காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔

ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
13.2K views
17 hours ago
நீ என்கூடதான் தொடர்புல இருக்கனும்" - 5 வருட கள்ளக்காதல்.. கணவனோடு மீண்டும் சேர்த்த மனைவி! ஆத்திரத்தில் தீவைத்த காதலன் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் பெண்ணுக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படும் சம்பவத்தில், சுமார் 45 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சால்நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி குருவலட்சுமி (35). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சண்முகவேலின் மகன் சின்ன கெங்குராஜ் (47) என்பவர் மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சிலகாலமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துகொண்டிருந்த� #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #கள்ளகாதல் விவகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1.6K views
1 days ago
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் சிவகுமாரின் மனைவி சுஜாதாவுக்கும், அவரது நண்பரான அச்சுதானந்தனுக்கும் இடையே திருமணத்தை மீறிய தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக அச்சுதானந்தனின் மனைவி பரிமளா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிவகுமாரிடம் எச்சரித்துள்ளார்..... இந்நிலையில், சம்பவத்தன்று சுஜாதா தனது கணவரை செல்போனில் அவசரமாக வீட்டிற்கு அழைத்ததையடுத்து, கதவு திறக்கப்படாததால் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று சிவகுமார்பார்த்தார். அப்போது தனது மனைவி தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சுஜாதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்; இந்தத் தகவலறிந்த அவரது கள்ளக் காதலன் அச்சுதானந்தனும் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்று தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோத்தகிரி காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், சுஜாதாவின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்; இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.... #கள்ளகாதல் விவகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
667 views
2 days ago
விளையாட்டாக ஆரம்பிக்கும் கள்ளக்காதல் விவகாரங்கள் நாளடைவில் குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக மாறி, இறுதியில் கொலை, தற்கொலை போன்ற விபரீதங்களிலும் முடிந்து விடுகின்றன. இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரும் பெரும் மனவேதனைக்கு ஆளாகின்றனர். அந்த வகையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (48). இவர் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுஜாதா (40). இந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். சிவகுமாரின் நண்பரான காம்பாய்கடை பகுதியைச் சேர்ந்த அச்சு என்ற அச்சுதானந்தனுக்கும், சுஜாதாவுக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த அச்சுதானந்தனின் மனைவி பரிமளா, சுமார் 2 மாதங்களுக்கு முன்பு சிவகுமாரை தொடர்புகொண்டுள்ளா... அப்போது தனது கணவரை கண்டிப்பதாகவும், சிவகுமாரும் தனது மனைவி சுஜாதாவை கண்டிக்குமாறும் பரிமளா தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று சுஜாதா தனது கணவர் சிவகுமாரை செல்போனில் தொடர்புகொண்டு, அவசரமாக வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து கடையிலிருந்து உடனடியாக வீட்டிற்கு சென்ற சிவகுமார், வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிவகுமார், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அப்போது சுஜாதா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுஜாதாவை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுஜாதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே, சுஜாதா உயிரிழந்த தகவலை அறிந்த அச்சுதானந்தன் மனவேதனையில் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.... இந்த சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுஜாதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம், கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோத்தகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #கள்ளகாதல் விவகாரம் #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
638 views
3 days ago
திருமணத்திற்குப் புறம்பான உறவுக்கு தடையாக உள்ள கணவரை இரண்டு முறை கொலை செய்ய முயன்று தோல்வி அடைந்ததால் ரூ 5 லட்சம் கொடுத்து கூலிப்படையை ஏவி கொலை செய்து எரித்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டம் பரகலா டவுனில் உள்ள சிஎஸ்ஐ காலனியைச் சேர்ந்த மடிகொண்ட சுமனுக்கும் (36), ரெகொண்டாவைச் சேர்ந்த லாவண்யாவுக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். சுமன் ஒரு மெக்கானிக்காக பணிபுரிந்து குடும்பத்தை நடத்தி வந்தார், அதே சமயம் லாவண்யா நகராட்சியில் தூய்மை பணியாளராகப் பணிபுரிந்தார். லாவண்யா பணியிடத்தில் சந்தித்த மற்றொரு நபருடன் ஏற்பட்ட பழக்கம் திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறியது. இது அவரது கணவர் சுமனுக்கு தெரியவந்ததால் ​​இருவருக்கும் இடையே சண்டைகள் மூண்டன. தனது காதலனுடன் இருப்பதற்குத் தன் கணவர் தடையாக இருப்பதாக லாவண்யா உணர்ந்தார். இதனால் எப்படியாவது தன் கணவரைக் கொல்ல லாவண்யா தனது திட்டம் தீட்டினார். இதற்கிடையில் சுமனும் லாவண்யாவும் இந்த மாதம் 3 ஆம் தேதி வாரங்கலில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்குச் சென்றனர். 4 ஆம் தேதி முதல் சுமன் காணாமல் போனதாக லாவண்யா தன் கணவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தார். 6 ஆம் தேதி, லாவண்யா பரகலாவில் உள்ள தன் வீட்டிற்குச் சென்றபோது சுமனின் பெற்றோர் அவரைப் பற்றி விசாரித்தனர். அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று லாவண்யா கூறியதால், சுமனின் தந்தை சாம்பய்யா 8 ஆம் தேதி பரகலா காவல் நிலையத்தில் சுமன் காணாமல் போனதாகப் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, காணாமல் போனவர் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையே முலுகு மாவட்டம் கோவிந்தராவ்பேட் புறநகர்ப் பகுதியில் அடையாளம் தெரியாத வகையில் எரிந்தநிலையில் ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காணாமல் போனவர்கள் பட்டியலை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, சுமனின் செல்போனின் கடைசி சிக்னல் முலுகு மாவட்டம், கோவிந்தராவ்பேட் மண்டலத்தில் கிடைத்தது. இதையடுத்து, பரகலா மற்றும் பாசரா போலீசார் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அது சுமன் சடலம் தான் என்பதை உறுதி செய்த போலீசார், இதில் சிலர் சுமனை வாரங்கலில் இருந்து அழைத்துச் வந்து கோவிந்தராவ்பேட் புறநகர்ப் பகுதியில் மது அருந்த வைத்து, பீர் பாட்டில்களால் குத்திக் கொலை செய்து, சடலத்தை அடையாளம் தெரியாமல் இருக்க பெட்ரோல் ஊற்றிக் கொன்றதை கண்டறிந்தனர்... இதனிடையே லாவண்யா நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததால் அவரிடம் பிடித்து விசாரித்ததில் தன்னுடன் பணிபுரிந்த மற்றொரு பெண்ணின் உதவியுடன், கோவிந்தராவ்பேட்டைச் சேர்ந்த ஒரு நபருக்கு ரூ. 5 லட்சம் கொடுத்து கொலை செய்ததாக தெரிவித்தார். மேலும் கடந்த காலங்களில் லாவண்யா இரண்டு முறை சுமனைக் கொல்ல முயன்றதாகவும் இரண்டு முயற்சிகளும் தோல்வியடைந்ததால் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக தெரிவித்தார். இதனையடுத்து லாவண்யாவை கைது செய்த போலீசார் கொலை செய்த கூலிப்படையை சேர்ந்தவரை தேடி வருகின்றனர். லாவண்யா தான் சுமனை கொலை செய்ததை பற்றி அறிந்த அவரது குடும்பத்தினர், புதன்கிழமை இரவு பரகலா காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களைச் சமாதானப்படுத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டணை பெற்று தரப்படும் என உறுதி அளித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #கள்ளகாதல் விவகாரம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
723 views
6 days ago
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர ராவ் என்பவர், தனது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக அவரது செல்போனைச் சோதித்தபோது யாரும் எதிர்பாராத அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது... அவரது மனைவிக்கு வேறொரு நபருடன் திருமணத்திற்கு மீறிய ரகசியத் தொடர்பு இருப்பது வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்தத் தகவலால் ராஜேஸ்வர ராவ் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். மனைவியின் வாட்ஸ்அப் சாட்களை ஆழமாகப் படித்துப் பார்த்தபோது, அது வெறும் காதல் பேச்சுகளாக மட்டும் இல்லாமல் கொடூரமான கொலைத் திட்டமாக இருந்ததைக் கண்டு அவர் உறைந்துபோனார். "என் கணவரைக் கொலை செய்துவிட்டு, அதை யாருக்கும் சந்தேகம் வராதபடி ஒரு விபத்து போல சித்தரித்துவிடு" என்று தனது ஆண் நண்பரிடம் அந்தப் பெண் மிகத் துல்லியமாகத் திட்டம் தீட்டிப் பேசியிருப்பது ஆதாரத்துடன் சிக்கியது.... தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்ட அந்த வாட்ஸ்அப் உரையாடல்களை உடனடியாகத் தனது மொபைலில் ஆதாரமாகத் திரட்டிய ராஜேஸ்வர ராவ், உள்ளூர் காவல் நிலையத்தில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறிப் புகாரளித்தார். போலீஸார் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், விஷயம் தெரிந்ததும் அந்தப் பெண்ணும் அவரது ஆண் நண்பரும் தப்பியோடித் தலைமறைவாகியுள்ளனர். இவர்களைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #கள்ளகாதல் விவகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #🥰கள்ளக்காதல் வேணுமா வா💪
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
824 views
6 days ago
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர ராவ் என்பவர் எதார்த்தமாக தன் மனைவியின் செல்போனை சோதித்த போது ஆடிப்போய்விட்டார்.... அவர் மனைவிக்கு வேறொரு நபரோடு திருமணத்தை மீறிய உறவு இருப்பது மட்டுமல்லாமல், அந்த நபரிடம் அடிக்கடி, "என் கணவரை கொன்றுவிடு.. அதை விபத்து போல சித்தரித்துவிடு" என்றெல்லாம் அவர் மனைவி வாட்ஸ அப்பில் கொஞ்சியும் வந்தது தெரியவந்திருக்கிறது. ராஜேஸ்வர ராவ் செல்போனில் இருந்த ஆதாரத்தோடு போலீஸில் புகாரளித்தார். இதனால் அவருடைய மனைவி, தனது கள்ளக்காதலனுடன் தலைமறைவாகி உள்ளாராம். திருமணத்தை உறவு என்பது இன்றைக்கு எதார்த்தமான வாழ்க்கையை ஒப்பிட்டால், ஏதோ சீரியல்களை காட்டப்படும் விஷயமாக கடந்து போக முடியாது. ஏனெனில் கடந்த 15 வருடங்களில் கள்ளக்காதல் குற்றங்கள் பெரிய அளவில் அதிகரித்துள்ளன. நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களில் கூட கள்ளக்காதல் பெருகிவிட்டது. கணவனை பிடிக்காமல் திருமணம் செய்த பெண்கள், கணவனுக்கு பதில் காதலனை தேடி செல்வது அதிகமாக உள்ளது. அதேபோல் மனைவிக்கு தெரியாமல் அலுவலக தோழி அல்லது பள்ளி தோழி அல்லது நண்பனின் மனைவியுடன் தவறான நட்பை ஆண்கள் தேடுவதும் அதிகரித்துள்ளது. இப்படியான திருமணத்தை மீறிய உறவுகளை சமூகம் ஏற்பது இல்லை என்பதால், கடைசியில் விபரீதத்திலேயே முடிகிறது. தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம். தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவியும் அவரது காதலனும் சேர்ந்து தன்னைக் கொல்லத் திட்டமிட்டதாகக் கூறி போலீசில் புகார் அளித்துள்ளார். அதற்கு ஆதாரமாக வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உரையாடல்களை அனுப்பி உள்ளார். அந்த உரையாடலில், அவரது மரணத்தை ஒரு சாலை விபத்து போலக் காட்டத் திட்டமிட்டது தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது... தெலங்கானாவின் மஹபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த காடே ராஜேஸ்வர ராவ் என்பவர், தனது மனைவி பவானிக்கும் கம்மம் பகுதியைச் சேர்ந்த கூரியர் டெலிவரி ஊழியரான சைதுலுவுக்கும் இடையில் கள்ளக்காதல் இருப்பதாக சந்தேகம் அடைந்தார். இதனால் அவரது மனைவியின் செல்போனை எதார்தத்மாக பார்த்த போது, கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது. மேலும், அதில் தன் கணவனை கொன்று விபத்து போல் சித்தரித்துவிடு என்பதாக இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வர ராவ் போலீசில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கம்மம் ஊரகக் காவல் நிலையத்திற்கு வழக்கை மாற்றியுள்ளனர். ராஜேஸ்வர ராவின் புகாரின்படி, அவர் 2016-ல் பவானியைத் திருமணம் செய்துகொண்டார்; அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தனது மனைவிக்கு சைதுலுவுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், தான் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த கூரியர் ஊழியர் தங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்று வந்தாராம், ஜூலை 27 அன்று கள்ளகாதல் குறித்து சந்தேகம் அடைந்த ராவ், பின்னர் தனது மனைவியின் செல்போனைச் சோதித்தபோது, ​​தன்னை கொல்வது குறித்து விவாதிக்கும் செய்திகளைக் கண்டதாகக் கூறப்படுகிறது. வீட்டிற்குள் கணவரைக் கொன்றால் சந்தேகம் எழும் என்பதால், அவரது மரணத்தை ஒரு சாலை விபத்து போலக் காட்டலாம் என்று பவானி யோசனை தெரிவித்ததாகப் புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது மற்றொரு உரையாடலில், சைதுலு தனது கணவரைக் கொல்லாவிட்டால், தானே அதைச் செய்வதாக பவானி கூறியதாகவும் கூறப்படுகிறது. தனது உயிருக்கும் மகள்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, ராவ் அதற்கான ஆதாரங்களையும் (ஸ்கிரீன்ஷாட்கள்) காவல்துறையிடம் சமர்ப்பித்தார்.... கம்மம் ஊரகக் காவல் ஆய்வாளர் எம். ராஜு கூறும் போது, காவல்துறை ஆதாரங்களை ஆய்வு செய்து வருகிறது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஆதாரங்கள் பரிசீலிக்கப்படுகின்றன. விசாரணையின் ஒரு பகுதியாகக் குற்றச்சாட்டுகளும், சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின் நம்பகத்தன்மையும் சரிபார்க்கப்பட்டு வருகின்றன," என்று தெரிவித்தார். டிஜிட்டல் ஆதாரங்களின் நம்பகத்தன்மை மற்றும் சூழல் குறித்துபோலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்; அதேவேளையில், பவானி மற்றும் சைதுலு ஆகியோர் தலைமறைவாக உள்ளதால், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதற்கிடையில், தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக, தனக்கும் தனது மகள்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கணவர் ராவ் கோரிக்கை விடுத்துள்ளார். #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #கள்ளகாதல் விவகாரம் #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
653 views
6 days ago
தெலங்கானாவில் கணவரை சாலை விபத்து போல சித்தரித்து கொலை செய்ய மனைவி தனது ஆண் நண்பருடன் சேர்ந்து திட்டமிட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.... தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சந்தேகமடைந்த கணவர், மனைவியின் செல்போனை சோதனை செய்தபோது கிடைத்ததாக கூறப்படும் உரையாடல்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். தெலுங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டம் சிலாகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் காடே ராஜேஸ்வர் ராவ். கம்மம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் இவருக்கும், பவானி என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ராஜேஸ்வர் ராவ் காலை வேலைக்கு சென்றால் மீண்டும் மாலை தான் வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். ஆனால் கடந்த (ஜூலை 27) ஆம் தேதி வழக்கத்துக்கு மாறாக மதிய உணவுக்காக ராஜேஸ்வர் ராவ் திடீரென வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் தனது மனைவி பவானி, வேறொரு நபருடன் நெருக்கமாக இருந்ததை பார்த்ததாக ராஜேஸ்வர் ராவ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அந்த நபர் சைதுலு என்பதும், கம்மம் பகுதியில் உள்ள கொரியர் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது... இதையடுத்து, குடும்பத்தினர் மற்றும் கிராம பெரியவர்கள் முன்னிலையில் பிரச்சினைக்கு தீர்வு காண பஞ்சாயத்து நடத்த முடிவு செய்திருக்கின்றனர். அந்த பஞ்சாயத்தில் தனது சகோதரரும் பங்கேற்க வேண்டும் என்பதற்காக ராஜேஸ்வர ராவ் தனது சகோதரர்களை அழைக்க சென்றபோது, சைதுலு அவரை பின்தொடர்ந்து வந்து தாக்க முயன்றதாகவும், அவரிடமிருந்து தப்பி வீட்டிற்கு திரும்பியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்துக்குப் பிறகு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சந்தேகமடைந்த ராஜேஸ்வர் ராவ், மனைவியின் செல்போனை சோதனை செய்துள்ளார். அப்போது வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பவானி மற்றும் சைதுலு இடையே நடந்ததாக கூறப்படும் உரையாடல்களை பார்த்து ராஜேஸ்வர ராவ் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அதில், ராஜேஸ்வர் ராவை சாலை விபத்து போல சித்தரித்து கொலை செய்வது குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் முதலில் காதலன் இந்த திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் பவானி அவரிடம் "நீ என் புருஷனை கொன்னு தான் ஆகணும்.. இல்ல நான் உன்ன கொன்னுடுவேன்" என மெசேஜ் அனுப்பியிருக்கிறார். இதையடுத்து, அந்த உரையாடல்களின் ஸ்கிரீன்ஷாட்களை சேமித்து வைத்த ராஜேஸ்வர் ராவ், தனது உயிருக்கு பாதுகாப்பு கோரி கடந்த (ஆகஸ்ட் 1) ஆம் தேதி தோர்ணக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்... மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரால் தனக்கு ஆபத்து இருப்பதாகவும், பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தோர்ணக்கல் போலீசார் முதற்கட்டமாக ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, தொடர் விசாரணைக்காக வழக்கை கம்மம் கிராமப்புற காவல் நிலையத்திற்கு மாற்றியுள்ளனர். தற்போது ராஜேஸ்வர் ராவ் அளித்துள்ள டிஜிட்டல் ஆதாரங்களை போலீசார் ஆய்வுசெய்து வருகின்றனர். மேலும், பவானி மற்றும் சைதுலுவிடம் விசாரணை நடத்தி, கணவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவரை சாலை விபத்து போல கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படும் இந்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #கள்ளகாதல் விவகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1.2K views
8 days ago
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா கடகலதா கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி ரகு கவாடே என்பவரது மனைவி பங்காரி..... பங்காரிக்கும், ரகுவின் உறவினரான ராம ராணா என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இவர்களது சட்டவிரோத உறவைக் கண்டித்த ரகு, தங்களது தொடர்புக்கு இடையூறாக இருப்பார் எனக் கருதி, இருவரும் இணைந்து சுமார் 6 மாதங்களுக்கு முன்பு ரகுவின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். கொலைக்குப் பிறகு யாருக்கும் சந்தேகம் வராத வகையில் உடலை அருகில் இருந்த தோட்டத்தில் புதைத்துவிட்டு, கணவர் வேலைக்காக வெளியூர் சென்றுள்ளதாக பங்காரி நாடகமாடியுள்ளார்.... கணவர் நீண்ட நாட்களாக வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த ரகுவின் அண்ணன் லகமன்னா, சிக்கோடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் பங்காரியிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் பாணியை மாற்றி விசாரித்ததில், கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவரை ராம ராணாவுடன் சேர்ந்து கொலை செய்து உடலைத் தோட்டத்தில் புதைத்ததை பங்காரி ஒப்புக் கொண்டார்.... இதையடுத்து பங்காரி மற்றும் ராம ராணா ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்கள் அடையாளம் காட்டிய தோட்டத்திலிருந்து 6 மாதங்களுக்குப் பிறகு ரகுவின் உடலைத் தோண்டி எடுத்து உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சிக்கோடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், கள்ளத்தொடர்புக்காகக் கணவனைக் கொன்று 6 மாதங்கள் உடலைத் தோட்டத்தில் புதைத்து வைத்திருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
800 views
16 days ago
ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் அருகே, தவறான தொலைபேசி அழைப்பு மூலம் ஏற்பட்ட கள்ளக்காதலால், 10 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த கணவரைக் கொலை செய்யத் திட்டமிட்ட மனைவியும் அவரது காதலனும் ஊர்ப் பஞ்சாயத்தில் கையும் களவுமாகப் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.... ககுடி கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவருக்கும் ஷோபா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு ஷோபாவின் செல்போனுக்கு வந்த தவறான அழைப்பு மூலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி நாயக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளுக்கு நாள் தீவிரமடைந்த இந்த கள்ளக்காதலால் மயங்கிய ஷோபா, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவர் மற்றும் பிஞ்சுக் குழந்தைகளைத் தவிக்கவிட்டு பாலாஜி நாயக்குடன் ஓட்டம் பிடித்தார்.... மனைவியைக் காணவில்லை என்று சிரஞ்சீவி காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இருப்பினும், அண்மையில் கள்ளக்காதலால் கணவர்கள் படுகொலை செய்யப்படும் செய்திகளைக் கண்டு எச்சரிக்கையான சிரஞ்சீவி, தனக்கும் தன் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு தேடிக்கொண்டே மனைவியையும் தீவிரமாகத் தேடி வந்தார். இறுதியில் ஷோபாவும் பாலாஜி நாயக்கும் பெங்கிலபள்ளியில் தங்கியிருந்து, குப்பத்தில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்துகொண்டதை சிரஞ்சீவி கண்டுபிடித்தார். உடனடியாக உறவினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் இருவரையும் பிடித்து பஞ்சாயத்தார் முன் ஆஜர்படுத்தினார்.... கோயிலில் நடந்த கிராமப் பஞ்சாயத்து விசாரணையின் போது, சிரஞ்சீவியை வழியிலிருந்து அகற்றுவதற்காக அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த அதிர்ச்சித் தகவலைக் காதலன் பாலாஜி நாயக் ஒப்புக்கொண்டார். சிரஞ்சீவியின் சுதாரிப்பால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு அவர் உயிர் தப்பினார். முதலில் புகாரைக் தீவிரமாக விசாரிக்காத காவல்துறை மீது பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில், காவல் துணைக் கண்காணிப்பாளர் இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் :