ShareChat
click to see wallet page
search
#Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 05.06.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======= வைகுண்டர் பகவதிக்கு அருளல் ================================= கண்ணான நாதன் கமலக் குருநாதன் வண்ணமுள்ள நாதன் வழிநடந்தா ரம்மானை நடந்து பகவதியாள் நல்லகட லும்பார்த்துக் கடந்து பகவதியைக் கண்காட்டித் தானழைத்து நன்மை யுடைய நாயகியே சுந்தரியே பொன்மோ கினியே பிள்ளாய்நான் சொல்வதுகேள் , விளக்கம் ========= கண்ணைப் போன்றும், தாமரை மலரைப் போன்றும், அழகு பொருந்திய நாதனாகிய வைகுண்டர் தெச்சணாபூமியில் நடந்து சென்று கொண்டிருந்தார். பிறகு, பகவதி தங்கியிருந்த இடத்தில் அருகில் உள்ள கடலைக் கடந்து அவள் இருப்பிடம் அடைந்தார். அங்கு அவளைக் கண்டு கண்ணைச் சிமிட்டிப் பக்கத்தில் அழைத்தார். அவளை நோக்கி, பகவதியே நன்மையுடைய நாயகியே, சுந்தரியே, பொன்னைப் போன்ற மோகினியே, குழந்தாய், நான் சொல்வதை நீ கவனமாகக் கேட்பாயாக என்றார். . . அகிலம் ======== வைகுண்டம் பிறந்து வார்த்தையொன்றுக் குள்ளான உய்கொண்டோர் குலத்தை உருவேற்ற வந்தேனென எந்தன் திருச்சம் பதியு மிதுமுதலாய் எந்தெந்த நாட்கும் இனிக்காணிக் கைநிறுத்தல் ஆனதினால் நீயும் ஆதியி லென்னோடு தேனினியத் தங்கையராய்த் திட்டித்த ஏதுவினால் உன்னோடு இத்தனையும் உபதேச மாயுரைத்தேன் பொன்னாடு தெச்சணத்தில் போறேன் தவசிருக்க என்று பகவதிக்கு இயம்பி வழிநடந்தார் அன்று பகவதியாள் அறைக்குள் ளடைத்திருந்தாள் . விளக்கம் ========= வைகுண்டராக நான் பிறந்து ஒரு சொல்லுக்குள் இவ்வுலகை அரசாள தகுதிபெற்றுச் சான்றோர் குலத்தில் அம்மக்களை உயர்வு பெறச் செய்ய வந்துள்ளேன். என்னுடைய திருச்செந்தூர்க் கோவிலிலும் இது முதலாக எல்லா நாள்களும் காணிக்கை கைக்கூலி போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. எனவே, நீயும் ஏற்கெனவே என்னோடு தேனினும் இனிய தங்கையாய்ப் பிறந்த காரணத்தால் உன்னிடம் இதை உபதேசிக்கின்றேன். நீயும் இவற்றை நிறுத்துவாயாக. இனி, நான் பொன் நாடாகிய இந்தத் தெச்சணாபூமியில் தவம் இருப்பதற்காகச் செல்லுகிறேன் என்று வைகுண்டர் பகவதியிடம் கூறிவிட்டு மீண்டும் தெச்சணாபூமி நோக்கி நடந்தார். பகவதியும் தன்னுடைய கோவிலுக்குள் சென்று அமர்ந்தாள். . . அகிலம் ======= வைகுண்டர் மணவைப்பதி ஏகல் ================================== நாரா யணரும் நல்லசங்கத் தாருடனே சீராய் மணவைப் பதிநோக்கித் தான்நடந்தார் தென்காசி யென்ற தெச்சணா பூமியிலே கண்காட்சி சூழக் கண்ணர் மிகநடந்தார் . விளக்கம் ========= பிறகு வைகுண்டர் தமது கூட்டத்துடன் தெச்சணாபூமியின் தெற்கில் இருக்கும் மணவைப் பதி நோக்கி நடக்கலானார். தென்காசி என்று சிறப்பாகக் கூறப்படுகின்ற தெச்சணாபூமியில் மக்கள் எல்லாரும் மகிழ்ச்சியுடன் வைகுண்டரைப் பார்த்துக் கொண்டு சூழ்ந்து நிற்க, வைகுண்டர் மணவைப் பதி நோக்கி நடந்து கொண்டிருந்தார். . . அகிலம் ======== நடந்தெம் பெருமாள் நல்ல கடல்வழியே திடந்தெளிந்த தேவர்களும் செயசெ யெனநடக்க கண்டார் துவரம் பதியின்கண் ணோட்டமெல்லாம் பண்டைப் பதியின் பவிசொல்லா மேபார்த்து ஆன பதியின் அகலநீ ளம்பார்த்து மான பதியின் வாசலெல்லாம் பார்த்தவரும் . விளக்கம் ========= இப்படியே கடற்கரை வழியாகச் சக்தி வாய்ந்த தேவர்கள் வைகுண்டருக்கு வெற்றி என்று ஒலி எழுப்பிக் கொண்டு நடக்க தாம் முன்னர் ஆட்சி புரிந்த துவரயம் பதியையும் அக்காட்சியையும் செல்வச் செழிப்பையும் மனதுள் பார்த்து மகிழ்ந்தார். அந்தத் துவரயம்பதியின் விசாலமான அகலம், நீளம் முதலிய பரப்பளவைப் பார்த்தும் உயர்வான அப்பதியின் வாசல்களை எல்லாம் மனதுள் பார்த்தும் மகிழ்ச்சி அடைந்தார். . . அகிலம் ======= நாடுகுற்றங் கேட்க நல்லதவஞ் செய்வதற்குத் தேடும் வடவாசல் சீவிவளர் மலையின் நேரும்வா சல்தனக்கு நிகரில்லை யாமெனவே தவசுக் குகந்த தலங்களிது நன்றெனவே உபசீ வனம்வளரும் உகந்தபுவி யீதெனவே என்று மனதிலெண்ணி என்றன்பெரு மானும் . விளக்கம் ========= நாட்டு மக்களின் நடுத்தீர்ப்பு கேட்கச் செல்லுவதற்கு முன்னால் நான் நல்ல முறையில் தவம் செய்யத் தேடுகின்ற வடக்கு வாசல் செதுக்கப்பட்டு வளருகின்ற சிறந்த மலையை நோக்கி இருக்கும் என்றும், இந்த நேரான வடக்கு வாசலுக்கு நிகர் எதுவும் இல்லை என்றும், தவசு செய்வதற்கு ஏற்ற சிறந்த இடங்களில் இவ்விடம் மிகவும் நல்ல இடம் என்றும். எல்லாச் சக்தியும் வளருகின்ற சிறந்த பூமி இது என்றும் வைகுண்டர் மனதில் எண்ணினார். . . தொடரும்... அய்யா உண்டு.
Ayya Vaikundar - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா பொறுமை பெரிது பெரிய திருமகனே தருமம் பெரிது தாங்கியிரு என்மகனே எல்லா முனது ச்சையது போல்நடக்கும் நல்லார்க்கு மோர்நினைவே நலமாகு மென்றுசொல்லி எல்லார்க்கும் விளம்பி இருநீ யிருமகனே பொல்லாதா ரோடும் பொறுமை யுரைமகனே தன்னாலே யாகுமட்டும் சாற்றியிரு என்மகனே 05.06.2026 D Muthu Prakash] அய்யா |ருங்கோ வீரத்தனமாய் விளக்கின் 1 போல் ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா பொறுமை பெரிது பெரிய திருமகனே தருமம் பெரிது தாங்கியிரு என்மகனே எல்லா முனது ச்சையது போல்நடக்கும் நல்லார்க்கு மோர்நினைவே நலமாகு மென்றுசொல்லி எல்லார்க்கும் விளம்பி இருநீ யிருமகனே பொல்லாதா ரோடும் பொறுமை யுரைமகனே தன்னாலே யாகுமட்டும் சாற்றியிரு என்மகனே 05.06.2026 D Muthu Prakash] அய்யா |ருங்கோ வீரத்தனமாய் விளக்கின் 1 போல் ஒளி - ShareChat