A.Navajothi Arunkumar
579 views 4 months ago
#கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️ விட்டு விட்டுபெய்ததனால் பூமியது *ஈரவிழி* குண்டுங்குழி நிரப்பியதால் சாலையது *ஈரவிழி/* பரவிவிரவி பெய்ததனால்... பசுமையது *ஈரவிழி/* பறக்கையிலே பெய்ததனால் பறவைக்கண்கள் *ஈரவிழி* வானை நோக்கிப் பார்த்தனால் பார்வையது *ஈரவிழி* உற்சாகமாய்ப் பெய்ததனால் உழவன் கண்கள் *ஈரவிழி* கைக்கொட்டி துளிகள் உடைக்கக் குழந்தைக் கண்கள் *ஈரவிழி* தூறலிலே நீவரவே... துடிப்பாய் பார்க்க., எனது கண்கள் *ஈரவிழி* துள்ளுகின்ற வானும், மழை அள்ளுகின்ற மண்ணும்... மகிழ்ச்சியோடு விளையாட, தெருக்களெல்லாம் *ஈரவிழி* ஈரவிழி. துயரமல்ல/ தூறல் மழையின் தெறிக்கும் துளி அது *மகிழ்ச்சியின் மழைத்துளி*.../ கவிதை மழை அ நவஜோதி அருண்✍️
13 likes
4 shares

More like this