கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼
83 Posts • 684K views
#கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼 #கமல்ஹாசன் ஹிட்ஸ் #கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼🎵🎶 #ரெங்கா! #renga-vamba! #கமல்ஹாசன் என்ற நடிகனின் உடலுக்குள் விசுவரூபம் எடுத்த பத்து கதாபாத்திரங்கள்: தமிழ் ஹிந்து நவம்பர் 15, 2019 நந்து: தீமையின் ஆற்றல் * ஆளவந்தான், மனப்பிறழ்வு, தீமை, அராஜகத்தைச் சுதந்திரமாகக் கட்டவிழ்த்துவிடும் கடவுள் மிருகம் நந்து. கமல்ஹாசன் என்ற நடிகனின் உச்சபட்ச ஆற்றல் வெளிப்பட்ட கதாபாத்திரம் ‘ஆளவந்தான்’ திரைப்படத்தில் உலாவந்த நந்தகுமாரன்தான். நல்லவன், தீயவன் ஆவதென்பது - காலமும் சந்தர்ப்பமும் ஒரு நாணயத்தைச் சுண்டிவிட்டுத் தேர்ந்தெடுப்பதுதான் நன்மையும் தீமையும்; சிறையின் அந்தப் பகுதியிலிருந்து நந்து, தன் தம்பி விஜயிடம் இதைச் சாதாரணமாகச் சொல்லும்போது அவனது ஒட்டுமொத்த உருவாக்கத்துக்கும் ஒரு பின்னணி கிடைத்துவிடுகிறது. ‘நந்தகுமாரா..’ என்ற கமல்ஹாசனின் அந்தக் கட்டைக் குரல் எப்போதைக்கும் கேட்டுக்கொண்டே இருக்கும். குழந்தைமையும் முரட்டுத்தனமும் * குணா ‘பராசக்தி’யில் நாயகனின் பெயர் குணசேகரன். இன்னும் அகலாத குழந்தையின் களங்கமின்மையையும் முரட்டுத்தனத்தையும் சேர்த்து வெளிப்படுத்துபவன் குணா. அவனைப் பொறுத்தவரை திருமணம் என்பது உண்மையிலேயே வானகத்தில் நடப்பது. அதைத் திட்டமிட்டுக்கொண்டு, முகச்சவரம் செய்வதற்காக அவன் போகும் சலூனில் திருமணம் என்ற ஏற்பாட்டையே கேலிசெய்யும் சந்திரபாபுவின் பாடல் ரேடியோவில் ஒலிக்கிறது. கல்யாணம் என்று தொடங்கும் அந்தப் பாடல் சந்திரபாபுவின் த்வனியிலேயே கல்யாணத்தை முழுக்கவும் கேலி செய்துவிடுகிறது. அப்போது கமல்ஹாசனின் முகத்தில் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி விரல்களால் செய்யும் நர்த்தனத்தில் கமல்ஹாசனின் குழந்தைமை வெவ்வேறு விதமாக வெளிப்படும். தோற்ற கலைஞன் * சலங்கை ஒலி ஏழைக் குடும்பத்தில் பிறந்த, குச்சிப்புடி, கதக், பரதநாட்டியம் மூன்றிலும் தேர்ச்சிகொண்ட கலைஞன் பாலகிருஷ்ணன். சந்தர்ப்பங்களாலும், சூழ்நிலைகளாலும் வெற்றியைத் தொலைத்து புகழின்மையின், புறக்கணிப்பின் இருட்டில் போதையின் மடியில் சரணடைந்து மரணமடையும் கதாபாத்திரம். ‘சலங்கை ஒலி’ படத்தின் தொடக்கத்தில் இளம் நாட்டியக் கலைஞர் சைலஜாவிடம், எப்படி நடனமாட வேண்டுமென்று ரௌத்திரம் கொண்டு ஆடி நிகழ்த்திக் காண்பிப்பது, தோற்ற கலைஞனின் அத்தனை நிராசை உணர்வுகளையும் மீறி அவனுடைய கம்பீரத்தைக் காண்பிக்கும் காட்சி. சமூகப் போராளி * சத்யா சூழ்நிலைகளின் அழுத்தம் தாளாமல் நாயகன் வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் கேங்க்ஸ்டர் வகைப்படங்களில் இந்திய அளவிலேயே முன்னோடிக் கதாபாத்திரம் ‘சத்யா’ படத்தில் வரும் சத்யமூர்த்தி. வீட்டுக்கு வெளியே அநீதிகளைக் கண்டு பதைபதைத்து, களத்தில் இறங்கிப் போராடுபவனாக இருந்தாலும் வீட்டில் சித்தியின் வசைகளைக் கேட்டுக் கூனிக்குறுகும் இரண்டு மனநிலைகளையும் இந்தப் படத்தில் சத்யமூர்த்தி அநாயாசமாகச் சாதித்திருப்பார். வேலையின்மை, இந்திய, தமிழக அரசியல் சூழலின் பின்னணியில் 80-களின் இறுதியில் மிஞ்சியிருந்த சமூகக் கோபத்தின் இளமைப் பிரதிநிதி சத்யா. அக்காலகட்டத்தில் இந்தியாவில் அதிகப் பயணம் செய்து கிரிக்கெட் ரசிகர்களிடையே புகழ்பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திரமான விவியன் ரிச்சர்ட்ஸ், சத்யமூர்த்தியின் சற்றே முடிவளர்ந்த மொட்டைத் தலையில் இருக்கிறார். காவியத்தலைவன் * நாயகன் கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் அநாயாசமாகச் சாதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் வேலு நாயக்கர். இளம்பருவம் தொடங்கி முதுமை வரை, தமிழ் நினைவில் இன்னும் பலகாலம் வாழப்போகும் கதாபாத்திரம். தன்னையும் தன் நண்பரும் ஊழியருமான டெல்லி கணேஷையும் கேலிசெய்யும் குழந்தைகளைச் செல்லமாகத் துண்டால் துரத்திய அதே இடத்தில் வளர்ந்த மகள், உலகமே பயம்கொள்ளும் தன் தந்தையை அவமானப்படுத்துகிறாள். அவருடைய நண்பரையும் அவமானப்படுத்துகிறாள். அவரது குற்றப் பின்னணியை விமர்சிக்கிறாள். அப்போதும் தன் கண்ணுக்கு முன்னர் கைக்கெட்டிய தூரத்தில் அருமையாக விளையாடிக்கொண்டிருக்கும் பேரனைக் கூடக் கொஞ்ச முடியாமல் தன் அன்பையும் வெளிப்படுத்த முடியாமல் மகள் வீட்டிலிருந்து வெளியேறும் இடத்தில் ஒரு இந்திய, தமிழ் தந்தையைப் பிரமாதமாக வெளிப்படுத்திவிடுவார் வேலு நாயக்கர். ஆதித் தமிழன் * விருமாண்டி பேத்தியாள் வளர்த்த முரட்டுச் செல்லப் பிள்ளையாக, தமிழ்க் கிராமத்தின் சகல புழுதிகளிலிருந்தும் எழுந்த கதாபாத்திரம் விருமாண்டி. அன்பு, குரோதம், வன்மம் அத்தனையையும் நாகரிகமாக வெளிப்படுத்தாத தமிழ் குலதெய்வங்களின் சாயல் கொண்டவன். படத்தின் தொடக்கத்தில் அறிமுகமாகும்போதே ஜல்லிக்கட்டுக் காளையைப் போல, துள்ளிக்குதித்து அறிமுகமாகும் விருமாண்டி, தன் பாட்டியைப் புதைக்கப் போகும்போது அந்தக் குழியில் விழுந்து அழும்போது தமிழ்க் குணம் ஒன்றை ஏற்றிவிடுகிறான். சரித்திரத்தின் ரணம் * ஹேராம் நடிகனாக மட்டுமல்ல; ஒரு இயக்குநராக கமலுக்கு மட்டுமல்ல; தமிழ் சினிமாவுக்கும் மிக முக்கியமான படைப்பு ‘ஹேராம்’. இந்து-முஸ்லிம் கலவரத்தில் தனது மனைவியை இழந்த தொல்லியல் ஆய்வாளன் சாகேத ராமன், காந்தியைக் கொல்வதற்காக கோட்சேயைப் போலக் கிளம்புகிறான். பின்னர் காந்தியின் அகிம்சையைப் புரிந்துகொள்கிறான். மதக் கலவரங்களையும், தேசப் பிரிவினையையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட மிகச் சிறந்த படங்களில் ஒன்றான ‘ஹேராம்’ல் நண்பன், காதலன், அன்புக் கணவன், பழி தீர்ப்பவன், சமாதானம் அடைபவன் எனப் பலமுகம் காட்டுபவன் சாகேத ராமன். அழகிய கிழவி * அவ்வை சண்முகி அவ்வை சண்முகி என்ற கதாபாத்திரத்தை, காதல் மன்னன் ஜெமினிக்குச் செய்யப்பட்ட மரியாதை என்றே சொல்லிவிடலாம். அன்பான தாய், மரியாதையான மனுஷி, அத்தனை வயதிலும் கிழவர் ஜெமினி கணேசனை சண்முகி என்று உபாசிக்கத் தூண்டும் காதலி என அவ்வை சண்முகி எடுத்த அவதாரம் அரிதானது. ஜெமினி தொடங்கி மணிவண்ணன் வரைக்கும் கணக்கேயில்லாமல் ஜொள்ளுவிடும் ஆண்களிடம் அவர் வெளிப்படுத்தும் அல்லலும் தவிர்ப்பதற்குச் செய்யும் சாமர்த்தியங்களும் சிரிக்கவைத்துக் கொண்டேயிருக்கும். கைவிடப்பட்ட கோமாளி * அபூர்வ சகோதரர்கள் சாப்ளினின் ‘சர்க்கஸ்’, ‘சிட்டி லைட்ஸ்’ திரைப்படங்களைப் பார்க்கும்போதுதான், கோமாளியின் வலி என்னவென்பது புரியும். எல்லாரையும் மகிழ்ச்சிப்படுத்துபவன்; ஆனால், அந்த மகிழ்ச்சிக்காக நினைவு கூரப்படாதவன் தான் கோமாளி என்பதை சாப்ளின் உணர்த்தியிருப்பார். ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில், சர்க்கஸ் குள்ளனான அப்புவிடம் வெளிப்படும் சோகம் கோமாளி யுடையதுதான். மௌனச் சித்தன் * பேசும் படம் இந்திய சினிமாவில் மௌனப்பட யுகம் முடிவடைந்த பின்னர் தயாரிக்கப்பட்ட உரையாடலே இல்லாத முதல் முழுநீளப் படம் இது. வேலையற்ற வாய்ப்பு வசதிகளற்ற ஓர் ஒண்டுக்குடித்தன பிரம்மசாரி உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்படுகிறான். அதுவும் லாட்டரி போலக் கிடைக்கிறது. ஆனால், அதற்கு அவன் கொடுக்கும் விலை என்ன என்பதை அமைதியாகச் சொல்லும் படம். ஒரு கைவிரலுக்குள் நடிகர்களை அடக்கிவிடலாம். பெயரே அற்ற அந்த நாயகன் தினசரி பார்க்கும் பிச்சைக்காரன் ஒருவனுக்கு மரணம் நேர, அவன் சேர்த்து வைத்த பணம் பறக்கும் காட்சியில் கமல்ஹாசன் படத்தின் மொத்தச் செய்தியையும் தன் முகத்தில் வெளிப்படுத்திவிடுவார். அவன் வாழ்க்கையில் மந்திர ரோஜாவாக வெளிப்படும் காதல் அமலாவுடையது. சிங்கீதம் சீனிவாசராவ், கமல்ஹாசன், இசையமைப்பாளர் எல். வைத்தியநாதன் சேர்ந்து செய்த இந்த ரசவாதத்தை இந்தத் தலைமுறையினர் பெரும்பாலும் பார்ப்பதற்கு வாய்க்கவேயில்லை.World Actor The GENIUS ONly KAMALHASSAN
18 likes
10 shares
#மாலை வணக்கம் #கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼 #ரெங்கா! #renga-vamba! ராஜபார்வை ஒரு பார்வை சினிமா விகடன் கட்டுரை சினிமாத் துறையில் கமல்ஹாசன் செய்த பல பரிசோதனை முயற்சிகள், முன்னோடியான ஆக்கங்கள் போன்றவற்றை இன்று நாம் வியக்கிறோம் அல்லவா? ஆனால் இதன் குறிப்பிடத்தக்க முதல் மைல் கல் என்று ‘ராஜ பார்வையை’ சொல்லலாம். இது கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ‘ஹாசன் பிரதர்ஸ்’ தயாரித்த முதல் திரைப்படம். (பின்பு இந்த நிறுவனத்தின் பெயர் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலாக மாறியது). கமல் நடன உதவி இயக்குநராக திரைப்படத்துறையில் நுழைந்த விஷயம் நமக்குத் தெரியும். அவர் மெல்ல மெல்ல நடிகராக முன்னேறிய சமயத்தில் இயக்குநர் பாலசந்தரின் பார்வையில் பட்டு மேலதிகமாக பிரகாசிக்கத் தொடங்கினார். ஆனால் உள்ளுக்குள் அவருக்கு ஓர் ஆசை இருந்தது. அது திரைப்பட இயக்குநராவது. ஆனால் அப்போது அவரது விருப்பத்திற்கு முட்டுக்கட்டையிட்டார் பாலசந்தர். “நீ எப்போது வேண்டுமானாலும் இயக்குநராகலாம். ஆனால் நடிகன் என்கிற வாய்ப்பைத் தவறவிட்டால் பின்பு கிடைக்காது. பொருளாதார ரீதியாக உன்னை நிலைநிறுத்திக்கொண்ட பிறகு உன் விருப்பமான திரைப்படங்களை உருவாக்கு” என்று மிக முக்கியமானதோர் அறிவுரையைத் தந்தார் பாலசந்தர். குருநாதரின் பேச்சைத் தட்டாமல் கேட்டதால் கமல் என்கிற அற்புதமான நடிகர் நமக்குக் கிடைத்தார். அல்லாமல் அன்றே அவர் இயக்குநராக முயற்சி செய்திருந்தால் ஒருவேளை அப்போதே காணாமல் போயிருக்கக்கூடும். இளம் வயதிலேயே கமல்ஹாசனுக்கு உலக சினிமாக்களின் பரிச்சயம் இருந்தது. ஆர்.சி. சக்தி, சந்தானபாரதி என்று கமலுக்கு நெருக்கமாக இருந்த நண்பர் குழு ‘சாம்கோ ஹோட்டலில்’ அமர்ந்து தாம் கண்ட சிறந்த அயல் திரைப்படங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். பாலசந்தரிடம் துணை இயக்குநராகப் பணிபுரிந்த அனந்து உலக சினிமாவில் தனக்கிருந்த ஆர்வத்தைக் கமலிடம் அவ்வப்போது கடத்திக்கொண்டிருப்பார். கோடார்ட், ஃபெலினி என்று மிகச்சிறந்த ஐரோப்பிய இயக்குநர்களின் படைப்புகளை கமல் கண்டிருப்பதும் அதைப் பற்றி விவாதிப்பதும் சுஜாதாவின் பத்தி எழுத்துக்களின் மூலம் நமக்குத் தெரிய வருகிறது. எனவே அவை போன்ற நல்ல சினிமாக்களின் குறைந்த பட்ச முயற்சியையாவது தமிழில் நிகழ்த்த வேண்டும் என்கிற தணியாத ஆர்வம் கமலுக்குள் கனன்று கொண்டிருந்திருக்க வேண்டும். இப்படியோர் உள்ளார்ந்த விருப்பத்தை ஒருபுறம் உள்ளே வைத்துக்கொண்டு மரத்தைச் சுற்றி டூயட் பாடும் சாதாரணப் பாத்திரங்களில் நடிப்பதென்பது ஒரு கலைஞனுக்கு மனஉளைச்சலைத் தரும் விஷயம். சினிமாவில் தன் இருப்பை வலுவாக நிலைநிறுத்திக் கொள்வதற்காக கமல் செய்த சமரசம் என்று இதைச் சொல்லலாம். ராஜபார்வை - கமலின் 100வது படம்! உள்ளுக்குள் கனன்றுகொண்டிருந்த நெருப்பு முதல் கனலாக வெளிவருவதற்கு 99 திரைப்படங்கள் வரை கமல் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆம். ‘ராஜபார்வை’ கமல்ஹாசனின் நடிப்பில் வெளிவந்த நூறாவது திரைப்படம். பார்வையற்ற ஓர் இசைக்கலைஞன், ஓர் அழகான பெண்ணுடன் காதலில் விழுவதும் அவர்களின் திருமணத்தில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களும்தான் இந்தத் திரைப்படம். இதைக் கலைப்படம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் வெளிவந்துகொண்டிருந்த பெரும்பாலான வெகுசன சினிமாக்களிலிருந்து கணிசமான அளவு விலகி நின்ற மாற்று முயற்சியாக இருந்தது. பொதுவாக தமிழ் சினிமாவின் காதலர்களுக்குத் தடையாக இருப்பது சாதி அல்லது வர்க்கமாக இருக்கும். ஆனால் இதில் நாயகனுக்கு இருக்கும் குறைபாடு தடையாக இருந்தது. அதுவரையான இந்திய சினிமாக்களில் பொதுவாக கண் பார்வையற்ற கதாபாத்திரம் என்றால் கையில் குச்சியைக் கொடுத்து கறுப்புக்கண்ணாடியை மாட்டி விட்டு விடுவார்கள். ஆனால் இந்தத் திரைப்படத்தில் கறுப்புக் கண்ணாடி அணியாமல் பார்வையற்றவர்களின் உடல்மொழியைச் சிறப்பாக வெளிப்படுத்திருந்தார் கமல். ராஜபார்வை பொதுவாக கமல் சிறந்த திரைப்படத்தை உருவாக்கினாலும் அதில் எந்தவொரு ஹாலிவுட் திரைப்படத்தின் வாசனையாவது இருக்கிறதா என்று திரை ஆர்வலர்கள் தேடுவது உண்டு. ‘ராஜ பார்வை'யும் இதற்கு விதிவிலக்கில்லை. ஆம். 1972-ல் வெளிவந்த ‘Butterflies Are Free’ என்கிற அமெரிக்கத் திரைப்படத்தின் அழுத்தமான சாயலை ராஜபார்வை கொண்டிருந்தது. இதன் க்ளைமாக்ஸ் காட்சி, 1967-ல் வெளிவந்த ‘The Graduate’ என்கிற திரைப்படத்தின் க்ளைமாக்ஸின் அப்பட்டமான பாதிப்பில் உருவாக்கப்பட்டிருந்தது. `Butterflies Are Free’ இந்தத் திரைப்படமானது, லியோனார்ட் கெர்ஷே என்கிற அமெரிக்க நாடக ஆசிரியர் எழுதிய நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. டான் என்கிற கண் பார்வையற்ற இளைஞன், தன்னை மிகவும் கட்டுப்படுத்தும் தாயிடமிருந்து விலகி ஒரு விடுதியில் தங்கியிருக்கிறான். அவன் ஒரு கிட்டார் வாத்தியக்காரன். அங்கு பக்கத்து அறைக்குக் குடிவருகிறாள் ஜில் என்கிற இளம்பெண். ஜில் ஏறத்தாழ ஒரு ஹிப்பி வாழ்க்கையை வாழ்பவள். திருமணமாகி ஏழாம் நாளிலேயே விவாகரத்து பெற்றவள். சுதந்திரமாக வாழும் எண்ணத்தை உடையவள். டானுக்கும் ஜில்லுக்கும் குறைந்த நாள்களிலேயே மிக ஆழமான நட்பு உருவாகிறது. தனிமையில் உழலும் டான், ஜில்லின் களங்கமற்ற அன்பில் கரைந்து போகிறான். டானின் தாயின் வருகை இவர்களின் உறவில் ஒரு புயலை வீசுகிறது. ஜில் தன் சுபாவப்படி பிரிந்து போகத் தயாராக இருக்கிறாள். டான் மனதளவில் உடைந்து போகிறான். பிறகு என்னவாகிறது என்பதை நெகிழ்வுபூர்வமாக விவரிக்கிறது இறுதிக்காட்சி. நாடகத்தை அடிப்படையாகக்கொண்ட திரைப்படம் என்பதால் பெரும்பாலான காட்சிகள் உள்ளரங்கிலேயே நடைபெறும். டானாக எட்வர்ட் ஆல்பர்ட்டும் ஜில் ஆக கோல்டி ஹானும் மிகச் சிறந்த நடிப்பைத் தந்திருந்தார்கள். டானின் தாயாக நடித்திருந்த எலைன் ஹெக்கார்டின் நடிப்பும் குறிப்பிடத்தகுந்தது. இவர் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார். ராஜபார்வையின் பிரதான பகுதி, இந்த அமெரிக்கத் திரைப்படத்தின் தூண்டுதலிலிருந்து உருவாகியிருக்கலாம் என்பதற்குப் பல காட்சிகள் சாட்சியமாக உள்ளன. ராஜபார்வை திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க பல அம்சங்கள் உள்ளன. படத்தின் தொடக்கமே ஒரு சேஸிங் காட்சிதான். கெளபாய் உடை அணிந்த ஒருவன் குதிரையிலிருந்து தாவி ஒரு வண்டிக்குள் ஏறுகிறான். பின்னணியில் டிரம்ஸ்ஸும் வயலின்களும் பரபரப்பான இசையைத் தருகின்றன. வண்டியில் வீரமுடன் தாவி ஏறியவன், பயணிகளின் கையால் அடிவாங்கி பரிதாபமாக விழுகிறான். திரை அப்படியே பின்னுக்குச் செல்லும் போது அது ஒரு ரீ-ரெக்கார்டிங் காட்சி என்பதை அறிகிறோம். இசைக்கலைஞர்கள் அந்தக் காட்சியின் மிகைத்தன்மையைக் கண்டு சிரிக்கிறார்கள். இது வெகுசன சினிமாக்களின் மீது கமலுக்கு இருந்த உள்ளார்ந்த கிண்டலின் வெளிப்பாடு என்று கருதலாம். ராஜபார்வை இசையமைப்பாளாக ஜி.வெங்கடேஷ் தோன்றி டிரம்ஸ் வாசிப்பவரிடம் (அபஸ்வரம் ராம்ஜி) சில திருத்தங்களைச் சொல்கிறார். அனைத்து இசைக்கலைஞர்களின் முன்னாலும் இசைக்குறிப்பு எழுதப்பட்ட தாள் இருக்க, ஒருவரின் முன்னால் மட்டும் அது இல்லை. நாயகனுக்குக் கண்பார்வையில்லை என்கிற செய்தி ‘நச்’சென்று பார்வையாளர்களுக்கு ஒரு சிறு அதிர்ச்சியுடன் சொல்லப்படுகிறது. டிரம்ஸ் ஒலிக்க பின்னணியில் டைட்டில் ஒடுகிறது. எந்தெந்த துறையை யார் கையாண்டார்கள் என்கிற குறிப்புடன் டைட்டில் காட்டப்படுவதுதான் அதுவரையான வழக்கம். (இன்றும் கூட). ஆனால் முதலிலேயே இந்த ஒழுங்கு கலைக்கப்படுகிறது. இயக்குநர், ஒளிப்பதிவாளர் என்று எந்தத் துணைக்குறிப்பும் இல்லாமல் பெயர்கள் மட்டும் வரிசையாக ஓடுகின்றன. நாம்தான் யூகித்துக் கொள்ள வேண்டும். பார்வையற்ற நாயகனைக் கொண்ட திரைப்படத்தின் தலைப்பு அதற்கு முரணாக ‘ராஜபார்வை’ என்று வைக்கப்பட்டிருப்பதே சுவாரஸ்யம். படத்தின் உள்ளே இதற்கொரு லாஜிக் சொல்லப்பட்டிருக்கிறது. நீதி தேவதையின் கண்கள் கறுப்புத் துணியால் கட்டப்பட்டிருப்பதன் காரணமாக எப்படி பாரபட்சமின்றி நீதி வழங்கப்படுகிறதோ, பார்வையற்றவர்களும் அப்படியே மற்றவர்களை சமமாக ‘பார்க்கிறார்களாம்’. இதன் casting வரிசையும் சுவாரஸ்யமானது. மிக அழகான கண்களைக்கொண்டிருக்கும் மாதவியை இதன் நாயகியாக இட்டிருப்பது மிகப் பொருத்தமாக இருக்கிறது. பல ஃபிரேம்களில் இவருடைய கண்களின் அழகு மனதைக் கொள்ளை கொள்கிறது. ராஜபார்வை எல்.வி.பிரசாத் – இந்திய சினிமாத்துறையில் ஒரு முக்கியமான பெயர். ‘தாதாசாகிப் பால்கே விருது’ பெற்ற இவருக்கு தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், ஸ்டூடியோ உரிமையாளர் என்று பல முகங்கள் உண்டு. குறிப்பாக தெலுங்கு சினிமாவின் முக்கியமான அடையாளம். இவர் ஏற்கெனவே சில படங்களில் நடித்திருந்தாலும் பல ஆண்டுகள் கழித்து ‘ராஜபார்வைக்காக’ அணுகிய போது நடிக்கத் தயங்கினாராம். பிறகு, ‘ஒரு நாள் மட்டும் நடிக்கிறேன். அது எப்படி வந்திருக்கிறது என்பதைப் பார்த்த பின்புதான் நடிப்பதைத் தொடர்வேன்’ என்று நிபந்தனை விதித்தாராம். இந்தத் திரைப்படத்தில் குறும்பும் நகைச்சுவையும் பேத்தியின் காதலுக்கு ரகசியமாக உதவும் தாத்தாவாக இவரின் பாத்திரம் சுவாரஸ்யமானது. வயதை மறக்க வைத்த துள்ளலுடன் இவர் நடித்திருந்தது சிறப்பாக இருந்தது. ராஜபார்வை அதே சமயத்தில் தெலுங்கிலும் தயாராகிக் கொண்டிருந்ததால், தெலுங்கு ரசிகர்களுக்காக இவரின் பாத்திரம் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று யூகம். தங்களுக்குப் பரிச்சயமான ஒரு முகம் இருந்தால் இதர மாநிலங்களின் ரசிகர்கள் அந்நியமாக உணர மாட்டார்கள். பிற்காலத்தில் மிகவும் பரவலாக உபயோகிக்கப்பட்ட இந்த வணிக உத்தியை முதலில் பயன்படுத்தியவராக கமலைச் சொல்லலாம். நாயகனின் சித்தியாக K. P. A. C.லலிதா அட்டகாசமாக நடித்திருந்தார். நாயகனிடமுள்ள சொத்துதான் இவரது நோக்கம் என்றாலும் அதை மறைத்து தேனொழுக பேசி அன்பு காட்டும் பாத்திரத்தை மிகச் சிறப்பாக கையாண்டிருந்தார். மலையாள ரசிகர்களுக்காக இவரின் பாத்திரம் சேர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் இதர தென்னிந்திய மொழிகளில் கமல் ஏற்கெனவே பார்வையாளர்களை கணிசமாக சம்பாதித்து வைத்திருந்தார் என்பதையும் சொல்லியாக வேண்டும். ராஜபார்வை இது தவிர கமலின் சகோதரர்களான சந்திரஹாசன், சாருஹாசனும் சிறிய பாத்திரங்களில் தோன்றியிருந்தார்கள். சந்தானபாரதி, கங்கை அமரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், வி.கே.ராமசாமி, சித்ரா, டெல்லி கணேஷ் ஆகியோரும் வந்து போனார்கள். கமலின் நண்பனாக நடித்திருந்த ஒய்.ஜி.மகேந்திரன் தனது நகைச்சுவையின் மூலம் காட்சிகளின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தினார். இவர் கமலுக்கு முகச்சவரம் செய்து கொண்டே.. ‘அப்படின்னா.. நானெல்லாம் எதுக்கு இருக்கேன்.. செரைக்கறதுக்கா..?” என்று தன்னிச்சையாகக் கேட்டு விடும் காட்சி நகைப்புக்குரியது. ‘ரிடிகுலஸ்.. ரிடிகுலஸ்’.. என்று ஹைப்பர் டென்ஷன் ஆசாமியாக மகளின் காதலை எதிர்த்து அவ்வப்போது வெடிக்கும் தந்தை பாத்திரத்தை தனுஷ்கோடி ஏற்றிருந்தார். பார்வையற்றவர்களின் நடைமுறை வாழ்வியல் இந்தப் படத்தின் காட்சிகளில் மிக அருமையாகச் சொல்லப்பட்டிருக்கும். இந்தத் திரைப்படம் உண்மையிலேயே ‘ராஜ பார்வை’யைப் பெற்றிருந்தது எனலாம். ஆம். இதற்கு இசை இளையராஜா. பார்வையற்றோர்களின் பள்ளியில் சிறார்கள் பாடும் மிக நெகிழ்வான வரிகளில் தொடங்கி அப்படியே அதை ரொமான்ஸின் உச்சிக்குக் கொண்டு செல்ல ராஜாவால்தான் முடியும். ‘அந்திமழை பொழிகிறது’ என்னும், இன்றைக்கும் தன் இளமையை இழக்காத பாடல்தான் அது. இளையராஜா + வைரமுத்து என்னும் புதிய காவியக்கூட்டணி பட்டையைக் கிளப்ப ஆரம்பித்திருந்த நேரம். ‘சிப்பியில் தப்பிய நித்திளமே… ரகசிய ராத்திரி புத்தகமே’ என்று வார்த்தைகளில் மதுவைக் கலந்து கிறக்கத்தை ஏற்படுத்தினார் வைரமுத்து. எஸ்.பி.பி & எஸ்.ஜானகி என்னும் கூட்டணி இந்தப் பாடலை அதன் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது. ராஜபார்வை சோகமான பாடலின் இடையே உற்சாகம் கொப்பளிக்கும் இடையிசையை உறுத்தல் இல்லாமல் மிக ஒத்திசைவுடன் கலக்கும் லாகவம் ராஜாவிற்கே உரியது. ‘விழியோரத்துக் கனவும் வந்து’ என்கிற பாடலில் இந்த மாயாஜாலம் நிகழ்ந்திருக்கும். ‘விடியும் எனும் பொழுதில் வந்து இருள் மூடிடுதே’ என்கிற மிக அருமையான வரியுடன் கூடிய இந்தப் பாடலை எழுதியிருந்தவர் கங்கை அமரன். கமல்ஹாசன் மற்றும் சசிரேகா இந்தப் பாடலை உருக்கமாகப் பாடியிருந்தார்கள். சசிரேகாவின் மிக இயல்பான குரல் இந்தப் பாடலுக்குத் தனி அடையாளத்தைக் கொடுத்தது. ‘அழகே அழகு’ என்னும் பாடலை எழுதியிருந்தவர் கண்ணதாசன். பார்வையற்ற நாயகன், தன் இணையின் அழகை தொட்டுத் தடவி விவரிக்கும் பாடல். ‘ஒரு அங்கம் கைகள் அறியாதது’ என்பதில் கவிஞரின் குறும்பு வெளிப்பட்டிருக்கும். ஜேசுதாஸ் இந்தப் பாடலை மிக அருமையாகப் பாடியிருந்தார். இந்தித் திரைப்படங்களில் பணிபுரிந்துகொண்டிருந்த பரூன் முகர்ஜி என்கிற வங்காளக்காரர்தான் இதன் ஒளிப்பதிவு. ‘அந்திமழை பொழிகிறது’ என்கிற மாண்டேஜ் பாடலில் ஒளிப்பதிவு பிரமாதமாக அமைந்திருக்கும். மரத்தில் சாய்ந்து நின்றிருக்கும் கமலின் ஓவியம் அப்படியே மெல்ல மெல்ல காட்சியாய் மாறுவதை பிற்காலத்திய கிராஃபிக்ஸ் ஜாலங்களின் முன்னோடி பரிசோதனை எனலாம். இதைப் போலவே மாதவி, தன் காதலைச் சந்திப்பதற்காக மிக பரபரப்பாக காத்துக்கொண்டிருக்கும் போது அவருக்கு மட்டும் நேரம் மிக மிக மெதுவாக ஓடுவது போன்று சித்திரிக்கப்பட்டிருக்கும் காட்சிக் கோர்வை சுவாரஸ்யமானது. ஒரே ஃபிரேமில் மாதவியின் அசைவு இயல்பாக அமைந்திருக்க, மற்றவர்களின் அசைவு ஸ்லோ மோஷனில் வருவது ஒளிப்பதிவாளரின் திறமைக்குச் சான்று. ராஜபார்வை கமலின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான சிங்கீதம் சீனிவாசராவ் இந்தத் திரைப்படத்தை அற்புதமாக இயக்கியிருந்தார். கமல்ஹாசனோடு இணைந்து சந்தானபாரதி, அனந்து, பாலகுமாரன் ஆகியோரும் வசனம் எழுதுவதில் தங்களின் பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். இப்படியொரு திறமைசாலிகளின் கூட்டணியால் உருவானதின் காரணமாக, இன்றைக்கும் ‘ராஜபார்வை’ தன் இளமை உற்சாகத்தை இழக்கவில்லை என்பதை இப்போதைய தலைமுறையினர் இந்தத் திரைப்படத்தைப் பார்ப்பதின் மூலம் உணர முடியும். முகநூல் பதிவு தரவு. நன்றி: புன்னகை மன்னன்
6 likes
19 shares
#🌙இரவு வணக்கம் #ரெங்கா! #renga-vamba! சமகால இளைய தலைமுறையினர், கமல் என்னும் கலைஞனின் முழுமையான பரிமாணத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்றால் அவரின் திரைப்பயணத்தில் உள்ள மிகச்சிறந்த திரைப்படங்கள் அனைத்தையும் அவர்கள் பார்த்தாக வேண்டும். . கமல்ஹாசனின் திரைப்பட வரிசையில் மிக முக்கியமான திரைப்படம் ‘மூன்றாம் பிறை’. கமல் மட்டுமல்ல, ஸ்ரீதேவி என்கிற நடிப்புப் பிசாசையும் அறிந்து கொள்ள இந்தப் படத்தை நீங்கள் கட்டாயம் பார்த்தாக வேண்டும். அழகு + திறமை ஆகிய இரண்டும் ஒருங்கே அமையப்பெற்ற பிரத்யேகமான நடிகைகளுள் ஸ்ரீதேவி முக்கியமானவர் ‘மூன்றாம் பிறை’ திரைப்படத்திற்காக ‘சிறந்த நடிகர்’ பிரிவில் கமல்ஹாசனுக்கும் ‘சிறந்த ஒளிப்பதிவாளர்’ பிரிவில் பாலுமகேந்திராவிற்கும் தேசிய விருது கிடைத்தது. ஆனால், ஸ்ரீதேவிக்கும் தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும் என்பதே பலரின் ஆதங்கமாக இருந்தது. அந்தளவிற்கு அவர் தன் திரைப்பயணத்தில் மிகச் சிறந்த நடிப்பை தந்த படம் இது. அதிலும் கமல்ஹாசன் போன்றதொரு நடிப்பு ராட்சசன் இருந்தும் அவர் தனிப்பட்ட வகையில் பிரகாசித்ததை ஒரு சாதனை என்றே சொல்லலாம். ஓர் இளம் பெண் விபத்தில் சிக்குகிறாள். அவளுடைய நினைவுகள் தற்காலிகமாக அழிந்துபோகின்றன. 6 வயது வரைக்குமான நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. எனவே, உடலளவில் வளர்ந்திருந்தாலும் மனதளவில் அவள் ஒரு சிறுமிதான். இப்படியொரு குழந்தையை பாலியல் விடுதியிலிருந்து மீட்டெடுக்கிறான் ஓர் இளைஞன். தன்னுடனே வைத்து பராமரிக்கிறான். . ஆனால், இவனுடைய முயற்சியில் ஒரு நாள் அவளுக்கு பழைய நினைவுகள் திரும்புகின்றன. துரதிர்ஷ்டவசமாக இவன் அப்போது அருகில் இருக்க முடியாத சூழல். கடைசி முறையாக இவளைப் பார்த்து விட முடியாதா என்று ஓடி வந்து கீழே விழுந்து அடிபட்டு ரயில் நிலையத்திற்கு வருகிறான். ஆனால், அவளால் இவனை அடையாளம் காணவே முடியவில்லை. “விஜி... சீனு... விஜி...” என்று முன்னர் குரங்கு போல் பாவனை செய்து அவளை சிரிக்க வைத்த சேஷ்டைகளை இப்போதும் செய்து காட்டுகிறான். ம்ஹூம்... அத்தனையும் வீண். ‘விஜி’ என்கிற அவனுடைய தோழி, நினைவு திரும்பி ‘பாக்யலஷ்மி’யாக திரும்பிப் போவதை அவனால் தடுக்க முடியவில்லை. மூன்றாம் பிறை அழுகையும் துயரமுமாக கிளம்பிச் செல்லும் ரயிலின் பின்னாடியே ஓடி வந்து இரும்புத் தூணில் கமல் முட்டிக்கொண்டு கீழே விழும் போது அவருக்கு வலித்ததோ... இல்லையோ... பார்வையாளர்களுக்கு அத்தனை வலித்தது. இந்தியச் சினிமாவின் மிகச் சிறந்த கிளைமாக்ஸ்களைக் கணக்கெடுத்தால் அதில் ‘மூன்றாம் பிறை’ உத்தரவாதமாக இடம் பெறும். கிரிக்கெட் ஆட்டத்தில் ஒருவர் எதிரணியிடம் நீண்ட நேரம் தாக்குப் பிடித்து அதிக ரன்களை எடுத்து அவுட் ஆகியிருப்பார். ஆனால், பரபரப்பான இறுதி ஓவரில் ஒருவர் வந்து அட்டகாசமாக ஆடி மேட்ச்சை வென்று தருவார். பார்வையாளர்களின் கவனம் முழுவதும் இவர் மீது வந்து விழுந்துவிடும். இதிலும் அப்படியே! படம் முழுக்க ஸ்ரீதேவி அபாரமாக ஸ்கோர் செய்திருப்பார். கமலும் சிறப்பாகவே நடித்திருப்பார். ஆனால் கிளைமாக்ஸில் கமல் வெளிப்படுத்திய இந்த அசுரத்தனமான நடிப்பு அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்துவிட்டது. ‘உடலால் இளம்பெண், உள்ளத்தால் 6 வயது சிறுமி’ - இப்படியொரு விநோதமான பாத்திரத்தை ஸ்ரீதேவியைத் தவிர வேறு யாராவது திறம்பட கையாண்டிருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஸ்ரீதேவிக்கு இயல்பிலேயே களங்கமற்ற முகமும் உடல்மொழியும் இருந்ததால் இது சாத்தியமாயிற்று. இந்தப் படத்திலிருந்து ஓர் உதாரணக்காட்சி. கமல் தந்த புடவையை ஸ்ரீதேவி கட்டிக்கொண்டு வர வேண்டும். கமலின் மனக்கண்ணில் ஒரு காட்சி வரும். அதில் புடவை விளம்பரத்தில் வருவது போல் மிக நேர்த்தியான ஒப்பனையுடன் புடவையை கச்சிதமாக கட்டிக் கொண்டு வரும் ஸ்ரீதேவியை மலைப்புடன் பார்ப்பார் கமல். கண்களில் ரொமான்ஸ் பொங்கும். ஆனால், சிறிது நேரத்திலேயே அது தன் பகல் கனவு என்று தெரிந்து விடும். அடுத்த காட்சியில் ‘பப்பரப்பே’ என்று புடவையை கன்னாபின்னாவென்று தன் உடல் மீது சுற்றிக் குழந்தைத்தனமாக நிற்பார் ஸ்ரீதேவி. மூன்றாம் பிறை இந்த சிறிய காட்சிக் கோர்வையில் இரண்டு விதமாகவும் ஸ்ரீதேவி தந்திருக்கும் நடிப்பை மட்டும் பார்த்தாலே போதும், இந்தப் படத்திற்கு அவரை விட்டால் வேறு எவரும் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று எவருக்கும் தோன்றிவிடும். உடல் ரீதியாக வளர்ந்த பெண்ணாக இருந்தாலும் அதில் ஒரு சிறுமியின் உடல்மொழியை வெளிப்படுத்துவது அத்தனை எளிதான விஷயமல்ல. அடக்கி வாசித்தால் சரியாக வராது. மிகையாகச் சென்றால் ‘ஓவர் ஆக்ட்’ ஆகி கதாபாத்திரமே செத்து விடும். இந்த இரண்டிற்கும் இடையில் ஓர் ஆறு வயது சிறுமியின் உடல்மொழியை மிக கச்சிதமாக வெளிப்படுத்தியிருப்பார் ஸ்ரீதேவி. பாலியல் விடுதியில் இவரைச் சந்திக்கும் கமல், “வீடு எங்க?” என்று விசாரிக்கும்போது “கோயில் பக்கத்துல… குளம் இருக்கும்.. புறால்லாம் இருக்கும்.. கைத்தட்டினா பறந்து போயிடும்” என்று மலங்க மலங்க விழித்து திக்கித் திணறி வீட்டிற்கு வழி சொல்லும் காட்சி அத்தனை அழகு. அதில் ஒரு குழந்தையை மட்டுமே நம்மால் காண முடியும். அது போலவே கமலுடன் ஊட்டியில் ரயிலில் வந்து இறங்கிய பிறகு... திறந்திருக்கும் கம்பார்ட்மென்ட்டின் கதவுகளை வரிசையாக இவர் மூடிக்கொண்டே வருவது சிறார்களுக்கே உள்ள குணாதிசயம். இதை அழகாக வெளிப்படுத்தியிருப்பார் ஸ்ரீதேவி. இப்படி அந்தப் பாத்திரத்திற்கேற்ற பல நுண்விவரங்களை இயக்குநர் யோசித்து காட்சியில் வைத்திருந்தாலும், இயல்பு கெடாதவாறு அதை வெளிப்படுத்திய ஸ்ரீதேவிக்கு எத்தனை விருது கொடுத்தாலும் தகும். கைவிரலை சூப்பிக் கொண்டு ஸ்ரீதேவி தூங்கும் ஒரு க்ளோசப் காட்சியில், ஒரு குழந்தையைப் போலவே அவரை நம்மால் உணர முடியும். மூன்றாம் பிறை ஸ்ரீதேவி ஒருபுறம் இப்படி கலக்கிக்கொண்டிருக்க, இன்னொருபுறம் அவரை ஓவர் டேக் செய்ய முயன்று கொண்டேயிருப்பார் கமல். ஸ்ரீதேவியைக் காணாமல் ஊர் பூராவும் தேடும் காட்சி ஒன்றே போதும். எங்கும் காணாமல் துயரத்துடன் அவர் வீட்டில் நுழையும் போது, போர்வையை போர்த்திக்கொண்டு திருவிழாவில் காணாமல்போன சிறுமி மாதிரி மலங்க மலங்க விழித்துக் கொண்டு அமர்ந்திருப்பார் ஸ்ரீதேவி. அதைக் கண்டதும் கமலின் முகத்தில் தோன்றும் பாவங்கள் அத்தனை அட்டகாசமாக இருக்கும். “சீனு….” என்று அழைத்தபடி கமலை ஓடி வந்து கட்டிக் கொள்வார் ஸ்ரீதேவி. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஸ்ரீதேவியிடம் மேலதிக பாசத்தைக் காட்டுவார் கமல். சின்ன சின்ன அசைவுகள், முகபாவங்கள் போன்ற மெனக்கெடல்களைத் தந்து ஒரு காட்சியின் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதில் கமல் வல்லவர். . இதிலும் குரங்கு போல் மேலே இருந்து குதிப்பது, பல்ட்டி அடிப்பது, ஒரு நாற்காலியில் இருந்து இன்னொன்றிற்கு தாவுவது போன்ற விஷயங்களை மிக அநாயசமாக செய்வார். உடலை இதற்காக தயார் செய்து வைத்திருந்தால்தான் இது சாத்தியமாகும். க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் மலைச்சரிவுகளில் இருந்து வேகமாக இறங்கி, காரில் அடிபட்டு, சகதியில் விழும் காட்சிகள் எல்லாம் அத்தனை இயல்பாக இருக்கும். இந்த இரு பிரதான பாத்திரங்களைத் தவிர இன்னொரு சுவாரஸ்யமான பாத்திரமும் உண்டு. ஆம்.. ‘ச்சுப்பிரமணி... ச்சுப்பிரமணிக்குட்டி’ என்று வாய்க்கு வாய் ஸ்ரீதேவி அழைக்கும் ஒரு நாய்க்குட்டி. ‘மூன்றாம் பிறை’ திரைப்படத்தின் பார்வையாளர்கள் பெரும்பான்மையோரால் மறக்க முடியாத பெயர் இந்த ‘‘ச்சுப்பிரமணி’... கீச்சென்ற குரலில் அத்தனை அழகாக கூப்பிடுவார் ஸ்ரீதேவி. இந்தப் படத்தின் இன்னொரு முக்கிய பாத்திரம் ‘சில்க்’ ஸ்மிதா. கமல் பணிபுரியும் பள்ளியின் முதலாளியின் இரண்டாம் தாரமாக இருப்பார். . வயதான கணவர் என்பதால் தீராத காமத்துடன் ஸ்மிதா, கமல்ஹாசனுக்கு தூண்டில் இடுவது போல் சில காட்சிகள் அமைந்திருக்கும். கவர்ச்சியான பாத்திரம் என்றாலும் கூட இதையும் ஒருவித தனித்தன்மையுடன் படைத்திருப்பார் இயக்குநர். ஆனால், இந்தப் பாத்திரம் அமைக்கப்பட்டதற்கு ஒரு நுட்பமான காரணம் உண்டு என்பதை உணர முடியும். உள்ளத்தால் குழந்தையென்றாலும் உடலால் ஸ்ரீதேவி ஓர் இளம்பெண். கமலுடன் அவர் தங்கும்போது கமலுக்கு தன்னிச்சையாக தவறான எண்ணம் ஏதும் தோன்றியிருக்குமோ என்று பார்வையாளர்கள் சந்தேகப்பட வாய்ப்புண்டு. எனவே, கமலை ‘நேர்மையானவர், எளிதில் சபலத்திற்கு ஆளாகாதவர்’ என்பதை நிறுவ, ஸ்மிதாவின் பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று யூகிக்க முடியும். ஆனால், ஒரு காட்சியில் ஸ்மிதாவின் அழைப்பை மறுத்த கமல், ‘உங்க கணவரோட உப்பைச் சாப்பிட்டிருக்கேன்’ என்று வசனம் பேசுவது சற்று நெருடல். எனில் கமலுக்கு அது மட்டும்தான் பிரச்னையா என்று தோன்றிவிடும். கவர்ச்சிக்காகத்தான் ஸ்மிதாவின் பாத்திரம் இணைக்கப்பட்டது என்றாலும் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தியிருப்பார் ஸ்மிதா. "...ச்சீனு…” என்று ஸ்ரீதேவி, கமலை அழைப்பது குழந்தைத்தனமாக இருக்கும் என்றால் இவரும் ‘ச்சீனு..’ என்று கமலை கிறக்கத்துடன் அழைப்பது அத்தனை சுவாரஸ்யமாக இருக்கும். (ஸ்மிதாவிற்கு டப்பிங் குரல் தந்தவர் அனுராதா). “பகவானே... என்ன சோதனை இதெல்லாம்” என்று புலம்பும் மிடில் கிளாஸ் ஆசாமியாகத்தான் பெரும்பான்மையான திரைப்படங்களில் பூர்ணம் விஸ்வநாதனை கண்டிருப்போம். அவர் இதில் ஸ்மிதாவின் கணவராக வருவார். சட்டையைக் கழற்றி விட்டு முகத்தில் மோகம் பொங்க ஸ்மிதாவின் கவுன் ஜிப்பை இவர் கழற்றும் போது நமக்கு அறிமுகமில்லாத ‘வேறொரு ஆசாமியைப்’ பார்ப்பது போல விநோதமாக இருக்கும். (‘பகவானே.. இது என்ன சோதனை!" என்று மனதில் நினைத்திருப்பார் பூர்ணம்.) இளையராஜா பாலுமகேந்திராவின் ரசனையையும் எதிர்பார்ப்பையும் நன்கு அறிந்தவர் அவர். 'மூன்றாம் பிறை’ படத்தின் ஆல்பத்தில் ஐந்து பாடல்கள் உண்டு. இதன் ஆல்பம் என்றாலே பலருக்கும் உடனே நினைவிற்கு வருவது ‘கண்ணே.. கலைமானே’ பாடல்தான். கேட்கும் ஒவ்வொரு முறையும் மனதை உருக வைக்கும் தாலாட்டுப் பாடல் இது. இதை மேடையில் பாடும் ஒவ்வொரு முறையும் கண்ணீர் விடுவார் பிரபல பாடகர் உஷா உதூப். தனது பிரத்யேகமான கந்தர்வ கான குரலில் பாடி நெகிழ வைத்து விடுவார் ஜேசுதாஸ். `கண்ணே... கலைமானே’ இந்தப் பாடல்தான் கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசிப் பாடல் என்பது எல்லோருக்கும் தெரியும். இதை கண்ணதாசனே அப்போது உள்ளூற உணர்ந்திருந்ததுதான் ஆச்சர்யம். அடுத்த பாடல் ‘பூங்காற்று புதிரானது’. இதுவும் கண்ணதாசன் எழுதியதுதான். பாலுமகேந்திராவின் பிரத்யேகமான ‘மாண்டேஜ் ஷாட்களின்’ மூலம் கமலுக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையேயான நேசம் வளர்ந்து வருவது கவிதைத்தனமாக சொல்லப்பட்டிருக்கும். இந்த ஆல்பத்தின் இன்னொரு ‘க்யூட்டான’ பாடல் ‘வானெங்கும் தங்க விண்மீன்கள்’… இன்றைக்கு கேட்டாலும் புத்துணர்ச்சியை அடையும் படி நவீன பாணியில் இசையமைத்திருப்பார் இளையராஜா. படத்தின் துவக்கத்தில் வரும் பாடல் இது. இதன் இறுதியில் நடக்கும் விபத்து காரணமாகத்தான் ஸ்ரீதேவி பழைய நினைவுகளை இழப்பார். இந்தப் பாடலின் ஒரு காட்சியில் ஸ்ரீதேவி நளினமாக நடந்து வருவதைப் பார்க்க அத்தனை அட்டகாசமாக இருக்கும். இந்தப் பாடலை எழுதியவர் வைரமுத்து. எஸ்.பி.பியும் ஜானகியும் அருமையாகப் பாடியிருப்பார்கள். ஸ்ரீதேவிக்கு கமல் ‘நரிக்கதை’ சொல்வது போல் ஒரு பாடல் அமைந்திருக்கிறது. இதை அவர்களே பேசி, பாடி நடித்திருந்தது ஒரு புதுமையான அம்சம். ‘மூன்றாம் பிறை’ திரைப்படத்தின் நாயகியாக நடிக்க முதலில் ஸ்ரீப்ரியா அணுகப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. ஸ்ரீப்ரியாவும் திறமையான நடிகைதான் என்றாலும் ஸ்ரீதேவியின் அளவிற்கு உயரத்தை எட்டியிருக்க முடியுமா என்கிற சந்தேகம் எனக்கு உண்டு. கமல், ஸ்ரீதேவி மீது காட்டுவது ஒரு குழந்தையின் மீது காட்டும் பாசம்தானா, அல்லது அதையும் மீறிய உணர்வா என்பது மிக நுட்பமாக சில காட்சிகளில் பதிவாகியிருக்கும். கத்தி மீது நடக்கும் விளையாட்டு போன்றது இது. இந்த விஷயத்தை மிக லாகவமாக கையாண்டிருப்பார் பாலுமகேந்திரா. புடவையை மிக நேர்த்தியாக கட்டி வரும் ஸ்ரீதேவியை கமல் பார்க்கும் காட்சியில் காதல் தெரியும். அதிலும் சிலவற்றை உணர முடியும். இன்னொரு காட்சியில், கமலின் பக்கத்து வீட்டில் இருக்கும் பாட்டி “ஏம்ப்பா.. இப்படி ஒரு வயசுப் பொண்ணைக் கூட்டிட்டு வந்துட்டியே.. ஊர் உலகம் என்னப்பா சொல்லும்?” என்று ஒரு எதார்த்தமான கேள்வியைக் கேட்பார். “ஊரு கெடக்கு பாட்டி..” என்று சொல்லும் கமல்ஹாசன் ‘என்னமோ தெரில பாட்டி.. அவளைப் பார்த்தவுடனே.. எனக்கு ‘அவ’தான்னு தோணுச்சு’ என்பார். சில காட்சிகள் மட்டுமே வந்தால் பக்கத்து வீட்டுப் பாட்டி நம்மை மிகவும் கவர்ந்து விடுவார். சிறந்த நடிகர் (கமல்), சிறந்த ஒளிப்பதிவாளர் (பாலுமகேந்திரா) என்று இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற இந்தத் திரைப்படம், தமிழ்நாடு அரசின் விருதுகளையும் வென்றது. 80-களில் வெளியான அதிசிறந்த திரைப்படங்களைப் பட்டியலிட்டால் அதில் ‘மூன்றாம் பிறை’ மிக உறுதியாக இடம் பெறும். அத்தனை சிறந்த படம். கமல் மற்றும் ஸ்ரீதேவியின் அற்புதமான நடிப்பு, இளையராஜாவின் அபாரமான இசை, பாலுமகேந்திராவின் எதார்த்தமான கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் போன்ற காரணங்களுக்காக இந்தத் திரைப்படம் இளைய தலைமுறையினரால் கட்டாயம் கண்டு ரசிக்கப்பட வேண்டிய ஒரு படைப்பாகும். #கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼 Genius ONLy the Kamal Hassan. முகநூல் பதிவு தரவுகளில் இருந்து
6 likes
12 shares