உலக போர்#
3 Posts • 269 views
👑 மூன்றாம் உலகப்போர் வந்தால் அப்போது பணம் எல்லாம் செல்லாமல் போய்விடும் . வங்கிகள் எல்லாம் காணாமல் போய் திவால் ஆகிவிடும். பணம் என்பது காகிதம் ஆகிவிடும். 👑 போர் வந்தாள் உணவுகள் மட்டுமே உன்னதமான பொருளாக மாறிவிடும் . நீங்கள் எதைக் கொடுத்தாலும் உணவு மட்டும் கிடைக்காத சூழலுக்கு போய்விடும் . நீங்கள் தற்போது போர் நடந்து கொண்டிருக்கும் நாடுகளில் குழந்தைகளுக்கு உணவு கிடைக்காமல் அலைவதை சில காணொளிகளில் பார்த்திருப்பீர்கள். 👑 இதற்கு உலகத்தில் இருக்கும் உயர்ந்த பணக்காரர்கள் எல்லாம் ஆயத்தமாகி விட்டார்கள் . நிலத்தை வாங்கி தனக்கான உணவை தானே உற்பத்தி செய்ய துவங்கி விட்டார்கள். 👑 விவசாயமே செய்ய முடியாத பாலைவனமான அரபு நாடுகளில் எல்லாம் இப்போது விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ❓ 👑 தங்கத்தின் விலை ஒரு நாள் தகரத்தின் விலைக்கு மட்டமாக குறையும் இவையெல்லாம் ஒரு ஏமாற்று வேலை . பாவம் பாமர மக்கள் தான் தங்கத்தை சேமிப்பிற்காக வாங்கி குவித்துக் கொண்டிருக்கிறார்கள். 👑 பிறகு எப்படி தங்கம் இல்லாமல் பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுக்க முடியும் என்போருக்கு எனது ஒரு அறிவுரை. தங்கம் போட்டு அனுப்பினால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற ஒரு ஆணுக்கு உங்கள் பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுக்காதீர்கள் அப்படிப்பட்ட ஆண் உங்கள் பெண் குழந்தைகளை ஒருபோதும் ஆனந்தமாக வைத்து குடும்பம் நடத்த மாட்டார்கள். 👑 அதற்கு பதிலாக உங்கள் பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள் உயர்ந்த பதவிகளை வாங்கி கொடுங்கள் சிறந்த கல்வியை கொடுங்கள் அது மட்டுமே அழியாத சொத்தாக எப்போதும் இருக்கும். 💚அன்புடன் உங்கள் 🌿இயற்கையாளன் தவம் #3ஆம் உலக போர் ரஷ்யா #உலக போர் #3ஆம் உலக போர் 🌋🌪️ #உலக போர் அனாதைகள் தினம் ஜனவரி-6 #உலக போர்#
11 likes
9 shares
S. Ramachandran
504 views
*வரலாற்றில் இன்று* அக்டோபர் 31 475 : ரோமுலஸ் அகஸ்டுலஸ் மேற்கு ரோமப் பேரரசராக முடி சூடினார். 683 : மெக்கா முற்றுகையின் போது காபா தீப்பற்றி அழிந்தது. 802 : பைசண்டைன் பேரரசி ஐரீன் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். நிதி அமைச்சர் நிகபோரஸ் பேரரசராக நியமிக்கப்பட்டார். 1517 : கிறிஸ்தவ சீர்திருத்த இயக்கம் :- மார்ட்டின் லூதர் தனது 95 கொள்கைகளை ஜெர்மனியின் விட்டன்பர்க் தேவாலய வாசலில் வெளியிட்டார். 1754 : நியூயார்க்கில் கொலம்பியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. 1803 : ஆங்கிலேயப் படைகள் பண்டாரவன்னியின் படைகள் மீது முல்லைத்தீவில் தாக்குதல் நடத்தின. இதில் பலர் கொல்லப்பட்டனர். 1837 : மிசிசிப்பியில் இரு படகு மோதிய விபத்தில் 300 பேர் உயிரிழந்தனர். 1863 : நியூசிலாந்தில் நிலை கொண்ட பிரிட்டிஷ் படைகள் வைக்காட்டொ என்ற இடத்தில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மவோரி போர் மீண்டும் ஆரம்பமானது. 1864 : நெவாடா அமெரிக்காவின் 36 வது மாநிலமாக இணைந்தது. 1876 : தென்னிந்தியாவின் கிழக்குக் கரையில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியில் இரண்டு லட்சம் பேர்வரை உயிரிழந்தனர். 1913 : அமெரிக்காவின் முதலாவது நெடுஞ்சாலை லிங்கன் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது. 1918 : முதலாம் உலகப் போர்:- ஆஸ்திரியா-ஹங்கேரி 1867 -ம் ஆண்டு ஒப்பந்தம் கைவிடப்பட்டு ஹங்கேரி முழுமையான விடுதலை அடைந்தது. அமெரிக்காவில் ஒரே வாரத்தில் 21 ஆயிரம் பேர் வைரஸ் காய்ச்சலினால் உயிரிழந்தனர். 1931 : தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் சென்னையில் திரையிடப்பட்டது. 1937 : ஸ்பெயின் அரசாங்கம் வலென்சியாவிலிருந்து பார்சிலோனாவுக்கு இடம்பெயர்ந்தது. 1940 : இரண்டாம் உலகப்போர் :- பிரிட்டன் போர் முடிவுற்றது. 1941: இரண்டாம் உலகப் போர்:- ஐஸ்லாந்து அருகில் அமெரிக்கக் கப்பல் ஒன்றை ஜெர்மனிப் படகு தாக்கி மூழ்கடித்ததில் 100 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். இங்கிலாந்தில் ஆடைத் தொழிற்சாலை ஒன்று தீப்பற்றியதில் 49 பேர் உயிரிழந்தனர். 1954 : அல்ஜீரியாவில் பிரெஞ்சு ஆக்கிரமிப்புக்கு எதிராக அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணி போராட்டத்தை ஆரம்பித்தது. 1956 : சூயஸ் நெருக்கடி :- பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் சூயஸ் கால்வாயை திறக்க வற்புறுத்தி எகிப்தின் மீது குண்டுகளை வீசின. 1963 : இன்டியானாவில் பனிக்கட்டி சறுக்கல் களியாட்ட விழாவில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 74 பேர் பலியானார்கள். 1968 : வியட்நாம் போர் :- பாரிஸ் அமைதிப் பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து வடக்கு வியட்நாம் மீதான அனைத்து தாக்குதல்களையும் நவம்பர் 01 லிருந்து நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் அறிவித்தார். 1969 : வால்மார்ட் தொடங்கப்பட்டது. 1979 : மெக்ஸிகோ நகரில் வெஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று விழுந்ததில் 73 பேர் உயிரிழந்தனர். 1984 : இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பின்னர் டெல்லியில் இடம்பெற்ற கலவரத்தில் 3,000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமராக பதவியேற்றார். 1991: ஜப்பானில் தேயிலை அறிமுகப்படுத்தப்பட்டு 800 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தபால் தலை வெளியிடப்பட்டது. பெங்களூரில் நடந்த ரயில் விபத்தில் 36 பேர் இறந்தனர். 1994 : அமெரிக்கன் ஈகிள் விமானம் இன்டியானாவின் ரோஸ்லான் அருகே விபத்துக்குள்ளானதில் விமானத்திலிருந்த 68 பேரும் உயிரிழந்தனர். 1996 : பிரேஸிலின் விமானம் ஒன்று சாவோ பாலோவில் விழுந்ததில் 99 பேர் உயிரிழந்தனர். 1999 : எகிப்து விமானம் ஒன்று மாசாசூசெட்ஸில் விழுந்ததில் அதில் பயணம் செய்த 217 பேரும் உயிரிழந்தனர். ஜெசி மார்டின் 11 மாதங்கள் பாய்மரக் கப்பலில் தனியே இடைவிடாது உலகை சுற்றிவந்து மெல்போர்ன் திரும்பினார். 2000 : சிங்கப்பூர் விமானம் தைவானில் விபத்துக்குள்ளாகியதில் 83 பேர் உயிரிழந்தனர். வடக்கு அங்கோலாவில் தனியார் விமானம் வெடித்துச் சிதறியதில் 50 பேர் உயிரிழந்தனர். 2003 : 22 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் மலேசியப் பிரதமர் மகதிர் பின் முகமது தமது பதவியைத் துறந்தார். இவர் 2018 ல் மீண்டும் தனது 92 வயதில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 : உலக மக்கள் தொகை 700 கோடியைத் தாண்டியதாக அறிவிக்கப்பட்டது. 2015 : மெட்ரோஜெட் விமானத்தை வடக்கு சினாயில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதில் 224 பேர் கொல்லப்பட்டனர். 2018 : குஜராத் மாநிலத்தில் வல்லபாய் பட்டேல் சிலை திறந்து வைக்கப்பட்டது. #தெரிந்து கொள்வோம் #வரலாறு #உலகம் #போர்
9 likes
17 shares