N Murugesan
ShareChat
click to see wallet page
@67491307
67491307
N Murugesan
@67491307
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
போற்றி திருஅகவல் பதிகத்தை ஒரு முறை படித்ததிலிருந்து அதையும் பாடி வழிபடுவது வழக்கமாகியது. நான் முதன்முறை இந்த பதிகத்தை படித்த போது, இதை ஏன் கோவில்களில் தமிழ் அர்ச்சனைக்கு பாடக் கூடாது? என்று தோன்றியது. பிறகு, பதிகத்தின் பாதியிலிருந்து தான் "போற்றி" என்று முடியும் வரிகள் வருகிறது என்பதால் பாடப்படுவதில்லை என்று நினைத்தேன். சில நாட்களுக்கு முன்பு சிவக்குமார் ஐயா அவர்களின் "திருவாசகம் போற்றி திருஅகவல்" பேச்சின் போது "போற்றி திருத்தாண்டகம்" என்ற பெயரிலேயே அப்பர் சுவாமிகள் பாடிய பல பதிகங்கள் உள்ளன என்று தெரிய வந்தது!! 😂😄 ஏனோ இதற்கு முன் கவனிக்கவில்லை!! இதில் கயிலாய போற்றி திருத்தாண்டகம், திருவதிகை போற்றி திருத்தாண்டகம் என்று பல பதிகங்கள் உள்ளன என்று தெரிந்து இந்த வார சனிக்கிழமை அவற்றை பாடி வழிபட்டது எனக்கு சிறந்த ஆன்மீக அனுபவமாக இருந்தது!! கயிலாய திருத்தாண்டகத்தில் "வேற்றாகி விண்ணாகி..." என்று ஆரம்பிக்கிறார்! ஒன்றாய், உடனாய், வேறாய் சிவபெருமான் விளங்கும் நிலைகளில் இது "வேறாய்" இருக்கும் நிலையை குறிக்கிறதோ?! ஆனால், தென்னாட்டு சிவபெருமானை பாடும் போது "எல்லாம் சிவனாகி..." என்று ஆரம்பிக்கிறார்!! 😄 இது "ஒன்றாய்" விளங்கும் தன்மையை குறிக்கிறது!! எல்லா பொருள்களிலும் கலந்து ஒன்றாய் இருக்கும் தன்மை தென்னாடுடைய சிவபெருமானுக்கே உரிய தனிப்பெருமை என்பதாலோ...?!! நேரம் கிடைக்கும் போது எல்லா பதிகங்களையும் பொறுமையாக படிக்க வேண்டும்!! ************************************************** தமிழ்நாட்டில் சிவன் கோவில்களில் ஏன் "போற்றி திருத்தாண்டகங்களை" தீபாராதனை போது பாடக்கூடாது?! By default, தமிழில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும்; யாராவது சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்ய சொல்லி விரும்பி கேட்டால் மட்டும் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும். இப்போதைய சிவாச்சாரியார்களுக்கு சமஸ்கிருத அர்ச்சனை ஸ்தோத்திரங்கள் தெரியும்; ஆனால், தேவார திருவாசகங்கள் தெரியாது!! அதனால் தான் கேட்டால் மட்டும் தமிழில் அர்ச்சனை!! (பிறகு ஏன் "தென்னாடுடைய சிவன்?!") தேவார திருவாசகம் தெரியாதவர்கள் அர்ச்சகர்கள் ஆக முடியாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும். "தமிழ், தமிழ்" என்று பேசும் அரசியல்வாதிகள் இது குறித்து எதுவும் செய்ய இயலாதவர்களாக இருந்தார்கள்!! பாஜக கண்டிப்பாக செய்யாது. ஒரு வேளை விஜய் முதல்வரானால் இதை செய்யக் கூடிய தைரியம் அவருக்கு இருக்குமா?! ************************************************* #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
ஆன்மீக வாழ்க்கை - பொறறிதருத்தய்டம திருலத் எல்யாம் சிவன்ன நமாய் ாmm பொறறிதருத்தய்டம திருலத் எல்யாம் சிவன்ன நமாய் ாmm - ShareChat
"நான் பதவி விலக மாட்டேன் !! நான் தோற்கவில்லை!! மக்கள் என் பக்கம் தான்!! தேர்தல் ஆணையமும், எதிர்க்கட்சிகளும் SIR படிவ ஊழல் செய்து விட்டார்கள்" - மம்தா பானர்ஜி! தோல்வியால் துவண்டு போய் அழுது கொண்டிராமல் இன்னமும் போராடுகிறார். அவர் தேர்தலுக்கு முன்னரும் SIR படிவம் தன்னை தோற்கடிக்கவே என்று பிரச்சாரம் செய்தார்!! நம் நாட்டில் இப்படி ஒரு அரசியல்வாதி இல்லையே!! ஓ!! 😄😂 #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
ஆன்மீக வாழ்க்கை - நாங்கள் தோற்கவில்லை, பதவி விலக முடியாது மம்தா மற்குவங்க தோதலில் நாங்கள் தோற்கலில்லை எனவே விலகை முடியாதர் பனி மம்தா பானாதி ~LL IAAOOLNCoA COHURESS BREAKING பதவி விலக முடியாது. மம்தா ஆவேசம்! நாங்கள் தோற்கவில்லை, பதவி விலக முடியாது மம்தா மற்குவங்க தோதலில் நாங்கள் தோற்கலில்லை எனவே விலகை முடியாதர் பனி மம்தா பானாதி ~LL IAAOOLNCoA COHURESS BREAKING பதவி விலக முடியாது. மம்தா ஆவேசம்! - ShareChat
தவெகவின் வெற்றியை சிலர் மக்கள் தீர்ப்பு என்று நினைக்கலாம்; சிலர் மகேசன் தீர்ப்பு என்று நினைக்கலாம். எனக்கென்னவோ இது temporary quirk of democracy (gemini AI - "ஜனநாயகத்தின் தற்காலிக விசித்திரம்" ) அல்லது ஜனநாயகத்தின் மோசமான தோல்வி என்று தான் தோன்றுகிறது. புதிதாக ஒரு நடிகர் - அரசியல் அனுபவமோ, மக்கள் பிரச்சினைகளுக்காக போராடிய அனுபவமோ எதுவும் இல்லாதவர் - அரசியல் கட்சி ஆரம்பிப்பாராம்; அந்த தேர்தலிலேயே ஆட்சியையும் கூட பிடிப்பாராம்!! அப்படியானால் பல வருடங்களாக ஏற்கனவே அரசியலில் இருந்து மக்களுக்காக பாடுபட்டவர்களுக்கு என்ன மரியாதை?! அரசியல் அனுபவம், மக்கள் பிரச்சினைகள் குறித்த புரிதல் எல்லாம் தேவையில்லையா?! அல்லது இப்போதைய அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்களாக இருப்பவர்கள் எல்லாரும் படுமோசமானவர்களாக இருக்கிறார்கள் என்று தான் அர்த்தம் ஆகிறது. ஆகவே இந்த தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தின் படுதோல்வியை தான் குறிக்கிறது. ஸ்டாலின் போன்றார் இந்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறுவது சொந்த தொகுதியிலேயே தோற்றுப் போகும் அளவுக்கு அவர்கள் தவறு செய்திருக்கிறார்கள்; அவர்கள் ஆட்சி படுமோசமாக இருந்திருக்கிறது என்பதை அவர்களே confess ஏற்றுக் கொள்கிறார்கள் என்று தான் அர்த்தம் ஆகிறது!! அப்படியானால் அடுத்த தேர்தலிலும் திமுக ஆட்சிக்கு வருவது கஷ்டம் தான்!! மேலும், சினிமா உலக நடிகர் நடிகை மோகம் சாபத்திலிருந்து தமிழ் மக்களுக்கு என்றைக்கு விடுதலை கிடைக்கும்?! என்று தான் தோன்றுகிறது!!*************************₹********************** #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
ஆன்மீக வாழ்க்கை - முதல்வர் ஆகிறார் விஜய் தவெக வெற்றி சொல்வது என்ன? அரசு தமழநாடு  சயலகம்  கறைமச் முதல்வர் ஆகிறார் விஜய் தவெக வெற்றி சொல்வது என்ன? அரசு தமழநாடு  சயலகம்  கறைமச் - ShareChat
தேர்தல் இயந்திர கோளாறோ?!😄 தவெகவின் இந்த மாபெரும் வெற்றியை நம்பவே முடியவில்லை!! மிஞ்சி போனால் 25 சீட்டுகள் ஜெயிக்கும் என்று நான் நினைத்த தவெக 110 சீட்டுகள் முன்னிலையில் உள்ளது!! ஆனால், நமக்கு ஏன் இப்படி தோன்றுகிறது?! ஏனென்றால் நாட்டில் 65 சதவீத மக்கள் தவெக ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஓட்டளிக்க வில்லை!! 35 % மக்கள் மட்டுமே தவெகவுக்கு வாக்களித்துள்ளனர்!! ஆகையால், 65 சதவீத மக்கள் இது எப்படி நடந்தது என்று தான் எண்ணிக் கொண்டிருப்பார்கள்!! 😄 ஆனால், சீட்டுகள் என்று வரும்போது, மும்முனை போட்டியில் அது தவெகவுக்கு 110 சீட்டாக பரிணமித்துள்ளது!! மூவரில் யாருக்கு அதிகம் ஓட்டு என்று பார்க்கும் போது, அது தவெக என்றாகி விட்டது!! தவெகவுக்கு வாழ்த்துக்கள்!! https://results.eci.gov.in/ResultAcGenMay2026/voteshareresult-S22.htm #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
ஆன்மீக வாழ்க்கை - 3.35 PM 0 ಚH ADMK{21.74%} ADMK | 21.74% 6791134 Votes Party Vote % Total Votes 0.63% 197964 CPI CPI(M) 0.57% 177381 CPI(ML)(L) 0.01% 2324 351939 DMDK 1.13% DMK 24.09% 7526205 1125187 INC 3.60% IUML 0.33% 103607 128710 NOTA 0.41% NTK 3.94% 1231020 324 RJD 0.00% TVK 34.65% 10826547 3.35 PM 0 ಚH ADMK{21.74%} ADMK | 21.74% 6791134 Votes Party Vote % Total Votes 0.63% 197964 CPI CPI(M) 0.57% 177381 CPI(ML)(L) 0.01% 2324 351939 DMDK 1.13% DMK 24.09% 7526205 1125187 INC 3.60% IUML 0.33% 103607 128710 NOTA 0.41% NTK 3.94% 1231020 324 RJD 0.00% TVK 34.65% 10826547 - ShareChat
தவெக வெற்றி வாய்ப்பு குறித்து எழுதவில்லை என்று மனதில் ஒரே தொல்லை! என் கணிப்பு - 1-10 சீட் வரை தவெக பெறக்கூடும்!! ஒரு நடிகரால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சிக்கு அதுவே மிகப்பெரும் வெற்றி தான்!! அதையே அவர்கள் கொண்டாடலாம்!! (சீமானின் நாதக பற்றி கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்!! 😄😄😂 மாறாக, மும்முனை போட்டி உருவாக்கி மற்ற இரண்டு கூட்டணிகளுக்கு இணையாக சீட்டுகள் பெற்றால் மிகப்பெரும் திருப்பம் ஆச்சரியம் தான்!! விஜய் அத்தகைய சாதனை ஏதாவது நிகழ்த்துகிறாரா பார்ப்போம்!! ***********************************₹*************** விஜயின் தவெக 120 சீட்டுகள் ஜெயிக்கும் என்று எழுதி விட்டு பிறகு, "ஓ, என் கணிப்பு தவறாகி விட்டது" என்று எழுத முடியும்; ஆனால், மற்றவர்கள் போல் நானும் தவெக ஆதரவாளர்களை hype செய்து ஏமாற்ற விருப்பம் இல்லை!! 😄 (ஒரு வேளை hype செய்யாவிட்டால் பிரச்சினை வருமோ?!). மிகவும் பிரதானமாக பேசப்படுவது, பிறகு தோல்வியை தழுவுவது என்பது வைகோ, அண்ணாமலை, சீமான் என்று பலரும் பார்த்த, கடந்து வந்த பாதை தான்!! விஜய் மட்டும் விதிவிலக்கு ஆவாரா?! 😄 ஒரு வேளை axis my india கருத்து கணிப்பு போல் விஜய் ஆட்சி அமைத்தால், ஏதோ தேர்தல் இயந்திர கோளாறு என்று தான் நான் நினைப்பேன்!! 😄😂 ஏனென்றால், புதிதாக வந்த ஒரு தலைவர் நாட்டில் மௌன புரட்சியை ஏற்படுத்தி முதல் தேர்தலிலேயே ஆட்சியையே பிடிக்கும் அளவுக்கு இங்கு தலைவர்கள் இல்லாமலோ அல்லது முந்தைய ஆட்சி படு மோசமாக இருந்தது என்றோ கூறுவதற்கு இடமில்லை!! ஆகையால், தவெக ஆதரவாளர்கள் மிகைப்படுத்தப்பட்ட hype பரபரப்பால் ஏமாறாமல் இருப்பது நல்லது!!😄 #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
ஆன்மீக வாழ்க்கை - RRHINR EXIT pOLL தவெக முன்னிலை தமிழ்நாட்டில் தவெக முன்னிலை வகிப்பதாசு இந்தியா சருந்துக்கணிப்பு ఃగ emtn தலக 58-120, திமுசு 52-110. =திமுச 22-32, ங்களில் வெலல வசய்ப்பு பிறர் 0 இந்திபா கழுதபச்சரிப்பு aum Crtn RRHINR EXIT pOLL தவெக முன்னிலை தமிழ்நாட்டில் தவெக முன்னிலை வகிப்பதாசு இந்தியா சருந்துக்கணிப்பு ఃగ emtn தலக 58-120, திமுசு 52-110. =திமுச 22-32, ங்களில் வெலல வசய்ப்பு பிறர் 0 இந்திபா கழுதபச்சரிப்பு aum Crtn - ShareChat
ஏனோ இந்த முறை அதிமுக கூட்டணி ஜெயிக்கக் கூடும் என்று எனக்கு தோன்றியது. ஆனால், திமுக கூட்டணியே மீண்டும் வெற்றிபெறும் போலிருக்கிறது!! கலைஞர் கருணாநிதி காலத்தில் கூட ஒரு தடவை கூட திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததில்லையாம்!! இது ஸ்டாலினுடைய பெரும் வெற்றி என்று தான் கருத வேண்டும்!! அப்படியானால் "போதைப்பொருள் புழக்கம், பாலியல் குற்றங்கள், கொலை வன்முறை, அடித்தள மக்கள் பிரச்னைகள் அதிகமாகி விட்டன; ஆனால் அரசாங்கம் போதிய நடவடிக்கை எடுக்க வில்லை" என்பது போன்ற குற்றச்சாட்டுகள்?! அவை exaggerated அல்லது அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் இந்த அளவுக்கு தான் கட்டுப்படுத்த முடியும் என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்!! வெற்றி பெறும் கூட்டணியை வாழ்த்துவோம்!! ************************ #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
ஆன்மீக வாழ்க்கை - EXIT PSLL- 2026 நர்கறுக்கு பற்ரையகரத்தம்சபாப்பு [ 125-15 65-80 13-24 nOTV ] La818 113-13 L  00 1 I 2232 ಞ820 1 02 11   15 15 _140 00-15 ] யDL ] 12242 81-100 10-12 [  215=160 5-0 50-05 13-18 05 05 16-26 10 /*1 15-45 12232 87=100 1-0 1 12 33 Dக 5-1 {ೆೆ4 7  ஒயிழ் _ 6 (  EXIT PSLL- 2026 நர்கறுக்கு பற்ரையகரத்தம்சபாப்பு [ 125-15 65-80 13-24 nOTV ] La818 113-13 L  00 1 I 2232 ಞ820 1 02 11   15 15 _140 00-15 ] யDL ] 12242 81-100 10-12 [  215=160 5-0 50-05 13-18 05 05 16-26 10 /*1 15-45 12232 87=100 1-0 1 12 33 Dக 5-1 {ೆೆ4 7  ஒயிழ் _ 6 ( - ShareChat
திருச்சி திருவெறும்பூரில் எல் ஏ சினிமாவின் டோல்பி சினிமா தியேட்டர் வந்துள்ளது. மைக்கேல் ஜாக்சன் படம் அங்கு பார்த்தேன் (அவருடைய fan frenzy நமக்கும் தொற்றிக் கொள்கிறது!! யார் அவர்?! எப்படி அவருக்கு இப்படி ஒரு எனர்ஜி பவர் என்று நினைக்கத் தோன்றியது!! நேரம் போனதே தெரியவில்லை; உங்களுக்கு மைக்கேல் ஜாக்சன் பாடல்கள் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பார்க்கலாம்!!). படம் ஆரம்பிக்கும் முன் டோல்பி சினிமாவை பற்றிய விளக்கம் கொடுக்கும் போது ஒரு வரிகள்: "இதுவரை நீங்கள் பார்த்த கருப்பு நிறம் இது. ஆனால், உண்மையான கருப்பு நிறம் எப்படி இருக்கும் தெரியுமா?! அது இப்படி இருக்கும்" என்று கான்ட்ராஸ்ட் காண்பித்த போது, எனக்கு வேறொரு உள்ளுணர்வு பற்றிய நினைவு வந்தது: அது நாத்திகம் பற்றியது - யாரோ உள்ளுணர்வில் ஒரு முறை கூறியது: "இது வரை நாம் தமிழகத்தில் பார்த்தது நாத்திகமே அல்ல. உண்மையான நாத்திகம் இனிமேல் தான் வரப்போகிறது". திராவிட இயக்கங்கள் பேசிய நாத்திகம் முற்றிலும் சமூக சீர்திருத்தங்களுக்காக பேசப்பட்டது. அவற்றால் உண்மையில் மக்களிடையே அவ்வளவு நாத்திகம் ஏற்படவில்லை. மக்கள் கோவில்களுக்கு சென்று கொண்டு தான் இருந்தனர். பக்தி தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருந்தது. ஆனால், மேற்கூறிய இந்த புதிய நாத்திகம் கடவுளுக்கு எதிரான ஆபத்தான வெறுப்பு உணர்வை நம் மனதுக்குள் திணிக்கும். கடவுள் தேவையில்லை என்பது வேறு. கடவுளுக்கு எதிரான வெறுப்பு உணர்வு என்பது வேறு. அத்தகைய ஒரு உணர்வு மேலெழுப்பப் படுகின்றது என்று நினைக்கிறேன். இது மிகவும் அபாயகரமானது; நமது கலாச்சாரத்தையே வீழ்த்தக் கூடியது. முக்கியமாக இது முற்றிலும் தேவையற்றது. இது உண்மையா?! அப்படி ஒரு நிழல் இயக்கம் நடைபெறுகிறதா?! நாட்டில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை!! ஆனால், என் வாழ்க்கையில் அப்படித் தான் இருக்கிறது. ஆம், என் ஆன்மீக வாழ்க்கையில் இதை நான் உணர்கிறேன்!! கோவிலுக்கு போனால் டார்ச்சர்; பாட்டு பாடினால் டார்ச்சர், விரதம் இருக்க முடியவில்லை; போன மூன்று வாரங்களாக சனிக்கிழமை விரதம் மீண்டும் ஆரம்பித்து இருக்கிறேன். ஆனால், விரதத்திற்கு அடுத்த நாள் விரதம் இருந்த சுவடே இல்லை; மேலும் மேலும் நாத்திக உணர்வு தூண்டப்படுகிறது!! இது என்னுடைய தனிப்பட்ட சூழ்நிலை, தனிப்பட்ட கர்மமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். அப்படியல்லாமல் எல்லாருக்கும் இத்தகைய பிரச்னைகள் உருவாக்கப் படுகிறது என்றால் இதை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் பௌதீக உலகம் வேறு; ஆன்மீக (துறவற) உலகம் வேறு என்று இருந்தது. ஆனால் இப்போது பௌதீக உலகம் ஆன்மீக உலகத்தால், அல்லது நிழல் உலகத்தால் ஆளப்படுகிறது. திராவிட கட்சிகள் நாத்திகத்தில் ஆரம்பித்தவை; அவற்றால் இந்த சமுதாயத்திற்கு ஆபத்தான புதிய நாத்திகத்தை எதிர்க்கவும் முடியாது; ஏற்றுக் கொள்ளவும் முடியாது; ஆன்மீக ரீதியாகவும் கையாளவும் முடியாது! இதெல்லாம் உண்மையென்றால் உண்மையான ஆன்மீகத்தை மீட்டெடுக்கும் வரையில் நமக்கு மிகவும் இக்கட்டான சூழ்நிலை தான்!! சனாதனம் இதற்கு அப்பாற்பட்டதா?! அல்லது அதற்கும் இந்த பிரச்சினை இருக்குமா தெரியவில்லை!! சனாதனம் இதை எப்படி சமாளிக்கிறது என்று பார்ப்போம்!! எனினும் இப்போதைக்கு இது என் ஆன்மீக வாழ்வின் தனிப்பட்ட பிரச்சினை என்றே நான் கருத விழைகிறேன்!! #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
ஆன்மீக வாழ்க்கை - ுந்தது நாத்திகம் துவரை 916u6u ?! Dolby CINEMA ுந்தது நாத்திகம் துவரை 916u6u ?! Dolby CINEMA - ShareChat
நான் இருக்கும் லால்குடி தொகுதி நட்சத்திர தொகுதியாகி விட்டது!! வேட்பாளர்களிலேயே அதிக சொத்து உள்ள லாட்டரி டிக்கெட் அதிபர் லீமா ரோஸ் இங்கு அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்!! 5000 கோடி ரூபாய் சொத்து மதிப்பாம்!! மேலும், நடிகர் மன்சூர் அலிகான், முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன் ஆகியோரும் இங்கு போட்டியிடுகின்றனர்!! *******************""*************************** சில வருடங்களுக்கு முன்பு சைவ சித்தாந்த பக்தியில் முழுமையாக மூழ்கி இருந்தேன். "நமக்கு பணம் மட்டும் இருந்தால், வேலைக்கு செல்வது , AI டெக்னாலஜி எல்லாம் விட்டு விட்டு முழுமையாக ஆன்மீகத்தில் இறங்கி விடலாமே" என்று தோன்றியது!! எனக்கு பக்தி பிரார்த்தனை மீது அப்போது பெரும் நம்பிக்கை இருந்தது. அப்பருக்கு, சுந்தரருக்கெல்லாம் பொற்காசு கொடுத்த சிவபெருமான் நான் வேண்டினால் தர மாட்டானா என்று தோன்றியது!😄 அப்போது கேரளா லாட்டரி டிக்கெட் பற்றி கேள்வி பட்டேன். அந்த சமயத்தில் ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது !!கூரியரில் லாட்டரி டிக்கெட் வாங்கலாம் என்று பார்த்தேன். உடனே 2500 ரூபாய் அனுப்பி சில லாட்டரி டிக்கெட் கூரியரில் வாங்கினேன். அந்த லாட்டரி டிக்கெட்டுகளை பூஜா ரூமில் சிவபெருமான் காலடியில் வைத்து, எனக்கு பரிசு விழ வேண்டும் என்று பூஜையின் போது வேண்டிக் கொண்டேன்!! 😄😄😂😂😂 அது மட்டுமல்ல; அப்போது நான் திருவாரூர் சிவபெருமான் கோவிலுக்கு சென்றது ஞாபகம் வந்தது; நான் சென்ற போது ஒரே வெயில்!! ஏதோ மொட்டை மாடியில் 12 மணி வெயிலில் இருப்பது போன்று அந்த சன்னதிகள் இருந்தன. ஆகையால், எனக்கு மட்டும் இந்த லாட்டரி டிக்கெட்டில் பரிசு விழுந்தால் நான் உனக்கு அங்கு ஒரு கூரையே வேய்கிறேன் என்று (ஜாலியாகத் தான்) வேண்டிக் கொண்டேன்!! 😄😂 பரிசு என்னவோ விழவில்லை!! (பிறகு தான் தெரிந்தது; அதெல்லாம் செல்லாதாம்; கேரளாவிற்கு சென்று வாங்கினால் தான் செல்லுமாம்!!). அன்றைய வேண்டுதலின் பயனாகத் தான் இன்று ரூபாய் 5000 கோடி ரூபாய் சொத்து உள்ள லாட்டரி டிக்கெட் அதிபரையே லால்குடி தொகுதி வேட்பாளராக ஆக்கி விட்டானாம்!! 😄 😂 அது சரி, தொகுதிக்கு நன்மை நடக்கலாம்; எனக்கு என்ன உபயோகம்?! 😄. *********************************************** #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
ஆன்மீக வாழ்க்கை - CINELA BIOscope பணக்கார வேட்பாளர்! &.1,048 கோடி சொத்து மதிப்புடன் தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளராக லால்குடி தொகுதியின் அதிமுக உள்ளார் @ಖLuoi லீமா ரோஸ் கணவர் லாட்டரி அதிபர் மார்டினின் பெயரில் ரூ 4,159 கோடி, மகன் ஜோஸ் டெய்சன் மார்டின் பெயரில் ரூ 665 கோடி ்ளதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். சொத்துகள் CINELA BIOscope பணக்கார வேட்பாளர்! &.1,048 கோடி சொத்து மதிப்புடன் தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளராக லால்குடி தொகுதியின் அதிமுக உள்ளார் @ಖLuoi லீமா ரோஸ் கணவர் லாட்டரி அதிபர் மார்டினின் பெயரில் ரூ 4,159 கோடி, மகன் ஜோஸ் டெய்சன் மார்டின் பெயரில் ரூ 665 கோடி ்ளதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். சொத்துகள் - ShareChat
"மகளிர் உதவித்தொகை இனி ரூபாய் 2000" அல்லது "மூன்று மாதங்களில் கஞ்சா ஒழிக்கப்படும்" - எந்த வாக்குறுதி மக்களை கவரும்?! செய்தி ஊடகங்கள் ஒரு பட்சமாக உள்ளனவா என்று தெரியவில்லை; ஆனால், திமுக அரசுக்கு எதிராக ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் முன் வைக்கப் படுகின்றன - "கஞ்சா புழக்கம் எளிதாகி விட்டது", "பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாகி விட்டது", "நடுரோட்டில் வெட்டி கொலை என்று வன்முறை கொலை செய்திகள் அதிகமாகி விட்டது", "அடித்தர மக்கள் பிரச்சினைகள் புறக்கணிக்கப் படுகிறது" என்று தினமும் ஊடகங்களில் செய்திகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் வருகின்றன. இவற்றில் எதற்கும் திமுக / ஸ்டாலின் பதிலளிப்பது போல் தெரியவில்லை. இவை உண்மையல்ல என்று நினைக்கிறாரா அல்லது பதில் சொல்ல தேவையில்லை, மகளிர் உதவித்தொகை போதும் என்று நினைக்கிறாரா என்று தெரியவில்லை!! 😄 இவை உண்மையா என்று எனக்கும் தெரியவில்லை; இந்த நாட்டின் ஜனநாயகத்தில் "ஏப்ரல் 23 மக்கள் தீர்ப்பு" இந்த விஷயத்தில் உண்மையை அறிவிப்பதாக ஏற்றுக் கொள்ளலாமா என்றும் தெரியவில்லை!! 😄 ************************************************* ஆன்மீகத்தில் (spiritual invisible entity) யாரோ அதிமுக ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்!! ஒரு கவுண்டமணி செந்தில் ஜோக் ஞாபகமிருக்கிறதா?! பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் கவுண்டமணி ஒரு முறை கடுப்பில் பாத்திரம் கொண்டு வந்தவருக்கே ஈயம் பூசி விடுவார்!😄. அது போல் ஆயிரம் கோவில்களுக்கு பிளீச்சிங் செய்யும் போது "ஒரு கடவுளுக்கும்" சேர்த்து பிளீச்சிங் செய்து விட்டார்கள் போலிருக்கிறது!! 😄😄😂 அதனால் இருக்கலாமோ?!! ஆனால், இது ஆன்மீகம் சார்ந்த பிரச்சினை; நாத்திகத்தில் உருவான திமுக போன்ற கட்சிகள் இதற்கு என்ன செய்ய முடியும்? என்பதும் சரியான வாதம் தான்!! ஆனால், நாம் பிஜேபி வந்தால் கோவில்கள் தனியார் மயமாகக் கூடும் என்று நினைத்தால், இப்போதே அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அவை இல்லை என்று சிலர் கூறுகிறார்கள்!! ஆனால் கோவிலை தான் அறநிலையத்துறை நிர்வாகிக்க முடியும்; கடவுள் யார் கட்டுபாட்டிலோ!! ************************************************. ஆன்மீக வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு அரசியல் பிரச்சனையை தரும்; அவர்கள் எல்லாவற்றிலும் நடுநிலையாக இருக்க வேண்டும்; ஆனால், நல்லதற்கும், கெட்டதற்கும் இடையே நடுநிலை கூடாது என்பது என் கொள்கை. ஆகையால், இப்படி வேண்டுவோம் - "ஈஸ்வரா, இறைவா, யார் ஆட்சிக்கு வந்தால் நாடும், சமுதாயமும், ஆன்மீகமும் செழிக்குமோ, நல்லது நடக்குமோ, அவர்கள் ஆட்சிக்கு வரட்டும்"!! ************************************************ #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
ஆன்மீக வாழ்க்கை - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - ShareChat
நேற்று கோவிலுக்கு செல்லும் போது இந்து முன்னணி போஸ்டர்கள் (புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று நினைக்கிறேன்) பல பார்த்தேன். எல்லாவற்றிலும் இராம கோபாலன் படத்துடன் "வெற்றி வேல்! வீர வேல்!!" என்ற கோஷம்!! என்றிலிருந்து இந்து முன்னணி/ ஆர்எஸ்எஸ் போன்றவை "ஜெய் ராம்" கோஷத்திலிருந்து "வெற்றி வேல்" கோஷத்திற்கு வந்தன?! என்று எண்ணத் தோன்றியது!! நான் ராம பக்தனாக இருந்தாலும், ராமரை மையமாக கொண்டு மதவெறி பரப்புவது தவறு என்று பிஜேபி ஆர்எஸ்எஸை எதிர்த்த சமயத்தில் ராமர் மற்றும் ராமகிருஷ்ணரை சேர்ந்தவர்கள் அதிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டார்கள்!! ஆனால், இன்று முருகனை மையப்படுத்துவது ஏன்?! முருகன் கோவிலையா இடித்து ராமர் கோவில் கட்டினார்கள்?! 😄 ஓ, அதற்காகத் தான் "திருப்பரங்குன்றம்" பிரச்னை பெரிதாக்கப் பட்டுள்ளதா?! 😄😂 புத்திசாலி ராமர்; முட்டாள் முருகன்!! ************************************************* வயலூர் கோவில் நேற்று சென்ற போது கூட்டத்தில் பலர் வட நாட்டவர்கள் என்று தோன்றியது - தமிழ் நாட்டில் எங்கோ மூலையில் ஒரு கிராமத்தில் முருகன் கோவில் இருந்தால் அங்கும் வடநாட்டவர் வந்து ஆக்கிரமிப்பது சரியா என்று தோன்றியது!! கூட்டம் மட்டும் தான் அப்படி என்றால் இதை முழு மனதாக நாம் வரவேற்க வேண்டும்; ஏனென்றால் அது தான் நம் கலாச்சாரம்!! நம்மை தேடி ஒரு கிராமத்திற்கு கூட வருகிறார்கள் என்று நம் ஆன்மீகத்தை பற்றி நாம் பெருமை தான் பட வேண்டும்; அத்தகைய தமிழ் கலாச்சாரத்தை நம்பியே அதன் விளைவாகவே அவர்கள் வருகிறார்கள்!! ஆனால், இங்கு வந்த கையோடு அவர்கள் கடவுளையும் இங்கு நியமித்தால் எப்படி ஏற்றுக் கொள்வது?! அங்கேயே வடநாட்டில் கோவில் கட்டி கும்பிட்டு கொள்ள வேண்டியது தானே?! 😄😂. ************************************************* பிஜேபியை பொறுத்தவரை "ஜெய் ராம்" கோஷத்தை தமிழ்நாட்டிலும் எழுப்புவது தான் சரி!! தமிழ்நாட்டில் ராம தத்துவம் மலிந்து விட்டது; கற்பு தத்துவத்தை உயர்த்தி பேசக்கூட முடியவில்லை!! ஒரு ராம பக்தனாக, இங்கு ராம பக்தி அதிகரித்தால் நான் மிகவும் மகிழ்வேன்!! அதற்கு பிஜேபி / ஆர்எஸ்எஸ் வழி செய்தால் தேர்தலில் ஓட்டு கூட போடலாம்!! மாறாக, அவர்களுடைய இந்து ராஷ்டிரம், மத வெறி கொள்கைகளை முருக தத்துவத்தில் புகுத்தினால் எப்படி ஏற்றுக் கொள்வது?! இதை ஏற்றுக் கொள்ளும் அந்த முருகன்; யார் அவன்?!😄😂 அவனால் பிஜேபிக்கும் நன்மை இல்லை; நமக்கும் பிரயோஜனம் இல்லை!! ************************************************* #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
ஆன்மீக வாழ்க்கை - அதர்மம் காக்க 3 @ ஜெய் ராம் கோஷம் எழுப்பினால் ஓட்டு தான் 8 ந்து முன அதர்மம் காக்க 3 @ ஜெய் ராம் கோஷம் எழுப்பினால் ஓட்டு தான் 8 ந்து முன - ShareChat