ShareChat
click to see wallet page
search
மைசூர் மாவட்டம் சரகுரு பகுதியில் கூலித் தொழிலாளி ஆன ஐவரப்பா என்பவர் கடந்த 16ஆம் தேதி சாலையோரம் பிணமாக கடந்தார்... முதலில் இது விபத்து எனத் தோன்றினாலும், ஜவரப்பாவின் உடலில் இருந்த காயங்கள் போலீசாருக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தின. மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், ஜவரப்பாவின் செல்போன் எண்களை ஆய்வு செய்தபோதுதான் அந்த திடுக்கிடும் 'கள்ளக்காதல்' பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது. ஜவரப்பா தான் வேலை பார்த்து வந்த மேஸ்திரி சித்தேஷை, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று மனைவி அம்ருதாவை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த அறிமுகம் நாளடைவில் அம்ருதா மற்றும் சித்தேஷ் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், இந்த விவகாரம் ஜவரப்பாவுக்குத் தெரியவந்துள்ளது. மனைவியைக் கண்டித்த ஜவரப்பா, தங்களது கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருப்பார் என்று கருதிய அந்த ஜோடி, அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தது. திட்டமிட்டபடி, சித்தேஷ் தனது காரில் ஜவரப்பாவை மது குடிக்க அழைத்துச் சென்று, அங்கு அவரைத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் விபத்து போலச் சித்தரித்து உடலை வீசிவிட்டுச் சென்றுள்ளார். தற்போது கைதான அம்ருதா மற்றும் சித்தேஷ் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்
காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 - "கள்ளக்காதலனுடன் உல்லாசம்" ரோட்டோரம் கிடந்த பிணம் கணவரை தீர்த்துக்கட்டிய மேஸ்திரி. சிக்கியது எப்படி?.!!! "கள்ளக்காதலனுடன் உல்லாசம்" ரோட்டோரம் கிடந்த பிணம் கணவரை தீர்த்துக்கட்டிய மேஸ்திரி. சிக்கியது எப்படி?.!!! - ShareChat