ஆன்மிகதகவல்
10 Posts • 5K views
RamaswamyAnnamali
814 views 12 days ago
#ஆன்மீகத் தகவல்🙏🙏 தோஷம், பித்ரு சாபம் என்றால் என்ன? அதன் பாதிப்புகள் பற்றி இப்பதிவில் விளக்கமாக அறிந்துக் கொள்வோம்! 💥"பித்ரு தோஷம், பித்ரு சாபம் என்பது, ஒருவருக்கு அவருடைய முன்னோர்களால் வருவதாகும். ஒரு மகன் தன்னுடைய தாய்- தந்தையை உயிருடன் இருக்கும் பொழுது கவனிக்காவிட்டால் கூட, பசியால் வாடிய போதும், துன்பத்தை அனுபவித்த போதும், அந்த தாயும் தந்தையும் தன்னுடைய பிள்ளையை சபிக்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் இறந்த பிறகு சாபம் இடுவார்களா என்ன? 💥"பித்ரு தோஷம் (சாபம்) என்பது, நம் தாய், தந்தை, தாத்தா, பாட்டியால் வருவது அல்ல. அவர்களை சரியாக பராமரிக்கா விட்டால், பித்ரு தேவதைகள் நமக்குக் கொடுக்கக் கூடிய சாபம் தான், "பித்ரு சாபம்" ஆகும். இதனால் நம்முடைய வாழ்வில் பலவிதமான துன்பங்கள் ஏற்படுகிறது. நமக்கு பித்ருக்களின் தோஷம் அல்லது சாபம் இருக்கிறதா? பித்ருக்கள் நம் மீது கோபத்தில் இருக்கிறார்களா என்பதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். 💥#பித்ருதோஷம் : 💥"நமது வாழ்வில் நடக்கும் சில நிகழ்ச்சிகளை வைத்து நமக்கு பித்ரு தோஷம் உள்ளதா என்பதை அறியலாம். மேலும் துல்லியமாக அறிய நம் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் பேரருள் பெற்ற ஜோதிடர் ஐயாவை அணுகுவது சிறப்பு. அவர்கள் நமது ஜாதகத்தைப் பார்த்து பித்ரு தோஷம் உள்ளதா என்பதை அறிந்து கூறுவார். 💥#பித்ருக்களின் #கோபத்தை #காட்டும் #அறிகுறிகள் : 💥"திருமண தடை, குழந்தையின்மை : தக்க வயது வந்தும் உங்கள் வீட்டில் உங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணம் நடப்பதில் தாமதம் ஏற்படுவது. எந்த வரன் வந்தாலும் தட்டிச் செல்வது, பொருத்தம் அமையாமல் போவது போன்ற சில பல காரணங்களால் திருமணத்தில் தடை இருப்பது. ஒரு சிலருக்கு திருமணம் நடந்தும் பலஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது ஆகியவை முன்னோர்கள் தீராத கோபத்தில் இருக்கிறார்கள் என்பதைக் காட்டும் அறிகுறிகள் ஆகும். 💥#கனவில் #முன்னோர்கள்! 💥"இறந்த நமது மூதாதையர்கள் கனவில் வந்து அமைதியாக இருந்தால் தோஷம் எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் நமது கனவில் வந்து அழுதால் அவர்கள் மன வருத்தத்தில் உள்ளார்கள் என்று அறியலாம். அவர்களது மன வருத்தமே நமக்கும் நமது சந்ததியர்க்கும் சாபமாக மாறும். அதை நீக்க அவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்ய வேண்டும். பித்ருதோஷம் நீங்க அவசியம் தோஷ நிவர்த்தி பூஜை செய்து கொள்ளவேண்டும், ஏழை எளியவர்கள் மற்றும் தேவையான வர்களுக்கு தானங்கள் அளிப்பதாலும் பித்ருக்கள் மனம் மகிழ்ந்து, மன அமைதி பெறுவார்கள். 💥#சாப்பாட்டில் #தலைமுடி : 💥"உங்களுடைய சாப்பாட்டில் அடிக்கடி தலைமுடி இருக்கிறது என்றால் அதற்கு பித்ருக்களின் தோஷமே காரணமாக இருக்கும். உங்களின் பித்ருக்கள் பசியுடன் இருப்பதையும், நிறைவேறாத ஆசைகளுடனும், மன அமைதியின்றி வருத்தத்துடன் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் தான் உணவில் அடிக்கடி தலைமுடி தென்படுவது. 💥#வாழ்க்கையில் #பயம், #கவலை : 💥"எந்த காரணமும் இல்லாமல் மனதிற்குள் ஏதோ ஒரு பய உணர்வும், பதற்றமும், கவலையும் உங்களுக்கு இருந்து கொண்டே இருப்பதாக உணர்ந்தால் அதற்கு பித்ரு தோஷம் காரணமாக இருக்கும். உங்களின் முன்னோர்கள் உங்கள் மீது அதிருப்தியில் இருப்பதை காட்டுவதன் வெளிப்பாடே ஆகும். வீட்டிலும் அடிக்கடி சண்டை வருவதும், இறுக்கமான சூழ்நிலை இருப்பதற்கும் இது தான் காரணம். 💥#வாழ்வில் #முன்னேற்றம் #இன்மை: 💥"நீங்கள் எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் உங்கள் செயல்களில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது. நீங்கள் முக்கியமான விஷயங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் ஏதாவது ஒரு தடை ஏற்பட்டுக் கொண்டே இருப்பது, சொல்ல முடியாத அளவிற்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருப்பது, வாழ்க்கையில் முன்னேற அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் தேக்க நிலையை எதிர் கொள்வது போன்றவை யாவும் முன்னோர்கள் உங்கள் மீது வருத்ததுடனும் கோபத்துடனும் உள்ளார்கள் என்று பொருள். 💥#தந்தை.#தாய் #சொத்துக்கள்: 💥"தாய்.தந்தையர் தான் உழைத்து சம்பாதித்த சொத்துக்களை அவர்கள் உயிருடன் இருக்கும் போது பெற்றோரை கொடுமைப்படுத்தி மிரட்டி அவர்களிடம் கையெழுத்து வாங்கி தன் பெயரில் பத்திரம் மாற்றி எழுதிக்கொள்வது போன்ற செயல்களினால் அவர்கள் உயிருடன் இருக்கும் போது இறந்த பிறகும் அவர்களுக்கு ஆன்மா மனவேதனையுடன் இருக்கும்.. 💥"நாம் வாழ்க்கையில் சனி.ராகு.கேது பிடியில் சிக்கும் போதும் பித்ருக்காரனாகிய சூரிய திசை, மாத்ருக்காரனாகிய சந்திர திசை நடக்கும் போதும் அவர்களுக்கு பித்ரு சாபம் இருந்தால் அப்போது மனதாலும் உடல் ரீதியாகவும் துன்பத்தை அனுபவிக்க வைத்து விடும்! 💥"பித்ரு தோஷம் இருந்தால் அது வம்சாவளியாக தொடரும்! இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் எவருக்கேனும் சனி.ராகு.கேது திசை இருந்து ராகு- கேது கால சர்ப்ப தோஷங்கள் இருந்தால் அவர்கள் மிகுந்த துன்பங்களை அனுபவிக்க வைக்க செய்து விடும்... 💥பித்ரு தோஷம் இருந்தால் அவர்களுக்கு பித்ருக்கள் ஆசி இருக்காது! பித்ருக்கள் ஆசி இல்லையெனில் குலதெய்வத்தின் அருள் இருக்காது! குடும்ப ஜாதகத்தில் ஏழரை சனி, சனி திசை, ராகு திசை, கேது திசை நடந்துக் கொண்டிருக்கும் போது பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம் இருந்தால் நாம் குலதெய்வம் கோவிலுக்கு எத்தனை முறை சென்றாலும் நமக்கு நற்பலன் ஏற்படாது! 💥"குலதெய்வத்திற்கு படையல் வைத்து மனகுளிர செய்ய முயற்சித்தாலும் குலதெய்வம் முதலில் பித்ருக்களிடம் கேட்கும்.உன் பிள்ளை வந்திருக்கான்.. ரொம்ப கஷ்டப்படறேன் காப்பாத்துங்க என கேட்கறான் உதவலாமா? என கேட்கும்.அப்போது பித்ருக்கள் கண்ணீர் விட்டபடி எனக்கு தர்ப்பணம் பண்றதில்லை.. அமாவாசைக்கு வீட்டில் எங்களை நினைத்து படைப்பதில்லை எங்களை நினைத்துக்கூட பார்ப்பதில்லை என பித்ருக்கள் கண்ணீர் விட்டால் அடுத்த நொடி குலதெய்வத்தின் கதவு மூடப்பட்டு விடும்... 💥"பிறகு எத்தனை கோவில் கோவிலாக சுற்றி வந்தாலும் எத்தனை சித்தர்கள் ஜீவ சமாதிக்கு சென்று வழிப்பட்டு வந்தாலும் நம் துன்பங்கள் நம்மை விட்டு போகாது. .பித்ரு தோஷத்தினால் துன்பத்தை அனுபவிததுக்கொண்டிருப்பவர்கள தான் இதை நன்கு உணர முடியும்.. நன்மையே நடக்கும். திருச்சிற்றம்பலம் 🙏 வாழ்க மகிழ்ச்சியுடன்.
10 likes
5 shares
RamaswamyAnnamali
648 views 1 days ago
#ஆன்மீகத் தகவல்🙏🙏 #🙏 ஓம் நமசிவாய அருள்பாலிக்கும்* சிவபெருமான் * அரிய திருக்கோலம் கொண்ட அதிசயத் திருத்தலம்* இந்தியாவில் பல சிவாலயங்கள் உள்ளன. ஆனால் சில தலங்களில் மட்டுமே பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வித்தியாசமான திருக்கோலங்கள் காணப்படுகின்றன. அவற்றில் மிகவும் அபூர்வமான ஒன்று, சிரசாசனத்தில் சிவபெருமான் காட்சி தரும் திருத்தலம் ஆகும். இந்த அதிசயத் தலம் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பீமாவரம் அருகே அமைந்துள்ள யமமருது பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் ஆலயம் ஆகும். இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமான் பக்தர்களுக்கு சாதாரணமாக அல்லாமல் சிரசாசன நிலையில், அதாவது தலைகீழாக தியானத்தில் இருப்பது போன்ற அபூர்வமான திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இந்த அரிய தரிசனம் பக்தர்களை வியப்பிலும் பக்தியிலும் ஆழ்த்துகிறது. சம்பாசுரன் என்ற அசுரனின் அகந்தை முன்னொரு காலத்தில் சம்பாசுரன் என்ற அசுரன் வாழ்ந்தான். அவன் மிகுந்த ஆற்றல் பெற்றவன். உலகை முழுவதும் ஆட்சி செய்ய வேண்டும் என்ற பேராசை அவனுக்குள் வளர்ந்தது. அந்த எண்ணத்துடன் அவன் கடுமையான தவம் மேற்கொண்டு **பிரம்மா**வைக் கண்டு வரம் பெற்றான். அந்த வரத்தின் வலிமையால் அவன் அளவுகடந்த அகந்தையுடன் நடந்துகொண்டான். தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தத் தொடங்கினான். அவன் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்தது. அஷ்ட திக் பாலகர்களுடன் போர் சம்பாசுரன் தனது ஆட்சியை விரிவுபடுத்தும் நோக்கில் அஷ்ட திக் பாலகர்களுடன் போரிட்டான். ஒவ்வொருவரையும் வென்றான். ஆனால் ஒருவரை மட்டும் வெல்ல முடியவில்லை. அவர் எமன். எமதர்மன் தனது கடமையை காப்பாற்ற உறுதியுடன் போரிட்டார். பல நாட்கள் கடுமையான யுத்தம் நடைபெற்றது. ஆனால் சம்பாசுரனுக்கு கிடைத்த வரத்தின் காரணமாக அவன் பலம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. எமனின் சக்தி மெதுவாக குறைந்து கொண்டே போனது. யமபுரி கைப்பற்றப்பட்டது இறுதியில் சம்பாசுரன் யமபுரியையே கைப்பற்றினான். தேவர்களை அவன் அடிமைப்படுத்தினான். மூவுலகமும் அவனது கொடுமையால் நடுங்கியது. இந்த நிலையில் எமதர்மன் வேறு வழியின்றி சிவபெருமானை நாடினார். எமனின் கடும் தவம் எமன் மனவேதனையுடன் சிவபெருமான் அருளை வேண்டி கடும் தவம் மேற்கொண்டார். அந்த சமயத்தில் சிவபெருமான் தற்போது உள்ள இந்தத் திருத்தலத்தில் ஆழ்ந்த தியானத்தில் சிரசாசன நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இறைவன் தியானத்தில் இருந்ததால் எமனின் தவம் உடனே பலிக்கவில்லை. எமன் மிகுந்த கவலையில் ஆழ்ந்தார். பார்வதி அன்னையின் அருள் அந்த நேரத்தில் கருணைமிகு பார்வதி தேவி எமனுக்கு காட்சி அளித்தார். அவரது அருகில் குழந்தை வடிவில் முருகன் இருந்ததாகக் கூறப்படுகிறது. எமனின் துயரத்தை கேட்ட பார்வதி அன்னை, “அசுரனை அழிக்க வேண்டிய சக்தி உனக்கு கிடைக்கும்” என்று அருள் வழங்கினார். அன்னையின் அருளால் எமன் புதிய சக்தி பெற்றார். சம்பாசுரன் அழிந்தான் புதிய வீரத்துடன் எமன் மீண்டும் சம்பாசுரனை எதிர்த்து போரிட்டார். இந்த முறை அந்தப் போர் நீண்டதாக இல்லை. பார்வதி அன்னையின் அருளால் எமன் மிகுந்த வீரத்துடன் போரிட்டு சம்பாசுரனை அழித்தார். இதனால் தேவர்கள் மீண்டும் தங்கள் நிலையை அடைந்தனர். மூவுலகமும் அமைதியை பெற்றது. யமன் செய்த பூஜை அதன் பின்னர் எமன் இந்தத் திருத்தலத்திற்கு வந்து: சிரசாசனத்தில் தியானித்துக் கொண்டிருந்த சிவபெருமானையும் குழந்தை முருகனை மடியில் தழுவியிருந்த பார்வதி அன்னையையும் பக்தியுடன் வழிபட்டார். இதனால் இந்தத் தலம் யமன் பூஜித்த புனிதத் தலம் என்ற பெருமையை பெற்றது. கருவறையின் அபூர்வ தரிசனம் இந்த ஆலயத்தின் கருவறையில் ஒரு மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. பொதுவாக சிவாலயங்களில் லிங்க வடிவில் சிவபெருமான் காட்சி தருவார். ஆனால் இங்கு: சிவபெருமான் சிரசாசனத்தில் மனித வடிவில் அருகில் பார்வதி அன்னை குழந்தை முருகனை மடியில் தழுவி தாய்மையின் பரிபூரண வடிவமாக அருள்பாலிக்கிறார். இந்த தரிசனம் பக்தர்களுக்கு மிகவும் அரிய ஆனந்தத்தை அளிக்கிறது. ம்ருத்யு தோஷம் நீக்கும் தலம் யமன் பூஜித்த தலம் என்பதால் இந்த ஆலயம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இங்கு தரிசனம் செய்தால்: ம்ருத்யு தோஷம் நீங்கும் யமபயம் குறையும் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு பிள்ளைபேறு கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். அதனால் இந்தத் திருத்தலத்திற்கு பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.
16 likes
13 shares