SHEIK 🌺KSN🌺
663 views 2 days ago
நபி (ஸல்) அவர்கள், ‘‘கன்னிகழிந்த பெண்ணை, அவளது வெளிப்படையான உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் ஏதேனும் ஒருமுறையில் அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்” என்று சொன்னார்கள். மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதியைத் தெரிந்துகொள்வது” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவள் மௌனம் சாதிப்பதே அவளது சம்மதம்” என்று சொன்னார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) (புகாரி: 5136) பெண்ணின் சம்மதம் கட்டாயம் வேண்டும். இஸ்லாமிய சட்டப்படி ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவளைக் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்து வைக்க யாருக்கும் உரிமையில்லை. கன்னியரின் மௌனம், கன்னிப் பெண்கள் பொதுவாக வெட்கத்தின் காரணமாகத் தங்கள் சம்மதத்தை வெளியில் சொல்லத் தயங்குவார்கள் என்பதால், அவர்கள் அமைதியாக இருப்பதே சம்மதமாகக் கருதப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுக்கு, விதவை அல்லது விவாகரத்தானவர் மறுமணம் செய்யும் போது, அவரிடம் நேரடியாகப் பேசி ஆலோசித்துத் தெளிவான சம்மதத்தைப் பெற வேண்டும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
13 likes
13 shares

More like this