என் அப்பன் முருகப்பெருமான் தான் இந்த உலகிற்கே மகா ஹீரோ! அவனைப் பிடிக்காதவர் எவருமில்லை. இன்று ஊரெங்கும் ஒரு புதிய எழுச்சியைக் காண்கிறேன்; அரசியல் தலைவர்கள் முதல் திரையுலக நட்சத்திரங்கள் வரை, சாமானிய மக்கள் முதல் பெரும் செல்வந்தர்கள் வரை என வித்தியாசம் இன்றி, அனைவரும் கையில் வேல் ஏந்தி நிற்கிறார்கள். திருச்செந்தூரில் முருகனுடைய பெயர் ஜெயந்திநாதன். அதனால் தான் வெற்றியை தேடுபவர்கள் எல்லாம் அவனைத் தேடிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
முருகப்பெருமானின் புகழை, அவனது கருணையை, அவன் தரும் சோதனைகளை, அவன் பொழியும் அருளாசியை உலகுக்குச் சொல்ல வேண்டும் என்பதுதான் எனது காதல். அவனை வணங்கும் ஒவ்வொருவருக்கும் நான் ஒரு எளிய சேவகன். "நடப்பவை எல்லாம் மாட்சி, இனி வருவது முருகன் ஆட்சி" என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.
ஆனால், இத்தகு சூழலில் எனக்குள் ஒரு ஆழ்ந்த கேள்வி எழுகிறது.
அந்த ஞானவேலவன் எதைக் கண்டு மகிழ்வான்? அவனுக்கு யாரைப் பிடிக்கும்?
தன் கையில் இருக்கும் வேல் 'தான்' என்ற ஆணவத்தை அறுக்க வந்தது என்று உணர்ந்து, அவன் காலடியில் தலைவணங்கி நிற்கும் எளியவனை முருகனுக்குப் பிடிக்கும்.
சோதனையில்
வாழ்க்கை தரும் சோதனைகளை அவனது அருட்பிரசாதமாக ஏற்று, "எல்லாம் அவன் செயல்" என்று கலங்காமல் இருப்பவனை முருகனுக்குப் பிடிக்கும்.
வேல் என்பது ஞானத்தின் அடையாளம். அந்த ஞானத்தைப் பிற உயிர்களிடத்தில் அன்பாகக் காட்டும் கருணையுள்ளம் கொண்டவரை முருகனுக்குப் பிடிக்கும்.
"முருகா" என்று கூப்பிடும் பக்தனுக்குச் சேவை செய்வதையே தன் கடமையாகக் கொண்டிருப்பவனை, அந்த ஆறுமுகனுக்கு அள்ளியணைக்கப் பிடிக்கும்.
உலகம் இன்று ஆன்மீகப் பாதையில் திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. கையில் வேல் ஏந்துவது ஒரு தொடக்கம் மட்டுமே; ஆனால் அந்த வேலின் தத்துவத்தை இதயத்தில் ஏந்துவதே முழுமை.
முடிவாக நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்...
யாரைப் பிடிக்கிறார்களோ இல்லையோ, இன்று எல்லோரும் வேலைப் பிடிக்கிறார்கள். ஆனால், அந்த முருகனுக்கு யாரைப் பிடிக்கும் என்பதுதான் இன்றைய கேள்வி!
"வேலை வணங்குவதே வேலை"
#🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏 #ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏