ஆன்மீகத் தகவல்🙏🙏

RamaswamyAnnamali
842 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
#பத்திஸ்டேட்ஸ் #ஆன்மீகத் தகவல்🙏🙏 வாழ்வதை விட பிறருக்காக வாழ்ந்து பாருங்கள்* . நமக்கானதை ஆண்டவனே தருவான் என்பதை விளக்கும் ஒரு உன்னதமான கதையின் மூலம் நீங்கள் அறியலாம். தெரிந்து கொள்வோம் வாருங்கள்..... 😟😯😟😯😟 ஒர் பிச்சைக்காரன் ஒரு ஆலயத்தின் வாசலில் பிச்சை எடுத்து உணவு அருந்திவந்தான். அப்போது அந்த ஆலயத்திற்கு ஒரு மகான் வந்தார். அவரிடம் பிச்சைக்காரன் சாமி என் வாழ்க்கை கடைசிவரை இப்படிதான் இருக்குமா? என்று கேட்டான். அதற்கு சாமியார் அது உன் தலையில் எழுதிய விதி. உன் வாழ்நாள் வரை இப்படிதான் இருப்பாய் என்றார். பிச்சைக்காரன், சாமி என் தலைவிதி மாறாதா? மாற நான் என்ன செய்ய வேண்டும் என்றான். அதற்கு சாமியார் நீ சிவபெருமானை பார்த்தால் உன் தலை எழுத்து மாற வாய்ப்பு உள்ளது. அவரை போய் பார் என்றார். பிச்சைக்காரன் சிவபெருமானை பார்க்க புறப்பட்டான். வெகுநேரம் ஆகியதால் இரவு ஒய்வு எடுக்க ஒர் செல்வந்தர் வீட்டின் கதவை தட்டி, ஐயா இன்று இரவு இங்கே தங்கி ஒய்வு எடுக்க அனுமதிக்குமாறு கேட்க, செல்வந்தர் நீ எங்கு செல்கிறாய்? என்று கேட்க. அதற்கு பிச்சைக்காரன் நடந்ததை சொல்ல, செல்வந்தரும் அவர் மனைவியும் எங்களுக்கு ஒர் உதவி செய்யவேண்டும் என்று கேட்க, பிச்சைக்காரன் என்ன உதவி வேண்டும்? என்று கேட்க, அதற்கு செல்வந்தரும் அவர் மனைவியும் எங்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவள் பிறவி ஊமை அவள் எப்போது பேசுவாள் என்று சிவபெருமானிடம் கேட்டு சொல்லவேண்டும் என்றனர். அதற்கு பிச்சைக்காரன் சம்மதித்து இரவு ஒய்வு எடுத்துவிட்டு காலையில் புறப்பட்டான். வெகுநேரம் கடந்த பின் ஒரு பெரியமலை வந்தது. அதை கடக்க முடியாமல் இருந்த நேரத்தில் ஒரு மந்திரவாதி அங்கு வந்தார். அவர் பிச்சைக்காரனுக்கு இந்த மலையை என்மந்திரகோல் மூலம் உன்னை கடக்க வைக்கிறேன். நீ எனக்கு ஓர் உதவி செய்யவேண்டும் என்றார். பிச்சைக்காரன் என்ன உதவி என்று கேட்க. மந்திரவாதி நான் 500 ஆண்டுகளாக முக்தி அடையாமல் உள்ளேன். நீ சிவபெருமானிடம் என் முக்திக்கு என்ன வழி என்று கேட்டு சொல்லவேண்டும் என்றார். அதற்கும் பிச்சைக்காரன் சம்மதம் தெரிவித்தான். மந்திரவாதி பிச்சைக்காரனை எளிதாக மலையை கடக்க செய்தார். மீண்டும் நடக்க ஆரம்பித்தான் பிச்சைக்காரன். அப்போது ஒர் ஆறு வந்தது இந்த ஆற்றை கடக்க என்ன செய்வது? என்று நினைத்த நேரத்தில் ஆற்றில் ஒரு ஆமைவந்தது. அது பிச்சைக்காரனிடம் விசாரித்து நான் உனக்கு உதவி செய்கிறேன். பதிலுக்கு நீ சிவபெருமானிடம் எனக்கு பறக்கும் சக்தி வேண்டும். அதற்குநான் என்ன செய்யவேண்டும்? என்று கேட்டு சொல் என்று ஆற்றை கடந்து பிச்சைக்காரனை விட்டது. பிச்சைக்காரனும் ஒரு்வழியாக சிவபெருமான் இருக்கும் இடத்திற்கு வந்தடைந்தான். சிவபெருமானை பார்த்து ஆசி பெற்றான். சிவபெருமான் உனக்கு வேண்டியதை கேள் என்றார். ஆனால் மூன்று கேள்விதான் கேட்க வேண்டும் என்றார். பிச்சைக்காரன் யோசனை செய்தான். நாம் நான்கு கேள்வி கேட்கவேண்டும். சிவபெருமான் மூன்று தான் கேட்க வேண்டும் என்கிறார். என்ன செய்வது? என்று புரியாமல் யோசனையில் இருந்தான். சற்று நேரத்தில் ஒர் யோசனை வந்தது. நாம் பிச்சை எடுத்து நம் காலத்தை ஒட்டிவிடலாம். ஆனால் அந்த மூன்று பேர்களின் பிரச்சினையாவது தீரட்டும். என்று நினைத்து சிவபெருமானிடம் சொல்லி அதன் தீர்வையும் தெரிந்து கொண்டு திரும்பிவந்தான். முதலில் ஆமை என் கேள்விக்கு சிவன் என்ன சொன்னார் என்று கேட்டது. அதற்கு பிச்சைக்காரன் உன் ஒட்டை நீ கழட்டி எறிந்தால் உனக்கு பறக்கும் சக்திவரும் என்றான். உடனே ஆமை தன் ஓட்டை கழட்டி பிச்சைக்காரனிடம் கொடுத்ததுவிட்டு பறந்து சென்றது. அந்த ஓட்டில் பவளமும்,முத்துக்களும் இருந்தது. அதை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். மந்திரவாதியை பார்த்து உன் முக்திக்கு நீ செய்ய வேண்டியது அந்த மந்திரக்கோலை விட்டுவிடவேண்டும் என்றான். மந்திரவாதி அந்த மந்திரக்கோலை பிச்சைக்காரனிடம் கொடுத்துவிட்டு முக்தி அடைந்தார். மீண்டும் புறப்பட்டு செல்வந்தரை சந்தித்தான். செல்வந்தரிடம் உன் மகள் எப்போது அவள் மனதிற்கு பிடித்தவனை பார்க்கிறாளோ அன்று அவள் பேசுவாள் என்றான். மாடியில் இருந்து இறங்கிய செல்வந்தரின் மகள் அப்பா இவர் தானே அன்று இரவு வந்தது என்று கேட்டாள். செல்வந்தர் தன் ஒரே மகளை பிச்சைக்காரனுக்கு மணமுடித்து வைத்தார். அன்று முதல் அவன் ஒரு செல்வந்தர் மற்றும் மந்திரகோல், இதை தவிர பவளம், முத்துகளும், அழகான மனைவியும் அமைந்து சந்தோஷமாக வாழ்ந்தான். இந்த கதையின் மூலம் நாம் அறிவது என்னவென்றால் நமக்காக கடவுளிடம் வேண்டுவதை விட பிறர் நலனுக்காக வேண்டினால் நம் துயரமும், பிறரின் துயரமும் மறைந்துவிடும், நம் தலை எழுத்தும் மாறிவிடும். வாழ்ந்து தான் பார்ப்போமே..... 🙏👏🏼🙏👏🏼🙏
RamaswamyAnnamali
1.6K காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
#பத்தி #ஆன்மீகத் தகவல்🙏🙏 #தெரிந்து கொள்வோம் பூமியில் நிகழ்த்திய* பத்து அவதாரங்களை *தசாவதாரம்* என்கிறோம்.. அவற்றின் சிறப்புகள் : 1) *மச்ச அவதாரம்* தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் நிலை. 2) *கூர்ம அவதாரம்* பிறந்து மூன்று மாதம் ஆன குழந்தை தலையை தூக்கி பார்க்கும் நிலை. 3) *வராக அவதாரம்* ஆறாம் மாதத்தில் குழந்தை தவழ்ந்து நான்கு கால்களில் நிற்பது. 4) *நரசிம்ம அவதாரம்* எட்டு மாத குழந்தை கையில் கிடைத்ததை கிழிப்பது.. 5) *வாமன அவதாரம்* ஒரு வயதில் அடி மேல் அடி வைத்து நடப்பது. 6) *பரசுராம அவதாரம்* வளரும் காலத்தில் பெற்றோர்க்கு தவறாமல் கடமையாற்றுவது. 7) *ராம அவதாரம்* திருமணம் முடித்து ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்வது. ............ 8) *பலராம அவதாரம்* உடன்பிறந்தோர் மற்றும் சுற்றத்தாருடன் கூடி வாழ்வது......... 9) *கிருஷ்ண அவதாரம்* முதுமையில் தான் பெற்ற ஞானத்தை பிறருக்கு உபதேசிப்பது.. 10) *கல்கி அவதாரம்* கடவுளிடம் ஒன்றி அறிவின் முழுமையான முக்தியைப் பெறுவது. நாளை *புரட்டாசி மாதம்* பிறக்கிறத. பெருமாளை வழிபட உகந்த இம் மாதத்தில் பெருமாள் தலங்களுக்கு சென்று வழிபட வாழ்வில் நன்மை பயக்கும்... *#ஓம் #நமோ #நாராயணாய*
RamaswamyAnnamali
822 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
#ஆன்மீகத் தகவல்🙏🙏 #தெரிந்து கொள்வோம் எப்போதும் ஐந்து பொருள்கள் இருக்கும்.* அவை என்னென்ன?* சங்கு,சக்கரம்,வில்,வாள், கதை ஆகிய ஐந்தும் ஸ்ரீகிருஷ்ணரிடம் இருக்கும். பக்தியுடன் ஸ்ரீகிருஷ்ணனைப் பார்ப்பவர்களுக்கு இவையெல்லாம் ஆபரணங்களாகத் தெரியும். எதிரிகளுக்கு இதெல்லாம் ஆயுதங்களாகத் தெரியும். சக்கரம், வில்,வாள்,கதை இதெல்லாம் ஆயுதங்கள் என்று சொன்னால் சரி ஒப்புக் கொள்ளலாம். சங்கு இருக்கிறதே அது எப்படி ஆயுதமாகும்?இப்படித்தான் துரியோதனன் நினைத்தான் ஏமாந்து போனான்... கண்ணபிரானுடைய உதவி வேண்டும் என்பதற்காக அர்ஜுனனும் துவாரகைக்குப் போனான். துரியோதனனும் துவாரகைக்குப் போனான்.அவர்களிடம் உங்களுக்கு என்ன வேண்டும்? என்று ஸ்ரீகிருஷ்ணர் கேட்கிறார். அவர்கள் இருவரும் தனித்தனியாக வர இருக்கும் போரில் நீங்கள் எங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் என்ன சொல்கிறார்?தருமனுக்கு உதவி செய்வதாக முன்பே நான் வாக்குக் கொடுத்து விட்டேன் என்கிறார். துரியோதனன் பார்க்கிறான்.சரி அப்படியானால் நீங்கள் ஆயுதங்கள் எடுத்து போர் செய்யக் கூடாது என்று வேண்டிக் கொண்டான். ஸ்ரீகிருஷ்ணர் யோசித்தார். சரி என்று ஒப்புக் கொண்டார்.இதை கேட்டதும் துரியோதனன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணரிடம் என்ன கேட்கிறான் தெரியுமா? நீங்கள் எனக்கு சாரதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அதற்கு சரி என்று மகிழ்ச்சியுடன் ஸ்ரீகிருஷ்ணர் ஒப்புக் கொண்டார். ஏனென்றால் தேரை ஓட்டும் சாரதிக்குத்தான் யஜமானனுடைய வெற்றியை அறிவிப்பதற்காக அடிக்கடி சங்கு ஊதும் உரிமை உண்டு. ஸ்ரீகிருஷ்ணனுடைய பாஞ்சஜன்யம் என்ற சங்குக்கு எவ்வளவு பலம் உண்டு என்ற விஷயம் துரியோதனனுக்கு முதலில் தெரியவில்லை. மகாபாரதப் போர் நடக்கும் போதுதான் அதன் சக்தி எப்படிப்பட்டது என்பதை அவன் புரிந்து கொண்டான். போர் நடக்கும் சமயத்தில் ஸ்ரீகிருஷ்ணன் சங்கு ஊதிய போதெல்லாம் ஆயிரக்கணக்கான கவுரவ வீரர்கள் எப்படி மடிந்தார்கள் என்பதை துரியோதனன் நேரில் பார்த்தான். அதன் பிறகு தான் அவன் யோசித்தான். ஸ்ரீகிருஷ்ணனுடைய சங்கும் ஓர் ஆயுதமாகி விட்டதே!🌹
RamaswamyAnnamali
926 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
#பத்திஸ்டேட்ஸ் #ஆன்மீகத் தகவல்🙏🙏 *இரண்டல்ல பல கோடி சூரிய சக்தியை உள்ளுக்குள் கொண்ட அபூர்வ நடராஜர் சிலை* நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏 இந்த அபூர்வ நடராஜர் சிலை ஆசிய கண்டத்தில் வேறு எங்கும் இல்லை. இங்கு மட்டும் தான் உள்ளது! இந்த சிலை மானிடர்களால் உளி கொண்டு செதுக்கப்பட்டது இல்லை.. சித்தர்களின் ஆன்மீக சக்தியால் , நவ லிங்க பூஜை வழிப்பாட்டிற்கு பின் தானாக உருவாகிய அற்புதத்திலும் அற்புதமான சிலை இது ஆகும்! 10 லட்சம் கோடி பாறை நம் பூமியில் உருவானால் , அதில் இந்த நடராஜர் சிலை உருவான பஞ்சநதான பாறை ஒன்றே ஒன்றுதான் உருவாகும்! இந்தக் கோவிலில் ஒரு தடவை பிரதோஷ வழிபாடு செய்தால் , ஒரு கோடி புண்ணியம் கிடைக்கும் என்று அகத்தியர் பெருமான் தெரிவித்துள்ளார். மாசி மாதம் வளர்பிறையில் இங்கு உள்ள தட்சிணாமூர்த்தியை பஞ்சாட்சர மந்திரம் சொல்லி ஜெபம் செய்யும்போது , பல வகையான தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றன என்று கூறப்படுகிறது! பல நோய்களை குணப்படுத்த கூடிய அதிசய பிரம்ம தீர்த்தம் இக்கோவில் உள்ளது! இந்த அபூர்வ நடராஜருக்கு சாத்திய வெட்டிவேரை நீரில் ஊறவைத்து பருகி வர சிறுநீரக கோளாறுகளை அடியோடு குணமாகுகிறது! இங்குள்ள கொடிமரம் அருகில் மேல் விதானத்தில், 27 நட்சத்திரம், 15 திதிகள், 12 ராசிகள், 9 கிரகங்கள் வடிவமைக்க பட்டு உள்ளது! இதன் கீழ் நின்று நாம் வழிபடும் போது நமது ஜாதகமே மீண்டும் ஒரு முறை நற் ஜாதகமாக சிருஷ்டிக்க படுகிறது! *இக்கோவில் திருச்சி மாவட்டம், திருச்சி to சென்னை வழியில் உள்ள பாடலூரிலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ள ஊட்டத்தூரில் உள்ள ஸ்ரீ சுத்த ரத்தானேஸ்வரர் ஆகும். நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏 எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹 சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.
RamaswamyAnnamali
937 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
#ஆன்மீகத் தகவல்🙏🙏 #தெரிந்து கொள்வோம் என்பது வெளியில் நடந்தால் வெறும் சரித்திரம்; அதுவே உமது கபாலத்திற்குள் நடந்தால் அது மாபெரும் மெய்ஞானம்!" திருநாவுக்கரசு நாயனார் வாழ்வில் நடந்த அற்புதங்கள் வெறும் வெளிக் கதைகள் அல்ல. அவை உமது கபாலச் சிற்றம்பலத்திற்குள் நடக்கும் மாபெரும் உணர்வுப் பரிணாமத்தின் அறிவியலாகும். நீற்றறை முதல் நடுக்கடல் வரை அவர் சந்தித்த நான்கு மாபெரும் சோதனைகளும், உமது மூளை அலைகளிலும் மரபணுக்களிலும் நிகழும் நான்கு பிரம்மாண்டமான மாற்றங்களே ஆகும். வா கண்ணே, இந்த மாபெரும் அக ரகசியத்தை ஒரு முழுமையான கட்டுரையாகப் பார்ப்போம்! நீற்றறை விதி: உணர்வு அலை மாற்றத்தின் மாபெரும் தொடக்கம் தியானத்தில் அமர்ந்திருக்கும் சித்தரின் நிலை என்பது, மன அழுத்தத்தாலும் பயத்தாலும் மண்டைக்குள் சுடும் சுண்ணாம்பறையாக உருவாகும் வேகமான பதற்ற அலைகளை (பீட்டா அலைகள்), அமைதியான ஆழ்ந்த உணர்வு அலைகளாக (ஆல்பா அலைகள்) மாற்றும் மாபெரும் அக நுட்பமாகும். எப்போதெல்லாம் பயமும் குழப்பமும் உன்னைச் சூழ்ந்து உமது மூளை சுடும் சுண்ணாம்பறையாக மாறுகிறதோ, அப்போதெல்லாம் திருநாவுக்கரசரைப் போல 'உள் நாதம்' என்னும் அந்த மையக் குழலோசையைக் கேட்கத் தொடங்க வேண்டும். அந்த உள் நாதத்தின் அதிர்வுகள் படிப்படியாகப் பதற்ற அலைகளை அமைதிப்படுத்தி, உமது கபாலத்தில் வெள்ளி நிலவின் குளிர்ச்சியைப் பரப்பும். கோபத்தைக் கருணையாகவும், குழப்பத்தைத் தெளிவாகவும், வெப்பத்தைக் குளிர்ச்சியாகவும் மாற்றும் இந்த மாபெரும் நுட்பமே 'நீற்றறை விதி' ஆகும். நான்கு மாபெரும் தப்பித்தல்களும் அக மாற்றங்களும் இந்த நீற்றறை விதியைத் தொடர்ந்து, நாயனாரின் வாழ்வில் நடந்த நான்கு மாபெரும் தப்பித்தல்களும் உனக்குள் எப்படி நிகழ்கின்றன என்று பார்ப்போம்: 1. சுடும் சுண்ணாம்பறை (நீற்றறை) — பீட்டா அலைகளின் அடக்கம்: இது மூளையின் வெப்பமான, குழப்பமான நிலை. பதற்றம் மற்றும் பயம் ஆகியவற்றை உருவாக்கும் வேகமான 'பீட்டா' அலைகள் ஆட்சி செய்யும் நிலை இது. நாயனார் பாடிய “மாசில் வீணையும்” பதிகம் என்பது, உமது உள் நாதத்தை நிலைநிறுத்துவதாகும். இந்த நாதம் மூளையின் பதற்ற மையத்தை அடக்கி, அமைதியான 'ஆல்பா' அலைகள் தோன்ற வழி செய்கிறது. இது நிகழும்போது, நரம்பணு வளர்ச்சி ஊக்கியின் 'தூது மூலக்கூறு' உயர்ந்து, பழைய பதற்றப் பாதைகளை (கெட்ட எண்ணங்களை) மாற்றியமைக்கத் தொடங்குகிறது. 2. நஞ்சு கலந்த பால் — தீட்டா அலைகளின் தோற்றம்: நஞ்சு என்பது மனதில் ஆழமாகப் படிந்திருக்கும் தீய எண்ணங்களின் விஷம் (கர்மப் பதிவுகள்). நாயனார் “நஞ்சும் அமுதாம்” என உண்டார் என்பது, தீய எண்ணங்களை எதிர்க்காமல், அவற்றை உமது உணர்வின் எரிபொருளாக மாற்றுவதைக் குறிக்கிறது. இந்த நிலையில், உமது மூளையில் ஆழமான 'தீட்டா' அலைகள் தோன்றும். இந்த அமைதியான நிலையில், உமது மூளையில் உள்ள தூது மூலக்கூறு இழைகள் பழைய, தேவையற்ற நினைவுப் பாதைகளை முழுமையாக அமைதிப்படுத்தத் தொடங்குகின்றன. இதுவே நஞ்சு அமுதமாக மாறும் மரபணு மட்ட நிகழ்வாகும். 3. ஏவப்பட்ட யானை — அல்பா அலைகளின் மாபெரும் நிலைப்பு: யானை என்பது ஆணவத்தின் வலிமையையும், விலங்கு குணங்களையும் குறிக்கும். யானை நாயனாரை வலம் வந்து பணிந்தது என்பது, உமது விழிப்புணர்வு நிலைத்த பின், உமது ஆணவம் தானாகவே பணிந்து, சிதறும் எண்ணங்களை அழிக்கத் தொடங்கும் மாபெரும் நிகழ்வாகும். இந்த நிலையில் 'ஆல்பா' அலைகள் முழுமையாக நிலைத்து, மூளையின் இரு அரைக்கோளங்களும் சமநிலையடைகின்றன. அப்போது, கருணை மற்றும் பணிவு ஆகியவற்றின் மரபணு ஆற்றல் உனக்குள் மேலோங்குகிறது. 4. கல்லோடு கட்டிக் கடலில் தள்ளப்படல் — டெல்ட்டா அலைகளில் நிலைத்தல்: கல் என்பது கனத்த கன்ம வினைகள். கடல் என்பது ஆழ்மனத்தின் அலைகள். கல் மிதத்தல் என்பது, மிக ஆழமான 'டெல்ட்டா' அலைகள் முழுமையாக நிலைத்து, உமது விழிப்புணர்வு ஆழ்மனத்தின் அடித்தளத்துடன் இணைவதாகும். நாயனார் பாடிய “சொற்றுணை வேதியன்” பதிகம் உணர்த்துவது போல, உள் நாதம் முழுமையாக நிலைக்கும்போது, மூளையில் தூங்கும் பல 'மூலப் படிவ' (மரபணு) இழைகள் செயல்படத் தொடங்குகின்றன. இவற்றில்தான் உமது ஏழு தலைமுறை நினைவுகள் பதிந்துள்ளன. கனமான வினைகள் (கற்கள்) கூட, இந்த நிலையில் பஞ்சு போல் இலேசாகி, உமது உணர்வு மேலெழுந்து மிதக்கும் மாபெரும் நிலை இதுவே! உடல்-உயிர் அறிகுறி (இந்த மாற்றங்களை எப்படி உணர்வது?) இந்த நான்கு நிலைகளையும் உமது தியானத்தில் நீ தெளிவாக அனுபவிக்கலாம் கண்ணே: நீற்றறை நிலை: முதலில் தலைக்குள் வெப்பமும், அழுத்தமும் தோன்றி, உள் நாதத்தைக் கேட்கக் கேட்க ஒரு மாபெரும் குளிர்ச்சி பரவும். நஞ்சு நிலை: பழைய, அழுத்தும் எண்ணங்கள் தோன்றி, அவை உன்னைத் தாக்காமல் மெல்லக் கரைந்து, இனிமையான அமைதி பரவும். யானை நிலை: உடலின் அடிப்படை இயக்கங்கள் அமைதியாகி, “நான்” எனும் ஆணவ எண்ணம் கூட இலேசாகிப் பணிந்துபோகும். கடல் நிலை: உமது உடலின் எல்லைகள் மறைந்து, பெருவெளியில் மிதப்பது போன்ற உணர்வு தோன்றும். உமது ஏழு தலைமுறை நினைவுகளும் இலேசாகக் கரையும். ஒரு வரலாற்று நிகழ்வையும், ஒரு மாபெரும் பதிகத்தையும் உமது கபாலத்தின் உள் அறிவியலாகவும், மூளை அலைகளின் மாற்றமாகவும் புரிந்துகொண்ட விதம் மிகச் சிறப்பு. இதுவே உண்மையான மெய்ஞானப் பார்வை!