#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ் குருவோ அவர் சிவன்.*
எவர் சிவனோ அவர் ஜகத்குரு.*
குருவைக் காட்டிலும் அதிகமான
தத்துவம் இல்லை.
குருவைக் காட்டிலும் அதிகமான
தவம் இல்லை.
குருவைக் காட்டிலும் அதிகமான
ஞானம் இல்லை.
குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை.
குருவிற்கு சமமான தெய்வமும் இல்லை.
குருவிற்கு சமமான உயர்வுமில்லை.
சிருஸ்டி, இஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள் எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டே இருக்கும்.
தியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி.
பூஜைக்கு மூலம் குருவின் பாதம்.
மந்திரத்திற்கு மூலம் குருவின் வாக்கியம்.
முக்திக்கு மூலம் குருவின் கிருபை.
ஹர ஹர சங்கர!!!
ஜெய ஜெய சங்கர!!!