அர்த்தமுள்ள இந்து மதம்💐

ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
711 views
3 days ago
இன்று ஆடி அமாவாசை. பொதுவாகவே அமாவாசை தினங்கள் சிவ வழிபாட்டிற்கு மிக உகந்த தினம். இந்த தினம் முன்னோர்களை வழிபட்டு, சிவனையும் வழிபட்டால் வாழ்க்கை சுபிட்சமாகும்... அதே சமயம் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் பித்ரு காரியங்களைச் செய்பவர்கள், அமாவாசை தினங்களில் உங்கள் வீட்டில் மறந்தும் இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க. அமாவாசை தினத்தில் நாம் சரியாக செய்யாவிட்டாலும் கூட பரவாயில்லை ஆனால் தவறாக சில விஷயங்களை எல்லாம் செய்யவே செய்யாதீங்க. அது எதிர்மறையாக சென்றுவிடும். அமாவாசை தினத்தில் விரதம் இருந்து, படைத்து, எள் தண்ணீர் இறைப்பது நமது பித்ருக்களை திருப்திபடுத்தும். ஆனால் அமாவாசையன்று சில காரியங்களைச் செய்ய கூடாது என்பதும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. மாதத்தின் அனைத்து நாட்களுமே அதிகாலையில் வீட்டைச் சுத்தம் செய்து, வாசலில் கோலமிட்டு, விளக்கேற்றி வழிபடுவது சிறப்பான பலன்களை தரும். ஆனால் அமாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது என்கின்றனர் பெரியோர்கள்.... அமாவாசை தினத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து காகங்களுக்கு அன்னமிட்ட பின் வாசலில் கோலமிடுவதில் தவறில்லை. அல்லது அன்றைய தினம் முழுவதுமே வாசலில் கோலம் போடாமல் இருக்கலாம்... விநாயகருக்கு சதுர்த்தி. முருகருக்கு சஷ்டி. பெருமாளுக்கு ஏகாதசி. பைரவருக்கு அஷ்டமி. அம்பிகைக்கு பௌர்ணமி என்பதைப் போலவே பித்ருக்களுக்கு அமாவாசை. அதனால் தான் தினமும் இல்லாவிட்டாலும், அமாவாசை திதி அன்று மட்டுமாவது தான தர்மங்களைச் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அமாவாசையில் செய்கின்ற தர்ப்பணம் மற்றும் தானங்களால் முன்னோர்களின் தாகமும், பசியும் நிவர்த்தியாவதுடன் குலம் செழிக்கும். நம் இருப்பிடத்தைத் தேடி வரும் முன்னோர்கள் பசி, தாகம் தீர எள்ளு கலந்த நீரினால் தர்ப்பணம், சிராத்தம் செய்யும் போது, ஏற்றுக் கொண்டு நம்மை ஆசிர்வதிக்கிறார்கள்.... அமாவாசையில் வாசலில் கோலம் போடுவது, பூஜையறையில் இருக்கும் மணி எழுப்பும் ஒலி, இரும்புப் பாத்திரத்தின் ஒலி இவற்றால் பித்ருக்களின் வருகை தடைபடும். இதனால் தர்ப்பணம் முடிந்து காகத்திற்கு அன்னமிடும் வரை அதாவது வீட்டுக்கு பித்ருக்கள் வந்து நம்மை ஆசிர்வதித்து செல்லும் வரை, வீட்டு வாசல் மற்றும் பூஜை அறையிலோ கோலம் போடுவதையும், மணியடித்து ஒலி எழுப்பி பூஜைகள் செய்வதையும் தவிர்க்க வேண்டும் என்கின்றனர். ✧ மதம் & ஆன்மிகம் #இந்து மதம் ஆன்மீகம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🌑ஆடி அமாவாசை
VRChandrasekaran.
2K views
1 months ago
#ஆன்மீக சிந்தனை💐 #அர்த்தமுள்ள இந்து மதம்💐 #விழிப்புணர்வு பதிவு💐 #ஓம் நமசிவாய💐 #"ஒன்றிய திமுக"வின் பித்தலாட்ட அரசியல்💐 வாழ் அந்தணர்: உலகிலேயே, மிக மிக சிறுபான்மையினர் இனம் "சிதம்பரம் தீக்ஷிதர்கள்" தான். சிதம்பரம் தவிர வேறு ஊர்களில் இவட்கள் வம்சம் இல்லை. பிழைப்புக்கு ஓர் இருவர் இன்று போயிருக்கலாம். இன்று, மொத்தத்தில் சுமார் 350 குடும்பம் இருக்கலாம். இவர்கள் திருமணம் இந்த 350 குடும்பத்தில் மட்டுமே. தில்லை வாழ் அந்தணர் 3000 பேர், என்று தமிழ் இலக்கியம்களில் உள்ளது. இன்று 350 ஆக குறைந்து உள்ளது. அவர்கள் இன்றும் தனி சிகையுடன் (தனி குடுமி)யுடன், கலாச்சாரம். பொதுவாக சிதம்பரம் கோவில் கைங்கர்யம் (5000 ஆண்டுகளாக பரம்பரை) மட்டுமே தொழில். வேறு வருமானம் பொதுவாக இல்லை. நடராஜரருக்காக தன் உயிரையும் கொடுப்பவர்கள். நக்கீரரை முதலில் மறுத்து, பின் அவர் மகிமைக்கு அடிபணிந்தவர்கள். திப்பு சுல்தான் சிதம்பரம் கோவிலை கொள்ளையடித்தப்போது எதிர்த்தவர்கள். பின் திப்பு இவர்கள் மகிமையால் தன் "சப்த ஹாரம்" என்ற தங்க மாலையை நடராஜருக்கு அளித்தான். வெளியேறினான். இன்றும் இது இவர்கள் வசம் கோவிலில் உள்ளது. அரசர்கள் பூசித்த இவர்களை, அரசு இன்று போஷிக்கிறதா? கசப்பான உண்மை. தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் புண்ணியம். ஒரே ஓரு கோவிலில் 350 அர்ச்சகர்கள், அரசு சம்பளம் இன்றி, at full dedication கோவில் கைங்கரயம். ஏழ்மைநிலையிலும், இவர்கள் வேத பாடசாலை (கைங்கர்யமாக) நடத்துகிறார்கள். சிதம்பரம் கோவில் 100% பக்த்தர்கள் donation இல் தான் நடக்கிறது. 5000 ஏக்கர் நிலம் போன இடம் தெரியவில்லை. இதே போல் திருச்செந்தூர் "முக்காணியர்" சுமார் 300 குடும்பம் உள்ளது. இனவர்கள் நிலையும் இதே போல் தான். Or இன்னும் மோசம்.
VRChandrasekaran.
1.8K views
1 months ago
*இறந்தவர்களுக்கு ஏன் சடங்குகள் செய்கிறார்கள் என்ற காரணம் தெரியுமா* ....? 🏃🏼‍♂️❌🏃🏼‍♂️❌🏃🏼‍♂️ தெரிந்து கொள்ளுங்கள். அவசியம் உறவினர்கள் இறப்பின் போது கலந்து கொள்ளுங்கள்..... 😟😯😟😯😟 இந்து மதத்தில் ஒருவர் இறந்த பிறகு அவருக்கு சில குறிப்பிட்ட சடங்குகள் செய்யப்படும். இதனை இறுதிச் சடங்கு என்கிறோம். இறந்தவர்களுக்கு அனைவருக்கும் இந்த சடங்குகள் செய்யப்படுவதை நாம் பலமுறை பார்த்திருந்தாலும் அந்த சடங்குகள் எதற்காக செய்யப்படுகின்றன? இவற்றிற்கு என்ன காரணம்? என யாரும் தெரிந்து வைத்திருப்பது கிடையாது. ஒருவர் இறந்த பிறகு செய்யப்படும் மிக முக்கியமான 5 சடங்குகள் உள்ளன. இந்த சடங்குகளுக்கு பின்னால் பல ஆன்மீக மற்றும் அறிவியல் காரணம் உள்ளதாக சொல்லப்படுகிறது. இறுதிச் சடங்குகள் என்பது ஏதோ மூடநம்பிக்கை அல்ல அது ஒரு உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாவை, மீண்டும் அந்த உடலுக்குள் வரவிடாமல் தடுக்கும் மாபெரும் பிரபஞ்ச ரகசியம் ஆகும். மனிதன் வாழும் போது தன் உடலைத் தான் என்று நம்பி ஏமாறுகிறான். இறந்த பிறகும் அதே உடலைச் சுற்றி வந்து அழுகிறான். அவனது கட்டைவிரலைக் கட்டி, வாயை மூடி, நெற்றியை கட்டி, கடைசியில் உடலையே எரித்துச் சாம்பலாக்குவது ஏன் தெரியுமா? ‘உன் ஆட்டம் முடிந்தது, கிளம்பு’ என்று அந்த ஆன்மாவை உலக மாயையில் இருந்து விடுவிக்க நாம் செய்யும் ஆன்மீகத் தந்திரம் அது. இறுதிச் சடங்கின் போது செய்யப்படும் இந்த 5 சடங்குகள் மிகப் பெரிய வாழ்வியல் தத்துவமாகவும், பிரபஞ்ச ரகசியத்தை உணர்த்தும் செயலாகவும் கருதப்படுகிறது. இறுதிச்சடங்கின் போது இந்த சடங்குகள் எதற்காக செய்யப்படுகின்றன என்ற காரணம் இதவரை உங்களுக்கு தெரியாது என்றால், இப்போது தெரிந்து கொள்ளுங்கள். இறுதிச்சடங்கின் போது செய்யப்படும் 5 விஷயங்களும், காரணங்களும் : 1. இறந்தவர்கள் மூக்கில் பஞ்சு வைப்பது ஏன்? உயிர் பிரிந்த உடனே உடலின் துவாரங்கள் வழியாக பிரபஞ்சத்தின் அசுத்தக் காற்றும் நுண்கிருமிகளும் உள்ளே புகுந்து, உடல் அழுகுவதன் வேகத்தை அதிகரிக்கும். அதை தடுப்பதற்காகவே இறந்தவர்களின் மூக்கில் பஞ்சு வைக்கப்படுகிறது. 2. இறந்தவர்களின் கால் கட்டைவிரலை கட்டுவது ஏன்? மனித உடலின் பிராண சக்தி வெளியேறும் கடைசி வாசல் பாதத்தின் கட்டைவிரல். உயிர் பிரிந்த பிறகும் எஞ்சி இருக்கும் காந்த அலைகள் (Magnetic Fields) வழியே, வேறு ஏதேனும் துர்சக்திகள் உடலுக்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக அந்த பிரபஞ்ச மின்சுற்றை (Energy Circuit) தக்க வைப்பதற்காக இந்த ஆன்மீகக் கட்டு போடப்படுகிறது. 3. இறந்தவர்களின் நெற்றியில் 1 ரூபாய் நாணயம் வைப்பது ஏன்? நெற்றியில் நாணயம் (ஆக்ஞா சக்கரம்) புருவ மத்தியில்தான் ஆன்மாவின் முதன்மைச் சக்கரமாக ஆக்ஞா உள்ளது. உடல் குளிர்ந்து போகும் போது, அந்த சக்கரத்தில் இருக்கும் எஞ்சிய ஆற்றலை ஒரு உலோக நாணயம் கொண்டு அழுத்தி, ஆன்மா மீண்டும் அந்த உடலுக்குள் நுழைய ஆசைப்படுவதைத் தடுத்து, அதை மேல்நோக்கிப் பயணிக்க வைக்கும் உத்தி ஆகும். 4. இறந்தவர்களின் வாயில் அரிசி (வாய்க்கரிசி) போடுவது ஏன்? இது பசிக்கு அல்ல. பிரபஞ்சத்தின் பஞ்சபூதங்களில் ஒன்றான நிலத்தின் (Earth Element) கடைசிப் பிரதிநிதித்துவம் அது. “இந்த மண்ணில் நீ உண்ட உணவு முடிந்தது. இனி இந்த உடலுக்கு எந்த தேவையும் இல்லை” என்று அந்த ஆன்மாவிற்கு உணர்த்தும் விடைபெறுதல் நிகழ்விற்காக தான் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகிறது. 5. இறந்தவர்களை எரிப்பதா? புதைப்பதா? எது சரியான முறை? ஆதிகாலத்தில், சித்தர்களும் ஞானிகளும் உடலை இயற்கையோடு சேர்க்க புதைக்கும் முறையை கையாண்டனர். காரணம், அவர்களின் உடல் தியானத்தால் புனிதமடைந்தது என்பதால். ஆனால் சராசரி மனிதர்களுக்கு எரிப்பதே மிகச் சரியானது. மனிதன் தன் உடலின் மீது அதிகப் பற்று வைத்திருப்பான். உடலைப் புதைத்தால், ஆன்மா அந்த இடத்தையே சுற்றிச் சுற்றி வரும். ஆனால், உடலை எரியூட்டிச் சாம்பலாக்கும் போது, “நம் கூண்டு அழிந்து விட்டது” என்பதை ஆன்மா நேரடியாகப் பார்த்து, உடனடியாக தன் அடுத்த பிரபஞ்ச பயணத்தை தொடங்குமாம். பற்றுக்கள் நீங்கியது என்று தெரிந்து கொண்டு விலகிச் சென்று விடும். தெரிந்து கொள்ளுங்கள்..... 🙏🙏🙏🙏🙏 #ஆன்மீக சிந்தனை💐 #அர்த்தமுள்ள இந்து மதம்💐 #ஓம் நமசிவாய💐 #தெரிந்து கொள்வோம்💐 #பொது அறிவுத் தகவல்கள்💐