#ஆன்மீக #தெரிந்து கொள்வோம் பார்வையினால் பகவானுடைய சுதந்திரமும் கோபமும் நீங்கிவிடுவதும் ஒருவகையில் நமக்கெல்லாம் நல்லதாகவே போய்விடுகிறது. நாம் செய்கின்ற பாவங்களை எல்லாம் பகவான் கண்டுகொள்ள முடியாதபடி மஹாலக்ஷ்மியின் கடாக்ஷ பார்வையானது செய்துவிடுகிறது.
பிராட்டியின் பார்வையானது மிகவும் தீர்க்கமான பார்வை. மை தீட்டிய தன்னுடைய அகன்ற விழிகளால் அவள் பகவானைப் பார்த்துக்கொண்டே இருப்பாளாம். ‘கருந்தடங்கண்ணி’, ‘மைத்தடங்கண்ணினாய்’ என்றெல்லாம் ஆழ்வார்களால் பரவசத்துடன் பேசப்பட்டிருக்கும் பிராட்டியாரின் பார்வையானது பகவானின் திருமேனி நிறத்தையே மாற்றிவிடுகிறதாம்.
பிராட்டியாருடைய திருக்கண்கள் நீண்டு கறுப்பாக இருக்குமாம். பகவானின் திருக்கண்களோ செம்மை படர்ந்து செவ்வரியோடி இருக்குமாம். இவர்கள் இருவரும் ஒருத்தருக்கொருத்தர் பார்வையை விலக்கிக்கொள்ளாமல், பார்த்த விழி பார்த்தபடி இருப்பார்களாம். இதனாலேயே பிராட்டியாரின் கண்களில் இருந்த கறுப்பு அப்படியே பகவானின் திருமேனியில் படிந்து அவனை கறுப்பு நிறத்தவனாக ஆக்கிவிட்டதாம். அதேபோல் பகவானின் செவ்வரியோடிய பார்வையினால் பிராட்டியார் செந்தாமரை நிறத்தைப் பெற்றுவிட்டாளாம்.
மஹாலக்ஷ்மி பிராட்டி நமக்காகவே, நாம் எல்லோரும் இறைவனுடன் ஐக்கியமாகி விட வேண்டும் என்பதற்காகவே முதலில் பகவானையும் பிறகு நம்மையும் கடாக்ஷிக்கிறாளாம். பகவானை முதலில் கடாக்ஷித்துவிட்டால், நம்முடைய குறைகள் பகவானுக்குத் தெரியாமல் போய்விடும் என்பதற்காகவே பகவானை முதலில் கடாக்ஷிக்கிறாள்.
மையக்கண்ணாள் மலர்மேல் உறைவாள் உறைமார்பினன்
செய்யக்கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
மொய்ய சொல்லால் இசைமாலைகளேத்தி உள்ளப்பெற்றேன்
வெய்யநோய்கள் முழுதும் வியன்ஞாலத்து வீழவே
என்று நம்மாழ்வார் பாடி இருப்பதுபோல் பிராட்டியாரின் கடாக்ஷமானது நமக்கு அனைத்து மங்களங்களையும் அருளக்கூடியதாக இருக்கிறது.🙏🌹