#maiamoffcial #மக்கள்நீதிமய்யம்
கோவையில் 10 வயது சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட மனிதத்தன்மையற்ற சம்பவத்திற்கு மக்கள் நீதி மய்யம் தனது கடுமையான கண்டனத்தையும், ஆழ்ந்த வேதனையையும் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வழக்கில் குற்றவாளியை விரைவாகக் கைது செய்த காவல்துறையின் துரித நடவடிக்கை பாராட்டத்தக்கது. எனினும், காலத்தே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் ; அது இனி இதுபோன்ற கொடூரங்களில் ஈடுபட யாரும் துணியாத அளவிற்கு ஒரு பலமான முன்னுதாரணமாக அமைய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்குச் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் பொறுப்பேற்று, அவர்களைப் பாதுகாக்க உறுதியளிக்க வேண்டும்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#Coimbatore
#Murder