#அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 07.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
விஞ்சையருளல் தொடர்ச்சி
========================
ஆர்க்கு மிகவீந்தால் அந்தத்தர்ம மேகொதிக்கும்
போர்க்கு நினைத்தாரைப் பெலிகொடுக்குந் தர்மமது
தன்மந்தான் வாளு சக்கரங்க ளல்லாது
தின்மையது கேடு செப்பக்கே ளென்மகனே
.
விளக்கம்
==========
எவர்க்கும் அதிகமாகக் கொடுத்தால் அவ்வாறு கொடுத்தவனின் தருமசெயல் மேலும் மேலும் பொங்கி எழும்பிக் கொண்டே இருக்கும். போர் செய்து உன்னை அழிக்க நினைத்தவரை அத்தருமம் பலி கொடுத்து விடும். ஆகவே, தருமந்தான் வாளும் சக்கரமும் ஆகமேயல்லாது வேறு ஒன்றுமில்லை. நீ தீமை செய்தால் அத்தீமை உனக்கே கேடாக வந்து அமையும். இன்னும் நான் கூறுவதைக் கேட்பாயாக என்மகனே.
.
.
அகிலம்
========
சாதி பதினெட்டும் தன்னாற்கே டாகுமட்டும்
நீதி யழியாதே நீசாபங் கூறாதே
.
விளக்கம்
==========
சாதி பதினெட்டும் தன்னைத் தன்னால் அழித்து மாயும்வரை நீ நீதி தப்பி நடந்துவிடாதே. யாரையும் நீ சாபம் கூறிச் சபித்துவிடாதே.
.
.
அகிலம்
========
மகனே வுனக்கு வைத்தவிஞ்சை மனதி லறிந்து கொண்டாயோ
அகமே வைத்த சட்டமெல்லாம் அதுபோல் நடந்து அல்லாமல்
உகமே யழியு முன்னாக ஒருசொல் லிதிலே குறைவானால்
சகமோ ரறியத் தீமூழ்கிச் சதியாய் மறுத்து முழிப்பாயே
.
.
விளக்கம்
==========
மகனே, உனக்குச் சொன்ன உபதேசங்களை எல்லாம் உன் மனதில் விளக்கமாக அறிந்து கொண்டாயா? உன் மனம் புரியும்படி சொன்ன சட்டவிதி முறைகளை எல்லாம் அப்படியே பின்பற்றிச் செயல்படுத்து, அப்படியல்லாமல், இந்தக் கலியுகம் அழியும் முன்பாக இந்த உபதேசங்களில் ஏதாவது ஒரு சொல்லாவது குறைவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுமானால் இந்த உலகோர் அறியும்படியாக நீ தீயில் மூழ்கி விரைவாக உயிர்த்து எழுந்து வருவாயாக.
.
.
அகிலம்
========
நல்லோர் மகனே சொல்வதுகேள் நானோ வுரைத்த விஞ்சையெல்லாம்
வல்லோ னான திருமகனே மனதி லறிந்து அறிந்துநட
எல்லாம் நமதுள் ளாச்சுதென்று எண்ணி நடப்பொன் றுன்னாலே
சொல்லால் தாண்டி நடப்பீரால் தீயே குளித்து வருவாயே
.விளக்கம்
==========
சிறந்து மகனே, வல்லவனே, நான் சொல்லுவதை இன்னும் கேள். நான் உன்னிடம் சொன்ன உபதேசங்களை எல்லாம் உன் மனதில் நன்றாக ஆராய்ந்து செயல்படு. எல்லாம் நமக்குள் ஆகி விட்டது என்று ஆணவத்தோடு நினைத்துத் தவறான வழியில் செயல்பட்டால், நீயாகவே தீயில் மூழ்கிவிட்டு என்னை வந்து சேர்வாயாக.
.
.
அகிலம்
========
கொடுக்கும் வரங்களு னக்கீந்தேன் கொடுத்த வரத்தை பறிப்பதற்கு
உடக்கு வரமுந் தந்தேனான் உன்ற னாணைத் திருவாணை
அடக்கு முடக்குந் தந்தேனான் ஆதி சிவனா ரவராணை
நடக்கும் படியே சட்டமெல்லாம் நாரா யணனே தந்தேனே
.
விளக்கம்
==========
நீ வரம் கொடுப்பதற்குரிய வரமும், அதே வரத்தை மீண்டும் பறிப்பதற்குரிய வரமும், இப்படியாக எல்லாவகை இரகசியங்களையும் வரங்களையும் உனக்குத் தந்துவிட்டேன். உன்மேல் ஆணை. என் இலட்சுமியின் மேல் ஆணை. ஆதி சிவன்மேல் ஆணை. நீ ஒழுங்காகச் செயல்படுத்தவே இச்சட்ட விதிகள் எல்லாவற்றையும் நாரணனாகிய நான் உனக்குத் தந்தேன்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.