இந்தி எதிர்ப்பு
57 Posts • 35K views
Rationalist
573 views
பொள்ளாச்சி துப்பாக்கி சூடு பொய்யா? பராசக்தி படத்தில் காட்டப்படும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பொள்ளாச்சி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடக்கவே இல்லை எனப் பலர் வாதிடுகின்றனர். ஏனென்றால் கூகுளிடம் சென்று பொள்ளாச்சி துப்பாக்கி ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் சூடு தொடர்பான ஆவணங்கள் உண்டா என்றேன். உடனே அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என அது சாதித்தது. Anti Hindi Agitation Pollachi Police Gun firing. இணையம் முழுக்க தேடியதில் இந்தியன் எக்ஸ்பிரஸில் 1965 ல் Feb 13 ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஆங்கிலத்தில் வெளிவந்த செய்தி குறிப்பை கண்டறிந்து அதன் செய்தியை முதன் முறையாக இங்கு தொகுத்து இட்டிருக்கிறேன். படித்த அறிந்து பகிர்ந்து உதவவும். இல்லையென்றால் எல்லாமே பொய்யென்று நிரூபணமாகிவிடும்‌ "தலைப்பு: கலவரத்தை ஒடுக்க ராணுவம் நடவடிக்கை (படக்குறிப்பு 2: வியாழக்கிழமையன்று ஆவடிக்கு அருகே வன்முறையாளர்களால் பயணிகள் இறக்கிவிடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்ட 8 பெட்டிகள் கொண்ட பயணிகள் ரயிலின் எஞ்சிய பாகங்கள் இவை.) பொள்ளாச்சியில் வன்முறை கும்பலின் வெறியாட்டம்: மீண்டும் போலீஸ் துப்பாக்கிச் சூடு; பலி எண்ணிக்கை 46-ஆக உயர்வு இயந்திரத் துப்பாக்கிகளுக்கும், போலீஸ் தோட்டாக்களுக்கும் இதுவரை 46 உயிர்கள் பலியாகியுள்ளன. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று ராணுவம் களத்தில் இறங்கி நடவடிக்கை எடுத்தது. அங்கு நடத்தப்பட்ட இயந்திரத் துப்பாக்கி மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில், நான்கு வயதுக் குழந்தை உட்பட பத்து பேர் பலியாயினர். மாநிலத்தின் குறைந்தது 11 இடங்களில் இன்று நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மேலும் 16 பேர் கொல்லப்பட்டனர். பாண்டிச்சேரியில் நேற்று இரவு 4 பேர் கொல்லப்பட்டனர். இதன் மூலம் தற்போதைய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 46-ஆக உயர்ந்துள்ளது. திருச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவரும், சென்னிமலை, ஜோலார்பேட்டை, திருவொற்றியூர் மற்றும் ஆற்காடு ஆகிய இடங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். மாணவர் இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழு விடுத்த அழைப்பை ஏற்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு (ஹர்த்தால்) கடைபிடிக்கப்பட்ட போதிலும், வட ஆற்காடு மாவட்டத்தில் ஆரணி மற்றும் பேர்ணாம்பட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் அகரமாங்குடி மற்றும் மன்னார்குடி, மதுரை மாவட்டத்தில் கூடலூர் ஆகிய இடங்களில் கலவரங்களும் துப்பாக்கிச் சூடும் அமைதியைக் குலைத்தன. பொள்ளாச்சியில் ராணுவம் மத்திய அமைச்சர் திரு. சி. சுப்பிரமணியம் அவர்களின் சொந்த ஊரான பொள்ளாச்சியில், புதன்கிழமையன்று கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூடு தோல்வியடைந்தது. நகர் முழுவதும் தீ வைப்புச் சம்பவங்கள் மற்றும் பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்ததால், கோயம்புத்தூரிலிருந்து 7 லாரிகளில் ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு உடனடியாகக் களத்தில் இறக்கப்பட்டனர். மாநிலத்தில் ராணுவம் வரவழைக்கப்படுவது இதுவே முதல் முறை. அங்கு நடத்தப்பட்ட இயந்திரத் துப்பாக்கி மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில், நான்கு வயதுக் குழந்தை உட்பட பத்து பேர் பலியாயினர். சென்னையில் (மெட்ராஸ்) ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள தொலைபேசி பூத் ஒன்றிற்குத் தீ வைத்த கும்பலைக் கலைக்க, கடந்த இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாகப் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. திருச்சியில் பதற்றம் திருச்சியில் பிற்பகலில் இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடந்ததையடுத்து, ராணுவம் நகரின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டது. அஞ்சல் நிலையத்திற்குத் தீ வைத்த கும்பலைத் தனது வீட்டு வாசலில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 17 வயதுச் சிறுவன் உட்பட இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். மற்றுமொரு இடத்தில் காவல் நிலையம் மற்றும் அஞ்சல் நிலையத்தைத் தாக்கிய கும்பல் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. ரயில்வே மற்றும் பொதுச் சொத்துக்கள் நாசம் பல புறநகர் ரயில் நிலையங்களில் ரயில்வே கேபின்கள் மற்றும் விலை உயர்ந்த சிக்னல் கருவிகள் அழிக்கப்பட்டுக் கிடந்தன. நேற்றுத் தாக்கப்பட்ட கோடம்பாக்கம் ரயில் நிலையம் இன்றும் தாக்குதலுக்கு உள்ளானது. புறநகர் ரயில் சேவையைச் சீரமைக்கக் குறைந்தது இரண்டு வாரங்களாவது ஆகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, தியாகராய நகர் (T.Nagar) பகுதிகளில் தபால் பெட்டிகள் மற்றும் தொலைபேசிப் பெட்டிகள் பெயர்த்து எடுக்கப்பட்டு நடுரோட்டில் தீயிட்டு கொளுத்தப்பட்டன. பல இடங்களில் பேருந்து நிறுத்தக் கம்பங்கள் மற்றும் மின் கம்பங்கள் பிடுங்கப்பட்டுச் சாலைத் தடைகளாகப் பயன்படுத்தப்பட்டன. கும்பல் ஒன்று என்ஜின் டிரைவர் மற்றும் ஃபயர்மேனைத் தாக்கிவிட்டு நீராவி என்ஜின் மீது கற்களை வீசியது. மற்றொரு கும்பல் பிரபல தமிழ் நாளிதழ் அலுவலகத்தின் மீதும், அதற்கு எதிரே இருந்த அஞ்சல் அலுவலகத்தின் மீதும் கற்களை வீசித் தாக்கியது. போக்குவரத்து முடக்கம் பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேருந்துகளை மறித்து, பயணிகளை கீழே இறங்கச் செய்துவிட்டு, பேருந்துகளை பணிமனைக்குச் செல்லுமாறு பணித்தனர். வால் டாக்ஸ் சாலையில் அரசுப் பேருந்துகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன; பேருந்துகளுக்குத் தீ வைக்கவும் முயற்சி நடந்தது. கல்வீச்சு சம்பவங்களால் பல பேருந்துகள் சேதமடைந்தன, 6 பேருந்துகள் முழுமையாக அழிக்கப்பட்டன. இதனால் 10 முதல் 30 வரை இயக்கப்பட்ட மிகக் குறைந்த அளவிலான பேருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. மாநகராட்சி தொடக்கப் பள்ளி ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினரால் சாலைத் தடைகள் காரணமாக உரிய நேரத்திற்குச் செல்ல முடியவில்லை; அவர்கள் சென்றடைவதற்குள் 4 அல்லது 5 குடிசைகள் எரிந்து நாசமாகின. போலீஸாரைக் கண்டதும் வன்முறையாளர்கள் தப்பியோடினர். போராட்டத்தைக் கைவிட மாணவர் சங்கம் முடிவு தமிழ்நாடு மாணவர் இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழுவின் செயற்குழு இன்று கூடி, தற்போதைய அனைத்துப் போராட்டங்களையும் நிறுத்தி வைக்கத் தீர்மானித்தது. அமைதியான முறையில் தொடங்கப்பட்ட போராட்டம் திடீரென வன்முறை மற்றும் ரத்தக் களரியாக மாறியதாலும், இன்று கடைபிடிக்கப்பட்ட முழு அடைப்பு வெற்றி பெற்றதாலும், முன்பு அறிவிக்கப்பட்ட அனைத்துப் போராட்ட நிகழ்ச்சிகளும் முடிவுக்கு வருவதாகக் குழு அறிவித்தது. மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களைப் போராட்டத்தைத் தொடர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது. பத்திரிகைகள் மற்றும் முக்கியத் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றும், மத்திய அமைச்சர்கள் திரு. சி. சுப்பிரமணியம் மற்றும் திரு. ஓ.வி. அழகேசன் ஆகியோரின் ராஜினாமா மற்றும் அவர்கள் அளித்த ஒத்துழைப்பு உறுதிமொழியால் ஏற்பட்ட திருப்திகரமான சூழலைக் கருத்தில் கொண்டும் மாணவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். செயற்குழுவின் இந்த முடிவைத் தொடர்ந்து, இன்னும் சில நாட்களில் பொதுக்குழு கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது." இணையம் இல்லை என்று சொன்னாலும், இது வெறும் கதை அல்ல; நம் முன்னோர்கள் சிந்திய ரத்தம். தன் வீட்டு வாசலில் நின்ற 17 வயதுச் சிறுவன் முதல், விபரம் அறியாத 4 வயதுப் பச்சிளம் குழந்தை வரை, மொழிப் போரில் பலியான உயிர்களுக்கு, கறையான் அரித்த இந்த பழைய காகிதங்களே சாட்சி. பொள்ளாச்சியில் ராணுவம் இறக்கப்பட்டு, இயந்திரத் துப்பாக்கிகள் சொந்த மக்கள் மீதே முழங்கிய இந்த கோர சம்பவத்தை, 'இப்படி ஒன்று நடக்கவே இல்லை' என்று வரலாறு மறைக்கப் பார்க்கிறது. ஆனால், உண்மையை யாராலும் நிரந்தரமாகப் புதைக்க முடியாது. 1965-ல் சிந்திய ரத்தம் காய்ந்திருக்கலாம், ஆனால் அதன் வடுவும், வலியும் தமிழினத்தின் நினைவில் இருந்து என்றுமே அழியாது. வரலாறு என்பது வெற்றியாளர்களால் எழுதப்படுவது மட்டுமல்ல; அது இதுபோன்று தேடித் தொகுக்கப்பட வேண்டிய உண்மையும் கூட. ஆவணங்கள் இல்லையெனில், நம் தியாகங்கள் அனைத்தும் நாளடைவில் வெறும் கற்பனைக் கதைகளாகத் திரித்து எழுதப்பட்டுவிடும் போல. மறக்காமல் பகிருங்கள். நன்றி கட்டுரை: இராஜசேகரன் பாண்டுரங்கன் #பராசக்தி #Parasakthi #Pollachi #PollachiFiring #Congress #INC #DMK #TVK #tamilcinema #BJ #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 P #இந்தி எதிர்ப்பு #வரலாறு
6 likes
6 shares
#ஹிந்தி எதிர்ப்பு போராட்டம். பெரியாரின் பார்வை _ விடுதலையில் எழுதியது. 1965 இந்தி எதிர்ப்பில் திமுக இன்றைய ஈரானிய மக்களை போல் வெகுண்டெழுத்து ஊரை கொளுத்தி கொண்டிருந்தது, சிரியாவில் போராடும் அரசை போல அன்றைய காங்கிரஸ் அரசு இவர்களை அடக்க கடும் வேகத்தில் இருந்தது, ஏனெனில் எல்லையில் போர் மேகம் சூழ்ந்திருந்தது திமுக தரப்போ எதுபற்றியும் கவலைபடாமல் தங்களை விட்டால் தமிழை காக்க யாருமில்லை என பெரும் அழிவை செய்தது தமிழ் பவுத்தர் காலத்தில் பிழைத்தது, சமணர் காலத்திலும் வாழ்ந்தது, இந்த தமிழகத்தை சுல்தான்கள் ஆளும் போதும் அது வாழ்ந்தது, இன்னும் நாயக்கர் மராட்டியர் பிரிட்டிசார் என எல்லா அந்நியர் ஆளும்போதும் அது தனித்து நின்றது அப்படியான தமிழை நாங்கள்தான் காப்போம் என திமுக செய்தது பெரிய காமெடி, ஆனால் அதை ஊரை கொளுத்தி செய்தார்கள் பெரும் அழிவோடு செய்தார்கள் என்பது விபரீதம் இந்த விபரீதத்தை கண்டித்து ஒரே ஒரு குரல் துணிச்சலாக எழும்பியது, அந்தகுபீர் தேசாபிமானி குரல்தான் அன்று தமிழகத்தில் உண்மையினை சொல்லி அரசை ஊக்கபடுத்தி திமுக கும்பல்களை ஒடுக்க சொன்னது அது அய்யா ஈரோட்டு ராமசாமி நாயக்கரின் குரல் , இதோ அய்யா தன் பத்திரிகையில் எழுதிய வரிகள் "இன்றும் மாணவர்கள் காலித்தனம். பஸ்ஸைக் கொளுத்தினர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் (விடுதலை 26.1.1965) அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களின் அத்து மீறிய வன்செயல். 2000 மாணவர்கள் ஊர்வலம். கலைந்து செல்ல கண்ணீர்ப் புகை. மாணவர்கள் கற்களை வீசினர். (விடுதலை 28.1.1965) DSP , கான்ஸ்டபுள் 20 பேர் காயம். இராசேந்திரன் என்ற மாணவர் குண்டடிப்பட்டு மாண்டார். வி.டி.நெடுமாறன் குண்டடிப்பட்டு படுகாய முற்றதாகவும் தெரிகிறது. (விடுதலை 28.1.1965) போலீசார் அத்து மீறியதாகக் கூறப்படுபவை அபாண்டமே. ( சனவரி 25, 26 ஆம் நாட்களில்) சட்டத்தையும், ஒழுங்கையும் பராமரிக்க அவர்கள் பாடுபட்டனர். வக்கீல் சங்கத் தீர்மானத்திற்கு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம். திருச்சியில் மாணவர்கள் காலித்தனம். பஸ்க்கு தீ. தபால் நிலையம் கொள்ளை. (விடுதலை 10.2.1965) பொள்ளாட்சியில் போராட்டத்தை ராணுவம் அடக்கியது. காலிகள் மீது சுட்டதில் 10 பேர் மாண்டனர் (விடுதலை 13.2.1965) திருவல்லிக்கேணி பெரிய தெரு, வாலாஜா ரோடு சாலை ஓரங்களில் குடியரசு தினத்திற்காக கட்டப்பட்ட தேசியக் கொடி தோரணங்களை மாணவர்கள் அறுத்து சொக்கப்பனை போல் கொளுத்தி அவமதித்திருக்கின்றனர். (7 கல்லூரிகள் மாணவர்கள் கோட்டைக்கு ஊர்வலம் சென்று அமைச்சர் வெங்கட்ராமனை சந்தித்து மகஜர் கொடுக்க புறப்பட்ட வழியில் இது நடந்திருக்கின்றது ) ஆக நாட்டிலே என்ன நடக்கின்றது மக்களே “இந்தி எதிர்ப்பு என்ற பெயரால் நடத்தப்பட்டக் காலித்தனம், தமிழ்நாட்டில் எங்கே உள்ளது இந்தி? யார் வீட்டுப் பையனை இந்தி படி என்று எந்தப் பள்ளியில் கட்டாயப்படுத்தினார்கள்? பத்திரிகைக்கார அயோக்கியர்களும், பித்தலாட்ட அரசியல்வாதிகளும் இந்தி கட்டாயம் என்று கட்டி விட்டது கண்டு எல்லா மக்களும் சிந்திக்காமல் இந்தி இந்தி என்று இல்லாத ஒன்றை இருக்கின்றதாக எண்ணிக் கொண்டு மிரள்வதா? ஆரம்பத்தில் நான்கு காலிகளைச் சுட்டு இருந்தால் இந்த நாசவேலைகளும், இத்தனை உயிர்ச் சேதமும் உடைமைச் சேதமும் ஏற்பட்டிருக்காது. எதற்காக சட்டம்? எதற்காக போலீஸ்? எதற்காக போலீஸ் கையில் தடியடி, துப்பாக்கி? எதற்கு? முத்தம் கொடுக்கவா கொடுத்துள்ளாய்? இது என்ன அரசாங்கம்? வெங்காய அரசாங்கம்” இப்படியெல்லாம் சீறி எழுந்து திமுகவினரின் போராட்டத்தை கண்டித்த மானமுள்ள அறிவுள்ள இந்தியனாக அய்யா நின்றார் இன்னும் சில இடங்களில் அதாவது போராட்டம் முடியும்போது எழுதினார் "இந்த போராட்டம் எப்படி முடிஞ்சுது, நாங்க இறங்கி திமுகழக பயலுகள எல்லாம் கொளுத்துவோம்னு சொன்ன பிறகுதான அடங்குனானுக, நாங்க இறங்கட்டுமா மோதுவோமான்னு சொன்ன அப்புறமா ஒரு பய ரோட்டுல இல்லியே, நாங்கதான இவனுகள அடக்கினோம் வெங்காயமே" ஆக.. அந்த அய்யா மட்டும் இல்லண்ணா. . ஆதாரம் : விடுதலை நாளிதழ் & FB பிரம்ம ரிஷியார். #ரெங்கா! #renga-vamba!
16 likes
11 shares