D Muthu Prakash, Kanchipuram 💐
835 views
5 days ago
#Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 06.06.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======= அன்றுவே தமுனியை அழைத்துமொழி கேட்கவென்று வாநீ முனியே வல்லகலைக் கியானமொழி தானீ கரமாய்ச் சத்தியாய்க் கற்றவனே மான முனியே மறைநாலுங் கற்றவனே ஓநமோ வேதம் ஓயாம லோதுவோனே பின்முன் நின்று இயம்புரைகேட் டேயுரைநீ நான்தவ சிருக்க நாடுரைநீ மாமுனியே மான்தவ சுக்குகந்த மாமுனியே என்றுரைத்தார் . . விளக்கம் ========= தவசு செய்வதற்கு ஏற்ற சிறந்த இடங்களில் இவ்விடம் மிகவும் நல்ல இடம் என்றும். எல்லாச் சக்தியும் வளருகின்ற சிறந்த பூமி இது என்றும் வைகுண்டர் மனதில் எண்ணினார். வைகுண்டர் அது பற்றிக் கேட்க வேத முனியை அழைத்து அவனிடம் முனியே, நீ வருவாயாக எல்லா ஞானக் கலைகளையும் ஆராய்ந்த ஞானவானே, மெய்யறிவைக் கற்றவனே, ஒழுக்கம் நிறைந்த முனிவனே, நான்கு வேத நூல்களையும் கற்றவனே, ஓம் நமோ நாராயணா என்னும் வேதச் சொல்லை இடைவிடாது ஓதுகின்றவனே, வருங்காலத்தையும் கடந்த காலத்தையும் ஆராய்ந்து தவறாவண்ணம் அறிந்து உரைக்கின்றவனே, என் முன்னால் நின்று நான் கூறுகின்றவற்றைக் கேட்டு அதற்குரிய பதிலைச் சொல்லுவாயாக. ஆத்மாவை அறிய வைக்கும் தவசுக்கு ஏற்ற மாமுனியே, நான் தவசு இருக்க ஏற்ற இடத்தைக் கூறுவாயாக. . . அகிலம் ======== கலைமுனி தவசுக்குகந்த இடத்தின் சிறப்புக் கூறல் ===================================================== வெள்ளா சனத்தில் விரைவா சியைநிறுத்திக் கள்ளமா னதையகலக் காடகற்றி-விள்ளரிய வெள்ளமாங் கருணைபெறு வேதமுக மாமுனியே உள்ளதெனக் கின்னதென் றுரை . விளக்கம் ======== இறையாசனம் ஆகிய மூக்கு நுனியில் விரைவாக ஓடும் சுவாசத்தை நிறுத்தி உள்ளத்தில் வாழும் தீயவற்றை வெளியேற்றி விளக்க முடியாத இறைக் கருணையைப் பெற்ற வேதம் அறிந்த முனிவனே, நான் தவசு இருப்பதற்குத் தகுதியான இடத்தைத் தெளிவாக எடுத்துரைப்பாயாக என்று கூறினார். . . அகிலம் ======== பூரணத்தி னாடி புகழ்ந்துமுனி கொண்டாடி வாரணத்தின் கோடுவரை தேர்ந்து-காரணத்தின் கட்டுரைத்து நாடுவளம் விட்டுரைப்பே னென்றுமுனி தொட்டுப் பதங்குவித்துச் சொல்லுவான் . விளக்கம் ========= வேதமுனி பூரணப்பொருளாகிய வைகுண்டரின் பக்கம் சென்று அவரைப் புகழ்ந்து கூறி, சுவாமி வடக்கே காணும் மலையிலிருந்து தெற்கே காணும் கடற்கரைவரை அமைந்திருக்கும் தெச்சணாபூமியில் நடந்த சிறப்பு நிகழ்ச்சிகளையும் அவை எல்லாவற்றுக்கும் காரணமானவற்றையும் தெளிவாக எடுத்துரைத்து நாட்டின் நிலைகள் பற்றியும் எடுத்துக் கூறுவேன் என்று சொல்லிய முனிவன் வைகுண்டரின் பாதங்களைத் தொட்டு வணங்கி சொல்கிறான். . . அகிலம் ======= கலைமுனி வேதவியாசர் பிறப்புரைத்தல் அய்யாவே வேத ஆதிநா ராயணரே மெய்யா யுருவாய் விளங்குவோ னேகேளும் பரராச மாமுனிவன் பாலனென முனிவன் விரைவாக வேபிறந்து வெள்ளிமலை நாதனிடம் தாதா வுடனே தான்வரக்கண் டீசுரரும் . விளக்கம் ========= அய்யாவே, வேதத்திற்கு முதலான ஆதி நாராயணரே, உண்மை உருவாக விளங்குபவனே, நான் சொல்லுகின்றவற்றைக் கருணை கொண்டு கேட்பீராக. முன்னொரு காலத்தில் பராசரர் என்னும் முனிவனுக்கு ஒரு குழந்தை கருவுற்ற உடனே பிறந்தது. அக்குழந்தையுடன் பராசர முனிவர் ஈசரைப் பார்க்க சென்றார். . . அகிலம் ======= வாராய் முனியே மதலையுனக் கிங்கேது அப்போ முனியும் அரனடியைத் தான்பூண்டு இப்போ திவ்வாண்டு இம்மாத மிந்நாளில் பஞ்சகரு ணாதி பன்னிரண் டொன்பதுவும் வஞ்சக மில்லாமல் வந்தா ரொருவீட்டில் பூரண நாளும் பிரிந்துறையும் நேரமதும் நாரணம் பிறந்த நல்ல நட்சேத்திரமும் யோக பலன்கள் ஒத்திருக்கும் நேரமதும் ஆகமக் கூட்டம் அடங்கிருக்கும் நேரமதும் மதிசுழி போலாகி வந்துரத மேறுகையில் துதிமுக வன்சர சோதி பிறந்ததன்றும் . விளக்கம் ========= ஈசர் அவர்களை நோக்கி, முனிவனே, வருவாயாக, உன்னோடு வரும் குழந்தை உனக்கு எப்படிக் கிடைத்தது? என வினவினார். உடனே, பராசர முனிவர் ஈசரின் பாதங்களைக் கட்டிப் பிடித்து ஈசரே, இந்த ஆண்டு இந்த மாதம் நல்ல நாளில் ஐந்து பூதங்களுக்கும் காரணமான பஞ்சகரணம் முதலியவைகளும் பன்னிரண்டு ராசி வீடுகளும் நன்றாக இருக்கின்ற நல்ல சமயத்தில், ஒன்பது கிரகங்களும் ஒரு ராசி வீட்டில் எந்த விதத் தடையுமின்றி அமர்ந்து நல்ல பலன் சொரியும் பூரண வேளையில் நாரணர் பிறந்த நல்ல நட்சத்திரம் உதிக்கும் வேளையில் யோகப் பலன்கள் சேர்ந்திருக்கும் நேரத்தில், ஆகமங்கள் எல்லாம் ஓதப்படாமல் அடங்கி இருக்கும் வேளையில் சந்திரன் நீர்ச்சுழி போலச் சுழன்று ரோகணி நட்சத்திரத்தில் இருக்க விநாயகரும், சரசுவதியும் பிறந்த வேளையில், . . அகிலம் ======= இவ்வாறு கூட்டம் எல்லா மெழுந்தொருநாள் அவ்வாறு தான்கண்ட அந்நா ழிகைதனிலே துற்கந்த முலாவும் தோகையொரு பெண்ணிடமே நற்கந் தமுலாவி நான்சேர்ந்தே னப்பொழுது சேர்ந்த பொழுது திரண்டுநா தம்வளர்ந்து காந்தற் றழுப்பாய்க் கன்னி யுடலாகிப் பெற்றா ளிவனைப் பேரு வியாகரெனக் . விளக்கம் ========= எல்லா வகை நேரத்தின் நல்ல பலன்களும்கூடிய தினத்தில் சுபவேளையில், துர்வாடை வீசும் மயில் போன்ற சிறந்த ஒரு பெண்ணுடன் அவள் துர்வாடையை நீக்கி நல்ல சுத்தமான உடம்பாக்கி நான் கூடினேன். அப்போது சுரோணிதமும் நாதமும் புணர்ந்து கருவுற்று, அழகு பரவி பரிமளகந்தி என்னும் அக்கன்னி உடல் பக்குவ நிலை அடைந்து, இவனைப் பெற்றெடுத்தாள். இவன் பெயர் வியாகரர் எனப்படும். . . தொடரும்... அய்யா உண்டு.