A.Navajothi Arunkumar
579 views • 4 months ago
#கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️ விட்டு விட்டுபெய்ததனால்
பூமியது
*ஈரவிழி*
குண்டுங்குழி
நிரப்பியதால்
சாலையது *ஈரவிழி/*
பரவிவிரவி
பெய்ததனால்...
பசுமையது
*ஈரவிழி/*
பறக்கையிலே
பெய்ததனால்
பறவைக்கண்கள்
*ஈரவிழி*
வானை நோக்கிப்
பார்த்தனால்
பார்வையது
*ஈரவிழி*
உற்சாகமாய்ப்
பெய்ததனால்
உழவன் கண்கள்
*ஈரவிழி*
கைக்கொட்டி
துளிகள்
உடைக்கக்
குழந்தைக்
கண்கள்
*ஈரவிழி*
தூறலிலே
நீவரவே...
துடிப்பாய்
பார்க்க.,
எனது கண்கள்
*ஈரவிழி*
துள்ளுகின்ற
வானும்,
மழை அள்ளுகின்ற
மண்ணும்...
மகிழ்ச்சியோடு
விளையாட,
தெருக்களெல்லாம்
*ஈரவிழி*
ஈரவிழி.
துயரமல்ல/
தூறல் மழையின்
தெறிக்கும் துளி
அது
*மகிழ்ச்சியின் மழைத்துளி*.../
கவிதை மழை
அ நவஜோதி அருண்✍️
13 likes
4 shares