#அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 11.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
விஞ்சையருளல் தொடர்ச்சி
========================
காட்டுவிக்குஞ் சொரூபம் கண்டிரு என்மகனே
ஆட்டுவிப்பேன் நால்வேதம் அதிலும்நான் மாயமிட்டு
துலுக்கன்வீ டானதிலும் சூதாட்டுப் பார்த்திடுவேன்
கிலுக்கமொன்று செய்வேன் கீழுமேலும் நடுவும்
பதறித் தெளியும் பார்த்திரு என்மகனே
.
விளக்கம்
==========
நான் காட்டும் சொரூபத்தை நீ கண்டு மகிழ்ச்சியோடு இரு. நான்கு வேதங்களைக் கற்ற பிராமணர்களின் இல்லங்களில் உள்ளவர்களையும் துலுக்கனுடைய வீடாக இருந்தாலும் அவர்களையும் ஆட்டுவித்து அவர்களுடைய சூதான வார்த்தைகளை வெளிப்படுத்துவேன். என் மகனே, அடுத்ததாக இவ்வுலகம் முழுவதும் அதிர்ச்சியடையும் செயல் ஒன்றைச் செய்யப் போகின்றேன். அதனால் மக்கள் பதறித் தெளிவு அடையர். இதைப் பார்த்து இருப்பாயாக.
.
.
அகிலம்
========
நீபெரிது நான்பெரிது நிச்சயங்கள் பார்ப்போமென்று
வான்பெரி தறியாமல் மாள்வார்வீண் வேதமுள்ளோர்
.
விளக்கம்
==========
வீணான வேத சாத்திரம் கொண்டவர்கள் இறைவன் எங்கும் நிறைந்தவன் என்று அறிய முடியாமல் நான் பெரியவனா? இல்லை நீ பெரியவனா? என்று முடிவு எடுத்து விடுவோம் என்று கூறித் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வார்கள்.
.
.
அகிலம்
========
ஒருவேதந் தொப்பி உலகமெல்லாம் போடுஎன்பான்
மறுத்தொருவே தஞ்சிலுவை வையமெல்லாம் போடுஎன்பான்
அத்தறுதி வேதம் அவன்சவுக்கம் போடுஎன்பான்
.
விளக்கம்
==========
அவர்களுக்குள் ஒரு பிரிவினர் தம்முடைய தொப்பியை உலக மக்கள் எல்லாம் அணியுங்கள் என்பர். இன்னும் ஒரு பிரிவினர் சிலுவையை இந்த உலக மக்கள் எல்லாரும் அணியுங்கள் என்பர். அது மட்டுமல்லாம் அழிவு நிலைக்குச் சென்று கொண்டிருக்கும் அவர்கள் தமது லோவாவையும் அணியச் சொல்லுவர்.
.
.
அகிலம்
========
குற்ற முரைப்பான் கொடுவேதக் காரனவன்
ஒருவர்க் கொருவர் உனக்கெனக் கென்றேதான்
உறுதி யழிந்து ஒன்றிலுங்கை காணாமல்
குறுகி வழிமுட்டி குறைநோவு கொண்டுடைந்து
மறுகித் தவித்து மாள்வார் சிலபேர்கள்
ஓடுவார் சிபேர் ஒழிவார் சிலபேர்கள்
கேடு வருமே கேள்விகேளாப் பேருக்கெல்லாம்
.
விளக்கம்
==========
கொடிய வேதக்காரனை அவன் பிறரைக் குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பான். அந்த இரு வேதங்களை உடையவர்களும் மக்களை மதம் மாற்ற உனக்கு எனக்கு என்று போட்டியிடுவர்.
இவ்வாறு சிலர் மதம் மாற்ற போட்டியிட்டு முடியாமையால் உறுதி அழிந்து ஒரு வகையிலும் பலன் காணாமல் அவர்களுடைய வயிறு பிழைக்கும் வழிகள் எல்லாம் குறுகிக் கடைசியில் நோய்கள் கண்டு துன்புற்று மனம் நொந்து தவிப்படைந்து அழிவர். சிலர் ஓடிடுவர். சிலர் ஒளிந்து கொள்வர். ஏன்? எதற்கு? போன்ற கேள்விகள் எல்லாம் கேட்டு விளக்கம் தெரிந்து கொள்ளாதவர்கள் எல்லாரும் கேடு வந்து அழிவர்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.