D Muthu Prakash, Kanchipuram 💐
941 views • 18 days ago
#அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 12ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 21.06.2026.
அய்யா துணை
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்:
========
பேயொடு பசாசு கூளி பொறாமையுங் கலியும் நீசம்
மாயொடு கபடு கள்ளம் மனக்கறுப் புகங்கள் தீர்ப்பு
பொய்யொடு மிரட்டு வஞ்சம் பிழைபொல்லாப் பென்ற தெல்லாம்
வாயொடு வாயால் கெட்டு மறுபிறப் பில்லாப் போனார்
.
விளக்கம்:
=========
பேய்களும், பிசாசுகளும், கூளிகளும், பெரிய பொய்யையுடைய கலியும், நீசமும், மாசுமும், கபடும், கள்ளங்களும், மனத்தின்கண் உருவாகிய தீய எண்ணங்களோடு கூடிய இக்கலியுகத் தீர்ப்புகளும் பொய்யும், புரட்டும் வஞ்சகத்தோடு கூடிய வயிற்றுப் பிழைப்புகள் போன்ற பொல்லாப்புகளும் இவை போன்றவையும் தம்மால் தாம் கெட்டு மாற்றுப் பிறப்பு எய்தாது அழிந்துவிடும்.
.
.
அகிலம்:
========
நாரணர் வைகுண்ட மாகி நாட்டினில் வந்த அன்றே
காரண மெல்லா மாச்சு கலியுக மழிந்து போச்சு
பூரண வேத நூலும் புராணமுன் னாக மங்கள்
சாரமுங் கெட்டுப் போச்சு சதாசிவம் வைகுண்ட மாச்சே
.
விளக்கம்:
=========
நாரணர் வைகுண்டராகி நாட்டினில் வந்த நாள், எல்லாத் தீயவற்றின் அழிவுக்கும் காரணமாகி விட்டது. அவர் முன்னிலையில் கலியுகத் தன்மை அழிந்து போய் விட்டது. பூரணத் தன்மை வாய்க்கப் பெற்ற வேத நூல்களும் புராணங்களும் முன் ஆகமங்களும் அவர் முன்னிலையில் சாரம் கெட்டு நின்றன. சதாசிவத்தன்மையும் வைகுண்டரில் அடக்கமாகி விட்டது.
.
.
அகிலம்:
========
அழிவதை யழித்துப் போட்டு அவரொரு சொல்லுக் குள்ளாய்
சுழிவரை யெழுத்தை யூனி தெய்வமா தவரு மாகி
வழிதனில் வன்னி யாகி வகுத்திடும் மகவோ ராகி
அழிவில்லாப் பதிதா ளாள்வார் ஆகமத் துரைதா னென்றார்
.
விளக்கம்:
=========
அழிந்து ஒழிவன எல்லாவற்றையும் அழித்துத் தள்ளி விட்டுச் சுழிமுனைவரையுள்ள எழுத்துக்கள் எல்லாம் ஊன்றித் தாண்டி உயர் நிலையில் உள்ள நாராயணன் ஆகி குண்டலினி சக்தியை அடையும் வழியாகிய சுழி முனையாகி இவ்வுலக நீதியினை வகுத்திடும் இறை மகனாகி அழிவு இல்லாத தருமபதியை ஒரு சொல்லுக்குள்ளாய் ஆள்வதற்கு முன் ஆகமத்தின் உரையின்படி வந்துள்ள வைகுண்டர் தாங்கள் தாம் என்று பிரம்மன் எடுத்துரைத்தார்.
.
.
அகிலம்:
========
ஆனதா லாகா தென்ற அவ்வகைக் கிதுநாள் சாக
ஏனமு மிதுதா னென்று இயம்பிட வேதன் தானும்
மானமாய்க் கேட்டு வைந்தர் வானவர் சாட்சி யென்று
தானவர் கணக்கி லூனி சத்தியாய்ப் பதித்தா ரன்றே
.
விளக்கம்:
=========
வைகுண்டம் இந்தப் பூவுலகில் வந்ததால் அழிக்க முடியாது என்றிருந்த இவ்வகைப் பேய்கள் எல்லாம் அழிய வேண்டிய நாள் ஆகும். ஏற்கெனவே குறிப்பிட்ட அந்தப் புனித நாள் இந்நாள் என்று வேதனும் இயம்பி விட்டான். இவற்றை மிகவும் கவனமாகக் கேட்ட வைகுண்டர் தேவர்களைச் சாட்சியாக வைத்துக் கொண்டு பேய்களின் விதிக்கணக்கில் பேய்களின் முடிவு நாளைத் தாமே தெளிவாக எழுதினார்.
.
.
அகிலம்:
========
கணக்கிலே யெழுதிக் கொண்டு கருத்தினி லடக்கி வைத்து
இணக்கியே யவரை யெல்லாம் இலக்குலக் கதிலே கொல்வோம்
பிணக்கியே கொல்லே னானும் பிசகில்லா வழியே செய்வோம்
குணக்கில்லாச் செய்வோம் பாரும் கோகிரித் தேவ ரெல்லாம்
.
விளக்கம்:
=========
இவ்வாறு கணக்கினில் எழுதிக் கொண்டு தமது நினைவிலும் அடக்கி வைத்துக் கொண்ட வைகுண்டர், இப்பேய்களைச் சமாதான வழிகளில் அழைத்துச் சரியான சமயத்தில் கொல்லுவோம். இவை அவ்வழியில் இசையாதிருந்தால் இவற்றை எதிர்த்துச் சண்டையிட்டுக் கொல்லுவேன். சிறிதும் தவறில்லாமல் இந்த வழிகளில் இவற்றை அழியச் செய்வோம். இச்செயலை எந்தவிதக் கால தாமதமுமின்றிச் செய்து முடிப்போம். இதைக் கயிலேயங்கிரி தேவர்கள் எல்லாரும் பார்த்து மகிழ்வீராக என்றார்.
.
.
அகிலம்:
========
உகசிவா வானோர் வேதன் ஒருவரும் போக வேண்டாம்
வகையுடன் நான்தான் செய்யும் வழிதனைப் பார்த்துக் கொள்ளும்
இகபரன் முதலா யிங்கே இருமெனச் சொல்லி வைத்துப்
பகைசெய்த கழிவை யெல்லாம் எரிக்கவே பரனங்குற்றார்
.
விளக்கம்:
=========
யுகத்தைப் படைத்த சிவம் தேவர்கள், பிரம்மன் ஆகிய யாருமே போக வேண்டாம். இப்பேய்களை எரிக்க நான் செய்யும் வழி வகைகளைத் தாங்கள் பார்க்க வேண்டும் என்று கூறி இகபர லோகத்தில் உள்ளோர் எல்லாரும் அங்கே இருக்க வேண்டும் என்றும் உரைத்தார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
11 likes
1 comment • 7 shares