thannambikkay.

saravanan.
512 views
11 days ago
#thannambikkay. . தெளிவு. துணிச்சல். இந்த மூன்றும் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழி நடத்திச் செல்லும்.*_ _தலையில் அதிக பாரம் வைத்து நடப்பவர்களை விட,_ _மனதில் அதிக பாரம் வைத்து நடைபிணமாய் வாழ்பவர்களே இங்கு அதிகம்._ _*சிந்தனையும் செயலும்*_ _*ஒன்றுபட்டால்*_ _*வெற்றியும்*_ _*புகழும் நமதே*_ _நம்பிக்கை துரோகத்திற்கு மிகப்பெரிய விளக்கமேதும் வேண்டாம்..._ _நம்பிக்கை துரோகம் என்பது தகுதியற்ற ஒருவரை நம்பியதற்கு கிடைத்த தண்டனை._ _*வாழ்வை அனுபவி*_ _*வாழ்வை முழுமையான உத்வேகத்துடன் ஆழமாக ரசித்து அனுபவியுங்கள்*_ _*வாழ்வின் மனத்தை நுகர்ந்து*_ _*ரசித்து மெதுவாக அதை உறிஞ்சி அதன் ருசியை ருசித்து அனுபவித்து மகிழ்ந்திடு.*_ _*தவற விட்டு விடாதே.*_ _எல்லாமே மிக அழகாக வாய்ப்பாக இருக்கிறது._ _*கவலையையும் வருத்தத்தையும் உருவாக்கிக் கொள்ளாதே.*_ _உன்னை உதறிய உறவினையும்,_ _உனக்கு உதவிய மனிதரையும் என்றைக்கும் ஞாபகத்தில் வை ._
saravanan.
513 views
2 months ago
#thannambikkay thulirgal விருப்பமா அவமானப்படுங்கள். என்னை நானே யாரென்று புரிய எனக்கு தேவைப்படும் ஓர் ஆயுதம் தான் அவமானம்! இது உண்மை என்பது போல், அனைவரின் வாழ்விலும் ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருக்கும். அவமானங்கள் தான், நம்மை திசை மாறச் செய்கின்றன. அப்படி மாறுகிற திசை சரியாக அமைய வேண்டும். அதில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். அப்படியே அந்த அவமானத்தில் கூனிக் குறுகி நின்று விடக் கூடாது. வெற்றியாளர்களின் ஆரம்பக் கட்ட அடித்தளமே, ஏதாவது ஒரு அவமானத்தில் தான் ஆரம்பித்து இருக்கும். அவர்கள் உயருவதற்கான படிக்கட்டுகளில் இந்த அவமானத்திற்கும், ஓர் இடம் இருந்திருக்கும். நம்மை அவமானப்படுத்துவோரை பார்த்து பாதிப்படையக் கூடாது; அவர்களுக்கு நன்றி தான் சொல்ல வேண்டும். அவமானம் என்பது தோல்வி என எடுத்துக் கொள்ளக் கூடாது. இது இழிவும் அல்ல; ஒரு பாடம். நம் வாழ்க்கையில் வெற்றிகளுக்கு மட்டுமல்ல; தோல்விகளுக்கும், இந்த மாதிரி அவமானங்களுக்கும் இடம் உண்டு. உங்களை உருவாக்குவதில் அந்த அவமானங்களுக்கு இடமில்லை என்று நினைக்காதீர்கள். ஏற்பட்ட அவமானங்களுக்காக குமைந்து கொண்டிருக்காதீர்கள். நம் வாழ்வில் தவறுகள் என்கிற காற்று அடிக்கும் போது, அவமானம் போன்ற புழுதிகள் கிளம்பத் தான் செய்யும். நாம் வாழ்க்கையில், மற்றவர்களை விட ஏதாவது ஒரு காரியத்தில் வேறுபட்டு சாதிக்க வேண்டுமெனில், பல அவமானங்களை சந்தித்துத் தான் ஆக வேண்டும். நம் மீது குப்பையையும், சாணத்தையும் கொட்டுகின்றனரே என்று, செடி ஒருநாளும் நம்மைப் போல் ஆதங்கப்படுவதில்லை; அழுது ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. "அந்தக் குப்பையை தனக்கான உயிர்ச் சத்தாக எடுத்துக் கொண்டு, பூக்களை, காய், கனிகளைத் தருவதில்லையா!" நாம் அந்தச் செடியைப் போல இருக்க வேண்டாமா? மற்றவர்களின் ஏளனங்களையும், அவமானங்களையும் உரமாக ஏற்று, வெற்றி நோக்கிச் செல்ல வேண்டாமா?*ன உங்களுடைய குறைகளைச் சொல்லி மற்றவர்கள் இன்று அவமதித்தாலும், நாளை உங்கள் வெற்றியைப் பார்த்து பூரிப்படைந்து, நல்ல வாழ்த்தையும் அவர்களே சொல்வர்! ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்… ‘நம்மை இவ்வளவு அவமானப் படுத்துகின்றனரே…’ என்று மட்டும் சோர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள். சோர்ந்து போகாதீர் அப்படி ஒவ்வொரு துறையிலும் அவமானப்பட்டவர்கள் உட்கார்ந்து விட்டால், சமுதாயத்தில் வெற்றியாளர்களே உருவாக முடியாது; இப்போது இருக்கும் வெற்றியாளர்களும் உருவாகியிருக்க மாட்டார்கள். எல்லாவற்றிலும் முதல் முயற்சியில் வெற்றி கிடைக்கும் என, எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைவிட பெரிய முட்டாள்தனம், ஒரு அவமானத்தைக் கண்டு சோர்ந்து போய், அந்த காரியத்திலிருந்து விலகி விடுவது. மனித இனத்தைத் தவிர, மற்ற ஜீவராசிகள் எதையும் அவமானமாக எடுத்துக் கொள்வதில்லை. மனிதன் தான் ஒரு விஷயத்தில் அவமானப்பட்டால் துவள்வதும், அந்த வேலையே வேண்டாமென ஓடிப் போவதை வழக்கப்படுத்திக் கொள்கிறான். சாதிக்க விருப்பமா மனதை பக்குவபடுத்துங்கள் ( அவமானப்படுங்கள்)😊😊😊
saravanan
478 views
3 months ago
#thannambikkay thulirgal நீண்டு கொண்டே போனால் சலிப்பு ஏற்படும் என்பதாலே நிறைய கதாபாத்திரங்களை மாற்றிக் கொண்டே இருக்கிறது விதி.*_ _ஒரு மனிதர் ஒரு கலைஞரிடம் கேட்டார்,_ _கல்லிலிருந்து இவ்வளவு அழகான பொருட்களை நீங்கள் எப்படி உருவாக்குகிறீர்கள்_ _*அதற்கு அவர் பதிலளித்தார். அழகு ஏற்கெனவே அங்கே மறைந்துள்ளது.*_ _*நான் தேவையற்ற கல்லை மட்டும் அகற்றுகிறேன்.*_ _அதுபோல உங்கள் மகிழ்ச்சி உங்களுக்குள்ளேயே மறைந்துள்ளது._ _உங்கள் கவலைகளை மட்டும் நீக்கி விடுங்கள்._