கிருஷ்ணகிரி பெல்லாரம்பள்ளியைச் சேர்ந்த ராணுவ வீரர் மகேஷ் குமார் (43). இவரது மனைவி பானுப்பிரியா (30). மகேஷ் குமார் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்த நிலையில், பானுப்பிரியாவுக்கும் வேன் டிரைவர் பூவரசனுக்கும் (24) இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த மகேஷ் குமார், ஊருக்கு வந்து மனைவியைக் கண்டித்துள்ளார்.
கடந்த மே 10-ஆம் தேதி இரவு, மகேஷ் குமார் வீட்டில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பூவரசன் கத்தியுடன் வீட்டிற்குள் புகுந்து மகேஷ் குமாரை குத்தினார். தடுக்க வந்த மாமனார் செல்லப்பனையும் பூவரசனும், பானுப்பிரியாவும் சேர்ந்து மாறி மாறி குத்திக் கொலை செய்தனர். கொலையை மறைக்க ரத்தக்கறையைத் துடைத்தெறிந்த இருவரும், இரு சடலங்களையும் தனித்தனி சாக்கு மூட்டைகளில் கட்டினர். பின்னர், வீட்டில் இருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன் பகுதியில் சடலங்களை வைத்துக் கொண்டு நள்ளிரவில் புறப்பட்டனர். வழியில் பெட்ரோல் பங்கில் டீசல் வாங்கி, வெப்பாலம்பட்டி பகுதியில் வெவ்வேறு இடங்களில் சடலங்களை வீசி தீ வைத்து எரித்துள்ளனர்.
அடையாளம் தெரியாத நிலையில் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், மாயமான நபர்களின் விவரங்களை வைத்து போலீசார் பானுப்பிரியாவிடம் விசாரித்தனர். ஆரம்பத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அவர், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
கள்ளக்காதலனுக்காக ராணுவ வீரரான கணவரையும், வயதான மாமனாரையும் எரித்துக் கொன்ற இளம்பெண்ணின் இந்தச் செயல் கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
#காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴


