#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 16.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
பொறுமைப் பெரியோனோ வைகுண்டனோ பெரிய பூமேடைக் கொலுவீரனோ
தரும வரம்புகள் தவறாமலே தரணி யரசாளும் வைகுண்டரோ
திராசு நிறையிலுந் துல்லியமாய்ச் செங்கோல் செலுத்தவே வந்தவரோ
மிராசு மூவர்க்கு முதன்மைதானோ மூலச் சிவமணி குருநாதனோ
.
விளக்கம்
==========
பொறுமையுடைய பெரியோனே இந்த வைகுண்டர். பெரிய பூமேடைகளில் கொலுவிருக்கும் வீரனாக தரும வரம்புகளுக்கு எந்தத் தவறும் வராவண்ணம் இவ்வுலகை அரசாளும் வைகுண்டர் இவர். தராசு நிறையைவிடத் துல்லியமாக நீதியைச் செலுத்தி உலகைப் பரிபாலிக்க வந்த வைகுண்டர் இவர். முதுமையான மூவருக்கும் முதல்வனாகவும், மூலக் சிவமணி குருநாதனாகவும் இருப்பவர் இந்த வைகுண்டர்.
.
.
அகிலம்
========
சான்றோர் கைகட்டிச் சரணங்கூறத் தரணி யொருகுடைக் காள்வானோ
ஆண்ட மணிநாதன் நாரணர்க்கு ஆன மதலையாய் வந்தவரோ
வைய மளந்ததோர் நாரணர்க்கு மதலை யெனவந்த வைகுண்டரோ
தர்மப் பதியாளும் வைகுண்டரோ சாணர்க் கனுகூல மானவரோ
.
விளக்கம்
==========
இந்த வைகுண்டர் சான்றோர்கள் கைகளைக் கட்டிக் கொண்டு சரண கோசம் கூறிடத் தருமயுகத்தை ஒரு குடையின் கீழ் ஆளுபவர். மணி நாதன் ஆகியா நாரணர்க்கு குழந்தையாக வந்தவரே இந்த வைகுண்டர். இவ்வுலகை அளந்த நாராயணருக்குக் குழந்தையாகப் பிறந்தவர். தருமபதியை ஆளுகின்ற சாணார்க்கு அணுகூலமானவர்.
.
.
அகிலம்
========
அலைந்து மலைந்ததோர் சான்றோர்க்கு அதிக விதிகொண்டுப் பிறந்தவரோ
சாணாக் குடிகுல நாயகமோ தர்மந் தழைக்கவே பிறந்தவரோ
தோணாத் துறைகொண்டு வந்தவரோ துவரா பதியாளப் பிறந்தவரோ
ஏழு யுகபரக் கணக்கையெல்லாம் எடுத்து நடுத்தீர்க்கப் பிறந்தவரோ
.
விளக்கம்
==========
அலைந்து அலைந்து துன்புற்ற சான்றோர்களின் துன்பத்தை மாற்ற முழு சக்தியும் கொண்டு பிறந்தவர் இவ்வைகுண்டர். வைகுண்டர் சாணார்க் குலத்தின் நாயகன். தருமம் செழித்துக் தழைக்க பிறந்தவர். இவர் தோணாத பொருளைத் தொடர்ந்து கண்டு அந்த வழியைச் சான்றோர்கள் காணும் வகையில் கொண்டு வந்தவர். துவாராபதி ஆளப் பிறந்தவர். ஏழு யுகக் கணக்குகளையும் சேர்த்தெடுத்து நடுத்தீர்ப்புக் கேட்கப் பிறந்தவர்.
.
.
அகிலம்
========
ஆளும் வைகுண்டப் பதியாளவே அரிய வைகுண்டம் பிறந்தவரோ
வீர வீராதி வீரன்தானோ வீர சூரனா ரீன்றகண்ணோ
சூர சூராதி சூரன்தானோ சூர சூரனார் பெற்றகண்ணோ
நாத நாரணர் பெற்றகண்ணோ நாக மணிநாதன் பெற்றகண்ணோ
.
விளக்கம்
==========
தருமபூமி ஆகிய வைகுண்டபதியை ஆட்சி புரிய இந்த அருமை பொருந்திய வைகுண்டர் பிறந்தவர். இந்த வைகுண்ட குழந்தை வீராதி வீரன்தான். வீரசூரரான திருமால் பெற்ற கண் போன்றவன் தான். சூராதி சூரணானவன் தான் நாதத்திலிருந்து தோன்றிய நாராயணர். இது நாகமணிநாதன் பெற்ற குழந்தை.
.
.
அகிலம்
========
சீதக் குணநாதன் பெற்றகண்ணோ சீதை மணவாளன் பெற்றகண்ணோ
மேக நிறத்தண்ண லீன்றகண்ணோ மேலோர் போற்றும்வை குண்டக்கண்ணோ
ஏகச் சிவநாதன் பெற்றகண்ணோ இறவா திருமூர்த்தி பெற்றகண்ணோ
.
விளக்கம்
==========
செம்மையான உயர்ந்த குணங்களை உடைய நாராயணர் பெற்ற குழந்தை இவர். சீதையின் கணவன் பெற்ற குழந்தை இவர். மேகத்தின் நிறத்தினை உடையவர் பெற்ற குழந்தை இவர். மேலோர் அனைவரும் போற்றும் வகையில் பிறந்த வைகுண்டர் இவர். எங்கும் பரந்து இறவாத திருமூர்த்தியான சிவனுடைய மைத்துனர் பெற்ற குழந்தை இவர் ஆவார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.