ஒரு பெண் மிகவும் மோசமாக மனதளவில் காயம்பட்ட பிறகு மீண்டும் எழுந்தால் மிகவும் ஆபத்தானவளாக இருப்பாள்..
நீங்கள் ஒரு பெண்ணை மீண்டும் மீண்டும் காயப்படுத்தலாம்... நீங்கள் அவளுடைய இதயத்தை உடைக்கலாம்... அவளுடைய மன அமைதியைக் கெடுக்கலாம்... அவளுடைய மனதை கூட அழ வைக்கலாம்... உடைந்த இதயம் மற்றும் சேதமடைந்த ஆத்மாவுடன் ஒரு பெண்ணை நீங்கள்
வெளியேற்றி விடலாம்.., ஆனால் அவள் திரும்பி வரும்போது மிக மிக ஆபத்தான பெண்ணாக இருக்க நிறைய வாய்ப்பிருக்கு..
ஏறக்குறைய அவளது தனித்தன்மையை...
திறமையை..
அவளுக்கான வாய்ப்பை...
அங்கீகாரத்தை பறிக்கும் போரில் இருந்து அவள் தப்பிய பிறகு, அவள் வேறு ஒரு பக்குவமடைந்த பெண்ணாக முற்றிலும் மாறியிருப்பாள்.... ஒரு பெண்ணை நீங்கள் மிகவும் மோசமாக நடத்தலாம்.. காயப்படுத்தலாம்...
ஆனால் அவள் தன்னைத்தானே கட்டமைத்துக் கொள்ளக் கற்றுக் கொண்டால், நீங்கள் தவறான ஒரு நபரை காயப்படுத்தி விட்டீர்கள் என்பதை நீங்கள் உணர வேண்டிய காலம் வரும். ஒரு பெண் பாதிக்கப்படக்கூடியவளாக இருக்கலாம்... ஆனால் அவள் நெகிழ்ச்சியுடன் இருக்க முடியும்... அனைத்தையும் கடந்து வர முடியும்.... அவள் மிகவும் மன்னிக்கக்கூடியவள், ஆனால் மறக்க கூடியவள் அல்ல... வாழ்க்கையில் மோசமான விஷயங்களைச் சந்தித்த பிறகு அவளால் இரக்கப்பட முடியாது. எனவே நீங்கள் காயப்படுத்தப் போகும் பெண்ணிடம் கவனமாக இருங்கள்... ஏனென்றால், நீங்களே உங்களை அறியாமல் ஒரு ஆபத்தான பெண்ணை உருவாக்க கூடும்.
அவள் நடந்துகொள்ளும் விதமெல்லாம் அவள் எப்படி நடத்தப்படுகிறாள் என்பதன் பிரதிபலிப்பே.... #👉வாழ்க்கை பாடங்கள்