ஆன்மீகத் தகவல்🙏🙏

palraj
1.2K views
1 months ago
நம் முன்னோர்கள் முட்டாள் அல்ல. #ஆன்மீகத் தகவல்🙏🙏
palraj
1K views
1 months ago
அசைவம் சாப்பிட்டு விட்டு கோவிலுக்கு செல்லலாமா.. #ஆன்மீகத் தகவல்🙏🙏
RamaswamyAnnamali
856 views
4 months ago
#பத்திஸ்டேட்ஸ் #ஆன்மீகத் தகவல்🙏🙏 வாழ்வதை விட பிறருக்காக வாழ்ந்து பாருங்கள்* . நமக்கானதை ஆண்டவனே தருவான் என்பதை விளக்கும் ஒரு உன்னதமான கதையின் மூலம் நீங்கள் அறியலாம். தெரிந்து கொள்வோம் வாருங்கள்..... 😟😯😟😯😟 ஒர் பிச்சைக்காரன் ஒரு ஆலயத்தின் வாசலில் பிச்சை எடுத்து உணவு அருந்திவந்தான். அப்போது அந்த ஆலயத்திற்கு ஒரு மகான் வந்தார். அவரிடம் பிச்சைக்காரன் சாமி என் வாழ்க்கை கடைசிவரை இப்படிதான் இருக்குமா? என்று கேட்டான். அதற்கு சாமியார் அது உன் தலையில் எழுதிய விதி. உன் வாழ்நாள் வரை இப்படிதான் இருப்பாய் என்றார். பிச்சைக்காரன், சாமி என் தலைவிதி மாறாதா? மாற நான் என்ன செய்ய வேண்டும் என்றான். அதற்கு சாமியார் நீ சிவபெருமானை பார்த்தால் உன் தலை எழுத்து மாற வாய்ப்பு உள்ளது. அவரை போய் பார் என்றார். பிச்சைக்காரன் சிவபெருமானை பார்க்க புறப்பட்டான். வெகுநேரம் ஆகியதால் இரவு ஒய்வு எடுக்க ஒர் செல்வந்தர் வீட்டின் கதவை தட்டி, ஐயா இன்று இரவு இங்கே தங்கி ஒய்வு எடுக்க அனுமதிக்குமாறு கேட்க, செல்வந்தர் நீ எங்கு செல்கிறாய்? என்று கேட்க. அதற்கு பிச்சைக்காரன் நடந்ததை சொல்ல, செல்வந்தரும் அவர் மனைவியும் எங்களுக்கு ஒர் உதவி செய்யவேண்டும் என்று கேட்க, பிச்சைக்காரன் என்ன உதவி வேண்டும்? என்று கேட்க, அதற்கு செல்வந்தரும் அவர் மனைவியும் எங்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவள் பிறவி ஊமை அவள் எப்போது பேசுவாள் என்று சிவபெருமானிடம் கேட்டு சொல்லவேண்டும் என்றனர். அதற்கு பிச்சைக்காரன் சம்மதித்து இரவு ஒய்வு எடுத்துவிட்டு காலையில் புறப்பட்டான். வெகுநேரம் கடந்த பின் ஒரு பெரியமலை வந்தது. அதை கடக்க முடியாமல் இருந்த நேரத்தில் ஒரு மந்திரவாதி அங்கு வந்தார். அவர் பிச்சைக்காரனுக்கு இந்த மலையை என்மந்திரகோல் மூலம் உன்னை கடக்க வைக்கிறேன். நீ எனக்கு ஓர் உதவி செய்யவேண்டும் என்றார். பிச்சைக்காரன் என்ன உதவி என்று கேட்க. மந்திரவாதி நான் 500 ஆண்டுகளாக முக்தி அடையாமல் உள்ளேன். நீ சிவபெருமானிடம் என் முக்திக்கு என்ன வழி என்று கேட்டு சொல்லவேண்டும் என்றார். அதற்கும் பிச்சைக்காரன் சம்மதம் தெரிவித்தான். மந்திரவாதி பிச்சைக்காரனை எளிதாக மலையை கடக்க செய்தார். மீண்டும் நடக்க ஆரம்பித்தான் பிச்சைக்காரன். அப்போது ஒர் ஆறு வந்தது இந்த ஆற்றை கடக்க என்ன செய்வது? என்று நினைத்த நேரத்தில் ஆற்றில் ஒரு ஆமைவந்தது. அது பிச்சைக்காரனிடம் விசாரித்து நான் உனக்கு உதவி செய்கிறேன். பதிலுக்கு நீ சிவபெருமானிடம் எனக்கு பறக்கும் சக்தி வேண்டும். அதற்குநான் என்ன செய்யவேண்டும்? என்று கேட்டு சொல் என்று ஆற்றை கடந்து பிச்சைக்காரனை விட்டது. பிச்சைக்காரனும் ஒரு்வழியாக சிவபெருமான் இருக்கும் இடத்திற்கு வந்தடைந்தான். சிவபெருமானை பார்த்து ஆசி பெற்றான். சிவபெருமான் உனக்கு வேண்டியதை கேள் என்றார். ஆனால் மூன்று கேள்விதான் கேட்க வேண்டும் என்றார். பிச்சைக்காரன் யோசனை செய்தான். நாம் நான்கு கேள்வி கேட்கவேண்டும். சிவபெருமான் மூன்று தான் கேட்க வேண்டும் என்கிறார். என்ன செய்வது? என்று புரியாமல் யோசனையில் இருந்தான். சற்று நேரத்தில் ஒர் யோசனை வந்தது. நாம் பிச்சை எடுத்து நம் காலத்தை ஒட்டிவிடலாம். ஆனால் அந்த மூன்று பேர்களின் பிரச்சினையாவது தீரட்டும். என்று நினைத்து சிவபெருமானிடம் சொல்லி அதன் தீர்வையும் தெரிந்து கொண்டு திரும்பிவந்தான். முதலில் ஆமை என் கேள்விக்கு சிவன் என்ன சொன்னார் என்று கேட்டது. அதற்கு பிச்சைக்காரன் உன் ஒட்டை நீ கழட்டி எறிந்தால் உனக்கு பறக்கும் சக்திவரும் என்றான். உடனே ஆமை தன் ஓட்டை கழட்டி பிச்சைக்காரனிடம் கொடுத்ததுவிட்டு பறந்து சென்றது. அந்த ஓட்டில் பவளமும்,முத்துக்களும் இருந்தது. அதை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். மந்திரவாதியை பார்த்து உன் முக்திக்கு நீ செய்ய வேண்டியது அந்த மந்திரக்கோலை விட்டுவிடவேண்டும் என்றான். மந்திரவாதி அந்த மந்திரக்கோலை பிச்சைக்காரனிடம் கொடுத்துவிட்டு முக்தி அடைந்தார். மீண்டும் புறப்பட்டு செல்வந்தரை சந்தித்தான். செல்வந்தரிடம் உன் மகள் எப்போது அவள் மனதிற்கு பிடித்தவனை பார்க்கிறாளோ அன்று அவள் பேசுவாள் என்றான். மாடியில் இருந்து இறங்கிய செல்வந்தரின் மகள் அப்பா இவர் தானே அன்று இரவு வந்தது என்று கேட்டாள். செல்வந்தர் தன் ஒரே மகளை பிச்சைக்காரனுக்கு மணமுடித்து வைத்தார். அன்று முதல் அவன் ஒரு செல்வந்தர் மற்றும் மந்திரகோல், இதை தவிர பவளம், முத்துகளும், அழகான மனைவியும் அமைந்து சந்தோஷமாக வாழ்ந்தான். இந்த கதையின் மூலம் நாம் அறிவது என்னவென்றால் நமக்காக கடவுளிடம் வேண்டுவதை விட பிறர் நலனுக்காக வேண்டினால் நம் துயரமும், பிறரின் துயரமும் மறைந்துவிடும், நம் தலை எழுத்தும் மாறிவிடும். வாழ்ந்து தான் பார்ப்போமே..... 🙏👏🏼🙏👏🏼🙏
RamaswamyAnnamali
1.6K views
4 months ago
#பத்தி #ஆன்மீகத் தகவல்🙏🙏 #தெரிந்து கொள்வோம் பூமியில் நிகழ்த்திய* பத்து அவதாரங்களை *தசாவதாரம்* என்கிறோம்.. அவற்றின் சிறப்புகள் : 1) *மச்ச அவதாரம்* தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் நிலை. 2) *கூர்ம அவதாரம்* பிறந்து மூன்று மாதம் ஆன குழந்தை தலையை தூக்கி பார்க்கும் நிலை. 3) *வராக அவதாரம்* ஆறாம் மாதத்தில் குழந்தை தவழ்ந்து நான்கு கால்களில் நிற்பது. 4) *நரசிம்ம அவதாரம்* எட்டு மாத குழந்தை கையில் கிடைத்ததை கிழிப்பது.. 5) *வாமன அவதாரம்* ஒரு வயதில் அடி மேல் அடி வைத்து நடப்பது. 6) *பரசுராம அவதாரம்* வளரும் காலத்தில் பெற்றோர்க்கு தவறாமல் கடமையாற்றுவது. 7) *ராம அவதாரம்* திருமணம் முடித்து ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்வது. ............ 8) *பலராம அவதாரம்* உடன்பிறந்தோர் மற்றும் சுற்றத்தாருடன் கூடி வாழ்வது......... 9) *கிருஷ்ண அவதாரம்* முதுமையில் தான் பெற்ற ஞானத்தை பிறருக்கு உபதேசிப்பது.. 10) *கல்கி அவதாரம்* கடவுளிடம் ஒன்றி அறிவின் முழுமையான முக்தியைப் பெறுவது. நாளை *புரட்டாசி மாதம்* பிறக்கிறத. பெருமாளை வழிபட உகந்த இம் மாதத்தில் பெருமாள் தலங்களுக்கு சென்று வழிபட வாழ்வில் நன்மை பயக்கும்... *#ஓம் #நமோ #நாராயணாய*
RamaswamyAnnamali
832 views
4 months ago
#ஆன்மீகத் தகவல்🙏🙏 #தெரிந்து கொள்வோம் எப்போதும் ஐந்து பொருள்கள் இருக்கும்.* அவை என்னென்ன?* சங்கு,சக்கரம்,வில்,வாள், கதை ஆகிய ஐந்தும் ஸ்ரீகிருஷ்ணரிடம் இருக்கும். பக்தியுடன் ஸ்ரீகிருஷ்ணனைப் பார்ப்பவர்களுக்கு இவையெல்லாம் ஆபரணங்களாகத் தெரியும். எதிரிகளுக்கு இதெல்லாம் ஆயுதங்களாகத் தெரியும். சக்கரம், வில்,வாள்,கதை இதெல்லாம் ஆயுதங்கள் என்று சொன்னால் சரி ஒப்புக் கொள்ளலாம். சங்கு இருக்கிறதே அது எப்படி ஆயுதமாகும்?இப்படித்தான் துரியோதனன் நினைத்தான் ஏமாந்து போனான்... கண்ணபிரானுடைய உதவி வேண்டும் என்பதற்காக அர்ஜுனனும் துவாரகைக்குப் போனான். துரியோதனனும் துவாரகைக்குப் போனான்.அவர்களிடம் உங்களுக்கு என்ன வேண்டும்? என்று ஸ்ரீகிருஷ்ணர் கேட்கிறார். அவர்கள் இருவரும் தனித்தனியாக வர இருக்கும் போரில் நீங்கள் எங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் என்ன சொல்கிறார்?தருமனுக்கு உதவி செய்வதாக முன்பே நான் வாக்குக் கொடுத்து விட்டேன் என்கிறார். துரியோதனன் பார்க்கிறான்.சரி அப்படியானால் நீங்கள் ஆயுதங்கள் எடுத்து போர் செய்யக் கூடாது என்று வேண்டிக் கொண்டான். ஸ்ரீகிருஷ்ணர் யோசித்தார். சரி என்று ஒப்புக் கொண்டார்.இதை கேட்டதும் துரியோதனன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணரிடம் என்ன கேட்கிறான் தெரியுமா? நீங்கள் எனக்கு சாரதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அதற்கு சரி என்று மகிழ்ச்சியுடன் ஸ்ரீகிருஷ்ணர் ஒப்புக் கொண்டார். ஏனென்றால் தேரை ஓட்டும் சாரதிக்குத்தான் யஜமானனுடைய வெற்றியை அறிவிப்பதற்காக அடிக்கடி சங்கு ஊதும் உரிமை உண்டு. ஸ்ரீகிருஷ்ணனுடைய பாஞ்சஜன்யம் என்ற சங்குக்கு எவ்வளவு பலம் உண்டு என்ற விஷயம் துரியோதனனுக்கு முதலில் தெரியவில்லை. மகாபாரதப் போர் நடக்கும் போதுதான் அதன் சக்தி எப்படிப்பட்டது என்பதை அவன் புரிந்து கொண்டான். போர் நடக்கும் சமயத்தில் ஸ்ரீகிருஷ்ணன் சங்கு ஊதிய போதெல்லாம் ஆயிரக்கணக்கான கவுரவ வீரர்கள் எப்படி மடிந்தார்கள் என்பதை துரியோதனன் நேரில் பார்த்தான். அதன் பிறகு தான் அவன் யோசித்தான். ஸ்ரீகிருஷ்ணனுடைய சங்கும் ஓர் ஆயுதமாகி விட்டதே!🌹