எவ்வளவு வெளிப்படையான ஊழல் இது ..🤦♂️🤦♂️
இந்த நேரத்தில் கூட இந்தியன் ரயில்வே PM CARE
க்கு 100 கோடிகள் இலவசமாக கொடுத்தது ஆனால் அதே ரயில்வே எளிய மக்களை இலவசமாக அழைத்து செல்ல முடியாது இன்றார்கள்...
இதுபோல பல அரசு துறைகள் பணம் கொடுத்தது
இன்று இதன் கணக்குகளை மறைக்கிறார்கள் ..😡 #👨மோடி அரசாங்கம்
இல்லை கமலஹாசன் பேசியது மிகச்சிறிய வார்த்தை தான் ஆனால் அதன் பொருள் நிர்மலா சீதாராமன் மட்டுமல்ல சமஸ்கிருதத்தை உயர்த்தி பிடிக்கும் ஆரிய பார்ப்பண ஆர் எஸ் எஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து சங்கிகளுக்கும் சரியான செருப்படி
பிச்சை என்ற வார்த்தையை உருவாக்கியது சமஸ்கிருதம். பகவதி பிட்ஷாந் தேகி இந்த வார்த்தை எந்த இனத்திற்கு சொந்தமானது? இந்து மதத்தின் ஆச்சாரியார் ஆதிசங்கரர் தினமும் பயன்படுத்திய வார்த்தை. ஆரிய பார்ப்பணர்களின் குல தொழிலின் வேத வார்த்தை. நிர்மலா சீதாராமன் அவர்களின் முன்னோர்கள் தினமும் வீதி வீதியாக சென்று உஞ்ச விருத்தி எடுத்து வயிறு வளர்த்த சமஸ்கிருத வார்த்தை பகவதி பிட்ஷாந் தேகி. நிர்மலா சீதாராமனின் குலத் தொழிலின் வேத வார்த்தை.உன் வேதங்கள் சொல்லும் வர்ணங்களில் நீ உயர்ந்தவனாக இருக்கலாம் ஆனால் உன் வேதத்தில் உனக்கு விதிக்கப்பட்டது இரந்துண்டு வாழ்வது உனக்கு கொடுக்கப்பட்ட வார்த்தை பகவதி பிட்சாந் தேகி. உன் வேதத்தில் நீ உயர்ந்தவனாக இருக்கலாம், நெற்றியில் இருந்து பிறந்தவனாக இருக்கலாம்,நால் வர்ணத்தில் நீ முதல்வனாக இருக்கலாம், நிறத்தில் நீ வெள்ளையாக இருக்கலாம், வேதம் ஓதுபவனாக இருக்கலாம், கருவறையில் பூஜை செய்பவனாக இருக்கலாம் ஆனால் உன் வேதத்தில் உன் கை தாழ்ந்து ஏந்தும் இடத்தில் தாழ்ந்து தான் இருக்கிறது என் கை இடும் இடத்தில் உயர்ந்து இருக்கிறது.
பகவதி பிட்சாந் தேகி இது தான் உன் வேதத்தில் உனக்கு விதிக்கப்பட்டது,
உன் அடையாளமும் அது தான். பகவதி பிட்சாந் தேகி. #👨மோடி அரசாங்கம்
எதிர்த்து பேசுகிறவர்கள் முட்டாள்கள். மனநோயாளிகள். நடிகனுக்கு என்ன தெரியும். இதையெல்லாம் சொல்வது அண்ணாமலை.
இவர்தான் மனநோயாளி என்று எனக்குத் தோன்றுகிறது.
S Ve சேகர் அதிமுகவில் இருந்தாலும் அந்தத் தேர்தலில் ஜெயித்தார்.
இவரால் அரவக்குறிச்சியில் பாஜக - அதிமுக கூட்டணிக்குப் பின்னும் ஜெயிக்க முடியவில்லை.
சேகர் பல பேட்டிகளிலும், கூட்டங்களிலும் தனது சேனலிலும் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவர்.
அவருக்கு உரிய மரியாதை தராமல், அவரை உபயோகித்துக் கொள்ளாமல் கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைத்தவர் அண்ணாமலை.
இவரை விமர்சிக்கும்அரசியல் சார்பு நடிகர்களை மனநலம் குன்றியவர் என்பார். அதையே பாஜகவை விமர்சித்தாலும் சொல்வார். அறிவில்லாதவர்கள் என்பார். "நடிகனுக்கு என்ன தெரியும்? நாடகத்துக்கு டிக்கெட் விக்கத்தான் தெரியும்" என்பார்.
என்னமோ நடிகன் என்பது கீழ்த்தரமான தொழில் போல. இந்துத்வாவில் செய்யும் தொழிலே தெய்வம் என்பது அவருக்கு செலக்ட்டிவ் அம்னீஷியாவில் மறந்து போகும். 24/7 தேசத்துக்கு உழைக்கும் விஷ்வகுருவை, நேர்காணலில் "நீங்க மாம்பழத்தை அப்டியே சாப்பிடுவீங்களா? கட் பண்ணி சாப்பிடுவீங்களா?" என்று அறிவார்ந்த கேள்வி கேட்கும் அக்ஷய் குமார் என்று எல்லா நடிகர்களையும் நினைக்கிறாரா?
கட்சியில் சேர்ந்த அடுத்தநாளே நடிகர் - நடிகைகளுக்கு (கட்சிக்கு நெடுங்காலம் உழைத்தவர்களை மறந்து) இவரது கட்சி சட்டமன்ற, பாராளுமன்ற சீட் கொடுக்கும். அதை எல்லாம் மறந்து விடுவார்.
பிரதமர் நடிகர், நடிகைகளுடன் மீட்டிங் போடுவது, பொங்கல் கொண்டாடுவது என்று நாட்டுக்காக உழைக்கும் போது வாயில் பொங்கல் அடக்கி வைத்தது போல கப்சிப் என்று இருப்பார்.
இவர் எடப்பாடியை ஒரு நாள் கேவலமாக ஏசுவார். பணம் கொடுத்து முதல்வர் பதவி வாங்கியவர் என்பார். அதிமுக நான்காவது இடம்தான் (2026 சட்டமன்றத் தேர்தலில்) என்பார். அதிமுகவை விட பாஜக அதிக சதவீதம் ஓட்டு பெறும் "எழுதி வச்சிக்கங்க" என்று சவடால் விடுவார்.
அதிமுக ஊழல் பட்டியல் வெளியிடுவேன் என்பார். ஆனால் கடைசிவரை வெளியிடமாட்டார்.
ஜெயலலிதா குற்றவாளி என்று பேட்டி தருவார். அதனால் கூட்டணியை உடைத்து விடுவார். "நான் சொன்னது தவறில்லை" என்பார். பின்னர் அதே ஜெயலலிதா படத்தைப் போட்டு இவரது கட்சி ஓட்டு கேட்கும். அதே ஜெயலலிதாவைப் பாராட்டி இவர் மெச்சிப் பாராட்டும் பிரதமர் மோடி ஜி பேசுவார். அங்கே மேடையில் அவர் பேசுவதை புளகாங்கிதத்துடன் கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பார். ஒரு ஊழல்வாதியை பாராட்டுவதை ஏற்கவில்லை என்று "நேர்மையாக" கட்சியை விட்டு வெளியே வரமாட்டார். அதே மீட்டிங்கில் "பிரதமர் சொன்னது தவறு. ஜெயலலிதா ஊழல் பேர்வழி. தண்டிக்கப்பட்ட குற்றவாளி" என்று சொல்ல துணிவில்லாமல் இருப்பார்.
வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவுமில்லாமல் மீண்டும் விரலை ஆட்டி ஆட்டி அண்ணன் எடப்பாடி என்பார்.
இப்போது அதிமுக கூட்டணியில் அசெம்பிளி சீட் கொடுத்தால் போட்டியிடுவார். அதிமுகவுடைய ஓட்டு வேண்டுவார். பாஜக கட்சி கல்லாவில் இருந்து அளவற்ற பணம் செலவழிக்கும். எங்கிருந்து எப்படி வந்தது என்று கவலைப்படாத நேர்மையின் சிகரம்.
ஒரு முறை தகரப்பெட்டியுடன் கல்லூரி வாசலில் நின்ற ஏழை விவசாயி மகன் என்பார். தமிழக அரசின் ரிசர்வேஷனில் படித்து முன்னுக்கு வருவார். பின்னர் தன் தந்தைக்கு பல ஏக்கர் விவசாய நிலம் இருந்தது என்பார்.
பல கோடிக்கு சொத்து வாங்குவார். அதுவும் எந்த பெரிய வேலையும் செய்யாமல். கேட்டால் வங்கிக்கடன் என்பார். Income Proof இல்லாமல், influence இல்லாமல் எந்த வங்கி இவருக்கு பல கோடி கடன் எந்த ஆதாரத்தில், நம்பிக்கையில் கொடுத்தது என்பது ஶ்ரீராமருக்கே வெளிச்சம்.
வெட்கம், மானம், சூடு, சொரணை, நேர்மை, நாகரீகம் இல்லாத அண்ணாமலையின் சவடால், வெத்து வேட்டுகளில் மதிமயங்கி தேவதூதன், இளைஞர்களின் நம்பிக்கை, தமிழ்நாட்டை சீரமைக்க வந்த மாமணி என்ற அளவுக்கு படித்த அப்பாவி அறிவாளிகள் கொண்டாடுவார்கள்.
அதே சமயத்தில் நாடாளுமன்றத்தில் நாகரீகமாக தன் கருத்துகளை எடுத்து வைத்த, எந்த இடத்திலும் பொதுவில் நாகரீகம் குறைவாக பேசாத கமலை "உளறல்" என்பார்கள். பதிலுரை என்ற பெயரில் எதிர்க்கட்சிகள், உயிருடன் இருப்பவர், இறந்தவர் என அனைவரையும் இகழ்ந்து பேசும் மோடியின் பேச்சை கர்ஜனை என்பார்கள்.
அந்தப் பேச்சில் ஒரு மண்ணும் இருக்காது.
கமல்ஹாசன் என்ன பட்ஜெட்டா தாக்கல் செய்தார்? அவரது முதல் பேச்சில் அரசியமைப்பை மாற்றும் பேச்சையா பேசுவார்? இரண்டு மணி நேரம் பேசும் மோடி ஜியின் பேச்சில் ஒரு மண்ணாங்கட்டியும் இருக்காது. எக்காளம், கேனத்தனமான ஜோக்குகள் இவைகளைத் தவிர ஒன்றும் இருக்காது.
அடர்த்தியான பத்து நிமிடப் பேச்சு பேச திறமையும், அறிவும் வேண்டும்.
அப்படிப்பட்ட பேச்சை கேலி செய்யாமல் இருக்கும் பண்பு வேண்டும். பாஜக ஆதரவாளர்களுக்கும் பண்புக்கும் வெகுதூரம்.
Hypocrisy? அது டன் கணக்கில். #👨மோடி அரசாங்கம்
சரியான பதிலடியாக.. ஆம்.. கார்ல் மார்க்ஸ்க்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம் என பிதற்றி வரும் பூஜ்ய அரசியல் எடுபிடிகளுக்கு தக்க சம்மட்டி பதிலாக - இந்த கட்டுரை. பிரசுரித்தது கம்யூ. பத்திரிக்கை இல்லை என்பது கவனிக்கதக்கது.
இந்த கட்டுரையின் தமிழ் வடிவம்.
செவ்வாய்க்கிழமை:8/02/2026
170 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்ஸ் தமிழ்நாட்டில் பிரிட்டிஷ் சுரண்டல் பற்றி எழுதியபோது
டி முருகானந்தம் @Chennal
வெள்ளிக்கிழமை, முதல்வர் எம்.கே. ஸ்டாலின் ஜெர்மன் தத்துவஞானி மற்றும் பொருளாதார நிபுணர் கார்ல் மார்க்ஸின் புதிய சிலையைத் திறந்து வைத்ததை எதிர்க்கட்சிகளின் ஒரு பகுதியினர் வரவேற்கவில்லை. பாஜக மூத்த தலைவரும் முன்னாள் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், மார்க்ஸுக்கு தமிழ்நாட்டுடன் எந்த தொடர்பும் இல்லாதபோதும், அவர் அந்த மாநிலத்திற்குச் செல்லாதபோதும் சிலையை அமைப்பதற்கான நியாயத்தை கேள்வி எழுப்பினார்.
உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தத்துவஞானி, இன்றைய தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், 19 ஆம் நூற்றாண்டில், கிட்டத்தட்ட 170 ஆண்டுகளுக்கு முன்பு, பிரிட்டிஷ் ஆட்சியின் போது தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார கலாச்சார வரலாறு மற்றும் தொடர்புடைய முன்னேற்றங்களில் அவர் காட்டிய தீவிர ஆர்வத்தை அவரது எழுத்துக்கள் காட்டுகின்றன.
நியூயார்க் ட்ரிப்யூனுக்கு (1857) எழுதும் மார்க்ஸ், 1856-57ல் பிரிட்டிஷ் பொது மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மெட்ராஸ் சித்திரவதை ஆணையத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி கருணையால் அல்ல, முறையான கொடுமையால் குறிக்கப்பட்டது என்று வாதிட்டார்.
குறிப்பாக, 1857 ஆம் ஆண்டு தனது கட்டுரையில், கொல்லிடம் நதி பாலப் பணிகள் தொடர்பான ஒரு வழக்கை மார்க்ஸ் குறிப்பிட்டார். கமிஷனின் அறிக்கையிலிருந்து மேற்கோள் காட்டி, ஒரு பிராமண கிராமவாசியின் புகாரை அவர் நினைவு கூர்ந்தார், அவர் தனது கிராமம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் சேர்ந்து, தாசில்தாரால் (துணை) கட்டாயப்படுத்தப்பட்டார். பாலம் கட்டுமானத்திற்காக பலகைகள், கரி, விறகு மற்றும் பிற பொருட்களை இலவசமாக வழங்க மாவட்ட வருவாய் அதிகாரிக்கு உத்தரவிட்டார். இந்த உழைப்பு மற்றும் பொருட்கள் எந்த ஊதியமும் இல்லாமல் கோரப்பட்டன.
கிராம மக்கள் மறுத்ததால், தாசில்தார், 12 பேருடன், புகார்தாரரைப் பிடித்து கொடூரமாகத் தாக்கினார். துணை ஆட்சியர் டபிள்யூ. கேடலுக்கு எழுத்துப்பூர்வ புகார் அளிக்கப்பட்ட போதிலும், அவர் அதைப் பற்றி விசாரிக்கவோ அல்லது நிவாரணம் வழங்கவோ இல்லை, மாறாக ஏழைகளின் செலவில் பாலத்தை மலிவாகக் கட்டி முடிக்கவும், அரசாங்கத்தின் ஆதரவைப் பெறவும் கூறப்பட்டு, அதைக் கிழித்து எறிந்தார்.
சௌந்தரராஜன் வெளிப்படுத்திய ஆச்சரியத்தைக் குறிப்பிட்டு, விழுப்புரம் எம்.பி.யும் வி.சி.க பொதுச் செயலாளருமான டி.ரவிக்குமார், "மார்க்ஸுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று கேட்பது புரிதல் இல்லாமையிலிருந்து எழுகிறது" என்றார்.
இன்னும் துல்லியமாக, இன்றைய அரசியல் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள
தமிழ்நாட்டில், 170 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்ஸ் எழுதியது இன்னும் கணிசமான பொருத்தத்தையும் மதிப்பையும் கொண்டுள்ளது.
மார்க்ஸின் பத்திரிகை எழுத்துக்களில் மட்டுமல்ல, சோவியத் புரட்சிக்குப் பிறகு மாஸ்கோவிலிருந்து வெளியிடப்பட்ட அவரது வரலாற்றுக் குறிப்புகளிலும் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
இந்திய வரலாற்றைப் பற்றி மார்க்ஸ் 1,000 க்கும் மேற்பட்ட குறிப்புகளைச் எழுதிய உள்ளதாக அவர் கூறினார். அவற்றில், 38 இடங்களில் அவர் சென்னை மாகாணத்தைக் குறிப்பிடுகிறார். சேர, சோழ, பாண்டிய ராஜ்ஜியங்களையும் அவர் குறிப்பிடுகிறார். தக்காணப் பகுதியில் பேசப்படும் மொழிகள், ராமாயணம் மற்றும் இந்தப் பகுதிகளை ஆண்ட பல்வேறு சக்திகள் பற்றி மார்க்ஸ் எழுதினார்.
சர் தாமஸ் மன்றோ அறிமுகப்படுத்திய ரயத்துவாரி வருவாய் வசூல் முறை எவ்வாறு செயல்பட்டது என்பதையும் அவர் பகுப்பாய்வு செய்து, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் மக்கள் எவ்வாறு ஒடுக்குமுறைக்கு ஆளானார்கள் என்பதை ஆவணப்படுத்தினார் என்று எம்.பி. மேலும் கூறினார்.
பகிர்வு: ந.சேகரன் #👨மோடி அரசாங்கம்
"அந்த உளவுத்துறை எங்கே இருக்கிறது?"
"பிரதமர் தாக்கப்படுவார் என தனக்கு உளவுத்துறை தகவல் கிடைத்ததாகவும், அதனால் தான் மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு மோடியை பதிலளிக்க விடாமல் தடுத்ததாகவும் மக்களவை சபாநாயகர் கூறினார்.
இவ்வளவு சிறப்பான உங்கள் உளவுத்துறை, புல்வாமா போன்ற பயங்கரவாத தாக்குதல்களின் போது எங்கே இருந்தது? நாடு முழுவதும் மக்கள் அடித்துக் கொல்லப்படுகிறார்கள், பழங்குடியினர், தலித்துகள் தாக்கப்படுகிறார்கள். அந்த உளவுத்துறை எங்கே இருக்கிறது?"
- காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி #👨மோடி அரசாங்கம்
பிரதமருக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத நீங்கள் சாமான்ய மனிதர்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பீர்கள்????
வரலாற்றில் இப்படி ஒரு திருட்டு முடிச்சவிக்கி சபாநாயகரை பார்த்ததில்லை #👨மோடி அரசாங்கம்
“கர்கரேயை கொன்றது யார்?"
மஹாராஷ்டிரா முன்னாள் ஐ.ஜி. எஸ்.எம். முஷ்ரிஃப் எழுதியுள்ள "கர்கரேயை கொன்றது யார்?" எனும் நூல் இந்தியாவின் பயங்கரவாதத்தின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் முதன்மையானது. 26/11 மும்பை தாக்குதலின் போது தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்ட பின்னணியை ஒரு முன்னாள் உயர்மட்ட அதிகாரியின் பார்வையில் இந்த நூல் ஆழமாக ஆய்வு செய்கிறது. கர்கரே தனது ஆய்வின் மூலம் பாசிச பார்ப்பனிய அமைப்புகளின் முகத்திரையை கிழித்ததால், அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டாரோ என்ற வலுவான சந்தேகத்தை ஆசிரியர் எழுப்புகிறார்.
இந்தியாவின் உளவுத்துறையான ஐ.பி. (IB) எவ்வாறு ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு, பார்ப்பனிய அமைப்புகளைப் பாதுகாத்து இஸ்லாமிய இளைஞர்கள் மீது வீண்பழி சுமத்துகிறது என்பதைத் தரவுகளுடன் விளக்குகிறது இந்த நூல். 2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கர்கரே கண்டுபிடித்த உண்மைகள், இந்துத்துவ தீவிரவாத அமைப்பான 'அபிநவ் பாரத்'தின் சதியை வெளிப்படுத்தியதைக் குறிப்பிடும் ஆசிரியர், இது எவ்வாறு முந்தைய குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடையது என்பதையும் ஆராய்கிறார். குறிப்பாக, ஐ.பி. பல முக்கிய தகவல்களை மறைத்து, உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டு அப்பாவிகளைச் சிக்கவைப்பதாக ஆசிரியர் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டுகிறார்.
ஹேமந்த் கர்கரேயை ஒரு நாயகனாக வர்ணிக்கும் ஆசிரியர், இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க அவர் துணிச்சலாகப் போராடியதையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார். மும்பை தாக்குதலின் போது சி.எஸ்.டி மற்றும் காமா மருத்துவமனை பகுதிகளில் நடந்த நிகழ்வுகளில் உள்ள மர்மங்கள், சி.சி.டி.வி பதிவுகள் மறைக்கப்பட்டது மற்றும் கர்கரேக்கு வழங்கப்பட்ட தவறான தகவல்கள் போன்ற முரண்பாடுகளை இந்த நூல் விரிவாக அலசுவாதோடு ஒட்டுமொத்தமாக, பார்ப்பனிய ஆதிக்கத்திலிருந்தும், திட்டமிடப்பட்ட மதக் கலவரங்களிலிருந்தும் இந்திய நாட்டைப் பாதுகாக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இந்நூல் முக்கிய பங்காற்றும் என்பதில் ஐயமில்லை.
“கர்கரேயை கொன்றது யார்?"
இந்தியாவில் பயங்கரவாதத்தின் உண்மை முகம்
ஆசிரியர்: S.M. முஷ்ரிஃப் ( முன்னாள் ஐ.ஜி)
விலை: ₹380
நூலை பெற... https://wa.me/+919962918724
நரேந்திர மோடி கொடுத்த உதவி தொகையை கர்கரேயின் மனைவி வாங்க மறுத்ததிலிருந்து கொலையாளிகள் யார் என்பதையும் அவர் அறிந்தே வைத்திருந்தார் என்பது தெரிய வருகிறது. #👨மோடி அரசாங்கம்
ஜனநாயகப் படுகொலைக்காக சூழ்ச்சி வலை பின்னும் மோடி அரசு!
நாடாளுமன்ற முடக்கத்தின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மைகள்!
இன்றைய தீக்கதிரில் படப்பிடிப்பு .
புதுதில்லி இந்திய ஜனநாயகத்தின் உயரிய அடையாளமாக விளங்கும் நாடாளுமன்றம், தற்போது ஒரு நெருக்கடியான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளது. மக்கள் நலன், தேசப் பாதுகாப்பு மற்றும் பொருளா தாரக் கொள்கைகள் குறித்து விவா திக்க வேண்டிய அவை, இன்று ஆளுங்கட்சியின் அடக்குமுறை நட வடிக்கைகளால் முடங்கிக் கிடக் கிறது. குறிப்பாக, எதிர்க்கட்சித் தலை வர் ராகுல் காந்தி மற்றும் இடது சாரி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி களுக்குப் பதில் சொல்லத் துணி வில்லாத மோடி அரசு, ‘சஸ்பென்ட்’ மற்றும் ‘பாதுகாப்பு அச்சுறுத்தல்’ என்ற புதிய நாடகங்களை அரங்கேற்றி ஜன நாயகக் குரல்வளையை நசுக்கி வரு கிறது.
ஜெனரல் நரவனே புத்தகமும், மௌனம் காக்கும் தேசபக்தியும்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியதிலிருந்தே, முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே எழுதிய (இன்னும் முழுமையாக வெளியிடப்படாத) புத்தகத்தின் விவரங்கள் பெரும் விவா தப் பொருளாகியுள்ளன. அந்தப் புத்தகத்தில், 2020-ஆம் ஆண்டு கை லாஷ் மலைப் பகுதியில் சீன ராணு வம் இந்திய எல்லைக்குள் ஊடுரு வியபோது நிலவிய அசாதாரண சூழல் விவரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணியில் இருந்த ராணுவத்தினர், சீன டாங்குகள் முன்னேறி வருவதைக் கண்டு, அதைத் தடுக்கத் தாக்குதல் நடத்த அனுமதி கோரியபோது, தில்லியில் இருந்த அதி கார மையங்கள் சுமார் இரண்டரை மணி நேரம் மௌனம் காத்தன என்பதுதான் ராகுல் காந்தி முன்வைத்த பிரதானக் குற்றச்சாட்டு. “நாட்டின் எல்லை அபா யத்தில் இருந்தபோது, பிரதமர் மோடியும் பாதுகாப்பு அமைச்சரும் ஏன் முடிவெடுக்கத் தயங்கினார்கள்?” என்ற கேள்வியை ராகுல் காந்தி எழுப்பி யவுடன் ஆளுங்கட்சி தரப்பில் கடும் பதற்றம் உருவானது. தேசபக்தி பற்றிப் பேசும் பாஜக அரசு, ராணுவத் தளபதி யின் இத்தகைய விமர்சனத்திற்குப் பதில் சொல்லாமல், அந்தப் புத்த கத்தைப் பற்றியே பேசக்கூடாது என்று முட்டுக்கட்டை போடுவது அவர்களின் பலவீனத்தையே வெளிச்சமிட்டுக் காட்டியது.
“பாதுகாப்பு அச்சுறுத்தல்” - சபாநாயகர் பின்னால் ஒளிந்துகொள்ளும் பிரதமர்?
நாடாளுமன்ற வரலாற்றில் இது வரை கண்டிராத ஒரு புதிய திருப்ப மாக, பிப்ரவரி 5 வியாழனன்று, குடியர சுத் தலைவர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங் களுக்கு பதிலுரை வழங்க பிரதமர் மோடி மக்களவைக்கு வராததற்குச் சபாநாயகர் ஓம் பிர்லா ஒரு விசித்திர மான விளக்கத்தை அளித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி.,க்கள் பிரதமரின் இருக்கை அருகே சென்று “முன்னெப் போதும் இல்லாத ஒரு அசம்பாவித த்தை” (unprecedented incident) நிகழ்த்தத் திட்டமிட்டிருப்பதாகத் தனக்கு நம்பகமான தகவல் கிடைத்த தால், பிரதமரைச் சபைக்கு வரவேண் டாம் என்று தாமே கேட்டுக்கொண்ட தாகச் சபாநாயகர் கூறியுள்ளார். இந்தச் செயல் நாட்டின் ஜனநாயக மரபுகளைச் சிதைத்துவிடும் என்றும் அவர் வாதிட்டார்.
இதனை “அப்பட்டமான பொய்” எனச் சாடியுள்ள காங்கிரஸ் மூத்த தலை வர் பிரியங்கா காந்தி, “பிரதமர் இப் போது சபாநாயகர் பின்னால் ஒளிந்து கொள்கிறார்” என்று குற்றம்சாட்டியுள் ளார். நேற்று அவைக்கு வரத் துணி வில்லாத காரணத்தினால்தான், இன்று சபாநாயகரை வைத்து இப்படிப் பேசச் சொல்கிறார்கள் என்றும் அவர் விமர்சித்தார். பெண் எம்.பி.,க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து போராடுவதைக் கண்டு பிரதமர் அஞ்சு வதாகவும், தனது பயத்தை மறைக்கப் பெண் உறுப்பினர்கள் மீது பழி போடுவ தாகவும் காங்கிரஸ் தரப்பு கடுமை யாகச் சாடியுள்ளது.
அச்சுறுத்தும் எப்ஸ்டீன் கோப்புகள்
மற்றொரு பக்கம், சர்வதேச அள வில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய ‘ஜெப்ரி எப்ஸ்டீன்’ கோப்புகளில் இந்திய அமைச்சர்களின் பெயர்கள் தொடர்புபடுத்தப்படுவது குறித்து எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் கேள்விகளைத் தொடுத்துள்ளன. இளம் சிறுமிகளைப் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்திய குற்றவாளி எப்ஸ்டீன் உடன் இந்திய அதிகார வர்க்கத்தில் உள்ள சிலருக்குத் தொடர்பு இருப்ப தாகக் கூறப்படும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்துப் பேச முற்பட்ட ராகுல் காந்தியைப் பேசவிடாமல் தடுத்தது, ஏதோ ஒரு பெரிய உண்மையை அரசு மறைக்கப் பார்க்கிறதோ என்ற ஐயத்தை வலுப்படுத்துகிறது.
அதானியைப் பாதுகாக்க அடகு வைக்கப்படும் விவசாயிகள்
அமெரிக்காவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சி கள் முன்வைக்கும் பொருளாதாரக் குற்றச்சாட்டுகள் மிக வீரியமானவை. கவுதம் அதானிக்கு அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தீர்ப்பத ற்காகவும், அமெரிக்காவின் அழுத்தங் களுக்குப் பணிந்தும், இந்திய விவ சாயிகளின் நலனைப் பிரதமர் மோடி அடகு வைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அமெரிக்க விவ சாயப் பொருட்களுக்கு 0% இறக்குமதி வரி விதிப்பதன் மூலம், மலிவான வெளிநாட்டுப் பொருட்கள் இந்தியச் சந்தையை ஆக்கிரமிக்கும். இதனால் இந்தியப் பருப்பு வகைகள், தானி யங்கள் மற்றும் பால் பொருட்களின் விலை வீழ்ச்சியடைந்து விவசாயிகள் நடுத்தெருவிற்கு வரும் சூழல் உரு வாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முழு விவரங்களை அரசு வெளி யிடாமல் இருப்பது, கார்ப்பரேட் நிறு வனங்களின் நலனுக்காகவே அரசு செயல்படுவதைக் காட்டுகிறது.
மதுரை எம்.பி சு. வெங்கடேசன் உள்ளிட்ட 8 பேர் சஸ்பென்ட்
இந்த பிரச்சனைகளில் எதிர்க் கட்சித் தலைவரை பேச விடாமல் தடுக்கும் மோடி அரசுக்கு அவையில் கண்டனம் தெரிவித்தும் நியாயமான கேள்விகளை எழுப்பியும் போராடிய மதுரை எம்.பி., சு. வெங்கடேசன் உட்பட 8 எதிர்க்கட்சி உறுப்பினர்களை இந்தத் தொடர் முழுவதும் இடை நீக்கம் செய்திருப்பது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை. இது குறித்து சு. வெங்கடேசன் எம்.பி., கூறு கையில், “எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பேசவிடாமல் தடுத்துவிட்டு, நாங்கள் போராடியதற்காக எங்களை வெளியேற்றியுள்ளனர்” என்று சாடி யுள்ளார். அவையில் மிகத் தீவிரமாகச் செயல்படும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து வெளியேற்றுவதன் மூலம், விவாதமே இல்லாத ஒரு ஒருதலைப்பட்சமான அவையை நடத்த மோடி அரசு துடிக்கிறது.
சபாநாயகரின் ஒருதலைப்பட்சப் போக்கு
சபாநாயகர் பதவி என்பது நடுநிலை யானது. ஆனால், தற்போதைய சூழலில் சபாநாயகர் ஆளுங்கட்சி யின் ஊதுகுழலாகச் செயல்படுவ தாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டு கின்றன. எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது அவைத் தலைவர் இருக்கையில் இருக்க வேண்டும் என்பது மரபு. ஆனால், ராகுல் காந்தி பேசத் தொடங்கியதும் தற்காலிக சபாநாயகரை அமர வைத்தது, திட்ட மிட்ட சூழ்ச்சி என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, தேசப் பாதுகாப்பு போன்ற முக்கியமான விவகாரங் களைக் கூட ‘விதிமுறைகள்’ என்ற போர்வையில் பேசவிடாமல் தடுப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி யுள்ளது.
விழித்துக்கொள்ளுமா மக்கள் மன்றம்?
மோடி அரசு பின்பற்றும் இந்தச் சூழ்ச்சி வலை, நீண்ட காலத்திற்கு நீடிக்க முடியாது. நாடாளுமன்றத்திற் குள் குரல்களை நசுக்கலாம், ஆனால் மக்கள் மன்றத்தில் எழும் கேள்விகளை அவர்களால் எதிர்கொள்ள முடியாது. மக்களவைக்கு வராமல் ஒளிந்து கொண்ட பிரதமர், அதே நாள் மாலை யில் மாநிலங்களவைக்குச் சென்று, “எதிர்க்கட்சிகள் ஜனநாயகக் கோவி லைத் தீட்டுப்படுத்துகின்றன” என்று பேசி யுள்ளார். இது, உண்மையில் கேள்வி கேட்கும் ஜனநாயக உரிமையைத் தற் காக்கும் போராட்டத்தை இழிவுபடுத்து வதாகும்.
ராணுவ ரகசியம், சர்வதேச ஊழல் புகார்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பு என அனைத்து முனைகளிலும் நெருக்க டியைச் சந்திக்கும் மோடி அரசு, தற்காலிகமாக உறுப்பினர்களை வெளி யேற்றுவதன் மூலமும், சபாநாயகரை ஒரு கவசமாகப் பயன்படுத்துவதன் மூலமும் தப்பித்துக் கொள்ளப் பார்க்கி றது. இந்திய நாடாளுமன்றத் தில் முடக்கப்பட்ட ஒவ்வொரு குரலும், வரும் நாட்களில் தெருவெங்கும் எதி ரொலிக்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி : தீக்கதிர் . 07 /02/26. #👨மோடி அரசாங்கம்
அமெரிக்க அடிமையால் இந்திய பால் உற்பத்தியாளர்கள் நடுத்தெருவுக்கு வரப்போகிறார்கள். #👨மோடி அரசாங்கம்






![👨மோடி அரசாங்கம் - அட்டகாசத்திறகு காவிகளின் வைதான் காரணங்கள்! கொடுத்தோ சூத்திரனைக் @5lll_III0(Boll பிராமணர் கூலி பிராமணனுக்கு தொண்டு வேலை செய்யலே வாங்கலாம் சூத்திரனைப் பிரம்மா படைத்திருக்கிறார் சுலோகம் 413) முனுந்தி அத்தியாயம் 8 ண்டு மிகுந்த ணவு எச்சில்) டுத்திக் பிராமணன் 0) ೧, 9) கிழிந்த ஆடை , சாரமற்ற தாணியம் பதர்) இவைகளைப் பிராமணன் சூத்திரன் ஜீவனத்திற்குக் கொடுக்க வேண்டும் முனுநீதி அத்தியாயம் I0 சலோகம் 125) சூத்திரன் வீட் சிறிதும் செல்வம் தயங்காமலு 1960 உள்ள கொள்ளையிடலாம் கேளாமலும் பலாத்காரத்தினாலும் முனுந்தி அத்தியாயம் 13) சுலோகம் ]| வேறு அடிமைத் தொழிலைத் தவிர தொழிலை சூத்திரன் செய்ய தகுதியற்ற தேசம் யாதோ அந்த இடம் ரியதாகும் வசிக்க பிராமணன் 0 முனுந்தி அத்தியாயம் சுலோகம் 24) 2 அட்டகாசத்திறகு காவிகளின் வைதான் காரணங்கள்! கொடுத்தோ சூத்திரனைக் @5lll_III0(Boll பிராமணர் கூலி பிராமணனுக்கு தொண்டு வேலை செய்யலே வாங்கலாம் சூத்திரனைப் பிரம்மா படைத்திருக்கிறார் சுலோகம் 413) முனுந்தி அத்தியாயம் 8 ண்டு மிகுந்த ணவு எச்சில்) டுத்திக் பிராமணன் 0) ೧, 9) கிழிந்த ஆடை , சாரமற்ற தாணியம் பதர்) இவைகளைப் பிராமணன் சூத்திரன் ஜீவனத்திற்குக் கொடுக்க வேண்டும் முனுநீதி அத்தியாயம் I0 சலோகம் 125) சூத்திரன் வீட் சிறிதும் செல்வம் தயங்காமலு 1960 உள்ள கொள்ளையிடலாம் கேளாமலும் பலாத்காரத்தினாலும் முனுந்தி அத்தியாயம் 13) சுலோகம் ]| வேறு அடிமைத் தொழிலைத் தவிர தொழிலை சூத்திரன் செய்ய தகுதியற்ற தேசம் யாதோ அந்த இடம் ரியதாகும் வசிக்க பிராமணன் 0 முனுந்தி அத்தியாயம் சுலோகம் 24) 2 - ShareChat 👨மோடி அரசாங்கம் - அட்டகாசத்திறகு காவிகளின் வைதான் காரணங்கள்! கொடுத்தோ சூத்திரனைக் @5lll_III0(Boll பிராமணர் கூலி பிராமணனுக்கு தொண்டு வேலை செய்யலே வாங்கலாம் சூத்திரனைப் பிரம்மா படைத்திருக்கிறார் சுலோகம் 413) முனுந்தி அத்தியாயம் 8 ண்டு மிகுந்த ணவு எச்சில்) டுத்திக் பிராமணன் 0) ೧, 9) கிழிந்த ஆடை , சாரமற்ற தாணியம் பதர்) இவைகளைப் பிராமணன் சூத்திரன் ஜீவனத்திற்குக் கொடுக்க வேண்டும் முனுநீதி அத்தியாயம் I0 சலோகம் 125) சூத்திரன் வீட் சிறிதும் செல்வம் தயங்காமலு 1960 உள்ள கொள்ளையிடலாம் கேளாமலும் பலாத்காரத்தினாலும் முனுந்தி அத்தியாயம் 13) சுலோகம் ]| வேறு அடிமைத் தொழிலைத் தவிர தொழிலை சூத்திரன் செய்ய தகுதியற்ற தேசம் யாதோ அந்த இடம் ரியதாகும் வசிக்க பிராமணன் 0 முனுந்தி அத்தியாயம் சுலோகம் 24) 2 அட்டகாசத்திறகு காவிகளின் வைதான் காரணங்கள்! கொடுத்தோ சூத்திரனைக் @5lll_III0(Boll பிராமணர் கூலி பிராமணனுக்கு தொண்டு வேலை செய்யலே வாங்கலாம் சூத்திரனைப் பிரம்மா படைத்திருக்கிறார் சுலோகம் 413) முனுந்தி அத்தியாயம் 8 ண்டு மிகுந்த ணவு எச்சில்) டுத்திக் பிராமணன் 0) ೧, 9) கிழிந்த ஆடை , சாரமற்ற தாணியம் பதர்) இவைகளைப் பிராமணன் சூத்திரன் ஜீவனத்திற்குக் கொடுக்க வேண்டும் முனுநீதி அத்தியாயம் I0 சலோகம் 125) சூத்திரன் வீட் சிறிதும் செல்வம் தயங்காமலு 1960 உள்ள கொள்ளையிடலாம் கேளாமலும் பலாத்காரத்தினாலும் முனுந்தி அத்தியாயம் 13) சுலோகம் ]| வேறு அடிமைத் தொழிலைத் தவிர தொழிலை சூத்திரன் செய்ய தகுதியற்ற தேசம் யாதோ அந்த இடம் ரியதாகும் வசிக்க பிராமணன் 0 முனுந்தி அத்தியாயம் சுலோகம் 24) 2 - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_262170_35f74063_1770692260639_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=639_sc.jpg)



![👨மோடி அரசாங்கம் - 05.02.2026 [వై] TNNVE DIGITAL {ತ பிரதமரை தாக்க சதி முறியடித்த ஓம் பிர்லா! எதிர்க்கட்சிகள் பிரதமரை தாக்க சதித்திட்டம் தீட்டிய தகவல் கிடைத்ததும் உடனடியாக பிரதமரை அவைக்கு வர வேண்டாம் குறிப்பிட்டேன் என உண்மையை உலகிற்கு சொன்ன மக்களவை சபாஙாயகர் [ihul, ஓம் Tnnews2ADigital tnnews2Aair com 05.02.2026 [వై] TNNVE DIGITAL {ತ பிரதமரை தாக்க சதி முறியடித்த ஓம் பிர்லா! எதிர்க்கட்சிகள் பிரதமரை தாக்க சதித்திட்டம் தீட்டிய தகவல் கிடைத்ததும் உடனடியாக பிரதமரை அவைக்கு வர வேண்டாம் குறிப்பிட்டேன் என உண்மையை உலகிற்கு சொன்ன மக்களவை சபாஙாயகர் [ihul, ஓம் Tnnews2ADigital tnnews2Aair com - ShareChat 👨மோடி அரசாங்கம் - 05.02.2026 [వై] TNNVE DIGITAL {ತ பிரதமரை தாக்க சதி முறியடித்த ஓம் பிர்லா! எதிர்க்கட்சிகள் பிரதமரை தாக்க சதித்திட்டம் தீட்டிய தகவல் கிடைத்ததும் உடனடியாக பிரதமரை அவைக்கு வர வேண்டாம் குறிப்பிட்டேன் என உண்மையை உலகிற்கு சொன்ன மக்களவை சபாஙாயகர் [ihul, ஓம் Tnnews2ADigital tnnews2Aair com 05.02.2026 [వై] TNNVE DIGITAL {ತ பிரதமரை தாக்க சதி முறியடித்த ஓம் பிர்லா! எதிர்க்கட்சிகள் பிரதமரை தாக்க சதித்திட்டம் தீட்டிய தகவல் கிடைத்ததும் உடனடியாக பிரதமரை அவைக்கு வர வேண்டாம் குறிப்பிட்டேன் என உண்மையை உலகிற்கு சொன்ன மக்களவை சபாஙாயகர் [ihul, ஓம் Tnnews2ADigital tnnews2Aair com - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_515451_2fcf3a9e_1770516509786_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=786_sc.jpg)


