காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔

ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
689 காட்சிகள்
9 நாட்களுக்கு முன்
கிருஷ்ணகிரி பெல்லாரம்பள்ளியைச் சேர்ந்த ராணுவ வீரர் மகேஷ் குமார் (43). இவரது மனைவி பானுப்பிரியா (30). மகேஷ் குமார் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்த நிலையில், பானுப்பிரியாவுக்கும் வேன் டிரைவர் பூவரசனுக்கும் (24) இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த மகேஷ் குமார், ஊருக்கு வந்து மனைவியைக் கண்டித்துள்ளார். கடந்த மே 10-ஆம் தேதி இரவு, மகேஷ் குமார் வீட்டில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பூவரசன் கத்தியுடன் வீட்டிற்குள் புகுந்து மகேஷ் குமாரை குத்தினார். தடுக்க வந்த மாமனார் செல்லப்பனையும் பூவரசனும், பானுப்பிரியாவும் சேர்ந்து மாறி மாறி குத்திக் கொலை செய்தனர். கொலையை மறைக்க ரத்தக்கறையைத் துடைத்தெறிந்த இருவரும், இரு சடலங்களையும் தனித்தனி சாக்கு மூட்டைகளில் கட்டினர். பின்னர், வீட்டில் இருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன் பகுதியில் சடலங்களை வைத்துக் கொண்டு நள்ளிரவில் புறப்பட்டனர். வழியில் பெட்ரோல் பங்கில் டீசல் வாங்கி, வெப்பாலம்பட்டி பகுதியில் வெவ்வேறு இடங்களில் சடலங்களை வீசி தீ வைத்து எரித்துள்ளனர். அடையாளம் தெரியாத நிலையில் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், மாயமான நபர்களின் விவரங்களை வைத்து போலீசார் பானுப்பிரியாவிடம் விசாரித்தனர். ஆரம்பத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அவர், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். கள்ளக்காதலனுக்காக ராணுவ வீரரான கணவரையும், வயதான மாமனாரையும் எரித்துக் கொன்ற இளம்பெண்ணின் இந்தச் செயல் கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
9.8K காட்சிகள்
23 நாட்களுக்கு முன்
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சீதாராம் என்பவருக்கும், ரேணுகா என்பவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த இவர்களது குடும்ப வாழ்வில், ரேணுகாவின் தவறான பழக்கவழக்கங்கள் புயலை வீசியுள்ளன. கணவர் சீதாராமுக்குத் தெரியாமல், ரேணுகா மூன்று வெவ்வேறு ஆண்களுடன் ரகசியத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதில் குறிப்பாக ரமணா ரெட்டி என்பவருடன் பழகியபோது, அவருடனான அந்தரங்கத் தருணங்களை ரேணுகா வீடியோவாகப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. மனைவியின் இந்தத் தவறான செயல்பாடுகள் மற்றும் அந்தரங்க வீடியோ விவகாரம் கணவர் சீதாராமுக்குத் தெரிய வந்துள்ளது. தான் உயிருக்கு உயிராக நேசித்த மனைவியின் துரோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத சீதாராம், கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் விரக்தியடைந்த அவர், அருகில் உள்ள ஏரியில் குதித்துத் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சீதாராமின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்குக் காரணமான அந்தரங்க வீடியோ மற்றும் ரேணுகாவின் கள்ளத்தொடர்பு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
913 காட்சிகள்
25 நாட்களுக்கு முன்
சென்னை திருவொற்றியூர் மணலி பகுதியை சேர்ந்தவர் 37 வயதுடைய முத்துக்குமார் இவர் மணலி மாநகராட்சி மண்டலத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த நிலையில் அதே பாதி சேர்ந்த சுந்தரி என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.... இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் ஒரு வருட முன்பு மனைவி இறந்து தனியாக வசித்த உறவினர் சதீஷ்குமார் என்பவரை முத்துக்குமார் அழைத்து வந்து தனது வீட்டில் தங்க வைத்திருக்கிறார். இந்நிலையில் முத்துக்குமார் தினந்தோறும் காலை வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் மாலையில் தான் வீடு திரும்புவார் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் வீட்டில் தனியாக இருந்த குணசுந்தரிக்கும், சதிஷ்குமாருக்கும்இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கணவனை விட்டு காதலனுடன் வாழ நினைத்த குணசுந்தரி கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெரியபாளையத்தில் உள்ள அம்மா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் குணசுந்தரி தனது கள்ளக்காதலன் சதீஷ்குமாருடன் வீட்டை விட்டு வெளியேறியது தெரிவந்தது. இதனால் மனமுடைந்து விரக்தியில் இருந்த முத்துக்குமார் இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தான் இறப்பதற்கு முன்பு செல்போனில் ஆடியோ பதிவு செய்தும், கடிதம் எழுதி வைத்தும் "எனது மரணத்திற்கு காரணம் மனைவி குணசுந்தரியும் சதீஷ்குமாரும் தான்" என தெரிவித்துள்ளார். தன்னை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மணலி காவல் நிலைய போலீசார் இறந்த முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் இது குறித்து சட்டரீதியாக எவ்வித நடவடிக்கை எடுக்க முடியாது என போலீசார் புகாரை வாங்க மறுத்ததால் பிரேத பரிசோதனை முடித்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குகொண்டுவரப்பட்ட முத்துக்குமார் உடலை வழியில் மடக்கி பொன்னேரி நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மணலி காவல் நிலைய உதவி ஆணையர் விவேகானந்தன் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு புகார் மீது நடவடிக்கை எடுப்பதாகஉறுதி அளித்ததை அடுத்து மறியலைகைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பொன்னேரி நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் முத்துக்குமார் எழுதி வைத்த கடிதத்தில் "என் மனைவி வேற என்ன கரணம் சொல்லி இருந்தாலும் நான் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டேன் ஆனால் என்னிடம் நல்ல முறையில் நடந்து கொண்டு இப்படி செய்தது என்னால் தங்க முடியவில்லை, கடந்த (ஏப் 2) ஆம் தேதி கூட நாங்கள் ஒன்றாக குளித்து உடலுறவு கொண்டோம், குண பிறகு இரண்டு நாட்களிலேயே என்னை ஏமாற்றிவிட்டால்" என எழுதி வைத்திருப்பது முத்துக்குமாரின் உறவினர்கள் மீது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #கூடா நட்பு கேடாய் முடியும்.. #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
982 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
மைசூர் மாவட்டம் சரகுரு பகுதியில் கூலித் தொழிலாளி ஆன ஐவரப்பா என்பவர் கடந்த 16ஆம் தேதி சாலையோரம் பிணமாக கடந்தார்... முதலில் இது விபத்து எனத் தோன்றினாலும், ஜவரப்பாவின் உடலில் இருந்த காயங்கள் போலீசாருக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தின. மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், ஜவரப்பாவின் செல்போன் எண்களை ஆய்வு செய்தபோதுதான் அந்த திடுக்கிடும் 'கள்ளக்காதல்' பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது. ஜவரப்பா தான் வேலை பார்த்து வந்த மேஸ்திரி சித்தேஷை, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று மனைவி அம்ருதாவை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த அறிமுகம் நாளடைவில் அம்ருதா மற்றும் சித்தேஷ் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், இந்த விவகாரம் ஜவரப்பாவுக்குத் தெரியவந்துள்ளது. மனைவியைக் கண்டித்த ஜவரப்பா, தங்களது கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருப்பார் என்று கருதிய அந்த ஜோடி, அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தது. திட்டமிட்டபடி, சித்தேஷ் தனது காரில் ஜவரப்பாவை மது குடிக்க அழைத்துச் சென்று, அங்கு அவரைத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் விபத்து போலச் சித்தரித்து உடலை வீசிவிட்டுச் சென்றுள்ளார். தற்போது கைதான அம்ருதா மற்றும் சித்தேஷ் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
861 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டம் பரகலா டவுனில் உள்ள சிஎஸ்ஐ காலனியைச் சேர்ந்த மடிகொண்ட சுமனுக்கும் (36), ரெகொண்டாவைச் சேர்ந்த லாவண்யாவுக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். சுமன் ஒரு மெக்கானிக்காக பணிபுரிந்து குடும்பத்தை நடத்தி வந்தார், அதே சமயம் லாவண்யா நகராட்சியில் தூய்மை பணியாளராகப் பணிபுரிந்தார். லாவண்யா பணியிடத்தில் சந்தித்த மற்றொரு நபருடன் ஏற்பட்ட பழக்கம் திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறியது. இது அவரது கணவர் சுமனுக்கு தெரியவந்ததால் ​​இருவருக்கும் இடையே சண்டைகள் மூண்டன. தனது காதலனுடன் இருப்பதற்குத் தன் கணவர் தடையாக இருப்பதாக லாவண்யா உணர்ந்தார். இதனால் எப்படியாவது தன் கணவரைக் கொல்ல லாவண்யா தனது திட்டம் தீட்டினார். இதற்கிடையில் சுமனும் லாவண்யாவும் இந்த மாதம் 3 ஆம் தேதி வாரங்கலில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்குச் சென்றனர். 4 ஆம் தேதி முதல் சுமன் காணாமல் போனதாக லாவண்யா தன் கணவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தார். 6 ஆம் தேதி, லாவண்யா பரகலாவில் உள்ள தன் வீட்டிற்குச் சென்றபோது சுமனின் பெற்றோர் அவரைப் பற்றி விசாரித்தனர். அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று லாவண்யா கூறியதால், சுமனின் தந்தை சாம்பய்யா 8 ஆம் தேதி பரகலா காவல் நிலையத்தில் சுமன் காணாமல் போனதாகப் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, காணாமல் போனவர் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையே முலுகு மாவட்டம் கோவிந்தராவ்பேட் புறநகர்ப் பகுதியில் அடையாளம் தெரியாத வகையில் எரிந்தநிலையில் ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காணாமல் போனவர்கள் பட்டியலை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, சுமனின் செல்போனின் கடைசி சிக்னல் முலுகு மாவட்டம், கோவிந்தராவ்பேட் மண்டலத்தில் கிடைத்தது. இதையடுத்து, பரகலா மற்றும் பாசரா போலீசார் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அது சுமன் சடலம் தான் என்பதை உறுதி செய்த போலீசார், இதில் சிலர் சுமனை வாரங்கலில் இருந்து அழைத்துச் வந்து கோவிந்தராவ்பேட் புறநகர்ப் பகுதியில் மது அருந்த வைத்து, பீர் பாட்டில்களால் குத்திக் கொலை செய்து, சடலத்தை அடையாளம் தெரியாமல் இருக்க பெட்ரோல் ஊற்றிக் கொன்றதை கண்டறிந்தனர். இதனிடையே லாவண்யா நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததால் அவரிடம் பிடித்து விசாரித்ததில் தன்னுடன் பணிபுரிந்த மற்றொரு பெண்ணின் உதவியுடன், கோவிந்தராவ்பேட்டைச் சேர்ந்த ஒரு நபருக்கு ரூ. 5 லட்சம் கொடுத்து கொலை செய்ததாக தெரிவித்தார். மேலும் கடந்த காலங்களில் லாவண்யா இரண்டு முறை சுமனைக் கொல்ல முயன்றதாகவும் இரண்டு முயற்சிகளும் தோல்வியடைந்ததால் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக தெரிவித்தார். இதனையடுத்து லாவண்யாவை கைது செய்த போலீசார் கொலை செய்த கூலிப்படையை சேர்ந்தவரை தேடி வருகின்றனர். லாவண்யா தான் சுமனை கொலை செய்ததை பற்றி அறிந்த அவரது குடும்பத்தினர், புதன்கிழமை இரவு பரகலா காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களைச் சமாதானப்படுத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டணை பெற்று தரப்படும் என உறுதி அளித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
955 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
விஜயவாடா அண்டு குண்டூர் மாவட்ட எல்லை பகுதியான துக்கிராலா மண்டபம் சிலுவூர் கிராமத்தில் நடந்த அதிர்ச்சிகரமான கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.... வெங்காய வியாபாரியான லோகம் சிவனகராஜு என்பவர், தனது மனைவி லட்சுமி மாதுரி மற்றும் அவரது கள்ளக்காதலன் கோபியால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். 2007-ல் திருமணமான இத்தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், விஜயவாடா சினிமா திரையரங்கில் பணிபுரிந்த மாதுரிக்கு, கோபி என்பவருடன் ஏற்பட்ட தவறான உறவே இந்த கொடூரச் செயலுக்குக் காரணமாக அமைந்துள்ளது. தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்த மாதுரி, கடந்த ஜனவரி 18-ம் தேதி இரவு சிவனகராஜுவுக்கு வழங்கிய பிரியாணியில் சுமார் 20 தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார். அவர் மயக்கமடைந்ததும், வீட்டிற்கு வந்த காதலன் கோபியுடன் இணைந்து மாதுரி இச்செயலை அரங்கேற்றியுள்ளார். கோபி சிவனகராஜுவின் மார்பின் மீது அமர்ந்து பிடித்துக்கொள்ள, மாதுரி தலையணையால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலையில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், கணவர் இறந்ததை உறுதி செய்த பிறகு, மாதுரி சற்றும் பதற்றமின்றி விடிய விடிய சடலத்தின் அருகிலேயே அமர்ந்து ஆபாச வீடியோக்களைப் பார்த்துக் கழித்துள்ளார். அதிகாலையில் எதுவுமே தெரியாதது போல் நடித்த அவர், தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறி அழுது நாடகமாடியுள்ளார். இருப்பினும், தம்பதியினரிடையே இருந்த தொடர் சண்டைகள் மற்றும் மாதுரியின் நடத்தையில் ஏற்கனவே சந்தேகத்தில் இருந்த அக்கம் பக்கத்தினர் இந்த மரணத்தை எளிதில் நம்பவில்லை. இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோது, சிவனகராஜுவின் காது மற்றும் கழுத்துப் பகுதியில் இருந்த காயங்களைக் கண்டு அவரது நண்பர்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். பிரேதப் பரிசோதனையில் அவர் மூச்சுத்திணறலால் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் மாதுரியைக் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த அவரது காதலன் கோபியும் தற்போது போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கள்ளக்காதலுக்காகக் கணவனைக் கொன்றுவிட்டு, சடலத்தின் அருகே ஆபாச வீடியோ பார்த்த பெண்ணின் செயல் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது...... #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
828 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
தெலுங்கானா மாநிலம் அம்மன் பள்ளி சேர்ந்த பானி பூரி வியாபாரி சித்தாரட்டி வயது 35 இவருடைய மனைவி கவிதா (29). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.... இந்நிலையில், திருப்பதியைச் சேர்ந்த பவன்குமார் ரெட்டி என்பவருடன் கவிதாவுக்கு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடை வில் கள்ளக்காதலாக மாறியதை அடுத்து, கடந்த மாதம் 27-ம் தேதி கவிதா தனது கணவர் மற்றும் குழந்தைகளைத் தவிக்க விட்டுவிட்டுத் தனது காதலனுடன் ஜட்செர்லா பகுதிக்குச் சென்றுவிட்டார். மனைவியைக் காணவில்லை எனச் சித்தாரெட்டி அளித்த புகாரின் பேரில், ஜட்செர்லாவில் இருந்த கவிதாவை போலீசார் கண்டுபிடித்தனர். சித்தாரெட்டி, காவலர் காதிர் என்பவருடன் காரில் சென்று கவிதாவைச் சந்தித்துத் தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அப்போது, "காதலனை விட்டு வர முடியாது" எனக் கூறி கவிதா தனது கணவரை ஆவேசமாகத் திட்டியுள்ளார். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கவிதா தனது கணவருடன் வரச் சம்மதித்தார். காரில் காவலர் முன் இருக்கையில் அமர, பின் இருக்கையில் சித்தாரெட்டி, கவிதா மற்றும் அவரது காதலன் பவன்குமார் அமர்ந்து பயணம் செய்தனர். சதாசிவபேட்டை அருகே காரை நிறுத்தி டீ குடித்தபோது, ஆத்திரத்தில் இருந்த சித்தாரெட்டி அங்குள்ள ஒரு கடையில் மறைமுகமாகக் கத்தி ஒன்றை வாங்கியுள்ளார். மீண்டும் பயணம் தொடர்ந்த சில நிமிடங்களில், சித்தாரெட்டி மறைத்து வைத்திருந்த கத்தியால் கவிதாவின் கழுத்தில் சரமாரியாகக் குத்தினார். ரத்தம் பீறிட்டுத் தெறிக்க, காவலர் தடுத்தும் பலனின்றி கவிதா காரிலேயே துடிதுடித்துச் சரிந்தார். படுகாயமடைந்த கவிதாவை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சித்தாரெட்டியைத் தற்கொலை முயற்சி மற்றும் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்தனர். காவல்துறையினரின் முன்னிலையிலேயே இந்த விபரீதம் நிகழ்ந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #ஏப்ரல் 09 முக்கிய தகவல்🤔
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
3.7K காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனவள்ளி பின்னர் இருவரும் தமிழரசனின் வீட்டில் அவரது தாய் தந்தையுடன் ஒன்றாக வசித்து வந்தனர். தந்தை ராஜன் மரம் அறுக்கும் வேலைக்கும், தாய் லட்சுமி ஓட்டலில் கூலி வேலைக்கும் சென்று வந்தனர். தினமும் காலை வேலைக்கு செல்லும் தமிழரசன் இரவு தான் வீடு திரும்புவார் என சொல்லப்படுகிறது. ஆனால் ராஜன் மரம் அறுக்கும் தொழிலாளி என்பதால் காலை வேளைக்கு சென்றுவிட்டு மதியம் வீடு திரும்புவர் என சொல்லப்படுகிறது. எனவே வீட்டில் மருமகளுடன் நெருங்கி பழகி வந்த ராஜனுக்கும், அவரது மருமகள் சத்யவாணிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. தினமும் மதியத்திற்கு மேல் அவர்கள் தமிழரசன் வீடு திரும்பும் வரையில் தங்களின் திருமணத்திற்கு மீறிய உறவை தொடர்ந்திருக்கின்றனர். இந்த நிலையில் கர்ப்பமான சத்யவாணிக்கு கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பின்னர் அடுத்த 2 மாதத்தில் சத்யவாணி மீண்டும் கர்ப்பமாக தமிழரசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஏற்கனவே தனது மனைவிக்கும், தந்தைக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக பலரும் கூறி வந்த நிலையில், அவர்கள் தான் இல்லாத நேரத்தில் எல்லை மீறி போகிறார்களே என்ற சந்தேகம் தமிழரசனுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் சத்யவாணிக்குபெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று தமிழரசன் மனைவியிடம் சண்டை போட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சத்யவாணி தனது 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு ஒரு வாரம் இருந்து விட்டு கடந்த (மார்ச் 17) ஆம் தேதி மாலை உறவினர்களின் அறிவுறுத்தலின் பேரில் மீண்டும் கணவன் வீடு திரும்பினார். அடுத்த நாள் (மார்ச் 18) ஆம் தேதி மதியம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்திருந்த மாமனார் ராஜன், மருமகளை வழக்கம் போல உல்லாசமாக இருக்க அழைத்ததாக சொல்லப்படுகிறது . அப்போது குழந்தை அழவே குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு தொட்டிலில் போட்ட சத்யவாணி பாத்ரூமுக்கு சென்றார். அந்த நேரம் அங்கிருந்த ராஜன் இந்த குழந்தை பிறந்தது முதல் நமக்கு பிரச்சினையாக இருக்கிறதே என்றும் உல்லாச வாழ்க்கைக்கும் தொந்தரவு செய்கிறது என்றும் நினைத்து ராஜன் குழந்தையின் மூக்கை பிடித்து அழுத்தி மூச்சை நிறுத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதனிடையே பாத்ரூமில் இருந்து வந்த சத்யவாணி குழந்தை தலை தொங்கி பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, குழந்தையை எடுத்துக் கொண்டு அருகில் மருத்துவமனைக்கு செல்ல நினைத்த சத்யவானி குழந்தை தலை தொங்கி இறந்துவிட்டதை உறுதி செய்து என்ன செய்வது என தெரியாமல் இருந்திருக்கிறார். பின்னர் குழந்தை இறந்துவிட்டது என தெரிந்தால் கணவர் என்ன செய்வாரோ என்ற அச்சத்தில் குழந்தையின் உடலை தூக்கி சென்று அருகில் உள்ள சேட்டு என்பவரின் கிணற்றில் போட்டு விட்டு வீட்டிற்கு சென்றிருக்கிறார். இதனிடையே வீட்டிற்கு வந்த குழந்தையின் தந்தை தமிழரசன் குழந்தை எங்கே என கேட்க, எதுவும் நடக்காதது போல் சத்யவாணி தெரியவில்லை என கூறியிருக்கிறார். அதே போல தந்தை ராஜனுக்கும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்க அவரும் தனக்கு தெரியாத என கூறி நாடகம் ஆடியுள்ளார். இதையடுத்து குழந்தையை தமிழரசன் தேடி வந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த கிணற்றில் குழந்தையின் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையின் உடலை மீட்டுபோலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த வேப்பனஹள்ளி போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தாயிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் முதற் கட்டமாக மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையேயான கள்ளத்தொடர்பு தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் குழந்தையை மாமனாரான ராஜன் கையால் அழுத்தி கொலை செய்ததும், பின்னர் மருமகள் தெரியாமல் இறந்த குழந்தையை அருகில் இருந்த கிணற்றில் வீசியதும் தெரியவந்தது. இதையடுத்து சத்யவாணி, அவரது மாமனார் ராஜன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மாமனாருடன் ஏற்பட்ட விபரீத உறவால் 5 மாத குழந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம்