#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 14.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
தாலாட்டு
==========
தார தரதர தாராரோ தார தரதர தாராரோ
நாராயணர் தானோ தாராரோ நல்ல நாராயண வைகுண்டமோ
காரணர் தானோ வைகுண்டமோ கயிலாச நாதக் கண்மணியோ
செல்வ முதலான சீமானோ சிவசிவ சிவ சிவமுதலோ
அல்ல லகற்றியே அரசாளும் அரியோன் மிகப்பெற்ற அரிதானோ
.
விளக்கம்
==========
சரசுபதி, கண்மணி போன்ற வைகுண்டராசரை அறி துயில் கொள்ளத் தாலாட்டு பாடினாள் - வைகுண்டரை தாலாட்டுப் பாடிப் பள்ளி கொள்ளச் செய்தல்:
=======================================================
வைகுண்டராகிய நாராயணர் நல்ல தன்மையான நாராயணர் ஆவார். அவர் எல்லாவற்றுக்கும் காரணகர்த்தா, தருமபதியாள்வார். கயிலாச நாதனின் கண்மணி போன்றவர். செல்வத்துக்கெல்லாம் முதலான சீமான் ஆவார். சிவமும் சிவமாகிய முதல் பொருளும் இவர் ஆவார். இவ்வுலகின் யுகத் துன்பங்களை அகற்றி அரசாட்சி புரிந்து வரும் திருமால் பெற்ற அரியேதான் இவ்வைகுண்டர்.
.
.
அகிலம்
========
தெய்வப் பெருமாள்தான் பெற்றகன்றோ சீதை மாதுதான் பெற்றகன்றோ
மெய்ய னரிநாதன் பெற்றகன்றோ விஷ்ணு மகாபரன் பெற்றகன்றோ
ஈசர் மைத்துனர் பெற்றகன்றோ இறவா திருமாது பெற்றகன்றோ
மாயத் திருவுளம் பெற்றகன்றோ மான வைகுண்ட ராசக்கன்றோ
.
விளக்கம்
==========
தெய்வபெருமாள் ஆகிய திருமாலும் அழகான இலட்சுமிதேவியும் இணைந்து பெற்ற உயிர்தான் இவ்வைகுண்டர். மெய்ப்பொருளான அரிநாதனும் விஷ்ணு மகாபரனுமாகிய நாராயணர் பெற்ற உயிர்தான் இந்த வைகுண்டர். ஈசரின் மைத்துனராகிய திருமாலும், இறவாத்தன்மையுள்ள இலட்சுமியும் பெற்றெடுத்த உயிரே இந்த வைகுண்டர். மாயத்தன்மையுள்ள திருமால் பெற்றெடுத்த மானமுள்ள வைகுண்டராசனாகிய குழந்தை இவ்வைகுண்டர்.
.
.
அகிலம்
========
வேதக் குருநாதன் பெற்றகன்றோ வீர லட்சுமி ஈன்றகன்றோ
சீதக் குருதாயா ரீன்றகன்றோ தெய்வ வைகுண்ட ராசக்கன்றோ
கிருஷ்ண மகாநாதன் பெற்றகன்றோ கிருபைக் குருநாதக் கண்மணியோ
விஷ்ணு மகாநாதன் பெற்றகன்றோ வீர லட்சுமி ஈன்றகன்றோ
.
விளக்கம்
==========
வேதங்களில் நிறைந்துள்ள திருமாலும் வீரமுள்ள இலட்சுமியும் இணைந்து பெற்ற குழந்தை இது. சீதக்குருவுக்கும் தாயாரான இலட்சுமி பெற்ற குழந்தை இது. அழகுபொருந்திய வைகுண்டராசராகும் குழந்தை இது. அன்பு குழந்தை இது. விஷ்ணு மகாநாதன் பெற்ற குழந்தை இது. வீர இலட்சுமி பெற்ற குழந்தை இந்த வைகுண்டர் ஆவார்.
.
.
அகிலம்
========
நாட்டுக் குடையதோர் நாரணரின் நல்ல பாலனோ வைகுண்டனோ
ஏட்டு முதலானோ தாராரோ ராச வைகுண்ட ராசர்தானோ
மூலச் சிவநாதன் பெற்றகன்றோ உலகை யொருகுடைக் காள்வானோ
நாலு வேதமும் தாண்டிமுறை நடத்தி யொருகுடைக் காள்வானோ
ஒருமை மனத்துடை யுத்தமர்க்கு உற்ற பதவிகள் கொடுப்பவனோ
தருமத் திறவானோ தாராரோ தங்க வைகுண்டத் தாட்டீகனோ
.
விளக்கம்
==========
நாட்டுக்குடைய சிறப்புப் பொருந்திய நாராயணரின் நல்ல பாலன் இந்த வைகுண்டர். மூலச் சிவனுடைய மைத்துனர் பெற்ற குழந்தை இவ்வைகுண்டர். இவர் உலகை ஒரு குடைக்குள் ஆளுவார். நான்கு வேதங்களும் தாண்டி எல்லா முறைகளும் நடத்தி ஒரு குடைக்குள் ஆட்சி புரியக் கூடிய வைகுண்டர் இவர். மனதை ஒருநிலையாக கொண்டு உள்ள உத்தமருக்கு உற்ற பதவிகளைக் கொடுப்பவர் இவர். தருமத்தை ஆளும் திறமை மிக்கவர் இந்த வைகுண்டர்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.