திருநீற்றுச் சுவடு
586 views
9 days ago
#✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள் #📅பஞ்சாங்கம்✨ #🧿வாஸ்து குறிப்புகள்🔯 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 நுணுக்கங்கள் காலண்டர் பஞ்சாங்கம் இவற்றில் சில வார்த்தைகளை போட்டிருப்பார்கள். அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமலேயே நாம் கடந்து சென்று கொண்டு இருக்கிறோம். இவற்றை பற்றி ஜோதிடர்களிடமோ அல்லது வயதான பெரியோர் களிடம் கேட்டால் கூட அவர்களுக்கு தெரியாது. அப்படி பட்ட சில வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று இப்பதிவில் காண்போம்.பஞ்சாங்கம் நம்வாழ்க்கையின் ஒரு அங்கம். நமது முன்னோர்கள் தினசரி இதைப் பார்த்துத் தான் தங்கள் அன்றாட வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தினார்கள். நமது சமுதாய சாஸ்திரப்படி ஒரு நாள் என்பது, இன்று காலை சூரியோதயம் முதல் நாளை காலை சூர்யோதயம் வரை உள்ள நாளாகும் அவமாகம் AVAMAAGAM என்றால் என்ன? அவமா அல்லது – மூன்று திதியாவது, மூன்று நட்சத்திரமாவது அவமாகம்- மூன்று யோகமாவது ஒரே நாளில் வருவது. (சுப காரியங்களை நீக்கவும்.) உதாரணமாக நேற்று (சித்திரை 30தீ 13 மே 2023) திருக்கணித பஞ்சாங்கப் படி, "அவமா" என்று போட்டு இருக்கும். காலை 6.51 வரை அஷ்டமி, அதன் பின் இரவு 4.43 வரை நவமி, அதன் பின் தசமி. ஆக மூன்று திதிகள் ஒன்றை அடுத்து ஒன்றாக ஒரே நாளில் அமைந்துள்ளதை பஞ்சாங்கத்தில் *"அவமா"* என போட்டு உள்ளது. திரி தின ஸ்ப்ருக்- THRI DHINA SPRICK ஒரு நட்சத்திரமாவது ஒரு திதியாவது, ஒரு யோகமாவது மூன்று நாளில் வருவது. *"த்ரீதின"*--எந்த நாளில் ஒரு திதி, நட்சத்திரம், யோகம் பூரா நாள் வியாபித்து இருக்கிறதோ, அன்று த்ரீதின--அந்த நாளில் சுப காரியங்களை நீக்கவும். உதாரணமாக சோபகிருது வருஷம் வைகாசி மாதம் 12ம்(26 மே 2023) தேதியில் பஞ்சாங்கம் *"திரிதின"* என குறித்து உள்ளது. அன்றைய பஞ்சாங்க திதியான சப்தமி சூரிய உதய நேரத்தில் துவங்கி மறுநாள் சூர்யோதய காலம் வரை வியாபித்து உள்ளது. *"திதித்வயம்"* THITHI DHVAYAM த்வயம் என்றால் இரண்டு. அடுத்தடுத்த ச்ரார்த்த திதிகள் ஒரே நாளில் நேர்வது உதாரணமாக வைகாசி 27ம் தேதி ச்ராத்த திதிகள் இரண்டு 7,8 அதாவது சப்தமி அஷ்டமி ஆகிய இரண்டு திதிகள் *"அதிதி"*ATHTHI. தொடர்ந்து மூன்று நாட்களில், முதல் நாள் ஒரு ச்ராத்த திதிக்கும்,மூன்றாவது நாள் அடுத்த ச்ராத்த திதிக்கும் உகந்ததாக இருப்பின் இரண்டாவது நாள் அதிதி அதாவது எந்த ச்ராத்த திதியுமல்ல என பொருள் படும். *"தியாஜ்ஜியம்"*- DHYAJYAMஒவ்வொரு நாளும் விலக்கப்பட்ட நேரம் 3.3/4 நழிகை ஆகும். இது லக்கின தியாஜ்ஜியம், தியாஜ்ஜியம் என இரு வகைப்படும். *"ஆகாமாவை"* ஆஷாட, கார்த்திக, மாக, வைசாக மாதங்களில் உதய கால பௌர்ணமியில் நீராடுவது நன்று. இத்தினங்கள் ஆகாமாவை எனப்படும். நேத்திரம்- ஒரு கண் நாள்- ஞாயிறு, திங்கள் இரு கண் நாள்-புதன்,வியாழன் வெள்ளி மேற்கண்ட நாடகளில் நல்ல காரியங்கள் தொடங்கலாம் குருட்டு நாள்- செவ்வாய், சனி எதையும் செய்ய கூடாது. ஜீவன்-சூரியன் இருக்கும் நட்சத்திரத்திறகு முன்/ பின் உள்ள நட்சத்திரங்கள் ஜீவன் இல்லாத நட்சத்திரங்கள் சூரியன் இருக்கும் நட்சத்திரத்திற்கு 3,4,5.6.7.8 உள்ள நட்சத்திரங்கள்,1/2 ஜீவன். மத்திமம்- நல்லவை சூரியன் இருக்கும் நட்சத்திரத்திற்கு 9-13 ஒரு ஜீவன் உள்ளவை. மிக நல்லவை. அபிஜித்- உத்ராட நட்சத்திரத்தின் முடிவில் உள்ள 15 நாழிகையும் திருவோண நட்சத்திரத்தின் முதல் நான்கு நாழிகையும் சேர்ந்தது இந்த அபிஜித் என்ற நல்ல நேரம். தற்சமயம் இந்த நாழிகை வைத்து பெருக்கிக் கொண்டிருப்பதில்லை பகல் 11.30 முதல் 12.30 முடிய அபிஜித் வேளை என குறிப்பிட்டு விடுகிறார்கள். இது எதற்காக என்றால் எந்த ஒரு முக்கிய நல்ல காரியம், அன்று கரிநாள், செவ்வாய் கிழமை, சனிக்கிழமை ஆகாமா, திருதினஸ் ப்ருக் என்று பஞ்சாங்கத்தில் போட்டிருக்கிறது என்றாலும் அந்த நல்ல கார்யத்தை நீங்கள் செய்யலாம் இந்த அபிஜித் வேளையில் !!! விஞ்ஞானிகள் சொல்கிறார்கள், இப்படி ஒரு நட்சத்திரம் இருந்தது. காலப்போக்கில் அழிந்து விட்டது. கவனிக்க ஒரு காலத்தில் 28 நட்சத்திரம் இருந்தது. தற்சமயம் 27…….. அர்த்தோதயம்-தை மாசி மாதங்களில் அமாவாசை நாள் ஞாயிற்றுக்கிழமை வந்து உதய காலமும் வந்து வியதீ பாதமும் திருவோணமும் கூடினால் அர்த்தோதயம் !!!! மகோதயம்- இதே மேற்கண்ட காம்பினேஷன் திங்கள் கிழமை வந்தால் மகோதயம் !!! இந்த இரண்டு நாட்களும் மிக மிக முக்கிய நாள் 60 வருடத்திற்கு ஒரு முறையே வரும். இதற்காக முனிவர்கள், பெரியோர்கள் காத்துக் கொண்டிருப்பார்களாம 1000 சமுத்திர ஸ்னானம் கிரகணத்தன்று செய்த புண்ணிய பலனாம்.