ShareChat
click to see wallet page
search
விஜயவாடா அண்டு குண்டூர் மாவட்ட எல்லை பகுதியான துக்கிராலா மண்டபம் சிலுவூர் கிராமத்தில் நடந்த அதிர்ச்சிகரமான கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.... வெங்காய வியாபாரியான லோகம் சிவனகராஜு என்பவர், தனது மனைவி லட்சுமி மாதுரி மற்றும் அவரது கள்ளக்காதலன் கோபியால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். 2007-ல் திருமணமான இத்தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், விஜயவாடா சினிமா திரையரங்கில் பணிபுரிந்த மாதுரிக்கு, கோபி என்பவருடன் ஏற்பட்ட தவறான உறவே இந்த கொடூரச் செயலுக்குக் காரணமாக அமைந்துள்ளது. தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்த மாதுரி, கடந்த ஜனவரி 18-ம் தேதி இரவு சிவனகராஜுவுக்கு வழங்கிய பிரியாணியில் சுமார் 20 தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார். அவர் மயக்கமடைந்ததும், வீட்டிற்கு வந்த காதலன் கோபியுடன் இணைந்து மாதுரி இச்செயலை அரங்கேற்றியுள்ளார். கோபி சிவனகராஜுவின் மார்பின் மீது அமர்ந்து பிடித்துக்கொள்ள, மாதுரி தலையணையால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலையில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், கணவர் இறந்ததை உறுதி செய்த பிறகு, மாதுரி சற்றும் பதற்றமின்றி விடிய விடிய சடலத்தின் அருகிலேயே அமர்ந்து ஆபாச வீடியோக்களைப் பார்த்துக் கழித்துள்ளார். அதிகாலையில் எதுவுமே தெரியாதது போல் நடித்த அவர், தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறி அழுது நாடகமாடியுள்ளார். இருப்பினும், தம்பதியினரிடையே இருந்த தொடர் சண்டைகள் மற்றும் மாதுரியின் நடத்தையில் ஏற்கனவே சந்தேகத்தில் இருந்த அக்கம் பக்கத்தினர் இந்த மரணத்தை எளிதில் நம்பவில்லை. இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோது, சிவனகராஜுவின் காது மற்றும் கழுத்துப் பகுதியில் இருந்த காயங்களைக் கண்டு அவரது நண்பர்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். பிரேதப் பரிசோதனையில் அவர் மூச்சுத்திணறலால் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் மாதுரியைக் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த அவரது காதலன் கோபியும் தற்போது போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கள்ளக்காதலுக்காகக் கணவனைக் கொன்றுவிட்டு, சடலத்தின் அருகே ஆபாச வீடியோ பார்த்த பெண்ணின் செயல் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது...... #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம்
காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 - "பிரியாணியில் விஷம் இரவெல்லாம் சடலத்துடன் ஆபாச வீடியோ பார்த்த மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த  கணவனை கொலை கொடூரம் ! "பிரியாணியில் விஷம் இரவெல்லாம் சடலத்துடன் ஆபாச வீடியோ பார்த்த மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த  கணவனை கொலை கொடூரம் ! - ShareChat