இதுதான் மே17 இயக்கம் நடத்தும் 'இந்தி அழிப்பு போராட்டம்' உருவாக்கிய கேள்வி.
"...ஏன் இந்தி,
எதற்காக திணிக்கப்படுகிறது.. எங்கே எங்கள் தமிழர்களுக்கான வேலைகள்? .."
இதைத்தான் மே17 இயக்கம் எழுப்பியது. இதை இன்று
சாமானிய தமிழர்கள் கேட்கிறார்கள். இந்த கேள்வியை சாமானிய மக்களிடம் கொண்டு சென்றதில் மே17 இயக்கத்தின் போராட்டம் வெற்றியடைந்திருக்கிறது.
பாஜக, நாம்தமிழர் கும்பல்களால் அவதூறுகள் பரப்பப்பட்டாலும், தமிழர்கள் மே17 இயக்கத்தின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
"எமது இளைஞர்களுக்கு ஒன்றிய அரசு நிறுவனங்களில் ஏன் வேலை மறுக்கப்படுகிறது?
ஏன் இந்தி பேசுபவருக்கு தமிழ்நாட்டு வேலைகளில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது?.."
மே17 இயக்கம் எழுப்பிய கேள்வி சாமானிய தமிழ் மக்களிடமிருந்து எழுகிறது. பாஜக தலைவரிடம் நேரடியாக, துணிச்சலாக கேள்வி எழுப்பிய அந்த மூதாட்டி எம் தமிழன்னையின் குரல்.
அந்த தாயார், தமிழிசையை நோக்கி தொடர்ந்து கேள்வியை எழுப்பி இருக்கிறார். இதனால் அவரை கூட்டத்திலிருந்து பாஜகவினர் அப்புறப்படுத்தியுள்ளார்கள்
பாஜகவை அம்பலப்படுத்தி, தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்திய அந்த அன்னைக்கு எமது புரட்சிகர வாழ்த்துகள். எளிய சாமானிய உழைக்கும் மக்களுக்கு எமது கோரிக்கைகள் சென்றடைந்திருக்கின்றன என்பதே எமது போராட்டத்தின் வெற்றி. தோழர் சிவா திலீபன் தன்னை கொடையாக கொடுத்து வலுப்படுத்திய போராட்டத்தின் நியாயம் மக்களை சென்றடைந்துள்ளது.
பதில் சொல் சங்கிகளே?
எங்கே எங்கள் வேலை?
ஏன் இங்கே இந்தி?
எமது வேலைகளை வடநாட்டானுக்கு தாரை வார்க்கும் பாஜகவே பதில் சொல்!
மே17 இயக்கத்தின் போராட்டம் தொடரும்.. தமிழ்த்தேசிய அரசியலின் சமரசமற்ற இயக்கமாக எமது தோழர்கள் போராட்டத்தை தொடர்வார்கள். #தமிழ்நாடு தமிழருக்கே! #தமிழ்த்தேசியம் #💪 மே17 இயக்கம் #தமிழின எதிரி RSS-பாஜக #இந்தி திணிப்பு


