📰ஏப்ரல் 2 ட்ரெண்டிங் நியூஸ் 📱

ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1.1K காட்சிகள்
19 நாட்களுக்கு முன்
ஆந்திர பிரதேசத்தில் தாயே தனது ஐந்து மாத குழந்தையை ஆத்திரத்தில் கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது அந்தப் பெண்ணிற்கு ஒரு மகனும், 5 மாத பெண் குழந்தையும் இருந்த நிலையில், காலையில் அவரது கணவர் வேலைக்குச் சென்றுள்ளார். வீட்டில் இருந்த குழந்தை பசியால் பால் கேட்டுத் தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது. குழந்தையின் அழுகைச் சத்தத்தால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், நிதானம் இழந்து பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். குழந்தையைக் கொன்ற பிறகு தனது கணவருக்குத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்ட அந்தப் பெண், “உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி, எனக்கு ஒரு நல்ல செய்தி; நான் குழந்தையைக் கொன்றுவிட்டேன்” என்று எவ்வித பதற்றமுமின்றித் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், குழந்தையைக் கொன்ற அந்தப் பெண்ணைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #📰ஏப்ரல் 2 ட்ரெண்டிங் நியூஸ் 📱 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
6K காட்சிகள்
19 நாட்களுக்கு முன்
மகாராஷ்டிரா மாவட்டம் சோலாப்பூர் மாநிலம் வடக்கு தாலுகாவிற்கு உட்பட்ட தானே கிராமத்தில் குடும்ப தகராறு காரணமாக தந்தை ஒருவர் தனது மூன்று சிறு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பீமா அண்ணா வாக்மாரே (34) என்ற அந்த நபர், ஒரு சிமெண்ட் தொழிற்சாலையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் கடும் வாக்குவாதம் நிலவி வந்த நிலையில், மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். பலமுறை அழைத்தும் மனைவி வர மறுத்ததால் ஏற்பட்ட விரக்தியில், பீமா இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். ​தனது குழந்தைகளான ஜான்வி, பிரகதி மற்றும் பாபு ஆகிய மூவரையும் அருகில் உள்ள வயல்வெளிக்கு அழைத்துச் சென்று, அங்கு அவர்களுக்கு விஷம் கொடுத்துவிட்டுத் தானும் விஷம் அருந்தியுள்ளார். இதில் பீமா வாக்மாரே சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, தகவலறிந்த கிராம மக்கள் விரைந்து வந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது குழந்தைகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், குடும்பத் தகராறு எதனால் உருவானது என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #📰ஏப்ரல் 2 ட்ரெண்டிங் நியூஸ் 📱