SHEIK 🌺KSN🌺
1K views 5 days ago
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் உங்கள் குழந்தைகளை வெளியே திரிய விடாமல் தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் பூமியெங்கும் பரவி விடுகின்றான். இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை வெளியே செல்லவிட்டு விடுங்கள். மேலும், இரவு நேரத்தில் உங்கள் கதவை மூடி விடுங்கள். அப்போது அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். உறங்கச் செல்கையில் உங்களுடைய விளக்கை அணைத்து விடுங்கள். அப்போதும் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். உங்கள் தண்ணீர்ப் பையைச் சுருக்கிட்டு மூடி விடுங்கள். அப்போதும் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். உங்களுடைய பாத்திரத்தை மூடி வையுங்கள். அதை முழுவதும் மூட இயலாவிட்டாலும் அதன் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடி விடுங்கள். அப்போதும் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். என ஜாபிர்(ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 3280) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
23 likes
27 shares

More like this