saravanan.
590 views
2 days ago
#vaalkkay payanam. வாழ்க்கைப் பயணத்தில்... மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டே இருந்தால். நிம்மதியைக் கூட இழந்து விடுவோம். வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கற்றுக் கொள்வோம். மகிழ்ச்சி தானே தேடி வரும். யாரும் பாராட்டும் அளவுக்கு வாழணும்ன்னெல்லாம் எந்த அவசியமும் இல்லை, நமக்கு திருப்தியா வாழ்ந்தாலே போதும். திருப்தியா உங்களுக்குப் புடிச்ச மாதிரி இருக்கப் பழகுங்கள். காலந்தாழ்த்தாமல் செய்கின்ற ஒவ்வொரு செயலும், நமக்கு மன நிறைவையும், வெற்றியையும் தேடித் தரும். எப்படி ஆரம்பித்தீர்கள் என்பது பற்றி யாரும் கண்டுக்கப் போறதே இல்ல. எப்படி முடிக்கிறீங்க என்பதில் தான் இருக்கு வெற்றி. மனதுக்கு நெருக்கமாக இல்லாதவங்க தப்பா என்ன சொன்னாலும் மனதை காயப்படுத்த அனுமதிக்காதீங்க. வாழ்க்கை என்பது... ஒரு ரயில் பயணம் மாதிரி... நிறைய நிறுத்தங்கள்....நிறைய வழித் தடம் மாற்றங்கள்....விதம்விதமான மனிதர்களுடன் பயணங்கள்....சில நேரம் விபத்துக்களும் கூட... அனைத்தையும் ரசித்துக் கொண்டே பயணிக்கக் கற்றுக் கொள்வோம் வாழ்விலும் கூட... அழகாய் அமையட்டும் இந்த வாழ்க்கைப் பயணம்..!! வாழ்க்கைல எதுவும் சும்மா கிடைச்சிடல. கிடைச்ச எல்லாத்தையும் பாராட்டக் கத்துக்குவோம். நல்லதே நடக்கும்..!!!