D Muthu Prakash, Kanchipuram 💐
1.3K views
27 days ago
#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 22.05.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== வீழ்ந்திடக் கண்டு வைந்தர் விடையுள்ள தேவர் தம்மைச் சோர்ந்திட மொழிகள் சொல்லி தேவரே பதற வேண்டாம் ஓர்ந்திட எனக்கு முன்னே உள்ளது தானே யென்று கூர்ந்திட வுரைத்தீ ரெல்லாம் குணமுடன் மகிழ்ந்து சொல்வார் . விளக்கம் ========== தேவர்கள் தமது பாதத்தில் விழுவதைக் கண்ட வைகுண்டர், சக்தியுள்ள தேவரைத் தேற்றும்படியான மொழிகள் சொல்லி, தேவர்களே, பதற வேண்டாம். நீங்கள் உரைத்த வேண்டுகோள்கள் எனக்குரிய கடமைகளாக ஏற்கெனவே கூறப்பட்டு உள்ளன என்று அமைதியுடனும் மகிழ்சியுடனும் கூறினார். . . அகிலம் ======== தெய்வ மாதர்கள் தாம்பெற்ற தேவரே சான்றோர்க் கெல்லாம் மெய்வரம் பதுபோல் ஞாயம் விளம்பிடப் பேறு பெற்றேன் பொய்வரம் பசாசு எல்லாம் பொன்றுற வரங்கள் பெற்றேன் அய்வரைக் காத்துத் தர்ம அரசுக்கும் பேறு பெற்றேன் . விளக்கம் ========== தேவர்களே, தெய்வமாதர்கள் பெற்றெடுத்த சான்றோர்கள் எல்லாருக்கும் உண்மையான ஒழுங்கான நியாய நீதிகளைச் சொல்லிடப் பேறு பெற்று வந்துள்ளேன். பேய்களையும் அவை பெற்ற தவறான வரங்களையும் அழித்து ஒழிக்கவும் வரங்கள் பெற்றேன். பஞ்சவர்களைக் காத்துக் தரும அரசை ஆளவும் வரம் பெற்றுள்ளேன். . . அகிலம் ======== ஒருகுடை யதற்குள் ளாள ஒருவிஞ்சை யதிகம் பெற்றேன் கருவுடை யோர்க்குங் காண கனவரம் பெற்றே னானும் மறுகிநீர் தவிக்க வேண்டாம் வருவேனான் சான்றோ ரண்டை குறுகலி யதனைத் தாண்டிக் கொள்வேனென் குலத்தைத் தானே . விளக்கம் ========== ஒரு குடைக்குள் ஒரு சொல்லுக்குக் கீழ் ஆட்சி புரிய ஓர் உபதேசம் அதிகமாகப் பெற்று வந்துள்ளேன். கருவிலிருக்கும் குழந்தைகூட காண்பதற்குரிய பெரிய வரம் பெற்றுள்ளேன். எனவே, இனி நீங்கள் மனம் உருகித் தவித்துக் கொண்டிருக்க வேண்டாம். நான் சான்றோர் பக்கத்தில் வருவேன. குறுகிய கலியை அழித்துவிட்டுப் பிறகு என் குலத்து மக்கள் துயர் தீர்ப்பேன். . . அகிலம் ======== என்னையே கெணியா வண்ணம் ஏழையா யிருந்த சான்றோர் தன்னையே பழித்தோ ரெல்லாம் சளமது துயரங் கொண்டு அன்னீத நரகந் தன்னில் அகப்படத் தள்ளித் தள்ளிக் கொன்றுநான் சான்றோர்க் கெல்லாம் கொடுப்பேன் மேற்பவிசு தானே . விளக்கம் ========== என்னுடைய சக்திகளைப் பற்றி அறியாதவாறு, ஏழைகளாக இருந்த சான்றோர்களைப் பழித்தவர்கள் எல்லாரையும் மாபெரும் துயரமும், கொடுமையும், பொருந்திய நீசத் தன்மையுள்ள நரகத்தில் அகப்படும்படியாகத் தள்ளிக் கொன்று விடுவேன். சான்றோர் எல்லாருக்கும் உயர்ந்த வாழ்வு கொடுத்திடுவேன். . . அகிலம் ======== எல்லாஞ் சான்றோர் கையாலே எள்ளும் நீரும் கலிக்கிறைத்து பொல்லாக் கலியை நரகமதில் புக்க அடித்துப் பேயோடு கொல்ல விடைகள் கொடுப்பேனான் கூண்ட சான்றோர் கையதிலே வல்லோர் புகழுந் தேவர்களே மனமே சடைக்க வேண்டாமே . விளக்கம் ========== கலியைக் கொன்று அவனது கடைசிக் காலத்தில் எல்லாச் சான்றோர்கள் கைகளினாலும் அவனுக்கு எள்ளும் நீரும் இறைத்து பொல்லாத அவனை நரகத்தில் புகும்படி அடித்துத் தள்ளுவேன். பேய்களோடு, கலியனையும் கொல்லும் வரத்தை ஒற்றுமையுடன் இருக்கும் சான்றோர் கைகளில் நான் கொடுப்பேன். வல்லமையானவர்கள் புகழும் தேவர்களே, நீங்கள் இனி மனம் பதறத் தேவை இல்லை என்று கூறித் தேவர்களுக்கு விடை கொடுத்தார். . . தொடரும்... அய்யா உண்டு.