✍️மே17 இயக்கக் குரல்

Rationalist
576 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
நாகையில் தோழர் திருமுருகன் காந்தி தேர்தல் பரப்புரை! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் தோழர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களை ஆதரித்து 11-04-2026 சனிக்கிழமை காலை, நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள். வாய்ப்புள்ள தோழர்கள் பங்கேற்குமாறு அழைக்கிறோம்! வீட்டை காக்க தமிழ்நாட்டை மீட்க வீதிக்கு வாருங்கள் மக்களே! மே பதினேழு இயக்கம் 9884864010 #நாகப்பட்டினம் #✍️மே17 இயக்கக் குரல் #📺அரசியல் 360🔴 #தோழர் திருமுருகன் காந்தி #💪 மே17 இயக்கம்
Rationalist
2.9K காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
மொழிப்போர் போராளி தோழர் சிவா திலீபன் ஈகியானார்! அன்னைத் தமிழ் காக்க ஆதிக்க இந்திக்கு எதிரான போரில் தன்னுயிர் ஈந்த மொழிப்போர் ஈகி தோழர் சிவா திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம்! - மே பதினேழு இயக்கம் ஆதிக்க இந்திக்கு எதிராக மே பதினேழு இயக்கம் மேற்கொண்டு வரும் ரயில் நிலையங்களில் இந்தி அழிப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த மார்ச் 11 அன்று சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இந்தி அழிப்பு போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் பங்கேற்ற தோழர் சிவா திலீபன் எனும் சிவக்குமார் (வயது 55), ‘தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!’ என்று முழங்கியபடி ஓடும் ரயில் முன்பு பாய்ந்தார். படுகாயமுற்று தீவிர சிகிச்சையில் இருந்த தோழர் சிவா திலீபன் அவர்கள் 8 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி இன்று (18-03-2026 புதன்கிழமை) இயற்கை எய்தினார். அன்னைத் தமிழ் காக்க ஆதிக்க இந்திக்கு எதிரான போரில் தன்னுயிர் ஈந்த மொழிப்போர் ஈகி தோழர் சிவா திலீபன் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது. மே பதினேழு இயக்கத்தின் மூத்த தோழரான சிவா திலீபன் ஓர் சமரசமற்ற போராளி, தமிழினப் பற்றாளர், அன்னைத் தமிழை உயிரென நேசித்தவர், அடக்குமுறைக்கு அஞ்சா தமிழ்த்தேசிய செயல்வீரர், பெரியாரிய சிந்தனையாளர், அம்பேத்கரிய செயற்பாட்டாளர், மார்க்சியத்தை நேசித்தவர். மேதகு பிரபாகரனின் பற்றாளர், ஈழவிடுதலை நேசன். 35 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு தமிழீழ விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்ற தீவிர புலிகள் பற்றாளர். கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம், மீத்தேன், நியூட்ரினோ உள்ளிட்ட சூற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு எதிரான போராட்டங்களில் தொடர்ச்சியாக பங்கேற்றவர். நீட் எதிர்ப்பு, இட ஒதுக்கீட்டு உரிமை, ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அடக்குமுறை உள்ளிட்ட சமூகநீதி போராட்டங்களில் களம் கண்டவர். தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாசிச பாஜக ஆட்சியை கண்டித்து, மோடி தமிழ்நாட்டிற்கு வந்தபோதெல்லாம் அவருக்கெதிரான கருப்புக்கொடி போராட்டங்களில் பங்கெடுத்தவர். அப்படியாக மோடி திருச்சி வருகை தந்த மார்ச் 11 அன்று பூங்கா ரயில் நிலையத்தில் இந்தி அழிக்கும் போராட்டத்தில் பங்கெடுத்து, தாய் தமிழை காக்க தன் உயிரை ஈந்த முன்வந்தவர். தோழர் சிவா திலீபன் அவர்கள் 13 ஆண்டுகளாக மே பதினேழு இயக்கத்தில் துடிப்புடன் செயல்பட்டு வந்தவர். கடந்த 2017ம் ஆண்டு தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வை மெரினா கடற்கரையில் நடத்த முற்பட்ட போது அரசின் அடக்குமுறையை சந்தித்தவர். அச்சமயத்தில் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்களோடு சிறை சென்றவர். மே பதினேழு இயக்கத்தின் அனைத்து போராட்டத்திலும் தவறாது கலந்துகொண்டவர். அவர் மட்டுமல்லாது அவரது இணையர் தோழர் இசைமொழி எனும் கீதா அவர்களையும் மகள் கோகிலா அவர்களையும் அரசியல்படுத்தி தமிழினப் போராட்டக் களத்திற்கு அளித்தவர். ஆதிக்க இந்திக்கு எதிரான போராட்டத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக மே பதினேழு இயக்கம் மேற்கொண்டு வருகிறது. கடந்தாண்டு நடைபெற்ற தமிழ்த்தேசியப் பெருவிழா மாநாட்டில் இந்திக்கு எதிரான போர் அறிவிக்கப்பட்டு, தொடர்ச்சியான பரப்புரைகளை மேற்கொண்டது. ஒன்றிய அரசினால் தமிழ்நாட்டில் இந்தி மொழி திணிக்கப்படுவதும், ஒன்றிய அரசுப் பணிகளில் இந்தி பேசும் மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதும் என தமிழ்-தமிழர்கள் மீதான ஒன்றிய அரசின் பாரபட்சம் தீவிரமடைந்த நிலையில், மே 17 இயக்கம் ரயில் நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டங்களை மேற்கொள்ளுமென அறிவித்தது. அதன்படி உலகத் தாய்மொழி நாளன்று (பிப். 21) சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தை நடத்தியது. அந்த போராட்டத்தின் போதும் தோழர் சிவா திலீபன் களத்தில் முன்னின்றார். அதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 11 அன்று, மொழிப்போர் தியாகி தாலமுத்து அவர்களின் நினைவு நாளில், சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தை மேற்கொண்டது. அப்போது எதிர்பாராதவிதமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எங்களுடைய தோழர் சிவா திலீபன், ‘தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!’ என்று முழங்கியபடி ஓடும் ரயில் முன்பு பாய்ந்தார். நொடிப் பொழுதில் நடந்தேறிய இச்சம்பவத்தால் அதிர்ச்சியுற்ற தோழர்கள், கடுமையாக காயமடைந்திருந்த அவரை உடனடியாக மீட்டு அருகிலிருந்த இராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை நடைபெற்று தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தார். மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் வருகை தந்து உயர் சிகிச்சையளிக்க மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்திச் சென்றார். முன்னதாக மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சிகிச்சையை மேற்பார்வையிட்டு சென்றார். மேலும், மதிமுக பொதுச்செயலாளர் ஐயா வைகோ மற்றும் பொருளாளர் தோழர் செந்திலதிபன், விசிக தலைவர் முனைவர் தொல். திருமாவளவளன் மற்றும் தோழர் வன்னி அரசு, தோழர் சிந்தனைச் செல்வன், சிபிஎம் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம், சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் கே. பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பேரா. ஜவஹிருல்லா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தோழர் அப்துல் சமது, தாம்பரம் யாக்கூப், @எஸ்டிபிஐ தமிழ்நாடு தலைவர் தோழர் நெல்லை முபாரக், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தோழர் அன்சாரி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் தோழர் வாலாசா வல்லவன், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் தோழர் முகமது ஷெப்லி, தோழர் பிர்தவ்ஸ், திராவிடர் கழகத்தின் தோழர் அருள்மொழி, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் தோழர் சுப.வீரபாண்டியன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன், ஆதித் தமிழர் கட்சியின் தலைவர் தோழர் தோழர் ஜக்கையன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழர் ஆட்சிக் கழகத்தின் தலைவர் தோழர் எஸ்.ஆர்.பாண்டியன், மக்கள் அதிகாரக் கழகத்தின் தோழர் வெற்றிவேல் செழியன், மேலும் அம்மா அற்பதம்மாள், தோழர் பேரறிவாளன், தோழர் மன்சூர் அலிகான் உட்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள், ஆளுமைகள், தோழர்கள் நேரில் வந்திருந்திருந்து சிவா திலீபன் தோழரின் உடல்நிலை குறித்தும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்து சென்றனர். 8 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகும் தோழரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் இன்று அடுத்தடுத்து ஏற்பட்ட மாரடைப்பு காரணமான இரவு 9:30 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. தோழர் சிவா திலீபன் அவர்களை இழந்தது மே பதினேழு இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தாய்மொழி தமிழை காக்க ஆதிக்க இந்திக்கு எதிராக போராடிய தோழர் சிவா திலீபன் மொழிப்போர் ஈகியரில் ஒருவராகிப் போனார். அன்னை தமிழுக்காகப் போராடிய தோழர் சிவா திலீபன் இன்று தமிழ்ச் சமூகத்தின் சொத்தாகிவிட்டார். தமிழ் மொழிக்கான அவரது ஈகம் தமிழ் வாழும் வரை தமிழ்ச் சமூகத்தால் போற்றப்பட வேண்டும். தோழர் சிவா திலீபன் பற்ற வைத்த ஆதிக்க இந்திக்கு எதிரான போராட்டம் தமிழ்நாடு முழுவதும் பரவியது. தோழர் சிவா திலீபன் மூட்டிய நெருப்பை அணையவிடாமல் ஒவ்வொரு தமிழனும் பாதுகாப்போம். ஆதிக்க இந்தியை தமிழ்நாட்டை அகற்றுவதே தோழர் சிவா திலீபனின் ஈகத்திற்கு அளிக்கும் மரியாதையாகும். அதனை செய்துமுடிப்போம் என உறுதியேற்போம். கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்! வீரவணக்கம் வீரவணக்கம்! மொழிப்போர் ஈகி சிவா திலீபனுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! மே பதினேழு இயக்கம் 9884864010 #🚨கற்றது அரசியல் ✌️ #💪 மே17 இயக்கம் #தமிழ்நாடு தமிழருக்கே! #✍️மே17 இயக்கக் குரல் #இந்தி திணிப்பு
Rationalist
552 காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
#தமிழ்த்தேசியப்பெருவிழா2026 #மே17இயக்கமாநாடு #தமிழ்சமூகவரலாற்றில்முருகன் #அரசு முருகன் என்ற வடிவ உருவாக்கத்திற்கு இலக்கியங்களில் வரும் முருகு என்ற சொல்தான் அடிப்படை என்கிறார்கள். ஆனால் முருகு என்றால்-இளமை,அழகு,வீரம், இணைவிழைவு, முருகு என்பதன் கட்டமைக்கப்பட்ட வடிவம் தான் முருகன். -போராசிரியர் அரசு #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺அரசியல் 360🔴 #✍️மே17 இயக்கக் குரல் #தமிழ்த்தேசியப் பெருவிழா
Rationalist
667 காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
"அய்யன் என்றால் 'தலைவன்'. அய்யனார் கையில் வைத்திருக்கும் 'செண்டு' உலகம் முழுக்க இருக்கும் கால்நடை வளர்க்கும் சமூகத்தின் கையில் இருக்கிறது. அய்யனார் வழிபாட்டு கூறுகளும் தாய்வழிபாட்டு முறையும் தமிழ்சமூகத்தின் மரபாக இன்றும் இருக்கின்றன"- முனைவர் சசிகலா. #தமிழ்த்தேசியப்பெருவிழா2026 #📺அரசியல் 360🔴 #💪 மே17 இயக்கம் #✍️மே17 இயக்கக் குரல் #தமிழ்த்தேசியப் பெருவிழா #🚨கற்றது அரசியல் ✌️
Rationalist
570 காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
#தமிழ்த்தேசியப்பெருவிழா2026 #மே17இயக்கமாநாடு #தமிழர்வழிபாட்டில்தாய்த்தெய்வமும்அய்யனாரும் வேளாண் சடங்கு, பெண் தவிர்த்து இல்லை கால்நடை வளர்ப்பு சமூகத்தில் இரண்டாம் நிலை நடுகல் வழிபாடு -பெண் இல்லை.. உணவை வழங்குவதே வணக்கத்திற்குரிய கருவி கருவி வணக்கம்-கற்கால கருவிகள் வழிபாடு -முனைவர் கோ. சசிகலா #தமிழ்நாடு தமிழருக்கே! #தமிழ்த்தேசியப் பெருவிழா #🚨கற்றது அரசியல் ✌️ #✍️மே17 இயக்கக் குரல்