saravanan
ShareChat
click to see wallet page
@ethumillay
ethumillay
saravanan
@ethumillay
Video Grapher. side velay, BALE SECTION, TEXTILE.
#azagaana aangila ponnmoligal.
azagaana aangila ponnmoligal. - EXPERIENCE IS ONE THING YOU CAN'T GET FOR NOTHING. EXPERIENCE IS ONE THING YOU CAN'T GET FOR NOTHING. - ShareChat
#sinthanay thulirgal எழுதியது*_ _*‘பேனாவாக'*_ _*இருந்தாலும் எல்லோரும்*_ _*காகிதத்தைக் கிழித்துப் போடுவதைப் போல.*_ _*தவறு செய்தவவரை விட்டு விட்டு*_ _*இன்னொருத்தரிடம்,*_ _*குற்றம் கண்டுபிடிப்பதே இங்கு பலரின் வேலை.*_ _பெரும்பாலான மனிதர்கள் சுயநலம் மிக்கவராக வலம் வருகிறார்கள். நேசித்தால் பிழைகளைப் பார்ப்பதில்லை,_ _வெறுத்தால்_ _நல்லதைப் பார்ப்பதில்லை._ _*விருப்பத்திற்கும், நேசத்திற்கும் வேறுபாடு உண்டு. பூக்களை விரும்புபவர்கள் பறித்துச் சூடுகிறார்கள்,*_ _*பூக்களை நேசிப்பவர்கள் செடிக்குத் தண்ணீர் ஊற்றுகிறார்கள்.*_ _உங்களுக்கு யாரைப் பிடிக்கின்றதோ அவர்களுடன் மகிழ்ச்சியாகப் பழகுங்கள். உங்களை யாருக்குப் பிடிக்கவில்லையோ,_ _அவர்கள் மகிழ்ச்சிக்காக_ _அவரை விட்டு விலகுங்கள்_ _அமைதியாக._
sinthanay thulirgal - ShareChat
#ippadium sila jenmangal. எதுவும் இல்லாத போது உங்களுடன் இருப்பவர்தான்,*_ _*உங்களிடம் எல்லாம் இருக்கும் போது உங்களுடன் இருக்கத் தகுதியானவர்.*_ _உங்களது பொருமையான செயல்பாடுகள் தான் ....._ _எதையும் அழகாக்குகிறது....... வாழ்க்கையில்_ _*உங்களது நிதானமான வார்த்தைகள்தான் ..* *மேம்படுத்துகிறது..*_ _*நட்பையும் உறவையும்*_ _என்னால் முடியும் என்ற வார்த்தை_ _நம் மனதில் ஒலித்தால் நம் வாழ்க்கை ஊருக்குள் ஜொலிக்கும்....!_ _*ஓஹோ என்று வாழ்ந்து ஒன்றுமில்லாமல் போனவர்களும் உண்டு.*_ _*ஒன்றுமில்லாமல் வாழ்ந்து ஓஹோவென்று போனவர்களும் உண்டு.*_ _மற்றவர்களிடம்_ _இருப்பதில்_ _எவை என்னிடம்_ _இல்லை என்று சிந்திப்பதை விட மற்றவர்களிடம் இல்லாதது எவை என்னிடம் உள்ளது என்று தேடிப் பாருங்கள்._ _*அமைதியாகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் உன் முயற்சிகளையும் கடமைகளையும் செய்*_ _இறைவன் எதையாவது ஒன்றை உன்னிடமிருந்து எடுத்துக் கொண்டால் அதை விடச் சிறந்த ஒன்றைக் கொடுத்தே தீருவான் என்பதை காலம் நிச்சயம் உனக்குக் காட்டித் தரும்_ _நம்பிக்கையோடு காத்திரு._ _*பிரகாசித்து கொண்டே இருங்கள்,*_ _*உங்கள்*_ _*வளர்ச்சியை*_ _*வெறுப்பவர்களின் கண்கள் இருளாகும் வரையில்.....*_ _மழைக்கால ஈசலைப் போல,_ _மனதுக்குள் ஒரு நாளில் பிறந்து,_ _மறையும் ஆசைகள் ஆயிரம்..._
ippadium sila jenmangal. - உங்கவிபறம் உங்கவிபறம் - ShareChat
#penn valimay. _*தாகம் எடுத்த ஒரு மனிதன் ஒரு கிணற்றுக்குச் சென்றான்,*_ _அங்கு ஒரு இளம் பெண் தண்ணீர் இறைத்து கொண்டிருந்தாள்._ _*அந்த மனிதன் அந்தப் பெண்ணிடம் தாகத்துக்கு தண்ணீர் கேட்க அந்தப் பெண் மகிழ்ச்சியுடன் அவனுக்குத் தண்ணீர் கொடுத்தாள்.*_ _தண்ணீர் குடித்த பிறகு, அந்த மனிதன் அந்தப் பெண்ணிடம், பெண்களின் குணம் எந்த மாதிரியானது என்பது பற்றி ஏதாவது சொல்ல முடியுமா?_ _*என்று கேட்டான்.*_ _*இதைச் சொன்னதும், அந்தப் பெண் சத்தமாக, "என்னைக் காப்பாற்று... என்னைக் காப்பாற்று..." என்று கத்த ஆரம்பித்தாள். அவளுடைய குரலைக் கேட்டதும், கிராம மக்கள் கிணற்றை நோக்கி ஓடத் தொடங்கினர். அந்த மனிதன், "நீ ஏன் இப்படிச் செய்கிறாய்?" என்று கேட்டான்.*_ _நான் இப்படி செய்தால் " கிராம மக்கள் வந்து உன்னை நன்றாக மயக்கம் அடையும் வரை அடித்துப் போடுவார்கள் என்று கூறினாள்._ _இதைக் கேட்ட அந்த நபர், "என்னை மன்னியுங்கள், நீ ஒரு நல்ல, மரியாதைக்குரிய பெண் என்று நினைத்தேன்" என்றார். அதற்குள் கிராம மக்கள் அவர்களை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்._ _*அப்போது அந்தப் பெண் கிணற்றுக்கு அருகில் வைத்திருந்த பானையிலிருந்து தண்ணீரை முழுவதுமாக அவள் உடலில் ஊற்றி, அவள் உடலை முழுவதுமாக நனைத்தாள்.*_ _இதற்கிடையில், கிராம மக்களும் கிணற்றுக்கு அருகில் சென்றனர். கிராம மக்கள் அந்தப் பெண்ணிடம், "என்ன நடந்தது?" என்று கேட்டனர்._ _*அந்தப் பெண், "நான் கிணற்றில் விழுந்தேன், இந்த நல்ல மனிதர் என்னைக் காப்பாற்றினார்" இந்த மனிதன் இங்கே இல்லையென்றால், நான் இன்று இறந்திருப்பேன்.*_ _கிராம மக்கள் அந்த மனிதனை மிகவும் பாராட்டி, அவரைத் தங்கள் தோள்களில் தூக்கி பாராட்டிbஅவரை மிகவும் கௌரவித்தனர், வெகுமதிகளையும் அளித்தனர்._ _*கிராமவாசிகள் வெளியேறியதும், அந்தப் பெண் அந்த மனிதனிடம், "இப்போது பெண்களின் பெண்மையின் தன்மை உங்களுக்குப் புரிகிறதா???*_ _நீங்கள் ஒரு_ *_பெண்ணுக்குவலியைக்_* _கொடுத்து அவளைத் தொந்தரவு செய்தால், அவள் உங்கள் மகிழ்ச்சியையும் அமைதியையும் பறித்துவிடுவாள், நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், அவள் உங்களை மரணத்தின் தருவாயில் இருந்தும் காப்பாற்றுவாள்"_ _*என்று சொல்லி முடித்தாள்..*_
penn valimay. - பெண்வலிறை பெண்வலிறை - ShareChat
#vinaayaga anuboothi. அனுபூதி💐...!* *💐காசிப முனிவர் அருளியது💐..!* 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ 🔴🟢🔴🟢🔴🟢🔴🟢 *பாடல்:03...!* கீழ்மைப் பண்புகள் அழிய காமா திகளாம் கயமைப் பிணிகள் போமா(று) அருள்வாய் புரைதீர்த்து எனைஆள் கோமா! கருணைக் குகனார் தமியா பூமா! பொலமார் புலவா! வருவாய்! *பொழிப்புரை:* தலைவனே! முருகனின் சகோதரனே! பூவுலகத்துக்குத் தலைவனே! ஞான வடிவான புலவனே! காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் கீழ்த்தரமான பண்புகள் என் உள்ளத்திலிருந்து போகும்படி அருளி, என் குற்றம் தவிர்த்து, என்னை ஆட்கொள்ளுவாயாக!. *தொடரும்...* 🔲🟢🔲🟢🔲🟢🔲🟢🔲🟢🔲🔲🟢🔲🟢🔲🟢🔲🟢🔲🟢🔲
vinaayaga anuboothi. - ShareChat
#lalithaa sagasranaamam. *ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 238* *இன்று நாம் அறிந்து கொள்ளும் திருநாமம் *...மனு வித்யா...* 🙏🙏 ஓம் சக்தி பராசக்தி 🙏🙏 மனு வித்யா : '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' மனுவினுடைய வித்யைக்கு ஆதரமாக இருக்கிறாள் அன்னை.... *விளக்கம் 🙏* ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' இந்த திருநாமத்துக்கு வியாக்கியானம் என்னவென்றால் மனுவினுடைய வித்யைக்கு ஆதரமாக இருக்கிறாவள் அன்னை... பன்னிரண்டு பேர் அன்னையின் மிகப் பெரிய பக்தர்கள் அவர்களுள் முதல் பக்தர் மனு.. மனு ஸ்லோகம்: 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 மனு: சந்திர குபேரச்ச லோபாமுத்ரா  ச  மன்மத: அகஸ்திர் அக்னிர்யச்ச இந்திர: ஸ்கந்த சிவஸ் ததா குரோத பட்டாரகோ தேவ்யா த்வாதசாமீ உபாஸகா...||| இந்த ஸ்லோகம் மனுவைப் பற்றியது ஆம் ஸ்லோகத்தில் மனுவின் பெயர்தான் முதலில் வருகிறது.மிகப்பெரிய அன்னை உபாஸகர் மனு.அதனால் அன்னை மனு வித்யா.அவருடைய வித்தையின் ஆதாரமாக இருக்கக்கூடியவள் அன்னை.       இந்த திருநாமத்தை நாம் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாகப் பார்க்கலாம்.மனு என்று சொன்னாலே மனிதர்களுக்குத் தலைவன் என்று பொருள். மானுடத்தின் தலைவன் - பிரதிநிதி என்பதாக அந்தப் பெயர் வந்தது.. மனுவித்யா என்று சொல்கிறபோது மனிதர்களாகிய நாம் உணர்ந்து கொண்டிருக்கக்கூடிய வித்யை - புரிந்து கொண்டிருக்கக்கூடிய வித்யை - எதுவானாலும் அதன் ஆதாரமாக இருக்கக்கூடியவள் அன்னை.இதுவே அன்னையின் பெருமையை கூறும் 238 வது திருநாமம் ஆகும்..... 🌹🌹 ஐயா சிவசிவ அரகர அரகரா 🌹🌹 🙏🙏 ஓம் லலிதாம்பிகை தாயே போற்றி 🙏🙏 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 🟩⬛🟩⬛🟩⬛🟩⬛🟩⬛🟩🟩⬛🟩⬛🟩⬛🟩⬛🟩⬛🟩
lalithaa sagasranaamam. - ShareChat
#innraya SINTHANAY சிந்தனை* 🌷28.04.2026🌷 மனம் போல் வாழ்வு இந்த உலகில் வெற்றியை நோக்கி வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் சோதனைகள் ஏற்படும். அப்படி சோதனை செய்வதில் முக்கியமான ஒன்று தான் மனம். வாழ்வில் முன்னேறும் போது நிறைய பேர் என்னென்னவோ சொல்வார்கள். இதில் அதிகம் நம்மைப் பற்றி சொல்பவர்கள் யார் என்று பார்த்தால், குடும்பம், நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது ஆசிரியர்கள் தான். இவர்கள் சொல்வது நமது நலத்திற்காகவே இருக்கட்டும். ஏன் நாம் எதை விருப்பப்பட்டு செய்தாலும் மூக்கை அறுப்பது போல் நிறைய தடைகளை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் மனதைத் தளர விடாமல், தன் எண்ணத்தில் மட்டும் முழு கவனத்தைக் கொண்டு வாழ்வை மேற்கொண்டால், வெற்றியை நிச்சயம் அடையலாம். எப்போதும் மற்றவர்கள் கூறுவதைக் கேட்காமல், உங்கள் உள்ளம் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் உள்ளம் என்ன சொல்கிறதோ, அதை செய்யுங்கள். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பதால், வெற்றியை அடைய முடியாது. ஆகவே உங்கள் மனம் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு, அதன்படி நடக்க வேண்டும். உதாரணமாக, உங்களுக்கு ஏதேனும் ஒரு புதிய விஷயங்களை செய்யும் போது, மற்றவர்கள் முடியாது என்று நினைப்பதைக் கூட, நீங்கள் முழு கவனத்தோடு, செய்து முடிப்பீர்கள். எந்த நேரத்திலும் நீங்களே முடிவெடுங்கள். இதுவரை சிறுவயதில் உங்களுக்கு உங்கள் வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் முடிவெடுப்பார்கள். இப்போது நீங்கள் வளர்ந்து விட்டீர்கள். இந்த நேரம் தான் நீங்கள் சுயமாக உங்கள் முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம். எப்போதும் எதையும் செய்ய முடியவில்லை என்று மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்காமல், பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால், நினைத்தால் மட்டும் போதாது, சுயமாக முடிவு எடுக்கத் தெரிந்திருக்க வேண்டும். இது தான் மிகவும் முக்கியமான ஒன்று. மேலே சொன்னது போல், வாழ்க்கையில் முன்னேறும் போது தோல்விகளை சந்தித்துத் தான் ஆக வேண்டும். அதற்காக அந்தத் தோல்விகளையே மனதில் வைத்துக் கொண்டு வாழ்க்கையில் இருக்கக் கூடாது. "தோல்வி தான் வெற்றியின் முதல் படி". தோல்விகளை சந்திக்க சந்திக்கத் தான் மனம் தெம்பாக, அனைத்தையும் எதிர்த்து நின்று, தைரியமாக செல்ல முடியும். இதனால் வெற்றியையும் எளிதில் அடைய முடியும். மேற்கூறியவாறெல்லாம் நடந்து வந்தால், வாழ்க்கையில் பெரிய வெற்றியை அடைவதோடு, வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கும் வரலாம். வாழ்த்துகள். வாழ்க வளமுடன். 😊😊😊
innraya SINTHANAY - வாழ வேண் டமே என்று நினைக்காதீர்கள் வாழ்ந்தே ஆக வேண்டும் என்று முடிவு எடுங்கள் துன்பமும் தூசியாய் தெரியும்! வாழ வேண் டமே என்று நினைக்காதீர்கள் வாழ்ந்தே ஆக வேண்டும் என்று முடிவு எடுங்கள் துன்பமும் தூசியாய் தெரியும்! - ShareChat