நடனம் ஆடிக் கொண்டிருந்தார். அந்த லீலை என்பது சாதாரண நடனம் அல்ல; அது பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றிணையும் ஆன்மிகத் திருவிழா ஆகும். இந்த தெய்வீக ராஸ லீலையின் மகிமையை அறிந்த சிவபெருமான், அதைப் பார்க்கவும் அதில் பங்கேற்கவும் ஆசை கொண்டார். "கிருஷ்ணரின் பரமானந்த லீலையை நான் நேரில் காண வேண்டும்" என்ற ஏக்கம் அவருள் எழுந்தது. இந்த நிகழ்வை காணவும், அதில் கலந்து கொள்ளவும் சிவபெருமான் வம்சிவட்டிற்கு வந்த போது, அங்கு பிருந்தாவனத்திற்கு காவல் பொறுப்பில் இருந்த பிருந்தாதேவி அவரைத் தடுத்து நிறுத்தினார். "இது ராஸ லீலை. இங்கு கிருஷ்ணரைத் தவிர வேறு ஆண்கள் பங்கேற்க முடியாது" என்றார். > அந்த வார்த்தைகள் சிவபெருமானின் மனதை உருக்கியது. பரமசிவனே ஆனாலும், பக்தியின் லீலையில் விதிகள் உள்ளன. அவர் நுழைவாயிலில் அமைதியாக அமர்ந்து விட்டார். அந்த ஏக்கம், அந்த வருத்தம், அந்த ஆழ்ந்த பக்தி அனைத்தும் பிருந்தாதேவியின் உள்ளத்தைத் தொட்டது. பிருந்தாதேவி சிவபெருமானிடம், "குசும் சரோவரில் நீராடி வாருங்கள்" என்று கூறினார். சிவபெருமான் அந்த புனிதத் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்ததும், அவர் அழகிய கோபியர் ரூபத்தை பெற்ற அதிசயம் நிகழ்ந்தது.இப்போது அவர் ஆண் ரூபத்தில் இல்லை. பரிபூரண பக்தி நிறைந்த கோபியர்களில் ஒருவராக மாறி இருந்தார். அந்த மாற்றம் வெறும் புற தோற்றம் அல்ல; அது ஆன்மாவின் லய நிலை. அந்த கோபியர் ரூபத்தில் சிவபெருமான் ராஸ லீலையில் கலந்து கொண்டார். கிருஷ்ணருடன் நடனமாடி பரமானந்தத்தில் மூழ்கினார். அந்த நேரத்தில் கிருஷ்ணர் அவரை அன்போடு "கோபேஷ்வர்" என்று அழைத்தார். கோபியர்களின் ஈசன் என்று இதற்கு பொருள். இதனால் சிவன் "கோபேஷ்வர் மகாதேவ்" என்ற திருநாமம் பெற்றார். *ஏன் புடவை அணிவிக்கப்படுகிறது?* இந்த தெய்வீக நிகழ்வின் நினைவாக, அந்தத் தலத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு இன்றும் புடவை அணிவிக்கப்படுகிறது. சிவன் கோபியர் ரூபத்தில் ராஸ லீலையில் கலந்து கொண்டதை நினைவூட்டும் மரபாக இது தொடர்கிறது. மேலும், இக்கோவிலில் சிவபெருமானுக்கு நைவேத்யம் செய்யப்படுவது கிடையாது என்பது ஐதீகம். சிவபெருமான் தினமும் கைலாயத்திற்கு சென்று உணவருந்தி விட்டு வருகிறார் என்ற பக்தி நம்பிக்கை இங்குள்ள மக்களிடம் நிலவுகிறது. வம்சிவட்டில் கோபியர் ரூபத்தில் சிவன் தரிசனமளிக்கும் அழகிய உருவத்தை இன்றும் தரிசிக்க முடியும். பரம்பொருளை அடைய ஆண்-பெண் என்ற வேறுபாடு கிடையாது, பதவி, பெருமை எதுவும் தடையல்ல. பக்தி மட்டுமே தகுதி. சிவனும் கிருஷ்ணரும் வேறு அல்ல; ஒரே பரம்பொருளின் இரு பரிமாணங்கள்.பக்தியின் முன் பரமசிவனே தன்னை மாற்றிக் கொண்டார் என்றால், பக்தியின் மகிமை எவ்வளவு உயர்ந்தது என்பதை உணர்த்தவே இந்த ஆலயத்தில் இன்றும் சிவனுக்கு புடவை சாத்தி வழிபாடு நடத்தப்படுகிறது. 🍁🍁🍁
Sivakami Nilaya
1.5K views
4 months ago
✨இயற்கையான முறையில் தெய்வீக நறுமணம் தரும் பச்சை கற்பூர விளக்கு🪔 #Devine of God #positive energy #brass #pooja #aanmeegam
Sivakami Nilaya
1.8K views
4 months ago
✨சொந்த வீடு 🏠அமைய செவ்வாய் கிழமை முருகர் வழிபாடு 🙏முருகருக்கு ஏற்றக்கூடிய அழகான விளக்குகள் 🪔 #shorts #instagood #instagram #murugan #veedu #✨🙏kadavul nambikkai🙏✨♥️aanmeegam✨🙏 #aanmeegam
saravanan.
701 views
6 months ago
#aanmeegam 🛕 *_சுப காரியங்கள் செய்ய அஷ்டமி, நவமி திதிகள் ஒதுக்கப்படுவதன் ரகசியம்!_* * 🛕🛕🛕பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி திதியையும், ஸ்ரீராமர் அவதரித்த நவமி திதியையும் அனைவரும் கொண்டாடுகிறார்கள். ஆனால், அந்த இரு திதி நாட்களில் யாரும் எந்த சுப செயல்களையும் செய்யத் தொடங்குவதற்கு பயப்படுகிறார்கள். பொதுவாகவே ‘அஷ்டமி, நவமியில் தொட்டது துலங்காது’ என்றொரு பழமொழி உண்டு. ஆனால், நவராத்திரி பண்டிகையின்போது வரும் அஷ்டமி, நவமி மற்றும் பகவான் கிருஷ்ணன் அவதரித்த அஷ்டமி மற்றும் ஸ்ரீராமன் அவதரித்த நவமி ஆகிய நான்கு நாட்களும் மிகவும் உகந்த தினங்களாகக் கருதப்படுகிறது. 8, 17, 26ம் தேதிகளில் பிறந்தவர்கள் அஷ்டமி திதி நாட்களில் எது வேண்டுமானாலும் செய்யலாம். இவர்களுக்கு அஷ்டமியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எதுவும் இருக்காது. ஏனென்றால், அஷ்டமி என்பது 8வது திதி. அதனால் 8ம் எண்ணில் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு அது நன்மையே செய்யும். அதேபோல, 8 என்பது சனி பகவானின் ஆதிக்கம் உடைய எண். மகர ராசி, கும்ப ராசிக்காரர்களும் அஷ்டமி அன்று எது வேண்டுமானாலும் செய்யலாம். மேலும், சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள், அதாவது ஜாதகத்தில் சனி உச்சம் அல்லது ஆட்சி பெற்றவர்களும் அஷ்டமி திதியில் எது வேண்டுமானாலும் செய்யலாம். அது அவர்களை பாதிக்காது. நவமி என்பது 9வது திதி. 9ம் எண்ணில் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நவமி மிகவும் விசேஷமானதாக இருக்கும். இது செவ்வாயுடைய ஆதிக்கம் உள்ள திதி. அதனால் செவ்வாயினுடைய மேஷ ராசி, விருச்சிக ராசியில் பிறந்தவர்களும் நவமி திதியில் எது வேண்டுமானாலும் செய்யலாம். பொதுவாக, ‘அஷ்டமி, நவமி திதிகளில் தொடங்கும் எந்தக் காரியமும் உருப்படாது’ எனக் கூறுவர் முன்னோர். அஷ்டமி, நவமி திதிகளில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது; தொடர்ந்து கொண்டே போகும் என்பதாலேயே அப்படிக் கூறினர். கோகுலாஷ்டமி திதியில் பகவான் கிருஷ்ணர் அவதரித்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், அந்தத் திதியில் பிறந்த காரணத்தால் அவர் எத்தனை கஷ்டங்களை அனுபவித்தார். இறுதியில்தானே வெற்றி பெற்றார். இதேபோல், நவமியில் பிறந்த ஸ்ரீராமர் அரியணை ஏற்கும் நேரத்தில் மற உடை தரித்து காட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சீதையை பிரிந்து அவர் பட்ட துயரங்கள் எல்லாம் நவமி திதியில் அவர் பிறந்த காரணத்தால்தான் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவேதான் நவமி, அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள் (திருமணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல் உள்ளிட்டவை) மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்தத் திதிகள் தெய்வீக காரியங்களுக்கு (தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதேபோல், செங்கல் சூலைக்கு நெருப்பு மூட்ட, எதிரிகள் மீது வழக்கு தொடுக்க, ஆயுதங்கள் பிரயோகிக்க, எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பது போன்ற செயல்களுக்கு அஷ்டமி, நவமி திதிகள் மிகவும் ஏற்றவையாகும். 🍁🍁🍁
saravanan.
721 views
6 months ago
#aanmeegam தெரியுமா? பகவான் ஸ்ரீகிருஷ்ணர், தன் சிரசில் சூட மயிலிறகை ஏன் தேர்வு செய்தார்?_* * 🛕🛕🛕பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன் திருக்கரங்களில் புல்லாங்குழலோடும் சிரசில் மயிலிறகைச் சூடியவாறு புன்னகையோடும் காட்சி தருவதை நாம் பார்த்திருக்கிறோம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன் சிரசில் சூட மயிலிறகை ஏன் தேர்வு செய்தார் தெரியுமா? இதற்குப் பின்னால் ஒரு சம்பவம் இருக்கிறது. அதைப் பற்றி இந்த பதிவில் நாம் அறிந்து கொள்ளலாம். திரேதா யுகத்தின் போது ஒரு சமயம் ஸ்ரீராமரும், சீதாதேவியும் காட்டில் வசித்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் சீதாதேவிக்கு தாகம் உண்டானது. அவர் ஸ்ரீ ராமரிடம், “ஸ்வாமி. எனக்கு தாகமாக இருக்கிறது. உடனே எனக்கு தண்ணீர் வேண்டும். இந்த பகுதியில் அருந்த தண்ணீர் எங்கே உள்ளது என்று கண்டுப்பிடித்து தண்ணீர் கொண்டு வாருங்களேன்” என்று கேட்டார். உடனே ஸ்ரீராமபிரான் பூமித்தாயிடம் தண்ணீர் வேண்டி பிரார்த்தித்தார். அந்த சமயத்தில் அங்கே தோன்றிய ஒரு மயில் இராமபிரானிடம் வந்தது. “இந்த பகுதியில் தண்ணீர் எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியும். என்னைப் பின்தொடர்ந்து வந்தால் அந்த இடத்தை நான் தங்களுக்குக் காட்டுகிறேன்...” - மயில் இவ்வாறு ராமபிரானிடம் கூறியது. ஸ்ரீராமபிரானும், சீதாதேவியும் வழித்தவறிச் செல்லாமல் இருக்க அந்த மயிலானது தனது இறகுகளில் இருந்து ஒவ்வொரு இறகாக பிய்த்து அது தான் சென்ற பாதையில் போட்டுக்கொண்டே சென்றது. அதைப் பின்தொடர்ந்து ராமபிரானும், சீதாதேவியும் சென்று கொண்டிருந்தனர். மயில் ஒரு இடத்தில் குளம் ஒன்றைக் காட்டியது. தண்ணீரைக் கண்ட இராமபிரானும், சீதாதேவியும் மகிழ்ச்சி அடைந்தார்கள். சீதாதேவி தண்ணீரை அருந்தி தாகத்தைத் தணித்துக் கொண்டார். ஆனால், அப்போது எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. வழிகாட்டிய மயில் தனது இறகுகளைப் பிய்த்துப் போட்டதால் அது இறந்து போய்க் கிடந்தது. மயிலின் தியாகத்தை எண்ணி மனம் வருந்திய ஸ்ரீராமபிரான், “உன்னை நான் என்றும் மறக்க மாட்டேன். இந்த பிறவி மட்டுமல்லாது எனது அடுத்த பிறவியிலும் உன்னை நான் மறக்கவே மாட்டேன்...” என்று வரமளித்தார். ஸ்ரீ இராமபிரான் பின்னர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணராக பூலோகத்தில் அவதரித்தபோது முந்தைய அவதாரத்தில் வழிகாட்டிய மயிலின் தியாகத்தின் நினைவு கூறும் விதமாக தனது சிரசில் மயிலிறகை சூடிக்கொண்டதாக ஐதீகம். ஒருவர் நமக்குச் செய்த நன்றியை இந்த பிறவி மட்டுமின்றி மறுபிறவியிலும் நாம் மறக்கக் கூடாது என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. 🍁🍁🍁
saravanan.
613 views
6 months ago
#aanmeegam 🛕 *_பொறாமை பார்வை எனும் கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க எளிய வழிகள்!_* * 🛕🛕🛕வீட்டுப் பெரியவர்கள், ‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது’ என்று கூறுவதை அடிக்கடி கேட்டிருப்போம். குறிப்பாக, சின்னக் குழந்தைகளுக்கு மற்றவர் கண் படக் கூடாது என்று மை எல்லாம் இட்டு வைப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வாழ்க்கையில் ஒரு முறையாவது கண் திருஷ்டி பாதிப்புக்கு உள்ளாவார்கள். இதனால் உண்டாகும் பாதிப்பும் அதிகம் என்பதால்தான் பெரியவர்கள் அனுபவத்தில் கண் அடி படக் கூடாது என்று திருஷ்டி சுத்தி போடுவார்கள். ஃபேக்டரி, ஆபீஸ், கடை என அனைத்து இடங்களிலும் கூட கண் திருஷ்டி வரலாம். அதனால்தான் கடைகளிலும் மற்றும் தொழிற்சாலைகளிலும் அமாவாசை தினங்களில் பூசணிக்காயில் திருஷ்டி வைத்து கழிப்பது வழக்கமாக உள்ளது. சின்னக் குழந்தைகளுக்கு ஞாயிறு மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்களில் திருஷ்டி சுத்தி போடுவார்கள். குழந்தையின் மீதிருக்கும் கண் திருஷ்டியைப் போக்க, கல் உப்பை கையில் வைத்தப்படி மூன்று முறை clock wise மற்றும் anti clock wise முறையில் சுற்றுவார்கள். கல் உப்பு, தேங்காய் மூடி, கற்பூரம், சிவப்பு மிளகாய், வீடுகளின் ஓலைக்குச்சிகள் இவை அனைத்தும் திருஷ்டி கழிக்கப் பயன்படும். இதன் மூலம் கெட்ட சக்திகள் நம்மை நெருங்காது என்பது நம்பிக்கை. அதாவது, பெரியோர்களின் கருத்தின்படி, கல்லால் அடி வாங்கினாலும் ஓரிரண்டு நாட்களில் குணமாகி விடும். ஆனால், இந்த கண்ணடி என்கிற கண் திருஷ்டி இருக்கிறதே, அது முழுவதுமாக ஒருவரை ஆட்டி படைத்து விடும் என்பதே ஆகும். கண்ணடி என்றால் என்ன? வாழ்க்கையில் நாம் எல்லோருமே பொதுவாக இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஒருசிலருக்கு முயற்சி செய்தவுடன் கிடைக்கிறது. இன்னும் சிலருக்கு காலதாமதமாகக் கிடைக்கிறது. வேறு சிலருக்கு கிடைத்தாலும் அது கை நழுவிப் போய்விடுகிறது. பல பேர் எதுவும் கிடைக்காமலேயே ஏமாற்றத்தோடு வாழ்க்கையை வாழ்கிறார்கள். நாம் நினைத்ததை, கனவில் கண்டதை பெறாவிட்டால் நமக்கு துக்கமாக இருக்கும். அதேசமயத்தில், நாம் எதிர்பார்த்தது மற்றவர்களுக்குக் கிடைக்கும்போது அதிக மன உளைச்சல், ஆற்றாமை, பொறாமை உண்டாகி அது எரிமலையாக உருவெடுக்கிறது. இந்த தீய எண்ணங்களின் தோற்றம்தான் நம் கண்கள் மூலம் திருஷ்டியாக வெளிப்படுகின்றன. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அதுபோல், மனதில் எழும் தீய குணங்களை நம் முகமே அடுத்தவர்களுக்குக் காட்டிக் கொடுத்துவிடும். ஆகவேதான் ஒருசிலரை பார்த்தாலே, ‘அய்யோ… இவன் / இவள் பார்த்து விட்டார்களா? இனி காரியம் ஆன மாதிரிதான் என்று புலம்புவார்கள். இந்த கண் திருஷ்டியானது மனிதர்களை மட்டுமல்லாமல், விலங்குகள், செடி கொடிகள் என எல்லாவற்றையும் பாதிக்கும். உதாரணத்திற்கு நம் வீட்டில் ஒரு மரத்தில் பூக்களோ அல்லது காய்களோ நிறைய தொங்கி, அதைப் பார்த்து யாராவது ‘அய்யோ… இப்படிக் காய் காய்த்திருக்கு... எத்தனை பூ பூத்திருக்கு...’ என்று கூறும்போது சில சமயங்களில் நாம் கண் கூடாகவே பார்த்திருப்போம், அந்த மரம் அடுத்த சிறிது நாட்களிலேயே இறந்து விடும். ஒருவேளை யாராவது கல்லால் அடித்து அந்தக் காயை பறித்திருந்தால் வெறும் காய்களோடு முடிந்து விடும், மரத்திற்கு எந்த விதமான சேதமுமாகாது. நம்முடைய கண்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சிற்கு அத்தனை ஆற்றல் இருக்கிறது. சில சமயங்களில் நம்முடைய கண்ணடியே சில நஷ்டங்களையோ, தோஷங்களையோ உண்டாக்கலாம். ஆகவேதான், நம் முன்னோர்கள் தினசரி பூஜையில் அன்றாடம் கற்பூர ஆரத்தி செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். கற்பூரத்தின் மூலமாகக் கிடைக்கும் ஒளியால் நம் வீட்டிலிருக்கும் எல்லா எதிர்மறை எண்ணங்களும் நீக்கப்படும். இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால், நம்முடைய எண்ணம் நன்றாக இருந்தால் அதுவே போதுமானது. நம்மால் நமக்கும் தீமை வராது, மற்றவர்களுக்கும் ஏதும் நேராது. 🍁🍁🍁