கவிதைஉலகம்

603 Posts • 1M views
#கவிதைஉலகம் காரணமின்றி மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொள் 🕉️🌿 ஏனெனில் இந்த உலகம் தரும் மகிழ்ச்சி காரணங்களோடு வந்து, காலத்தோடு மறைந்து விடும் ஆனால் ஓம் நமச்சிவாய என்ற ஐந்தெழுத்தை இதயத்தில் சுமந்தால் காரணம் தேடாமல் மனம் மலர்ந்து கொண்டே இருக்கும் சிவனை நம்பிய இதயத்திற்கு இன்பமும் துன்பமும் ஒன்றே ஏனெனில் எது நடந்தாலும் அது சிவன் அருள் என்ற நம்பிக்கையே உண்மையான பேரானந்தம். 🕉️ ஓம் நமச்சிவாய 🕉️ ஹர ஹர மகாதேவா🙏
25 likes
11 shares
#கவிதைஉலகம் வெறும் கல்லை மட்டும் தெய்வம் என்று எண்ணி வெளிப்புற சடங்குகளில் மட்டும் மூழ்கினால் இறைவனை முழுமையாக உணர முடியாது என்று சிவவாக்கியர் சுட்டிக்காட்டுகிறார் அன்பு கருணை நேர்மை நிறைந்த மனதில்தான் இறைவன் உண்மையாக உறைகிறார் வழிபாட்டின் மதிப்பை விட உள்ளத்தின் தூய்மையே உயர்ந்த பக்தி #இறைவனைத்_தேட_வேண்டிய_முதல்_கோயில்_நம்_மனம். #மனம்_தூய்மையாக_இருந்தால்_இறைவன்_எப்போதும்_நம்முள்_வாழ்கிறான் 🕉️ ஓம் நமச்சிவாய 🕉️🙏
17 likes
17 shares
#கவிதைஉலகம் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் நல்லவர்களைக் கூட கெட்டவர்களாக சித்தரித்து விடும் கெட்டவர்களைக் கூட உத்தமர்களாக நிறுத்தி விடும் ஆனால் உண்மை என்ற ஒன்று என்றாவது ஒருநாள் வெளிச்சத்திற்கு வரும் அப்போது தான் புரியும் யார் நல்லவர் யார் கெட்டவர் யார் நடித்தவர் யார் உண்மையாக இருந்தவர் என்று காலம் மௌனமாக இருக்கலாம் ஆனால் உண்மையை என்றும் மறைத்து வைக்காது 💯 🕉️ ஓம் நமசிவாய 🕉️
26 likes
10 shares