ரவிசங்கர் ராஜா, ஆரணி
904 views
8 days ago
AI indicator
*நந்தி காதில்* *வேண்டுதலை* *சொல்வது சரியா*? நந்தீஸ்வரர் காதுகளில் நாம் சொல்லலாமா ?அப்படி சொல்லுவது என்றால் என்ன சொல்ல வேண்டும்? நம் நாட்டில் சிலை வழிபாடு மிக மிக முக்கியம் வாய்ந்ததாக இருக்கிறது என்பதனை நாம் அறிவோம் . எந்தனையோ அற்புதங்களை கண்ட சித்தர்கள் எந்த வித குழப்பமும் இல்லாமல் நமது சிலை வழிபாட்டிற்குரிய கற்களை தேர்ந்து எடுத்து கொடுத்த காரணத்தை நாம் அறிந்து கொள்ளவேண்டும் . சிலை வழிபாட்டிற்கு தேர்ந்தெடுத்தவற்றை கற்கள் ,பாறை என்று மட்டும் அவர்கள் நினைக்க வில்லை.அவைகள் ஒளியும் ஒலியும் சேர்ந்தது என்று அவர்கள் புரிந்து கொண்டனர். ஆம் சிலை வழிபாட்டிற்கு கற்களை தேர்வு செய்வதில் மிக மிக வல்லமை படைத்தவர் கருவுரார் சித்தர். போகர் இவரிடம் தாம் சிலைகளை செய்ய சொல்வார். ஒரு கல்லை (பாறை ) பார்த்து அதில் 32 லக்ஷணம் அமைந்து இருந்தால் அவை வழிபாட்டிற்கு உகந்தது என்று முடிவு செய்வார் கருவூர் சித்தர். பறையின் உள்ளே தேரை இருப்பதை அறிந்தால் அவைகள் ஒச்சம் என்று ஒதுக்கி விட்டுவிடுவார். சிற்ப சாஸ்திரம் முழுமையாக இவரின் ஆசிபடியே இருக்கும். இவரின் ஆலோசனை படியே சிற்பிகள் கற்களை தேர்ந்து எடுத்தனர். சித்தர்கள் மலைகளில் ,பூமியில் உள்ள வித்தியாசமான பாறைகளை தேர்வு செய்து அவைகளை சிற்பிகள் மூலம் லிங்கமாக,நந்தியாக உண்டாக்கி வழிபாடு செய்தனர் . அந்த காலத்தில் மன்னர்கள் ஒரு கோவிலை கட்டிய பின்பு அந்த கோவிலை பற்றியும் வழிபாட்டு முறைகளை பற்றியும் தெரிந்து கொள்ள சாதுக்களை, சித்த நெறியில் உள்ளவர்களை அழைத்து வந்து கோவிலை ஆராய்ந்து தவறுகள் இருந்தால் சொல்லும்படி கேட்பார்களாம். இப்படி ஒரு காஞ்சிபுர அரசன் சித்தர் நெறியில் உடையவரை அவன் கட்டிய கோவிலுக்கு அழைத்து வந்துள்ளான். 32 லட்சணமும் அருமையாக ஒன்று சேர்ந்த ஒரு நந்தி சிலைக்கு மந்திரம் சொல்லி உயிர் கொடுத்தால் உயிர் உண்டாகும் என்று அந்த சித்த நெறியில் இருந்தவர் அறிந்து இருந்தார் . அந்த மன்னன் கட்டிய கோவிலில் 32 லட்சணமும் அருமையாக ஒன்று சேர்ந்த ஒரு நந்தி சிலைய கண்ட அந்த சித்த நெறியில் இருந்தவர் கருவூர் சித்தரை நினைத்து அந்த நந்தி சிலையின் காதுகளில் மந்திரம் சொல்ல நந்தி அசைந்து எழுந்தது , மன்னன் வியந்தான்,மக்கள் அதிசிய பட்டனர்.இதன் பிறகு உயிர் பெற்ற நந்தி கோவிலை விட்டு வெளியே சென்றது. வேடிக்கை பார்த்த மக்கள் பரவசம் அடைந்து உயிர் பெற்று எழுந்த நந்தியின் பின்னே சென்றனர் . பசி எடுத்த நந்தி வயலில் விளைந்திருந்தபயிர்களை உண்ண தொடங்கியது. அது வரை விபரீதத்தை உணராத மக்கள் பயம் அடைந்தனர் .நந்தி பிறகு தோப்புகளில் நுழைந்து விட்டது . நந்தியினால் பிரச்சனைகள் அதிகம் ஏற்பட மக்கள் அரசனிடம் முறையிட்டார்கள். பிரச்சனை உணர்த்த அரசன் சித்தரிடம் உயிர் பெற்று எழுந்த கல்நந்தியை மீண்டும் கல்லாக்கி விட வேண்டும் என்றார் . சித்தர் உயிர் பெற்ற கல்நந்தியை பிடித்து வர சொல்லி அதன் காதுகளில் மந்திரம் சொல்ல அது மீண்டும் கல்லானது . பிறகு அதன் கால்களின் குழம்பில்ஒரு நகத்தை பேர்த்து எடுத்தார் . 32 லட்சணத்தில் ஒன்றுகுறைந்த படியால் அந்த நந்தி நிரந்தரமாக கல்லாகி போனது . நந்தி மீண்டும் உயிர் பெறாது என்று கூறி என்று உறுதி கொடுத்து பிறகு அந்த சித்தர் வனம் சென்றார் . அவர் நந்தியின் காதுகளில் ஏதோ சொன்னார் ,நாமும் அப்படி சொல்ல வேண்டும் என்று மக்கள் நினைத்து இன்றும் நந்தியின் காதுகளில் அவர்கள் குறைகள் ,தேவைகளை சொல்கிறார்கள் . ஆலயங்களில் அஷ்டபந்தனம் சாற்றப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளை அர்ச்சகரைத் தவிர மற்ற எவரும் தொடக்கூடாது என்பது ஆகம விதியாகும். இறைவனை நோக்கித் தியானத்தில் அமர்ந்திருக்கும் நந்தியினைத் தொந்தரவு செய்யும் விதமாக அவரைத் தொடுவதும், அவரது காதுகளில் ரகசியமான முறையில் வேண்டுகோளைச் சொல்கிறேன் என்று நம் எச்சில் படும் விதமாக குறைகளைச் சொல்வது முற்றிலும் தவறான ஒன்றாகும். எந்த கோவிலிலும் இப்படி செய்ய கூடாது,இது தவறு என்று சொல்வது இல்லை . சிவாலயத்திற்குள் நுழைவதற்கு முன்னால் நந்திக்குப் பின்னால் நின்று கொம்புகள் வழியாக இறைவனை தரிசிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து நந்திக்கு முன்னால் பக்கவாட்டில் வந்து நின்று உள்ளே செல்வதற்கு அனுமதி வேண்டி நந்தி பகவானிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இறைவனுக்கும், நந்திக்கும் இடையே இறைவனை மறைக்கும் விதமாகச் சென்று நாம் நிற்கக்கூடாது. நமது வேண்டுகோளையும், பிரார்த்தனைகளையும் நேரடியாக இறைவனிடமே முறையிடலாம். நந்தியிடம் காதுகளை தொடாது நாம் சொல்ல வேண்டிய பிரார்த்தனை மந்திரம் கீழே! "நந்தீஸ்வர நமஸ்துப்யம் ஸாந்தா நந்த ப்ரதாயக மஹாதேவேச ஸேவார்த்தம் அநுக்ஞாம் தாது மர்ஹஸி வந்தே வ்ருஷப ஸ்வரூபிணே தீக்ஷ்ண ச்ருங்காய துங்காய வேத பாதாய நந்திநே நமஹ" மேற்கண்ட ஸ்லோகத்தைக் கூறி, ‘ஹர ஹர சிவ சிவ’ என்ற சிவ நாமத்தை உச்சரித்து, நந்தியின் கொம்புகளின் மத்தியில் இருந்து சிவ லிங்கத்தை தரிசித்தால் வேதம் படித்த பலன், சப்த கோடி மகா மந்திர ஜப பலன் கிடைக்குமென்றும், பாபங்கள் அனைத்திலிருந்தும் விடுபடும் பரிகாரமாகும் என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன சிவாய நம ஓம்! சிவாய வசி ஓம்! சிவ சிவ சிவ ஓம் ! 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஓம் நமசிவாய #ஆலய தரிசனம்🔔