D Muthu Prakash, Kanchipuram 💐
623 views
2 days ago
#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 23.04.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======= அந்த வுடனே ஆதிநா ராயணரும் சிந்தை மகிழ்ந்து திருமகனை யாவிமிகக் கட்டி யெடுத்துக் கமலமுகத் தோடணைத்துத் திட்டித்த நாதன் சொல்வார் மகனு டனே . விளக்கம் ========= திருமால் மனம் மகிழ்ந்து பெருமை பொருந்திய அந்த மகனை அனைத்து நெருக்கமாகக் கட்டிப் பிடித்து அவருடைய தாமரை போன்ற முகத்தைத் தமது முகத்தோடு அணைத்து திருமால் மகனை நோக்கிச் சொல்லலானார். . . அகிலம் ======= எந்தனின் தவத்தா லேக இகபர முனக்குள் ளாகித் தந்திடு மகனே நானும் தனதுள்ள மமர்ந்தே னானும் உந்தனைக் கண்டால் மூவர் ஒஞ்சியே மகிழ்வர் கண்டாய் சிந்தர்க ளெவரும் போற்றச் செயல்பெற்ற மகனும் நீயே . விளக்கம் ========= எனது தவத்தின் மூலமாக எங்கும் பரந்திருக்கும் பரம்பொருள் உனக்குள் ஆகி பரம்பொருளாகிய நானும் உன்னுள் அமர்ந்து தருமயுகத்தைப் படைத்திடும் மகனே, உன்னைக் கண்டால் மூவர்களும் வெட்கத்துடன் மகிழ்வார்கள். இதை அறிந்து கொள்வாயாக. எல்லாச் சித்தர்களும் போற்றும்படியாகச் சகல சக்தியும் பெற்ற மகன் நீயே ஆவாய். . . அகிலம் ======= மகனேநீ கேட்டதற்கு வகைசொல்ல வேணுமென்றால் தவமூ ணுண்டேநீ தரணிதனில் போயிருந்தால் அல்லாமல் பின்னும் அதின்மேல் நடப்புவளம் எல்லா முனக்கு இயம்பித்தரு வேன்மகனே . விளக்கம் ========= மகனே நீ கேட்ட வரங்களை அடைய வழி முறைகள் சொல்ல வேண்டும் என்றால் சொல்லுகிறேன். கேட்பாயாக. நீ பூவுலகில் சென்று நினைத்தபடி வாழ நீ செய்து முடிக்க வேண்டிய தவங்கள் மூன்று உள்ளன. மேலும் அத்தவத்தைச் செய்து முடித்த பிறகு செய்ய வேண்டியவற்றையும் கூறுகிறேன். கேள். . . அகிலம் ======= முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே . விளக்கம் ========= முதல் முறையாக நீ செய்ய வேண்டிய தவசு, கலியுகத்தை அழிப்பதற்கு செய்யும் யுகத்தவசு ஆகும். . . அகிலம் ======= தத்தமுள்ள ரண்டாம் தவசுசா திக்காமே . விளக்கம் ========= அதைத் தொடர்ந்து செய்ய வேண்டிய இரண்டாம் தவசு மொய்குழலார் வம்சங்கள் ஆகிய சான்றோர் சாதி மக்களைக் காத்து கொள்ளச் செய்யும் தவசாகும். . . அகிலம் ======= மூன்றாந் தவசு முன்னுரைத்த பெண்ணாள்க்கும் நன்றான முற்பிதிரின் நல்ல வழிகளுக்கும் . விளக்கம் ========= கடைசியாகச் செய்ய வேண்டிய மூன்றாம் தவசு, நீ முன்னுரைத்த அணங்கு ஆகிய பெண் உயர்வு பெறவும், நல்ல முறையில் வாழ்ந்து வரும் உன் முன் பிறந்த மூதாதையர்களின் நல்ல வம்ச வழி மக்களுக்கு நன்மை கிடைக்கவும் செய்யும் தவசாகும். . . அகிலம் ======= இப்படியே மூவிரண்டு ஆறு வருசமதாய் எப்படியும் நீதவசு இருக்கவரு மென்மகனே ஓராறு ஆண்டு உற்றதவ மேயிருந்து பாராறுங் காண பார்கண்டு கண்டிருநீ . விளக்கம் ========= ஆறு வருடங்களாக நீ எந்த வகையிலாவது தவமிருக்க வேண்டியது வரும். ஆறு வருடங்கள் இவ்வுலக மக்கள் காணும்படியாக உனக்குரிய தவத்தில் தருமபூமியை எதிர்பார்த்தவண்ணம் அமர்ந்திரு. . . தொடரும்… அய்யா உண்டு.