SHEIK 🌺KSN🌺
1K views • 27 days ago
முஹம்மது நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவரின் கையில் ஒரு செடி இருக்கும் போது மறுமை நாள் ஆரம்பமானாலும், அதை அவர் நடட்டும்."
உலகம் முடிய போகுது என்றாலும் கூட நன்மையை செய்யுங்கள். நாளை என்ன நடக்கும் என்று தெரியாது, ஆனால் இன்று நீங்கள் செய்யும் நன்மை வீண் போகாது.
ஒரு விதை நடுவது. ஒரு மரம் வளர்பது. ஒரு புன்னகை. ஒரு துஆ. இதெல்லாம் அல்லாஹ்விடம் பதிவாகும்.
"அணு அளவு நன்மை செய்தாலும் அதை அவன் காண்பான்" —
அல்குர்ஆன் அஸ்-ஸல்ஸலா 99:7
இஸ்லாம் சுற்றுச்சூழலை நேசிக்கிறது. நடும் ஒவ்வொரு மரத்திலிருந்து மனிதனோ, பறவையோ, விலங்கோ சாப்பிட்டால் அது நமக்கு ஸதகா (தர்மம்).
நாம் பலன் பார்காமல் போகலாம். ஆனால் நம் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் பலன் பெறுவார்கள். அதுதான் உண்மையான தொலைநோக்கு.
இந்த ஹதீஸ் சோம்பலையும், "எல்லாம் முடிஞ்சு போச்சு" என்ற மனநிலையையும் உடைக்கிறது.
அல்லாஹ் நம்மை நன்மையின் விதைகளை விதைப்பவர்களாக ஆக்கட்டும். நம் கைகளால் உலகத்துக்கு பயன் தரட்டும். ஆமீன் 🤲 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
15 shares