D Muthu Prakash, Kanchipuram 💐
653 views
2 days ago
#அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 31.05.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======== செண்டையொடு தண்டைமணி டண்டடம டண்டமெனத் தேவர்சே வித்து வரவே சிவநமசி வாயமெனும் ஓம்நம சிவாயமென்னும் சேவித்திரு புறமும் வரவே அண்டமுர செண்டுமணி டுண்டும டுண்டுமென ஆகாய மீதில் வரவே அனவரத கோலாக லாதிநாரா யணாவென அமரரிசை கூறி வரவே . விளக்கம் ========= தேவர்கள் எல்லாரும் செண்டை மேளத்தோடும் தண்டை மணியோடும் அவருக்குப் பணிவிடை செய்து இனிய ஓசையை எழுப்பி வந்தனர். அவருடைய இரு புறமும் சிவசிவ, நமசிவாய, ஓம் நமசிவாய என்று பல வகைகளாகப் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி வந்தனர். அண்டங்கள் எல்லாம் அதிரும்படியாகச் செண்டை மணி ஓசை எல்லாம் ஆகாயம் மீதில் எழும்பின. எப்பொழுதும் கோலாகலமாக இருக்கும் நாராயணா என்று தேவர்கள் சொல்லி வந்தனர். . . அகிலம் ======== மத்தள முடுக்குபல வாத்திய மடடென வானமதில் நின்ற திரவே மலர்மாரி சலமாரி தினமாரி தூவியே வானவர்க ளிசை கூறவே தத்தளங் கிடகிட தொம்மெனத் தொம்மெனச் சங்கீதக் காரர் வரவே சகலகலைக் கியானவேத சாதிமுறை யோதிமிகு சாஸ்திரக் காரர் வரவே . விளக்கம் ========= மத்தளங்களும் உடுக்குகளும் இன்னும் பல வாத்தியங்களும் வானத்திலிருந்து இனிய ஓசைகளை எழுப்பியவண்ணம் இருந்தன. வானோர்கள் வானத்தில் நின்ற வண்ணம் மலர்மழையும், பன்னீர்த்துளியும் தினமாரியும் தூவிய வண்ணம் இன்னிசை இசைந்தனர். மத்தளங்கள் ஒலி எழுப்பவும் சங்கீதக்காரர்கள் பாடிக் கொண்டு வரவும் சகல கலைவாணர்களும், வேத சாத்திரிகளும், அவரவர் தத்தமக்குரிய இசைகளைப் பாடி வந்தனர். . . அகிலம் ======== தித்தங்கிண தித்தங்கிண தித்தங்கிண தித்தியெனச்சில தேவர் கூறி வரவே சிவசிவ சிவசிவ சிவவென்று சிலதேவர் சேவித் தியல்கூறி வரவே நித்தங்கிண சித்தங்கிண உத்தங்கிண தித்தியென நேரியர் சீரியல் கூறவே நீலங்கிரி வாலங்குரு நீயென்குரு தாயென்குரு நீதென் குருவெனப் போற்றினார் . விளக்கம் ========= தேவியர், தித்திங்கின என்னும் ஓசையைத் திருப்பித்திருப்பி எழுப்பியவண்ணம் பாடி வந்தனர். தேவர்கள் சிவசிவ சிவாசிவா என்னும் மந்திரத்தை வைகுண்டருக்குப் பணிவிடை செய்தவண்ணம் கூறி வந்தனர். அழகு பொருந்திய பெண்டிர் ஒழுங்கான இசையை அழகுபட இசைத்து வந்தனர். நீலகிரி வாலங்குரு போன்ற நீ என் குரு, தாயும் என் குரு உனக்கு நீயே குரு ஆவாய் என்று பலர் போற்றி இசைந்தனர். . . அகிலம் ======== பண்டைமுறை யின்றுவெனக் குண்டமெனக் கண்டுவரும் பலவாங் கிரி குண்டமே பசுவாமனே சிசுபாலனே பலமானனே தலமானனே பசுவா கிய நிசமே தொண்டர்தனக் கென்றுவரு குண்டவை குண்டமனாய்த் தெச்ச ணாபதி பூபனே துளபமணி களபமேனி யழகொழுகு கிருபைமிகு துவாரகா பதிக் கரசே . விளக்கம் ========= முன் ஆகமங்கள் படி இன்று வைகுண்டர் வந்தார் என்று சொல்லி அவரைக் காண அங்குப் பலர் வந்தனர். பசுவாமனே, சிசுபாலனைக் கொன்றவனே, பலம் பொருந்தியவனே எல்லா இடமும் வியாபித்து இருப்பவனே, எங்கள் உயிராகி மெய்பபொருளாய் நிற்பவனே, தொண்டர்களுக்கு என்று வருகின்ற வைகுண்டரே, தெச்சணாபூமியில் சகல உரிமைகளுமுள்ள தலைவனே, துன்பமணியே, களபமணியே, அழகு ஒழுகக் கருணையோடு துவாராபதியை ஆண்டு வருகின்ற அரசனே, என வணங்கித் தொழுதனர். . . அகிலம் ======= சண்டன்வலி துண்டப்பட கொண்டக்கணை விண்டத்தொடு துச்சா வில்லு வீரா சாமியுன் றாளோ எங்கள் தலையின்மீது தலையின்வழி தானே நடவாயே துண்டப்பட வண்டச்சரம் கண்டப்படி பொண்டத்தொடு துச்சா வில்லு தீரா சுத்தா வுனக்கேற்றார்தமை வித்தானதில் வித்தாய் துவாரகாபதிக் கரசேயெனத் தொழுதார் . விளக்கம் ========= கலியனின் தீய வலிமை அழிக்கப்படுவதற்காக எடுக்கப்பட்ட அம்போடு இப்பூவுலகில் பிறந்து, தீயவர்கள் எல்லாரையும் அழிக்கும் வில்லையுடைய வீரனே சுவாமியே, தங்களுடைய பாதகங்களை எங்களுடைய தலையின் மீது பதித்துத் தெச்சணாபூமிக்குச் செல்லுகின்ற வழியைக் கடந்து செல்வீராக. கலியை அழித்துவிடவும், அவன் பெயர் வெளியே வராவண்ணம் சிதறபடவும். அம்பு தொடுக்கின்ற வில்லையுடைய வீரனே, சுத்தனே, உனக்கு ஏற்றவர்களை வித்தாக்கி சான்றோர்களை வாழ்வித்தோனே. துவாராபுரிக்கு அரசே, வருவீராக என்று கூறித் தொழுதனர். . . அகிலம் ======== தேவர் தொழுது திக்கெங்கும் போற்றிவரத் தாவமுள்ள வானோர் சங்கீதம் பாடிவர வேத மறையோர்கள் வேதக்கலை யோதிவர நாதமொடு சங்கு நகரா முழங்கிவர மத்தள மேலோர் மடமடென் றேற்றிவரத் தித்தி தித்தியெனத் தேவரெல்லாம் பாடிவரச் சாத்திர வேத சாதிமுறை யோதிவர நாற்றிசையும் போற்றி நாற்சாதி யும்வரவே அரம்பையர்க ளாடி ஆலத்தி யேந்திவர வரம்பகலா மாமுனிவர் வரிசைமிகக் கூறிவர நாதாந்த வேதம் நவில்வோர் நெருங்கிவர மாதவர்க ளெல்லாம் மலர்மாரி தூவிவர கண்டங் ககமகிழ்ந்து கண்ணான நாரணரும் . விளக்கம் ========= இவ்வாறாகத் தேவர்கள் எல்லாரும் எட்டுத் திசைகளிலுமிருந்து போற்றித் தொழுது வரவும். இனிய பண்பு வாய்ந்த வானோர்கள் சங்கீதம் பாடி வரவும், வேத மறையோர்கள் வேதக்கலைகளைக் கூறிக் கொண்டு வரவும், சங்குகள் இனிய நாதத்தையும் பறைகள் இனிய ஓசையையும் எழுப்பி வரவும். வானோர் மத்தள ஒலியை எழுப்பி வரவும், தேவர்கள் பாடி வரவும், சாத்திரங்கள் கற்ற தேவ மறையோர்கள் மந்திரங்களை ஓதி வரவும், நான்கு வகைச் சாதிகளும் நான்கு திசைகளிலும் போற்றி வரவும். அரம்பையர் ஆலத்தி ஏந்தி ஆடிக் கொண்டு வரவும், சிறந்த மாமுனிவர்கள் வரிசை வரிசையாகப் பாடல்களைப்பாடி வரவும், வைகுண்டரைப் பற்றிய நாதாந்த வேதங்களைச் சொல்லுபவர். அவரை நெருங்கிக் கூறி வரவும் தவசிகள் எல்லாரும் அவர்மேல் மலர் மழை பொழிந்தபடி வரவும், இவற்றைக் கண்டு வைகுண்டர் மனம் மகிழ்ச்சியுற்றார். . . தொடரும்... அய்யா உண்டு.