selva
ShareChat
click to see wallet page
@81078422
81078422
selva
@81078422
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#👌அருமையான ஸ்டேட்டஸ் #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💘Love Quotes & Videos #💖நீயே என் சந்தோசம்🥰 #🥰 ✨நினைவெல்லாம் நீயடா✨🥰
👌அருமையான ஸ்டேட்டஸ் - ShareChat
00:15
கருவாச்சி... அடி கருவாச்சி... உருவாச்சி உன் மேல காதல் உருவாச்சி! நாளாச்சு ரொம்ப நாளாச்சு விழி மூடி ரொம்ப நாளாச்சு! பகலும் புரியல... இரவும் விடியல... உன் முகம் மட்டும் என் விழியில் இன்னும் மறையல! என் உலகமும் சுழல மறுக்கின்றது உன் விழி பார்த்த நாளிலிருந்து! உன் சண்டைக்கார பார்வையால் பார்க்காதடி என் மனம் சல்லடையாய் போகுதடி! நீ போகும் ஒத்தையடி பாதையில உன்னை எண்ணி காத்திருக்கேன்... சிடுமூஞ்சிக்காரி என்னை சிதைச்சுட்டு போகாதே! அடை மழையில் நனைவது பிடிக்காது அறிந்தும் நனைகிறேன்... உன் முந்தானையில் தலை துடைப்பாய் என்கிற ஆசையில்! கண்டாங்கி சேலை கட்டி காட்டு வழி போறவளே கடைக்கண்ணால் நீ சிரிச்சா என் காதலும் வாழும்! ஊசி வெடிக்கே பயந்தவன் நானே உன் விரல் பிடித்ததால் உலகப்போர் நடத்த துணிகிறேன்! மண்வாசனை தருவதுண்டு மழைத்துளி உன் வாசனை என்னவென்று அறியவில்லை நானே! பூந்தோட்டத்தின் வாசமா? உன் புன்னகையின் வாசமா? கட்டி இழுக்கும் உன் காதல் வாசமா? உன் உடலில் வேர்த்து கொட்டும் வியர்வை துளிகளை சேகரித்து என் தாகம் பருகிக் கொண்டேன்! உன் வாசம் என்னவென்று தெரியாமல் வாசம் இல்லா பூவாய் நிக்கிறேன்! அடங்காத காளை போல திரிந்தவன் நானே உன் மீது காதலில் விழுந்து காணாமல் போனேனடி! கோவில் தீபம் போல் நீ ஜொலிக்க உன்னை வணங்கி நிற்கிறேன் உன் தீராத பக்தனாக என்றும் பாடுகிறேன் திருப்புகழ் போல உந்தன் பெயரே... விலகி விலகி நீ போனாலும் விட்டுவிட தோன்றலடி என் வீட்டுக்காறி நீ தானடி என் மனதுக்குளே வாழ்பவளும் நீ தானடி கருவாச்சியே என் கருவாச்சியே.... செல்வா ✍️ #💖love feel🌹 #💞Feel My Love💖 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #👌அருமையான ஸ்டேட்டஸ் #செல்வா கவிதை
வெல்லப் போகுது வெற்றிக் கொடி அது ஏர் கலப்பை சுமந்த விவசாயி கொடி! ஆளப் போகும் தமிழன் தான் அவன்புலி கொடி ஏந்திய தங்க மகன் சீமான் தான்! கோடி பேருக்கு பின்னால் நிற்கும் ஆளில்லை இவன் கோடி பேருக்கு முன்னால் நிற்கும் தலைவன் இவனே! உன் பேச்சைக் கேட்டாலே உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சிலிர்க்குதடா! நமக்காக போராடும் தலைவன் இவனே தமிழே இவனே... தமிழ்நாடே இவனே! தரணி போற்றும் தமிழ் தங்கம் நாட்டை ஆளப் போகும் சிங்கமிவன்! ​ ஏர் பூட்டி உழுதவனே எழுந்து வா! ஏர் பூட்டிய கைகள் நாடாளப் போகும் காலம் கனிந்து வருது எழுந்து வா விவசாயி மகனே புது சரித்திரம் படைப்போம் வா! உன்னைப் போல் ஒரு தலைவன் இல்லை இந்த பூமியில் எங்க அண்ணன் ஆட்சியில் தான் தமிழ்நாடே சொர்க்க பூமியாகுமடா! ​ வெல்வான் எங்கள் தலைவன் செந்தமிழன் சீமான் இனிஎவராலும் வெல்ல முடியாது நாங்கள் கொண்ட கொள்கையை! காற்றில் ஆடும் பதர்கள் அல்ல நாம் களம் காணும் போர்க்குல வம்சமடா! சதிவேலைகள் செய்தாலும் சரித்திரம் படைப்போம் ஏன்னா அஞ்சுவதும் அடிபணிவதும் என் இனத்தின் ரத்தத்தில் இல்லையடா! ​ அன்பின் இதயமே... அரசியலில் சிகரமே... சிவனை மிஞ்சிய கடவுளும் இல்லை சீமானை மிஞ்சிய அரசியலும் இங்கில்லை! ஏழைகளின் குரலாய் உந்தன் குரல் ஒலிக்க மக்களின் ஏழ்மையை காக்க வந்தவன் கண்ணீர் துளிகளை துடைக்க வந்த உந்தன் கைகள் கவலைகள் எல்லாம் போக்க வந்த கடவுள் நீயே! செல்வா ✍️ #செந்தமிழன் சீமான் #நாம் தமிழர் கட்சி #சீமான் #அரசியல் #📺அரசியல் 360🔴
பூலாங்குளம் ஈஸ்வரிக்கு பூமாலை தோரணமா அவள் புகழைப் பாட வந்தோம் அதுவே நம் பாக்கியமா! பாடுங்கடி புகழ நம்ம ஈஸ்வரியின் புகழ கிழக்கு முகம் பார்த்திருக்கும் அழகு நீயும் பாரு நம்ம குலம் காக்கும் அன்னை அவளை நீயும் பாரு! பச்சை வண்ணப் பட்டுடுத்தி பவளமல்லி கொண்டு வந்து ஈஸ்வரிக்கு அலங்காரம் இன்பமாய் செய்தோம்! நிச்சயமாய் நல்லருளை அள்ளித் தரும் அன்னை அவள் அல்லிப் பூவைப் பறித்து வந்து காணிக்கையாய் தந்தோம்! அஞ்சாத வரம் தந்து அகிலத்தை ஆள்பவளே அருள் மழை பொழிந்து எங்களைக் காப்பவளே! ஆணவமும் இல்லையம்மா அகங்காரமும் இல்லையம்மா உன் பார்வையிலே தஞ்சம் புகுந்தோம் அம்மா! வேட்டுச் சத்தமும் கேட்குதடி வேகமாக வாராளே நாட்டு மக்கள் வினைதீர்க்க நலம் தரவே வாராளே! ஈஸ்வரியே பேரொளியே இந்த பௌர்ணமியில் நிலவொளியே உன் தீப ஆராதனையில் என் தீமைகள் எல்லாம் தொலையுதம்மா! கற்பூரம் ஜொலிக்குதம்மா உன் முகம் அங்கே தெரியுதம்மா சாந்தமாய் அமர்ந்தவளே ஈஸ்வரியின் புகழைப் பாடுங்கடி! வயல் எல்லாம் நாத்து நட்டு முதல் விளைச்சல் உனக்குத் தான் வண்டி வண்டியா நெல் வரும் உன் சன்னதிக்கு வந்து சேரும்! உடுக்கைச் சத்தம் அதிருதடி உச்சி வானம் பிளக்குதடி உன் பாதம் பட்ட இடமெல்லாம் செம்பொன்னாக மின்னுதடி! வேப்பிலை ஆடை உடுத்தி வேல் பிடித்து வாராளே காக்கும் தெய்வம் ஈஸ்வரியே கருணை மழை பொழிவாளே! உன் அருளால் எங்க மனம் மகிழுதம்மா உன் நினைவால் வாழ்வில் நலம் பெருகுதம்மா! நீயே எங்கள் குலதெய்வம் வரங்களை அள்ளித் தந்திடுவாய் நான் தேடாத போது வந்த தெய்வம் நீயே உன் புகழைப் பாட வரம் தந்து காக்க வந்த தாயும் நீயே! பங்குனி மாதம் சிறக்கும் எங்க ஆத்தா மனசு குளிரும் எங்க ஈஸ்வரியின் புகழை எந்நாளும் பாடிப் போற்றிப் போற்றிடுவோம்! செல்வா ✍️ #🙏ஆன்மீகம் #🙏கோவில் #அம்மன் #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #பத்தி
முதல் பொருளே விநாயகனே! வினை தீர்ப்பவனே! முழுமுதற் கடவுளே எமைக் காப்பாய் விநாயகனே! ஒற்றைக்கொம்பு உடையவனே! ஓங்கார உருவனே! தும்பிக்கை நாதனே! துயரம் தீர்ப்பவனே! முறுக்கு மீசை கொண்ட ஈஸ்வரனே! என் குல ஆண்டவனே! உன்னை வணங்கி நிற்கிறோமே! ஆவேசம் கொண்டவனே! ஆலயத்தில் சிறந்தவனே! ​ சங்கரனே இல்லத்தில் உறைபவனே எண்ணற்ற இன்பங்கள் தருபவனே ஈஸ்வரனின் இடப்பாகம் அமர்ந்தவளே ஈஸ்வரி தாயே! இதயத்தில் வாசம் செய்பவளே இன்பங்கள் யாவும் உன் அருளாலே! ஓம் சக்தி ஓம் சக்தி தாயே இன்னல்கள் தீர்ப்பாயே ஓம் சக்தி ஓம் சக்தி தாயே சிவனே ஆதிப் பொருளே! எம் சிந்தை தெளிய வைக்கும் பரம்பொருளே! சந்தனமும் திருநீரும் அபிஷேகமா சங்கரரே சங்கமிக்கும் நாள்தான் ஐயா சிவபெருமானை நாடி வரும் அன்பனுக்கும் நண்பனே! வாசலில் வந்து நின்று வரம் கொடுக்கும் வள்ளலே ​ இறைவனின் வாகனமே நந்தியம்பெருமானே! நாளும் எங்களுக்கு நல்லது செய்திடுவாயே! விண்ணைத் தொட்டு நிற்கும் கொடிமரமே! உன்னைப்போல உயருமே என் வாழ்வே! அண்ணார்ந்து பார்த்து உன்னை தொழுதேனே அருளைப் பொழிந்து என்னை காப்பாயே வில்லேந்தும் ராமபிரான் சீதையுடனே! நல்லருள் புரிவாரே நம் நெஞ்சில் நிலையாகவே! மங்கலங்கள் தந்திடுவார் மங்கை சீதையுடனே! எம் மனக்கவலை தீர்ப்பாரே ரகுராமன் துணையுடனே! ஆறு முகம் கொண்ட சண்முகனே! அள்ளித் தரும் தெய்வமே! வள்ளி தெய்வானையோடு காட்சி தாராரே! வடிவேலன் வடிவில் வந்து எம் வாழ்வு காப்பாரே! ​ நவக்கிரக நாயகரே நல்லருள் புரிவாரே! நாளும் எமைக் காக்க துணையாய் வருவாரே! வெட்டருவா மீசை வச்சிக்கிட்டு ஒய்யாரமா நிற்காரே! உன் சன்னதியில் காவல் தெய்வம் சுடலைமாடன் தானய்யா! தோளில் அருவா ஏந்திக்கிட்டு துணையாய் நிற்க வாராரே! வாராரே மாடன் வாராரே! ​ உன் தாழ் தேடி வந்ததால் காலம் நேரமும் கூடி வந்ததே! என் புகழும் பாடிடுவேன் என் ஜென்மங்கள் உள்ளவரை! நீயே காவலனே! என் குல ஆண்டவனே உன்னை வணங்குகிறோமே! ​ ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... செல்வா ✍️ #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏அயோத்யா ராமர் கோவில் #பக்தி
பூலாங்குளத்தின் பூபாலனே ஈஸ்வரியின் மைந்தனே! சண்முகநாதனே தமிழினத்தின் தலைமகனே! தனிப்பெருங் கடவுளே நீயல்லவா...! ​முருகா... முருகா... முருகா... முருகா! வள்ளி தெய்வானையோடு வேலனே... ஆறுமுக வேலனே! ஓம் என்று சொன்னாலே... என் வாழ்வு சிறக்குது சிங்கார வேலனே...! ​முருகா என்ற மூன்றெழுத்தில் என் மூச்சில் கலந்தவனே... முருகா! ​ முருகனே! அழகனே ஆதிகுடி முருகனே! குமரனே குகனே வடிவேலனே சிவனார் பெற்ற செல்வமே! வைகாசி விசாகம் உனது திருநாளாம்... வினை தீர்க்கும் பொன்னாளாம்! சகலமும் தந்து விடும் நன்னாளாம்...! ​நாள்தோறும் உன் எழில் கண்டு... என் செயல்கள் எல்லாம் சிறக்குது முருகா... எங்கள் உள்ளத்திலும் எண்ணத்திலும்... உன் நினைவே தான் முருகா... ​ உன்னை முன் நின்று வணங்கியதால் நான் பின் சென்றதில்லை என் வாழ்வில் முருகா! உன்னை நம்பியவர்களுக்கு நன்மைகள் உண்டாகும் முருகா! உன்னை நம்பியவர்களுக்கு நன்மைகள் உண்டாகும் முருகா! ​உன் பெயர் சொல்லி வாழும் இந்தக் காலம் ஒன்றே போதுமே... உன் காலடியில் தஞ்சம் அடைந்தேன் முருகா! ​ஆறுதல் சொல்ல யாரும் இல்லை ஐயா என் குறைகள் தீர்க்க வாராயோ முருகா! உன் முகம் பார்த்தால்... என் மன வேதனை எல்லாம் தீருது முருகா... ​ நான் விரதம் இருந்து வணங்கி வந்தேன் முருகா... என் விருப்பங்கள் எல்லாம் நிறைவேற்றுவாய் முருகா! இந்தப் பொய்யான உலகில் எதுவும் நிலையில்லை முருகா... உன் மெய்யான வடிவமே போதும் முருகா... உன் திருவடியில் மலராய் இருக்க அருள்வாய் முருகா! ​அழகான வாழ்வு தந்து என்னை பெருவாழ்வு வாழ வைத்தாய் முருகா! ​ உறவுகள் ஆயிரம் இருந்தாலும் உன்னைத் தவிர உறவென்று யாரையும் எண்ணியதில்லை முருகா! பக்தியோடு பாசுரங்கள் பாடி சிந்தை குளிர வழிபடத் தெரியவில்லை முருகா! கண்ணீர் பெருக்கோடு உன் பாதம் சரணடைந்தேன் முருகா! இன்பமோ துன்பமோ அனைத்திலும் நீயே முருகா! ​ தாயும் உண்டு தந்தையும் உண்டு எனைப் படைத்த தகப்பன்சாமி நீ போதும் முருகா! நான் தேடிப் பெற்ற உறவும் என்னை பாதியில் விட்டுவிடாமல் உன் கரம் தந்து காப்பாய் முருகா! நாடி வரும் பிணிகள் யாவும் - உன் வேல் கொண்டு தீர்ப்பாய் முருகா! ​ பூலாங்குளத்தின் பூபாலனே... முருகா முருகா! முருகா என்ற மூன்றெழுத்தில் என் மூச்சில் கலந்தவனே... முருகா! ​ முருகா போற்றி! ஓம் முருகா போற்றி! முருகா போற்றி! ஓம் முருகா போற்றி... போற்றி... போற்றி... போற்றி! செல்வா ✍️ #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #முருகா #🙏திருச்செந்தூர் முருகர்🙏 ஓம் முருகா 🙏கந்தா கடம்பா கதிர் வேலா 🙏கந்தனுக்கு அரோகரா🙏 #🙏🏼 ஓம் முருகா🙏🏼 👏👏ஓம் சரவணபவ 👏👏 ஓம் கந்தா கதிர்வேலா 🙏🏼🙏🏼
மேள சத்தம் ஒலிக்க... வேட்டுச் சத்தம் அதிர... கொடி ஏற்றத்துடன்... தொடங்குதம்மா ஈஸ்வரியின் திருவிழா! வம்சம் தழைக்கவே... வந்து அமர்ந்த அரசியே! குலம் காக்க... குடி கொண்ட ஈஸ்வரியே! அன்னை அருளாலே... அகிலம் தழைக்குதம்மா! மனம் உருகி வேண்டினால்... மகத்தான வாழ்வு தருபவளே ஈஸ்வரியே! செப்புத்திருமேனி அம்மா... செஞ்சு வச்ச தேரழகு மா! கதிரவன் உதிக்கும் முன்னே... வீதி வலம் வரும் ஈஸ்வரியே! யான் அறியாத போதே... எனை ஆட்கொண்டாயே அம்மா! மேனி சிலிர்க்க... என் முன்னோர் உடலில் குடி கொண்டாய் அம்மா! ஓலைக் குடிசையிலே அன்று... அருள்வாக்குச் சொன்னவளே! ஓட்டுக் கூரையிலே அமர்ந்து... ஆட்சி செய்தவளே! ​ ஈஸ்வரி ஈஸ்வரி என்று துதித்தாலே... சிவஞானமும் உண்டாகும் அம்மா! ஈஸ்வரி ஈஸ்வரி என்று துதித்தாலே... சிவஞானமும் உண்டாகும் அம்மா! ​ கல் மண்டபம் எனும் கருவறையில்... இன்று நிலைத்தவளே! மண்ணால் செய்த தேகம் அன்று... சிற்பத்தில் உயிர் கொண்டு ஒளி தந்தாய் அம்மா இன்று! அய்யா கோவில் சப்பரம் முன்னே வர... அன்னை காளியின் சப்பரம் பின்னே வர... மூன்றாவதாய் உன் சப்பரம் வீதியுலா வரும் என... நீ தந்த வாக்கு இன்று... சத்தியமாய் பலிக்குதம்மா! ​ சொந்தம் பந்தம் ஆயிரம் இருக்க... நான் உன்னை மட்டும் நாடி வந்தேன் அம்மா! உன் பொற்பாதத்தில் தஞ்சம் கொண்டேன்... என் அம்மா! பேராசை ஏதும் இல்லை அம்மா... உன் பெயர் சொல்லி வாழ்ந்தாலே போதும் அம்மா! ​ காப்பாய் அம்மா... காலமெல்லாம் காப்பாய் அம்மா! ஈஸ்வரியே... சரணம் அம்மா! ஈஸ்வரியே... சரணம் அம்மா செல்வா ✍️ #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #ஆன்மீகம் #மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஓம் சக்தி #செல்வா கவிதை
#💌 என் காதல் கடிதம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💘Love Quotes & Videos #💞Feel My Love💖 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
💌 என் காதல் கடிதம் - ShareChat
00:15
#💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💖நீயே என் சந்தோசம்🥰 #💌 என் காதல் கடிதம் #💘Love Quotes & Videos #💞Feel My Love💖
💖காதல் ஸ்டேட்டஸ்🥰 - ShareChat
00:15
இந்த பிரபஞ்சத்திற்கே நீ இராணி நான் ராஜா என்றேன் நீ சிரித்தாய் என்றைக்குமே நீ என் மகாராணி தான் என்றேன்.... கவிதையே வேண்டுமானால் பொய் அழகாக்கலாம் என் வாழ்க்கைய உன்னைத் தவிர யாரும் அழகாக்க முடியாது. உன் தோழியிடம் நீ பேசிய வார்த்தையை மறைந்திருந்து கேட்டேன் என்று எனக்கு நானே ஆறுதல் கூறுகிறேன். வருடம் தோறும் வரும் காதலர் தினம் உன் நினைவுகள் என் மனதில் இருப்பதனால் நாள்தோறும் எனக்கு காதலர் தினமே. உன் சந்தோஷம் என் சந்தோஷம் என்று சொன்னாய் உன் ஆசைய நிறைவேற்ற என் ஆசையை துறந்தேன். காளியம்மன் கோவில் திருவிழாவில் இருவரும் ஒரே கலரில் ஆடைகள் அணிந்தோம் ஊரே நம்மை கண்டு வியந்தது. ஊரே பேசியது நீ எனக்கானவள் என்று நான் அறியவே இல்லை இப்படி என்னை நடுவீதியில் விட்டு செல்வாய் என்று. உன் தாய் தந்தை ஆசைக்காக நீ என்னையே இழந்தாய் நீ இழந்தது என்னை மட்டுமல்ல நம் இருவரும் சேர்ந்து காதலித்த காதலையும் . காதலர் தினத்திற்கு கவிதை எழுதுவதற்கு நினைவுகள் வருதோ இல்லையோ. உன் நினைவுகள் வரும்போது எல்லாம் பல கவிதைகளை எழுதி விடுகிறேன். காதலர் தினத்தை எதிர்பார்த்த நாட்களை விட என் காதலியே நீ வரும் நாட்களை எதிர்பார்த்ததே அதிகம். காலங்கள் தான் ஓடியது நாம் அன்று பேசிய வார்த்தைகள் என் இதயங்களில் அழியாத பொக்கிஷமாய் ஆனது. ஓர் இரவை தொலைக்க ஒரு பாடல் போதும் என் மனதில் இருக்கும் உன்னை மறக்க இந்த ஒரு ஜென்மம் போதாது. செல்வா ✍️ #💔காதலர் தினத்தில் காதல் தோல்வி😢 #👗GRWM for காதலர் வாரம்💕 #💕காதலர் தினம் பரிசுகள்🎁 #😂காதலர் தின மீம்ஸ்💕 #💞Feel My Love💖