பேராவூரணி news

Makkal Mugam
528 views
18 hours ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 - முன்னிட்டு வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரும்பாடி கிராமத்தில் நடைபெற்ற100% வாக்களிப்போம், என் ஓட்டு, என் உரிமை" தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் பேரணி சென்று வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Makkal Mugam
517 views
20 hours ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 விருதுநகர் மாவட்டம் வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு விருசநகர், ஏப்.10. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் உதயன் மிஷ்ரா, (இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர்), அரவிந்த் மீனா, (சாத்தூர் மற்றும் சிவகாசி), ரஞ்சித் குமார் லால், அவர்கள்(விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை), சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா, அவர்கள்(திருச்சுழி) ஆகியோர் முன்னிலையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தலைமையில், நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 2001 வாக்குச்சாவடி மையங்களில் பதற்றமானவை என கண்டறியப்பட்ட 128 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவினை நேரடியாக கண்காணிக்கும் வகையில் 128 தேர்தல் நுண்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 08 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 09 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 204-சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 17 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 205-சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 28 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 13 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 22 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 208-திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 31 தேர்தல் நுண்பார்வையாளர்களும் என மொத்தம் 128 தேர்தல் நுண்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நுண்பார்வையாளர்களாக வங்கிகளில் பணியாற்றும் அலுவலர்கள் வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நுண்பார்வையாளர்கள் தேர்தல் நாளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவங்கள் உள்ளிட்ட பணிகள் குறித்தும், வாக்குச்சாவடிகளில் என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தேர்தல் நுண்பார்வையாளர்கள் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக தெரிந்து கொண்டு, வாக்குப்பதிவு அலுவலர்களால் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிந்து, அவை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து கண்காணித்து தேர்தல் பொதுப்பார்வையாளர்களுக்கு நேரடியாக அறிக்கை அளிக்க வேண்டும். குறிப்பாக, வாக்குப்பதிவு நாளில் நுண்பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நல்ல முறையில் எந்தவொரு சந்தேகமுமின்றி மேற்கொள்ளும் வகையில் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்குரிய பணிகளை நேர்த்தியாகவும், சிறப்பாக செய்ய வேண்டும். நுண்பார்வையாளர்கள் பதட்டமான வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவினை முறையாக கண்காணித்து சம்மந்தப்பட்ட தேர்தல் பொதுப்பார்வையாளர்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன், தேர்தல் தொடர்பான அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Makkal Mugam
496 views
20 hours ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 மதச்சார்பற்ற இந்தியா கூட்டணியின் ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதியின் காங்கிரஸ் வெற்றி வேட்பாளர் கோபிநாத் பழனியப்பன் அவர்களை ஆதரித்து சூரம்பட்டி நால் ரோட்டில் நாடாளுமன்ற உறுப்பினரும் கழகப் பொதுச் செயலாளருமான திரு கனிமொழி கருணாநிதி அவர்கள் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
Makkal Mugam
527 views
22 hours ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 856 மாணவர்களுக்கு ரூ.1 கோடி கல்வி உதவித்தொகை வழங்கல் *ஏழை மாணவர்கள் அனைவரும் கல்வியைப் பெற அரசுகள் அதிகம் செலவழிக்க வேண்டும்* விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வலியுறுத்தல் வேலூர், ஏப்.10 வேலூர்: ஏழை மாணவர்கள் அனைவரும் கல்வியைப் பெற அரசுகள் அதிக நிதியை ஒதுக்கி செலவழிக்க வேண்டும் என்று விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசினார். அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளை சார்பில் 2025-26 ஆம் கல்வி ஆண்டின் கல்வி உதவித்தொகை (பகுதி இரண்டு) வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கோஸ்டல் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மணிகண்டன் ஜி மேனன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் 278, மாணவிகள் 578 பேர் என மொத்தம் 856 பேருக்கு ரூ.1 கோடியே 18 லட்சம் கல்வி உதவித்தொகையை வழங்கினார். நிகழ்வில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசியதாவது: அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை மூலமாக மாணவர்களுக்கு கல்வியைத் தருகிறோம். உதவித்தொகை என்பது கல்விக்காகத்தான். அதுதான் நிரந்தர செல்வம். இதை மக்களும், அரசும் அறிந்துகொள்ள வேண்டும். இப்போது தேர்தல் நேரம் என்பதால் பிரசார கூட்டங்களில் நான் வந்தால் கல்வியைக் கொடுப்பேன் என்று சொல்கிற கட்சியோ, வேட்பாளரோ யாருமில்லை. கல்வி நிரந்தர செல்வம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளை சார்பில் இன்றைய நிகழ்வில் மட்டும் 856 பேருக்கு ரூ.1 கோடியே 18 லட்சத்தை உதவித்தொகையை வழங்குகிறோம். கடந்த 2012 முதல் இதுவரை 11,171 மாணவ, மாணவிகளுக்கு ரூ.14.25 கோடி உதவித்தொகை வழங்கி உள்ளோம். கல்வியில் வளர்ந்த நாடுகளோடு போட்டி போட்டு நாம் வரவேண்டும் என்று விரும்புகிறோம். அமெரிக்காவோடும் சீனாவோடும் எல்லாம் போட்டி போட வேண்டும். மொத்த உற்பத்தியில் உலகளவில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்து இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. ஆனால் தனி நபர் வருமானம் ஈட்டுவதில் உலகளவில் இந்தியா 140-வது இடத்தில் உள்ளது. தனி நபர் வருமானத்தில் ஜப்பான் 30000 டாலர்களும், இந்தியா வெறும் 3,000 டாலர்களை மட்டுமே ஈட்டி வருகிறது. இதை மாற்றி அமைக்க கூடிய வாய்ப்பு கல்விக்குத்தான் உண்டு. உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தில் இந்தியா 28 சதவீதம் மட்டுமே உள்ளது. தமிழகம் 50 சதவீதத்துடன் முதல் மாநிலமாக உள்ளது. சீனா 70 சதவீதத்துக்கு மேல் போய்விட்டது. வளர்ந்த நாடுகள் 60 முதல் 100 சதவீதம் வரை வந்துவிட்டது. இந்நிலைக்கு வளர்ந்த நாடுகளில் அரசுகள் அதிகம் கல்விக்கு செலவு அளிப்பது தான் காரணமாகும். இந்தியாவில் அரசு குறைவாக செலவழிக்கிறது. பெற்றோர்கள் தான் அதிகம் கல்விக்கு செலவழிக்கின்றனர். உயர்கல்விக்கு வந்தால் 75 முதல் 80 சதவீத மாணவ, மாணவிகள் தனியார் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தான் படிக்கும் சூழல் உள்ளது. தமிழகத்தில் உள்ள 22 அரசு பல்கலைக்கழகங்களில் 2 பல்கலைக்கழகங்களில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேலான மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 15 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை. அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான பிரச்சினைகளால் பாதிக்கப்படுவது மாணவர்கள் தான். ஏழை மாணவர்களும் நடுத்தர மாணவர்களும் அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தான் படிக்க முடியும். ஆனால் அரசுகள் அதிகம் செலவு செய்வதில்லை. மாணவர் சேர்க்கையையும் அதிகப்படுத்துவது இல்லை. இந்தியாவில் பள்ளி கல்வி அலுவல் நேரம் 6 மணி நேரமாக உள்ளது. வங்கதேசம் உள்ளிட்ட மற்ற நாடுகளில் 8.5 மணி முதல் 9.5 மணி வரை உள்ளது. வளர்ந்த நாடுகளான சீனா, தென்கொரியா போன்ற நாடுகளில் 12 முதல் 14 மணி நேரமாக உள்ளது. பள்ளிக்கல்வியில் இருக்கிற 6 மணி நேரத்தை சரியான முறையில் பயன்படுத்தி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும். அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளோடு போட்டி போட வேண்டும். அதற்கு பிறகு உலக நாடுகளோடு போட்டி போட வேண்டும். ஏழை எளிய மாணவர்கள் அனைவரும் கல்வியைப் பெற அரசுகள் அதிக நிதியை ஒதுக்கி செலவழிக்க வேண்டும். உயரகல்வியில் மாணவர்களுக்கு தனி நபர் செலவினம் என்பது ஓ.இ.சி.டி. நாடுகளில் 15000 முதல் 20000 டாலர்கள் வரை உள்ளன. சீனா 17,700 டாலர்களை வரை செலவழிக்கிறது. ஆனால், இந்தியாவோ வெறும் 760 டாலர்களை செலவழிக்கிறது. உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் சீனா 70 சதவீதத்தில் உள்ளது. இந்தியா 28 சதவீதத்தில் பின்தங்கி உள்ளது. கல்வி இல்லாமல் பொருளாதார வளர்ச்சி வராது. இவ்வாறு அவர் பேசினார். கோஸ்டல் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மணிகண்டன் ஜி மேனன் பேசும்போது, “கல்வி தான் வளர்ச்சிக்கு அடித்தளமாகும். சமுதாயம், நாடு மேம்பட கல்வி முக்கியமாகும். மாணவ, மாணவிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது. மாணவர்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். சமூக பொறுப்புணர்வு வேண்டும். சமூகத்திற்கு திரும்ப வழங்க வேண்டும்” என்றார். நிகழ்வில் அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளை உறுப்பினர் மயிலாம்பிகை குமரகுரு, செயலாளர் ஜே.லட்சுமணன், பொருளாளர் கே. ஜவரிலால் ஜெயின் மற்றும் நிதிக்குழு தலைவர் எம். வெங்கடசுப்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளை உதவி திட்ட இயக்குநர் ப. சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.
vijima
759 views
10 days ago
#perambalur news #perambalur #kunnam #ariyalur#thanjavur #trichy #padalur #chettikulam #siruvachur #vepanthattai #kirushapuram #venpaur #kurumbalur #perambalur _memes #i_ loveperambalur #perambalurgirls💃🏽 Tittakudi# tholuthur# veppur# pennadam