#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 10.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
விஞ்சையருளல் தொடர்ச்சி
========================
அல்லாமற் கேளு அரிநாரணா என்மகனே
நல்லோராய்ப் பெண்கள் நாடியெண்ணக் கூடாது
வல்லோராய் நந்தன் வம்மிசத்தில் வந்திருந்தார்
அப்பெண்ணார்க் கெல்லாம் அதிகப்பலன் தாறோமென்றேன்
.
விளக்கம்
==========
அது மட்டுமல்லாமல் அரி நாராயணனே என் மகனே, யாராலும் விரும்பி அடைய முடியாத அளவு கற்பு வல்லமையுள்ள சில பெண்டிர் நான் நந்தன் வம்சத்தில் வல்லவனான கண்ணனாக தோன்றியபோது என்னை விரும்பினர். அவர்களுக்கு இந்த யுகத்தில் அதிக வாழ்வு தருவதாக வாக்குறுதி சொன்னேன்.
.
.
அகிலம்
========
இப்பெண்ணார் சிலர்கள் இன்னமங்கே தோன்றிவந்தால்
ஆனதால் பெண்ணார்க்கு அழகுகொடு என்மகனே
.
விளக்கம்
==========
அந்தப் பெண்கள் இங்குப் பிறந்து உன்னை நாடினால் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றி வாழ்வு கொடு.
.
.
அகிலம்
========
நின்ற தவசு நிறைவேறி னால்மகனே
ஒண்டொடியார் சிலரை உன்பாரி தானாக்கி
நன்மைகொடு என்மகனே நாரணா நாடாள்வாய்
உன்னை நினைத்தோர்க்கு உதவிகொடு என்மகனே
கட்டை விடாதே கருத்துள்ள என்மகனே
.
விளக்கம்
==========
உன்னுடைய தவசு நிறைவேறினால் பிரகாசமான வளையல் அணிந்த கன்னிப் பெண்கள் சிலரை உன் மனைவியாக்கி அவர்களுக்கு வேண்டிய நன்மைகளையும் செய்து கொடு என் மகனே. நீ நாடாளப் போகின்றாய். உன்னை எப்பொழுதும் நினைப்பவருக்கு எல்லா உதவிகளும் செய்து கொடு என்மகனே. ஆனால் உன் கட்டுப்பாடான வாழ்வை மட்டும் விட்டுவிடாதே.
.
.
அகிலம்
========
சட்ட மறவாதே சாஸ்திரத்துக் குற்றவனே
பெண்பாவம் பாராதே பேணியிரு என்மகனே
கண்பாரு கண்மணியே கன்னி கணவருக்கு
இன்னமொரு சூத்திரம் இயம்புகிறே னென்மகனே
.
விளக்கம்
==========
வைகுண்டா நான் கூறிய உபதேச சட்டத்தை மறந்துவிடாதே. ஆனாலும் நான் கூறிய பெண்களை ஏற்றுக் கொள்வது பாவம் என்று ஒதுக்கித் தள்ளி விடாதே. அவர்களையும் பேணிப் பாதுகாத்து அவர்கள் விருப்பியதைச் செய்து கொடு. என் கண்மணியே கன்னிகளுக்குக் கணவனாகப் போகும் வைகுண்டா நான் உனக்கு இன்னும் ஓர் இரகசிய உபதேசம் கூறுகிறேன். என் கண்களை நோக்கிக் கவனமாகக் கேட்பாயாக.
.
.
அகிலம்
========
துன்ன மறியத் தோற்றுவிப்பேன் சாதிதோறும்
அன்புவன்பு பார்க்க ஆரா ரிடத்திலும்போய்
உன்புதுமை சொல்லி உடலை மிகஆட்டி
சாதிசா திதோறும் சக்கிலி புலச்சிவரை
ஆதிச்சா திமுதலாய் ஆராதனை காட்டுவிப்பேன்
.
விளக்கம்
==========
சக்கிலியன் வரை உன்னை அறியும்படி மேலோனாக உன்னை தோற்றுவிப்பேன். உன்னிடத்தில் யார் அன்பு வைத்திருக்கிறார்? யார் பகைமை கொண்டுள்ளார்? என்று அறிய சான்றோர் சாதி முதல் சக்கிலிச்சி புலச்சி வரை எல்லா சாதிகளிலும் உள்ளவர்களின் .
.
.
தொடரும்... அய்யா உண்டு.