A.Navajothi Arunkumar
580 views • 4 months ago
#கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️
தலைப்பு;
💐💐💐💐💐*உயிர்ப்பு*
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
பூவுக்குள்
மலர்ச்சி
சாவுக்குள்
மௌனம்
உயிர்ப்போடிருக்கும்/
கருவறைக்குள்
குழந்தை/
சிறையறைக்குள்
சிந்தனை
உயிர்ப்போடிருக்கும்/
தேர்தலுக்குள்
இலவசம்!
வியாபாரத்தில்
தந்திரம்!
உயிர்ப்போடிருக்கும்/
கடவுள்
வேண்டுதலில்
நம்பிக்கை!
கணவன்
சீண்டுதலில் காதல்!
உயிர்ப்போடிருக்கும்
கவிஞனுக்குள்
கற்பனை.
கலைஞனுக்குள் திறமை
எப்போதும்....
உயிர்ப்போடிருக்கும்/
காதலுக்குள்
மோதல்!
வீழ்தலுக்குள்
விழிப்பு!
உயிர்ப்போடிருக்கும்/
எழுத்துக்குள்
இலக்கணம்!
தலைக்கனத்தில்
ஆணவம் என்றும்....
உயிர்ப்போடிருக்கும்/
பிறப்புக்குள்
இறப்பு/
இறப்புக்குபின்
வெறுமை
உயிர்ப்போடிருக்கும்.
செல்களுக்குள்
உயிர்ப்பு!
காலத்துக்குள்
மூப்பு...
உயிர்ப்போடு
உடன்வரும்/
மனிதனுக்குள்
நோக்கம்.!
இறைவனுக்குள்
ஆக்கம்!
என்றும்
உயிர்ப்பாய்த்
தொடரும்
உயிர்ப்புக்கு
முற்றுக்
கிடையாததால்.....
உயிர்போடே
இருக்கும்.
நன்றி வணக்கம்🙏
அ. நவஜோதி அரு ண்✍️
18 likes
8 shares