SHEIK 🌺KSN🌺
538 views 4 hours ago
இஸ்லாத்தில் பெண் குழந்தை என்பது அல்லாஹ்வின் ரஹ்மத். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் இரண்டு பெண் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கிறாரோ, அவரும் நானும் சுவனத்தில் இப்படி இருப்போம்" என்று தன் இரண்டு விரல்களை இணைத்து காட்டினார்கள். இந்த குழந்தையின் தலையில் உள்ள கிரீடம் இந்த உலக கிரீடம் அல்ல. அவளது பெற்றோருக்கு சுவனத்தில் கிடைக்கப்போகும் கிரீடத்தின் அடையாளம்.! ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பல கட்டங்கள் - தொட்டிலில், பள்ளியில், வீட்டில் மகளாக, பின் மனைவியாக, பின் தாயாக... ஒவ்வொரு கட்டத்திலும் இந்த உலகம் அவளை சோதிக்கும். அந்த அனைத்து கட்டத்திலும் அல்லாஹ் அவளை பாதுகாக்க வேண்டும் .! காசு, பணம், அழகு, அந்தஸ்து என்று கேட்காமல், சுவனத்தின் பெண்களில் ஒருவராக ஆக்க வேண்டும் என்று கேட்பது தான் உண்மையான நேசம். ஆயிஷா (ரலி), கதீஜா (ரலி), மர்யம் (அலை), ஃபாத்திமா (ரலி) போன்ற பெண்களைப் போல ஆக வேண்டும்.! இது உங்கள் மகளுக்காகவோ, அல்லது உங்கள் சகோதர , சகோதரியின் மகளுக்காகவோ, யாருக்காக இருந்தாலும், அந்த பச்சிளம் குழந்தைக்காக நானும் மனதார துஆ செய்கிறேன். யா அல்லாஹ், எங்கள் பெண் குழந்தையை கண்குளிர்ச்சியாக, உன் பாதுகாப்பில் வளரச் செய்வாயாக. ஆமீன்.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
11 shares

More like this