திருநீற்றுச் சுவடு
740 views
8 days ago
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨ #✡️ஜோதிட பரிகாரங்கள் ஒரு தெய்வமும் "எனக்கு நீ இதை கொடுத்தால் தான் உனக்கு பதிலுக்கு நான் கேட்டதை தருவேன்" என்று சொல்வதில்லை. ஒரு சிலர் தெய்வத்துக்கு நேர்ந்து விட்டு, அதை செய்ய முடியாமல் போகிறது. இதனால் தன்னை தெய்வம் தண்டித்து விடுமோ என்று பயப்படுகிறார்கள். இந்த அச்சமே தேவை இல்லை. தனக்கு நேர்ந்ததை செய்யாவிட்டால் தெய்வம் தண்டனை ஏதும் தராது. ஏனெனில் தெய்வம் நம்மிடம் எதையும் கேட்கவில்லை. நாமாகத்தான் கடவுளுக்கு ஏதாவது தருகிறோம் என்று நேர்ந்து கொள்கிறோம். அதே நேரம் நேர்ந்ததை செய்யாவிட்டால் தெய்வத்துக்கு பதிலாக தர்ம சாஸ்திரம் தண்டனை தருவதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஒருவருக்கு நாளை பத்தாயிரம் ரூபாய் தருவதாக வாக்களித்துவிட்டு கொடுக்க மறுத்தால் அது நேர்மை தவறியதாகும். கொடுத்த வாக்கை மீறியதாகும். இதே போல் தான் தெய்வத்திற்கு நேர்ந்து கொள்வதும். தெய்வமோ, மனிதரோ யாராக இருந்தாலும் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும். வாக்கு தவறாமை, நேர்மை, உண்மை ஆகியவற்றை நேர்த்திக்கடனே நமக்கு கற்றுத் தருகிறது. இதனால் தான் நேர்த்திக்கடன் என்ற ஒன்றையே நமது முன்னோர் உருவாக்கி வைத்தனர். நேர்த்திக்கடன் என்பது வாக்குத் தவறாமையை கற்றுத்தரும் ஒரு சாதனம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தெய்வத்திற்கு நேர்ந்ததை என்றாவது ஒருநாள் செய்து விட வேண்டும். ஏழையாக இருந்தாலும் முடிந்ததை செலுத்தி விட வேண்டும். இதனால் தான் 'ஏழைக் கடன் ஏழு வருடம்' என்று பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். நேர்த்திக்கடன் என்பது கொடுத்த வாக்கை காப்பாற்றும் பயிற்சி என்பதை மறக்க வேண்டாம்.

More like this