D Muthu Prakash, Kanchipuram 💐
561 views
21 hours ago
#அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 11.06.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம்: ======== தெச்சணா புரியி னீதம் செப்பிடத் தொலையா தையா மிச்சமாம் புவியி தாகும் மேவலர்க் குகந்த நாடு பச்சமால் மகனே நீரும் பண்ணுறத் தவசு ஏறும் அச்சமும் வாரா தையா என்றடிமிசைப் பணிந்து நின்றான் . விளக்கம்: ========= அய்யாவே, இப்படியே தெச்சணாபூமியின் உயர்வு நிலைமையைப் பற்றிச் சொல்லச் சொல்லச் சொல்லி முழப்பது முடியாது. அப்படிப்பட்ட உயர்வு பொருந்தியது இந்த தெச்சணாபூமியாகும். இப்பூமி வானோர்களுக்கு மகிழ்ச்சி தரும் நாடு ஆகும். பச்சை நிறம் பொருந்திய திருமாலின் மகனே, வைகுண்டரே, நீவிரும் இங்கு அழகுறத் தவம் செய்தால் அத்தவம் உயர்வடைந்து கொண்டே வரும். அத்தவம் முடிவுறுமோ என்னும் அச்சம் இங்கு உருவாகாது என்று கூறி வைகுண்டரின் பாதங்களைப் பணிந்து வணங்கி நின்றான். . . அகிலம்: ======== நல்லது தானே யென்று நாரணர் தயவு கூர்ந்து வெல்லமர் மணவை வாரி மேன்முக மதிலே நின்று அல்லல்நோய் பிணிகட் கெல்லாம் அறமதால் தண்ணீர் தன்னால் தொல்லைநோய்த் தீர்ப்போ மென்று தெச்சணா புவியில் வந்தார் . விளக்கம்: ========= தெச்சணாபூமியின் உயர்வான மகிமையை வேதமுனி தெளிவாகச் சொல்லவும் அதை அமைதியாகக் கேட்டு வந்த வைகுண்டர் வேதமுனியைப் பார்த்து, மிகவும் நல்லது மாமுனியே என்று கூறிவிட்டுத் தமது மனிதில் கருணை கொண்டு வெற்றி கொள்வதற்கு அரிய தாமரைக் குளத்தின் தென் பகுதி கடற்கரையாகிய தோப்புப் பகுதியின் மேல் அமர்ந்து, மக்களுடைய துன்பங்கள், நோய்கள், இதர பிணிகள் போன்ற எல்லாவற்றையும் தம்முடைய அறத்தாலும் தண்ணீராலும் தீர்க்க வேண்டும் என்று எண்ணித் தெச்சணாபூமியில் இருக்கின்ற மணவைப் பதியின் எல்லைக்கு வந்தடைந்தார். . . அகிலம்: ======== வந்தவர் தலமும் பார்த்து வழியி னற்குலமும் பார்த்துச் சந்தமாய் மகிழ்ச்சை கூர்ந்து சாமியும் முனியைப் பார்த்து இந்தமா நகரில் வாழும் இராசனு மறிய வென்றே விந்தையா யறிவு வொன்று விதித்தெழுதி யனுப்பு மென்றார் . விளக்கம்: ========= எல்லை வந்தடைந்த வைகுண்டர் தாம் வரும் வழியில் நல்ல உயிரினங்களையும் பார்த்து, தவம் செய்வதற்குரிய நல்ல இடத்தையும் பார்த்து, நிலையான பெருமகிழ்ச்சி அடைந்து தம்முடன் வந்த வேதமுனியைப் பார்த்து, முனிவரே, இந்தப் பெரிய நகரை ஆட்சி புரிகின்ற கலியரசன் அறிந்து கொள்ள மிகவும் அற்புதமான அறிவிப்பு ஒன்றை ஒழுங்குபட எழுதி அனுப்பு என்றார். அகிலம்: ======== திருவாசகம்-3 ============= கவியரசனுக்கு வைகுண்டர் வருகையை உணர்த்தும் நிருபம் ================================================================ (வால ராமச்சந்திர சூரிய நாராயணர் தாமே வைகுண்டமாய்த் தோன்றி, தர்மம் நித்திச்சு, காணிக்கை கைக்கூலி காவடி என்றே திருச்சம்பதி முதல் வேண்ட ஆவசியமில்லையென்று நிறுத் தலாக்கியே, விளக்கம்: ========= சூரிய பிரகாசமான நாராயணர் வைகுண்டராகத் தோன்றித் தருமத்தை நிலை நாட்ட வேண்டி, காணிக்கை, கைக்கூலி காவடி போன்றவற்றைத் திருச்செந்தூர் முருகன் கோயில் முதல் யாரும் பெற்றுக் கொள்வதற்கோ, கொடுப்பதற்கோ தேவையில்லை என்று நிறுத்தப்பட்டுள்ளது. அகிலம்: ======== உகஞ்சோதித்து ஒரு குடைக்குள்ளான ஆயிரத்தெட் டாமாண்டு மாசியில் கடற்கரையாண்டி நாராயணம் பண்டாரமென நாமமுங் கூறி, எளிய கோலமெனப் பாவிச்சு தெச்சணம் பள்ளிகொண்டிருந்து, தர்மமாகத் தாரணி யாபேர்க்கும் தண்ணீ ரினாலே சஞ்சலநோய் கர்மம் வற்மம் வாதை கோதை பயங்களையும் பிறவி நாசமும் பொய்வினை சஞ்சாரமும், பீடை கோடை வாடை தீர்க்கவும், பிள்ளையில்லாத பேர்க்குப் பிள்ளை கொடுக்கவும், கண்ணில்லாதபேர்க்குக் கண் கொடுக்கவும், தனமில்லாத பேர்க்குத் தனங்கொடுக்கவும், சாம்பசதாசிவ சாமி மூவரும் சற்குணமாகியே தன்னாலொரு வேசமாகிச் சமைந்து, சாதி உயர்கொண்ட சத்திமாதர் வழியிலே சகலகுண நாராயண தீரசம்பன்னர் சாதி வைகுண்டமாய்ப் பிறந்திருக்கிறார், இனி நன்றாய்த் தெரியுமே. விளக்கம்: ========= எனவே, இக்கலியுகத்தைச் சோதித்து ஒரே ஆட்சியின் கீழ் ஆளுவதற்காக ஆயிரத்து எட்டாம் ஆண்டு, மாசி மாதம் இருபதாம் தேதி கடற்கரை ஆண்டியாகிய நாராயணர் பண்டாரம் என்றும் பேரைக் கூறி எளிய கோலங்கொண்டு தெச்சணாபூமியிலே பள்ளி கொண்டு இலவசமாக எல்லாருக்கும் மனச் சஞ்சல நோய், நீடித்த பிணி, வாதை பேய் அச்சம், பிளவி நோய், பீடை மோசமான துர்நாற்றம் வீசுகின்ற பெரிய நோய்கள் எல்லாம் தீர்க்கவும், பிள்ளை இல்லாதவருக்குப் பிள்ளை கொடுக்கவும், கண் இல்லாதவருக்குக் கண் கொடுக்கவும், பொருள் இல்லாதவருக்குப் பொருள் கொடுக்கவும், சிவன் விஷ்ணு பிரம்மா ஆகிய மூவரும் ஒரே உருவாமாகி, சாதியில் உயர்ந்த சாதியாகிய சான்றோர் சாதியில் வைகுண்டராய் வருகின்றார், உயர்ந்த சாதியான சான்றோர் சாதியில் வைகுண்டர் உதித்திருப்பதை இனி அறிந்து கொள்வீர்களாக. . . தொடரும்... அய்யா உண்டு.