A.Navajothi Arunkumar
580 views 4 months ago
#கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️ தலைப்பு; 💐💐💐💐💐*உயிர்ப்பு* ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; பூவுக்குள் மலர்ச்சி சாவுக்குள் மௌனம் உயிர்ப்போடிருக்கும்/ கருவறைக்குள் குழந்தை/ சிறையறைக்குள் சிந்தனை உயிர்ப்போடிருக்கும்/ தேர்தலுக்குள் இலவசம்! வியாபாரத்தில் தந்திரம்! உயிர்ப்போடிருக்கும்/ கடவுள் வேண்டுதலில் நம்பிக்கை! கணவன் சீண்டுதலில் காதல்! உயிர்ப்போடிருக்கும் கவிஞனுக்குள் கற்பனை. கலைஞனுக்குள் திறமை எப்போதும்.... உயிர்ப்போடிருக்கும்/ காதலுக்குள் மோதல்! வீழ்தலுக்குள் விழிப்பு! உயிர்ப்போடிருக்கும்/ எழுத்துக்குள் இலக்கணம்! தலைக்கனத்தில் ஆணவம் என்றும்.... உயிர்ப்போடிருக்கும்/ பிறப்புக்குள் இறப்பு/ இறப்புக்குபின் வெறுமை உயிர்ப்போடிருக்கும். செல்களுக்குள் உயிர்ப்பு! காலத்துக்குள் மூப்பு... உயிர்ப்போடு உடன்வரும்/ மனிதனுக்குள் நோக்கம்.! இறைவனுக்குள் ஆக்கம்! என்றும் உயிர்ப்பாய்த் தொடரும் உயிர்ப்புக்கு முற்றுக் கிடையாததால்..... உயிர்போடே இருக்கும். நன்றி வணக்கம்🙏 அ. நவஜோதி அரு ண்✍️
18 likes
8 shares

More like this