ShareChat
click to see wallet page
search
கவின் ஆணவப்படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய் எனும் முழக்கத்துடன் மே17 இயக்கத்தினரின் சாலைமறியலில், தன் மகள் காவலர்களால் இழுத்துச் செல்லப்படுகிறார். எந்த ஒரு தந்தைக்கும் இது வருத்தத்தை, கோபத்தை கொடுத்திருக்கும். தன் மகள் ஏன் போராட்டத்தில் இறங்கி அல்லல் படவேண்டுமென ஆதங்கம் வரும். ஆனால் சிவா திலீபன் அப்படியெல்லாம் கோபம் கொள்ளவில்லை. "மறியல் போராட்டத்திற்கு எத்தனை பேர் வந்திருந்தார்கள்?" என்கிறார். இருநூறுக்கும் சற்று குறைவாக வந்திருந்தார்கள். கால அவகாசம் குறைவு, வேலைநாள் அதனால் திரட்ட இயலாமல் போய்விட்டது என்ற காரணத்தை அவரால் ஏற்க இயலவில்லை. பெருந்திரளாய் தமிழர்கள் திரளாமல் தீர்வு எப்படி கிடைக்கும் என அங்கலாய்த்தார். அந்த சாலை மறியல் சிவா திலீபன் அன்பு மகளான கோகிலாவின் திருமண காலகட்டத்தில் நடந்த போராட்டம். அதில் அவர் காயம்பட்டதெல்லாம் அவருக்கு கவலையளிக்கவில்லை. சாதியொழிப்பு போராட்ட களத்தில் முன்னனியில் தன்மகள் நிற்பதில் அவருக்கு பெருமை. தன் மகளுக்கு சாதி-மறுப்பு திருமணத்தை சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணமாக செய்துவைத்து தற்போது, ஓராண்டு கூட முடியவில்லை. தொடர்ச்சியாக நடந்த தூய்மைப்பணியாளர் போராட்டத்தில் அன்றாடம் மாலை முதல் இரவுவரை சிவா திலீபனின் இணையர் இசைமொழி பங்கெடுத்து நேரம் கழித்தே வீடுதிரும்புவார். மனைவி போராட்ட களம் சென்று வருவது அவருக்கு மனத்தடையை கொடுத்ததில்லை. எத்தனை பேர் ஆதரித்து வருகிறார்கள் என கேட்பார். பால-ஸ்*தீன ஆதரவு பேரணியே அவர் மிக மகிழ்வுடன் பங்கெடுத்த நிகழ்வு. ஆயிரக்கணக்கான தோழர்கள் பங்கெடுத்த பேரணியில் பெருமையுடன் நடந்து வரும் படங்களை காணலாம். மாஞ்சோலை, அனகாபுத்தூர் வீடு இடிப்பு என நடந்த போராட்டங்களில் போதுமான மக்கள் பங்கேற்பு இல்லை என்பது அவருக்கு சோர்வை கொடுத்தது. மதவாதிகள், சாதியவாதிகளை எதிர்த்த போராட்டங்களில் பெருந்திரளாய் தோழர்கள் பங்கெடுப்பதில்லை என்பது அவர் மனதை துன்புறுத்தியது. தொடர்ந்து நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம், ஆளுனர் எதிர்ப்பு போராட்டம், நீட் எதிர்ப்பு என எவையும் கூர்மையடையவில்லை என்பதை அவர் தொடர்ந்து பேசி வந்திருந்தார். ரயில்வேயில் தமிழ் தொழிலாளர்களுக்கு வேலைகிடைப்பதில்லை என்பது குறித்து 2015ம் ஆண்டுவாக்கில் ஐ.சி.எப் அப்ரண்டிஷ் போராட்டத்திற்கு மே17 தோழர்களுடன் சிவா பங்கெடுத்துள்ளார். தொடர்ந்து இரு ஆண்டுகளாக நடந்த போராட்டத்தில் கர்நாடகத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி ரயில்வே மேலாளர் அலுவலகத்தின் முன் தீக்குளித்து இறந்து போனார். அவரது உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வைக்கபப்ட்டு நடந்த போராட்டத்தில் மே17 இயக்கம் பங்கெடுத்திருந்தது. இவையனைத்தையும் சிவா திலீபன் நன்கு அறிந்தவர். இதேபோல ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் தமிழர் வேலை பறிபோவது குறித்த போராடங்களில் அவர் பங்கெடுத்துள்ளார். பெருதிரளாய் தமிழர்கள் திரளாமல் போராட்டம் வெல்லாது என்பார். இறுதியாக தமிழ் மொழிக்காகவாவவது தமிழன் திரளமாட்டானா என கவலைகொண்டார். சிவா திலீபன் இறுதி ஊர்வலத்தில் அவரது இணையர் பேசும் போது சொன்ன வார்த்தைகள் இதை சுட்டிக்காட்டும், " நம் மொழிக்காககவாவது வர மாட்டீர்களா..." எனக் கேட்டார் தோழர் இசைமொழி . சிவா திலீபனின் மகள் கோகிலா இன்னும் மேலதிகமாக, தன் தந்தை பாசிசத்தை வெல்வதற்காக உயிரைக் கொடுத்துள்ளார். போலி தமிழ்த்தேசியவாதிகளை அம்பலப்படுத்த அவர் தன்னுயிர் ஈகம் செய்திருக்கிறார் என பதிவு செய்தார். இபப்டியான ஒரு சிந்தனையாளனுக்கு, களப்போராளிக்கு, குடும்ப தலைவனுக்கு, தமிழ் மொழி நேயனுக்கு, மொழிப்போர் கண்ட பெருவீரனுக்கு நினைவேந்தல் நிகழ்வும், படத்திறப்பும் நடக்க இருக்கிறது. இந்நிகழ்வில் பங்கெடுக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு. ஒரு தன்னலமற்ற போராளிக்கு தமிழினம் மரியாதை செய்ய வேண்டிய நிகழ்வு. இந்நாளிலும் உங்களுக்கு தனிப்பட்ட பணிகள் முன்னிலை பெறுமென நீங்கள் நினைத்தால், உங்களை போன்றோரின் பங்கேற்பற்ற நிலையை எண்ணி வருந்தியே சிவா திலீபன் உயிர்விட துணிந்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருவேளை பெருந்திரளாய் போராட்டங்களில் பங்கெடுத்திருப்பீர்களென்றால், சிவா திலீபன் நம்மோடு இன்று உரையாடிக் கொண்டிருப்பார். எத்தனையோ போராட்டங்கள், நிகழ்வுகள் நடத்திய சமயத்தில் அதுகுறித்து பதிவுகளையோ, பகிர்வையோ கூட செய்யாத பலர் சிவா திலீபன் மரணம் தேவையற்றது, இறந்து சாதிக்க இயலாதென என்றெல்லாம் எழுதி பார்க்க முடிந்தது.. 'குடும்பம் உள்ளது, ஆகவே உயிர்விடாதீர்கள்' என பதிவு எழுதியவர்கள், இதே போல, போராட்ட நிகழ்வுகளை ஆதரித்து பதிவு செய்து, களத்தில் பங்கெடுத்திருந்தால் சிவா திலீபன் தன் குடும்பத்தோடு அன்றாட வாழ்வை தொடர்ந்திருப்பார். இதுவரை போராட்டங்கள், நிகழ்வுகளுக்கு முகம்கொடுக்காமல் அன்றாட வாழ்வில் மூழ்கி இருக்கும் நண்பர்களே, உங்களுக்காகவும் சேர்த்தே தனது வாழ்வை கொடுத்திருக்கிறார் சிவா திலீபன். அத்தகைய உன்னத மனிதனுக்கு மரியாதை செய்ய வாருங்கள். நாள் :29-03-2026 - ஞாயிறு நேரம்: மாலை 4:00 இடம்: முத்தமிழ்ப் பேரவை, அடையாறு பாலம் அருகில், அடையாறு-ஆர்.ஏ.புரம், சென்னை. எங்களது செய்திகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. ஆகவே இச்செய்திகளை உங்கள் பதிவில் பதிந்தும், பிற சமூகவளைதளமாகிய வாட்சப், எக்ஸ், இண்ஸ்டா வாயிலாகவும் பரப்புரை செய்ய வேண்டுகிறோம். திருமுருகன் காந்தி மே17 இயக்கம். #தமிழ்நாடு தமிழருக்கே! #மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல் #மொழிப்போர் ஈகி சிவா திலீபன் #💪 மே17 இயக்கம் #இந்தி திணிப்பு
தமிழ்நாடு தமிழருக்கே! - பூங்கா ٤ ٧ " வல்லாதத Park தமி்ம இயக்கம் உடல் மப்ஊக்கு! உயிர்தமிழுக்கு! இந்தி பரிக! 0 தமிழ் வழ்க! மொழிப்போர் ஈகி தமிழ் மொழிநேயர் சிவா திலீபன் Bulwi நினைவேந்தல் CELEBRATION படத்திறப்பு நிகழ்வு TANIILS JUS २९ Ioni॰ २०२६ ஞாயிறு மாலலை 400 மணி முத்தமிழ்ப் பேரவை டிஎன்ராஜரத்தினம் அரங்கு அடைபாறு பாலம் அருகில் ஆர்ஏபுரம் அபைபாறு சென்பை மே பதினேழு இயக்கம் 0 17 El5till  9884864010 / 9444327010 பூங்கா ٤ ٧ வல்லாதத Park தமி்ம இயக்கம் உடல் மப்ஊக்கு! உயிர்தமிழுக்கு! இந்தி பரிக! 0 தமிழ் வழ்க! மொழிப்போர் ஈகி தமிழ் மொழிநேயர் சிவா திலீபன் Bulwi நினைவேந்தல் CELEBRATION படத்திறப்பு நிகழ்வு TANIILS JUS २९ Ioni॰ २०२६ ஞாயிறு மாலலை 400 மணி முத்தமிழ்ப் பேரவை டிஎன்ராஜரத்தினம் அரங்கு அடைபாறு பாலம் அருகில் ஆர்ஏபுரம் அபைபாறு சென்பை மே பதினேழு இயக்கம் 0 17 El5till  9884864010 / 9444327010 - ShareChat