என் வீட்டுத் தோட்டத்தில்
74 Posts • 33K views
🎵Dad's Princess💖🎵
844 views 1 months ago
என் வீட்டுத் தோட்டத்தில் 🌱 என் வீட்டு தோட்டத்தில் நான் வளர்த்த செடிகளில் மலர்ந்த பூக்கள் மற்றும் துளசி மற்றும் காய்கறிகள் சீனி மிளகாய் வெள்ளை சீனி மிளகாய் இதில் சமைக்கும் பொழுது சமையல் மிகவும் ருசியாக இருக்கும் இந்த வெள்ளை சீனி மிளகாயிற்கு ஒரு தனி ருசி உள்ளது ...... இந்த வெள்ளை சீனி மிளகாய் சேர்த்து சமைக்கின்ற குழம்பு வகைகளுக்கு அதிக சுவை கூடுகிறது சாதாரணமாக குறைவாக சாப்பிடுபவர்களும் கூட இதை சேர்த்து சமைக்கும் பொழுது சற்று கூடுதலாகவே உண்டு விடுவது இயல்பு மற்றும் இதனை தயிர் மிளகாய் மற்றும் மோர் மிளகாய் ஊறவைத்து காயவைத்து வற்றல் மிளகாய்கள் எண்ணெயில் பொரித்து சாப்பிடும் பொழுது குழம்புக்கு வகைகள் எதுவும் தேவைப்படாது சிறிது மோர் அல்லது தயிர் மட்டுமே போதுமானது அதனுடன் இந்த மோர் மிளகாய் வற்றலை சேர்த்து சாப்பிட்டால் திருப்தியான உணவு உண்ட ஒரு திருப்தி மற்றும் புத்துணர்ச்சி கிடைக்கும் என் வீட்டு தோட்டத்து துளசியை தினமும் பறித்து என் கண்ணனுக்கு ஒரு துளசி மாலை சாற்றுவது வழக்கம் செம்பருத்திப் பூக்களை கொண்டு விநாயகருக்கு அணிவிப்பது சிறப்பு மேலும் சிவப்பு நிறத்தைச் பூக்கள் கடவுளுக்கு சமர்ப்பிக்கலாம் அது அம்மன் கோவிலுக்கும் கிருஷ்ணர் கோவிலாக இருந்தாலும் முருகன் கோவிலாக இருந்தாலும் எல்லா கோவில்களிலும் இந்த மலர்களை சமர்ப்பிக்கலாம் மேலும் நமது வீட்டில் நாமே நட்டு வளர்த்த செடியில் வளர்ந்த பூக்களை கோவிலுக்கும் மற்றும் நம் வீட்டில் உள்ள கடவுளின் புகைப்படங்களுக்கும் அணிவிப்பதில் ஒரு அலாதி இன்பம்....... நமது வீடுகளில் வெண்டைக்காய் கத்திரிக்காய் மற்றும் மிளகாய் போன்றவற்றை பயிரிடுவதால் நமக்கு மருந்து தெளிக்கப்பட்ட காய்கறிகளில் இருந்து விடுதலை மற்றும் இயற்கை முறையில் நமது வீடுகளில் அரிசி கழுவிய தண்ணீர் போன்றவற்றை மற்றும் காய்கறிகள் போன்றவற்றை கழுவிய நீர்களை ஒரு பெரிய பாக்கெட்டில் ஊற்றி வைத்து அதனை மறுநாள் இந்த செடிகளுக்கு தெளிக்கும்பொழுது செடி நன்கு வளர்வதோடு அதற்கு ஊட்டச்சத்தும் கிடைத்து விடுகிறது நம் வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தும் வெங்காயத்தோல் பழ தோல் போன்றவற்றை இந்த செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம் இதனால் செடிகளும் நன்கு வளரும் அதில் வளர்ந்த காய்கறிகளை சாப்பிடுவதால் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கிறது இந்த செடிகளில் முதலில் வளர்ந்த மிளகாய் மற்றும் வெண்டைக்காய் கத்திரிக்காய் போன்றவற்றை செடியிலேயே நின்று நன்கு காயும் வரை விட்டுவிட்டு அதனை வெயிலில் நன்கு காய வைத்து மழைக்கால துவக்கத்தில் அதன் விதைகளை பதியமிட வேண்டும் விதைகளைத் தூவினால் நீர் ஊற்றாமல் மழைக்காலத்தில் நன்கு செழித்து வளர்ந்து விடும் இப்படி செய்வதால் நமக்கு விதைகளும் கிடைக்கிறது நல்ல செடிகளை மீண்டும் பயிர் செய்ய ஏதுவாகிறது.. #நான் எடுத்த மொபைல் போட்டோ #என் வீட்டு தோட்டத்தில்# #என் வீட்டு தோட்டத்தில் #என் வீட்டுத் தோட்டத்தில் #என் வீட்டுத் தோட்டத்தில்
11 likes
2 comments 15 shares
🎵Dad's Princess💖🎵
1K views 5 months ago
என் வீட்டுத் தோட்டத்தில் காய்த்த வெள்ளை பூசணிக்காய் ..…. என் வீட்டில் காய்கறிகளின் தோல் விதைகள் மற்றும் வெங்காயத் தோல் போன்றவற்றை என் வீட்டு தோட்டத்துச் செடிகளுக்கு உரமாக பயன்படுத்துவது வழக்கம் நான் எந்த வித பூச்சி கொல்லி மருந்துகளோ உரங்களோ எதுவும் பயன்படுத்துவதில்லை இயற்கையான காய்கறிகள் பழங்களின் தோல் மற்றும் தண்ணீர் மட்டுமே பாய்ச்சுவது வழக்கம் அப்படி நான் காய்கறிகளின் தேவையற்ற பகுதிகளை செடிகளுக்கு உரமாக இடுவதன் மூலம் முளைத்த செடிகளா அல்லது இங்கு பல விதமான பறவைகள் தினமும் வரும் அவர்கள் கொண்டு வந்து இட்ட விதைகளா என்று தெரியவில்லை எப்படியோ தானாகவே முளைத்து விட்டது இந்த வெள்ளை பூசணி மற்றும் மஞ்சள் பூசணி செடிகள் ..... இந்தச் செடிகள் வந்ததும் எனக்குத் தெரிந்தாற் போல கயிறு மற்றும் பலகைகளை கொண்டு படர்த்திவிட்டேன் ஓரிரு வாரங்கள் மட்டுமே நீற்பாய்ச்சினேன் அதற்குள் மழை ஆரம்பித்து விட்டது அதன் பிறகு நான் நீர் பாய்ச்சுவதையும் நிறுத்தி விட்டேன் ஆரம்பத்தில் 50க்கும் மேற்பட்ட பூக்களோடு கூடிய காய்கள் ஒரு தக்காளி பருவத்தில் வந்ததும் தானாகவே உதிர்ந்து விழுந்து விடும் இப்படியே ஒரு மூன்று வாரம் தொடர்ந்தது ஒரு காய் கூட வளரவில்லை சரி இது வளராது போல இருக்கிறது ஏனெனில் நான் விவசாயத் தோட்டங்களில் பயன்படுத்துவது போல பூச்சிக்கொல்லி மருந்துகளோ உரங்களோ எதையும் நான் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் வளர்ந்ததால் அதற்கு இந்த பூச்சி தொல்லைகளை தாங்கும் சக்தி இல்லாமல் உதிர்ந்திருக்கலாம் என்று நினைத்தேன் எல்லோரும் என்னிடம் அது காய்க்காது உனக்கு பைத்தியம் அதை அப்படியே அப்புறப்படுத்தி விடு எதற்கு இப்படி குப்பை போல படத்திவிட்டு இருக்கிறாய் என்று கூறினார்கள் , சரி இந்த கொடிகளை அப்புறப்படுத்தி விடலாம் என்று நினைத்து அப்புறப்படுத்தலாம் என்று மெதுவாக அந்த கொடியில் கை வைத்ததும் என் கண்ணில் தென்பட்ட சிறிய சிறிய மஞ்சள் மற்றும் வெள்ளை பூசணிக்காய்.... ஆப்பிள் அளவிற்கு ஒரு பூசணிக்காயை கண்டேன் அருகிலேயே வெள்ளைப் பூசணிக்காய் மற்றும் 3 மஞ்சள் பூசணிக்காய் காய்த்திருந்தது சரி வளரும் போல தோன்றுகிறது சற்று தக்காளியை விட வளர்ந்து ஒரு ஆப்பிள் அளவிற்கு இருந்தது சரி இன்னும் வளருமா என்று பார்க்கலாம் என்று கவனித்த போது தான் அவைகள் வளரத் தொடங்கினர் ஓரிரு வாரத்தில் வளர்ந்து பெரிதாகி விட்டது இன்னும் வளரும் போல இருக்கிறது நான் அதை இன்று படம் பிடித்தேன் எந்தவிதமான பூச்சிக்கொல்லி மருந்துகளோ உரங்களோ பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் வளர்ந்த எனது மஞ்சள் பூசணிக்காய் மற்றும் வெள்ளை பூசணிக்காய் அதுவும் தினமும் மழையில் குளித்து சுத்தமாக பளிச்சென்று இருப்பதை பாருங்கள் 🤣 ஓரிரு நாட்களில் வளர்ந்த காய்களை பறித்து முதலில் சாமிக்கு படைத்து பிறகு அக்கம் பக்கத்து வீட்டாருக்கு கொடுக்க வேண்டும் எங்கள் ஊரில் மஞ்சள் பூசணிக்காயை மத்தன் என்றும் வெள்ளை பூசணிக்காயை கும்பளங்க என்றும் கூறுவர் மூன்று மத்தனும் ஒரு வெள்ளை பூசணிக்காய் மற்றும் அதனோடு ஒட்டியவாறு ஒரு சிறு வெள்ளை பூசணிக்காயும் காய்த்திருக்கிறது பாருங்கள் !🌱🥰 என் வீட்டு தோட்டத்தில் காய்த்த பூசணிக்காய் 🌱🥰 #என் வீட்டுத் தோட்டத்தில் #என் வீட்டுத் தோட்டத்தில் !! #பூசணிக்காய் #காய்கறிகள் #தோட்டம் காடு செய்வோம்
18 likes
10 shares